Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணியாது இலங்கை - அரசு ஆணித்தரம்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணியாது இலங்கை - அரசு ஆணித்தரம்.!

Screenshot-2021-01-27-11-26-25-051-org-m

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தின் அழுத்தங்களுக்கு இலங்கை ஒருபோதும் அடிபணியமாட்டாது. ஜோ பைடன், தமது நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து பிற நாட்டு விடயங்களில் அவர் தலையிடக்கூடாது."

- இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

'இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ள புதிய ஆணைக்குழுவால் அனைத்தும் முறையாக நடந்துவிடப்போவதில்லை. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகமும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்குத் தொடர்ந்தும் அழுத்தங்களை வழங்கும். ஆட்சி மாறினாலும் அமெரிக்காவின் கொள்கைத்திட்டத்தில் மாற்றம் ஏற்படாது' என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"இலங்கையில் தற்போதைய ஆட்சியில் மனித உரிமைகள் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்கள் மீறப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி நியமித்துள்ள புதிய ஆணைக்குழு ஆராய்ந்து நிரூபித்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை இந்த அரசு வழங்கியே தீரும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்காவோ அல்லது வேறெந்த நாடுகளோ தலையிட முடியாது.

அமெரிக்காவின் எல்லை மீறிய நடவடிக்கைகளால்தான் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை நெருக்குவாரங்களைச் சந்திக்க வேண்டி வந்தது.

இம்முறையும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் இலங்கை மீது மேலும் நெருக்குவாரங்களைப் பிரயோகிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும், இலங்கையின் நட்பு நாடுகள் இதனை எதிர்க்கும். இலங்கையும் தமது நிலைப்பாட்டை ஜெனிவாக் கூட்ட அமர்வில் தெளிவாக எடுத்துரைக்கும்" - என்றார்.

http://aruvi.com/article/tam/2021/01/28/22032/

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் என்றால் சும்மாவா ?😃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தின் அழுத்தங்களுக்கு இலங்கை ஒருபோதும் அடிபணியமாட்டாது. ஜோ பைடன், தமது நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து பிற நாட்டு விடயங்களில் அவர் தலையிடக்கூடாது."

வல்லரசுகள் ரஷ்ய/சீன கவுண்மேந்து கூட இப்பிடியொரு அறிக்கைய காலாகாலத்துக்கும் விட்டது கிடையாது......  சிறிலங்கா உலகத்துக்கே வல்லரசு...😎

எங்கை போய் முட்டுறது... 🥀

  • கருத்துக்கள உறவுகள்

 இங்குதான் நாட்டில் உள்ள நாரை, நரி, நண்டெல்லாம் கூவுறது. அங்கு போய் மண்டியிடுவினம். சமாளிச்சு, பொய்சொல்லி நாடகமாடி, நம்மடையளும் சான்றிதழ் கொடுத்து தப்பிவிடலாம் என எண்ணி மக்களை ஏமாற்ற வீராப்பு  பேசுறது. கடந்த அரசாங்கம் விட்ட பிழையால் நாம் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று சொல்லிக்கொண்டு திரும்பி வருவினம். கடந்த அரசாங்கமும் விட்ட தவறை மறைக்க முயன்றும் முடியாமலே இந்த முடிவை எடுத்தது என்பது தெரிந்தும் சாட்டுவார்கள் குற்றம்.  

ஆனனபடட துருக்கி எர்டாகோனே இப்போது அடிபணிந்து வாலை சுருட்டிக்கொண்டு போய் விடடானாம் , இவற்ர வாய்ச்சவடால்கள் எல்லாம் வேற்று வெட்டுகள்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
On 28/1/2021 at 06:51, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்காவோ அல்லது வேறெந்த நாடுகளோ தலையிட முடியாது.

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
On 29/1/2021 at 00:24, குமாரசாமி said:

வல்லரசுகள் ரஷ்ய/சீன கவுண்மேந்து கூட இப்பிடியொரு அறிக்கைய காலாகாலத்துக்கும் விட்டது கிடையாது......  சிறிலங்கா உலகத்துக்கே வல்லரசு...😎

எங்கை போய் முட்டுறது... 🥀

ஆக .... வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று சொல்ல வில்லை,  நாம  சிங்கமய்யா, சிங்கம்... சிங்கள் ஆ தான் உலகத்துக்கே தண்ணி காட்டுவோம்.

பண்ணியில் பண்ணிப்பாருங்கோவன்..

 

*****

2008ல் ராணுவம், மடுவினை கடந்து மன்னார் நோக்கி போகிறது.

இதே ரம்புக்வெல வாய் எகத்தாளம் கதைக்கிறது.... உலகமே வந்தாலும், தம்மை நிறுத்த முடியாது என்று....

ஒரு வெள்ளை ஐலண்ட் பேப்பரில் எழுதுகின்றார்..... சிங்களவர்களே, ஒரு நாள் உலகம் உங்கள் மண்டையில் பெரிய குட்டு ஒன்று வைக்கும்.

அதன் போது, உங்கள் நாட்டினை இழக்கும் நிலையில் இருப்பீர்கள். கவலைப்படுவதை தவிர வேறு ஒன்றுமே செய்யமுடியாமல் போகலாம்.

அவர் சொன்ன நிதர்சனம் வருகின்றது என்றே நினைக்கிறேன்.

இலங்கை சரித்திரத்தில், அதன் ஆட்சியாளர்களின் பெரும் தவறே, ராஜ்ஜியங்களை இழக்க காரணமாகி உள்ளமை வரலாறு.

ராவணன் தொடங்கி, விஜயபாகுவின் மூன்று மகன்கள், சிங்கள பகுதியையும், சங்கிலியன் யாழ்பாணத்தினையும் போர்த்துகேயரிடமும் இழக்க..... விட்ட அதே தவறினை போர்த்துக்கேயர் விட, ஒல்லாந்தரும், பின்னர் பிரிட்டிஷ்காரரும், கண்டியின் கடைசி நாயக்கர் (சொன்னா, சிலபேர் கோவிப்பார்கள்) விட்ட தவறினால், கண்டியும் வீழ , பிரிட்டிஷ்காரர் நீங்கும் போது, ஜி ஜி பொன்னம்பலம் போன்றோர் விட்ட தவறினால், தமிழர் நிலம் சிங்களவனிடம் சிக்கிய நிலைமையும் நடந்தது.  

இப்போதும் அதே தவறு நடப்பதாகவே தோன்றுகிறது.

சீனா காரன்  கொடுக்கும் மன, பண பலத்தினால் வந்த திமிர்.

சிங்களவனுக்கு புரியாத ஒரு விடயம், சீனாவுக்கு, டிரம்ப் இடைஞ்சல் உண்டாக்கிய, சில வர்த்தக தடைகளில், விட்டுக்கொடுப்புகளை செய்வதன் மூலம், அமெரிக்கா, இலங்கைகளுள் செய்ய நினைப்பதை, சிங்களவன் தடுக்க முடியாமல் போகலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.