Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மொழி முதலில் - சீரமைக்கப்பட்ட பலகை முதல்வரிடம் கையளிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழி முதலில் - சீரமைக்கப்பட்ட பலகை  முதல்வரிடம் கையளிப்பு

தமிழ் மொழி முதலில் - சீரமைக்கப்பட்ட பலகை முதல்வரிடம் கையளிப்பு

 

 
யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தின் தரிப்பிடப் பலகையில் தமிழ்மொழி முதலாவதாக மாற்றும் பணி மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணனின் பணிப்புக்கு அமைய உள்ளூர் அச்சக நிறுவனம் ஒன்றின் ஊடாக தரிப்பிட பலகைகள் சீரமைக்கப்படுகின்றன.

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தின் தரிப்பிடம் புதிதாக அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

அங்கு ஒவ்வொரு மாவட்ட பேருந்துகள் தரித்து நிற்கும் இடங்களைக் குறிக்கும் காட்சிப் பலகைகளில் சிங்கள மொழி முதலிலும் தமிழ்மொழி இரண்டாவதாகவும் இடம்பெற்றமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அதுதொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர முதல்வரின் அறிவுறுத்தலில் உள்ளூர் அச்சகம் ஒன்றின் ஊடாக தரிப்பிடப் பலகைகளை சீர்செய்ய சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தரிப்பிட பலகையில் தமிழ்மொழி முதலிலும் சிங்கள மொழி இரண்டாவதாகும் இடம்பெறும் வகையில் சீரமைக்கப்பட்ட பலகை ஒன்று இன்று முதல்வரிடம் கையளிக்கப்பட்டது.

அதனையடுத்து அனைத்து பலகைகளும் இன்று அகற்றப்பட்டு சீரமைத்து சில தினங்களுக்குள் மீளவும் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
 

-யாழ். நிருபர் பிரதீபன்-

தமிழ் மொழி முதலில் - சீரமைக்கப்பட்ட பலகை முதல்வரிடம் கையளிப்பு (adaderana.lk)

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரை தமிழ் அழகாக நடுவில் இருப்பதே சிறப்பு.  பார்ப்பவர்களுக்கு எப்போதும் நடுப்பகுதியே முதலில் கண்ணில் தென்படும் என்பது எனது கருத்து.  தற்போதைக்கு வேறு வேலைகள் எதுவுமில்லாததால் இவ்வாறு பெயர்ப்பலகைகளை மாற்றியமைக்கலாம் - போதிய நிதியும் நேரமும் இருந்தால்.

முன்பு தந்தை செல்வாவின் காலத்தில் சிங்கள சிறீ எழுத்துக்குத் தார்பூசி அழித்தார்கள், பின்னர் தமிழ் ஸ்ரீ போட்டு வாகனங்களில் ஓடினார்கள்.  அக்காலத்திலும் நிறைய நேரமும் நிதியுமிருந்தது.  ஆனால் சில இளைஞர்கள்  அதனைப் பின்னரும் செய்து தங்கள் எதிர்ப்பைக்காட்ட ஆமி வந்து பெடியளைத் துவைத்தெடுத்தது.

போராட்ட வடிவங்களை மாற்றும் விடயத்தில் இந்த எழுத்து மற்றும் பெயர்ப்பலகைகளை மாற்றும் உத்திகளை சம்பந்தப்பட்டவர்கள் கையிலெடுக்கிறார்கள்.

அரசாங்கத்திலும் சில அமைச்சர்களுக்கு  வேலைகள் கொஞ்சம்  குறைவாக இருப்பதால் இத்தகைய மாற்றங்களைச் செய்ய உத்தரவிட்டுத் தங்கள் கடமைகளை உரிய முறையில் ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் உலகம்தான் இவற்றில் அதிகம் கவனம் செலுத்தாமல் படுவேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

கண்டி என்றோ அல்லது KANDY என்றோ எழுதுவது தவறு.

மகாநுவர என்று தமிழிலும் Maha nuwara என்று ஆங்கிலத்திலும் எழுதுவது தான் சரியானது. சிங்கள மொழியில் இடங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனவோ அதேபோல் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட வேண்டும் & உச்சரிக்கப்பட வேண்டும்.

சிறீலங்கா ஓர் பெளத்த சிங்கள நாடு, தழிழ் பிரதேசம் ஆனாலும் சிங்கள மொழிக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும். இப்படி தமிழில் எழுதுவதனால் தேவையில்லாமல் பிரதேசவாதமும் இனவாதமும் தூண்டப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

கண்டி என்றோ அல்லது KANDY என்றோ எழுதுவது தவறு.

மகாநுவர என்று தமிழிலும் Maha nuwara என்று ஆங்கிலத்திலும் எழுதுவது தான் சரியானது. சிங்கள மொழியில் இடங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனவோ அதேபோல் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட வேண்டும் & உச்சரிக்கப்பட வேண்டும்.

சிறீலங்கா ஓர் பெளத்த சிங்கள நாடு, தழிழ் பிரதேசம் ஆனாலும் சிங்கள மொழிக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும். இப்படி தமிழில் எழுதுவதனால் தேவையில்லாமல் பிரதேசவாதமும் இனவாதமும் தூண்டப்படுகிறது.

அப்படி என்றால்... சிங்களவன் இனி யாழ்ப்பாணத்தை, யாபனய என்று சொல்லக் கூடாது சரியா... மீரா. 😁🤣

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

அப்படி என்றால்... சிங்களவன் இனி யாழ்ப்பாணத்தை, யாபனய என்று சொல்லக் கூடாது சரியா... மீரா. 😁🤣

இல்லை தனா சினா,

யாழ்ப்பாணம் என்று கூறுவது தவறு...

தமிழில் யாபாணய என்றும் ஆங்கிலத்தில் Japanaya என்றும் எழுதப்பட்டு உச்சரிக்கப்பட வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

இல்லை தனா சினா,

யாழ்ப்பாணம் என்று கூறுவது தவறு...

தமிழில் யாபாணய என்றும் ஆங்கிலத்தில் Japanaya என்றும் எழுதப்பட்டு உச்சரிக்கப்பட வேண்டும்.

 

சீன மொழியில் எப்படி உச்சரிக்க வேண்டும்...? தவிர யாழ்ப்பாண மக்களில் சிங்கள இரத்தம் ஓடுவதாக சிங்கள இராணவமும் சொல்லிச்சு.🤪 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

தரிப்பிட பலகையில் தமிழ்மொழி முதலிலும் சிங்கள மொழி இரண்டாவதாகும் இடம்பெறும் வகையில் சீரமைக்கப்பட்ட பலகை ஒன்று இன்று முதல்வரிடம் கையளிக்கப்பட்டது.

இதைப்பார்த்தால் சிங்கள அமைச்சர்களுக்கும், தேரர்களுக்கும் விசர் பிடிக்கப்போகுது. விஷேமாக அரசியற்கோமாளி விமல் உருத்தாண்டவமே ஆடிடுவார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.