Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநரைச் சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுவிப்பது குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் ஒன்றை அளித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் சிறைகளில் உள்ளனர்.

இவர்கள் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவரும் நிலையில், இந்த ஏழு பேரையும் விடுதலை செய்வதாக கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானம் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில், இதுவரை ஆளுநர் அந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இது தொடர்பான வழக்கு ஒன்று தற்போது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

தனக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, சட்டப்பேரவை தீர்மானம் குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மூன்று, நான்கு நாட்களில் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் முடிவு எடுக்க ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த நிலையில்தான், ஏழு பேர் விடுதலையை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரைச் சந்தித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு - ஏழு பேர் விடுதலை குறித்து பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் பழனிசாமி, ஆளுநரை நேரில் சந்தித்த படியால்...
ஏழு பேரின் விடுதலை, விரைவில் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது என்றே கருதுகின்றேன்.

அவர்கள்... விடுதலையின், பின்...
அ.தி.மு.க. / பா.ஜ.க.  தேர்தலை சந்திப்பது.. சாதகமாக இருக்கும் என கருதுகின்றார்கள்.

"யார்... குத்தினாலும், அரிசி.. ஆனால் சரி." 👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

"யார்... குத்தினாலும், அரிசி.. ஆனால் சரி." 👍

நல்ல விடயம். அரசியல் வியாபாரம் அந்த மாதிரி வேலை செய்யுது. ஆனால் அனைவரையும் விடுதலை செய்ய மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

நல்ல விடயம். அரசியல் வியாபாரம் அந்த மாதிரி வேலை செய்யுது. ஆனால் அனைவரையும் விடுதலை செய்ய மாட்டார்கள்.

குமாரசாமி அண்ணா....
ஏன்... அப்படி சொல்கிறீர்கள்?

25 வருடத்துக்கு மேல்... சிறையில் இருக்கும்,
ஏழு பேருமே... உண்மையான குற்றவாளிகள் அல்ல.

ராஜீவை... கொலை செய்தவர்கள், இப்பவும்  வெளியில், சொகுசாக வாழ்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
37 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணா....
ஏன்... அப்படி சொல்கிறீர்கள்?

25 வருடத்துக்கு மேல்... சிறையில் இருக்கும்,
ஏழு பேருமே... உண்மையான குற்றவாளிகள் அல்ல.

ராஜீவை... கொலை செய்தவர்கள், இப்பவும்  வெளியில், சொகுசாக வாழ்கின்றார்கள்.

உலகத்திற்கே தெரிந்த விடயம் அவர்கள் கொலையாளிகள் இல்லையென்பது..
இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுத்துமாத்து என்பது இதை தான். தேர்த்தல் வரைக்கும்  வைத்து இழுப்பார்கள். பிறகு கிடப்பில் போட்டு விடுவார்கள். இதை விட இன்னும் நிறைய சுத்துமாத்துகள் வரும். 

  • கருத்துக்கள உறவுகள்

பேரறிவாளன் விடுதலை செய்யப்படலாம் என்று சொல்லப்படுகின்றது

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

நல்ல விடயம். அரசியல் வியாபாரம்

தேர்தல் வருகிறது.  

எது எப்படியோ நல்லது நடக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எழுவர் விடுதலை: விரைவில் அறிவிப்பு… நம்பிக்கை தரும் தமிழக அரசு… காரணத்தை விளக்கும் வழக்கறிஞர்

Digital News Team 2021-01-31T14:46:18

விகடன்

 

திங்கள்கிழமையில் இருந்து புதன்கிழமைக்குள் நிச்சயமாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரும் நிச்சயமாக விடுதலை செய்யப்படுவார்கள் என அடித்துச் சொல்கிறது வழக்கறிஞர் வட்டாரம்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும்இ பேரறிவாளன்இ நளினிஇ முருகன் உள்ளிட்ட ஏழு பேரும் விரைவில் விடுதலை செய்யப்படலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2018 செப்டம்பர் 9-ம் தேதிஇ தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்வதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

7-tamils-300x169.jpeg

ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் ஆளுநர் அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார். அதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் தண்டனை அனுபவித்து வருபவர்களில் ஒருவரான பேரறிவாளன். ஆளுநர் தாமதம் செய்துவருவது குறித்து உச்சநீதிமன்றமும் கேள்வி எழுப்பியது. தொடர்ந்து எழுவர் விடுதலை தொடர்பான முழக்கங்கள் தீவிரமடைந்தன.

!
இந்தநிலையில் கடந்த 21-ம் தேதி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ”தமிழக ஆளுநர் அடுத்த மூன்று அல்லது நான்கு நாள்களில் முடிவெடுப்பார்” என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஆனால் விடுதலை குறித்து தெளிவுபடுத்தக் கூறி பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதையடுத்து 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க ஒரு வார கால அவகாசம் வழங்கி (ஜன. 29-ம் தேதிக்குள்) வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஓத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.

தொடர்ந்து  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரைச் சந்தித்து பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி பரிந்துரைக் கடிதம் ஒன்றையும் கொடுத்து வந்தார். இந்தநிலையில் காந்தியின் நினைவு தினமான நேற்று ஏழு பேரும் விடுதலை செய்யப்படலாம் எனத் தகவல் பரவியது.

ஆனால் இன்று விடுதலை செய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை. திங்கள்கிழமையில் இருந்து புதன்கிழமைக்குள் நிச்சயமாக ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என அடித்துச் சொல்கிறது வழக்கறிஞர்கள் வட்டாரம்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் புகழேந்தி

”விரைவில் அறிவிப்பு வரும். நேற்றே எதிர்பார்த்தோம் ஆனால் வரவில்லை. திங்கள்கிழமை அறிவிப்பு வருவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கின்றன.

கவர்னருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பது குறித்து அரசியலமைப்புச் சட்டத்தில் மிகத் தெளிவாக அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 161-வது பிரிவில் ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு தண்டனையைக் குறைப்பது மாற்றி அமைப்பது ஆகிய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

pukalenthy-297x300.jpg
ஆக 161-ம் பிரிவின் அதிகாரம் மாநில அரசின் அதிகாரம்தான் என உச்சநீதிமன்றமே மூன்றுமுறை தெளிவுபடுத்திவிட்டது. கேபினட்டின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர்தான் கவர்னர் எனவும் தெளிவாகச் சொல்லிவிட்டது. 9.9.2018-ல் தமிழக அமைச்சரவை ஏழு பேரையும் விடுதலை செய்யவேண்டும் என முடிவெடுத்துவிட்டது. அதற்கான தீர்மானமும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால்இ ஆளுநர் எந்தவொரு முடிவும் எடுக்காமல் காலதாமதம் செய்து வந்தார். இதுவரை எந்தவொரு வழக்கிலும் கேபினட்டின் முடிவை ஆளுநர் இரண்டு ஆண்டுகளாக ஒத்தி வைத்ததாக வரலாறே இல்லை.

இந்தநிலையில்இ தன்னை விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் ஒரு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கின் விசாரணையின்போது ‘மல்டி மானிட்டரிங் கமிட்டி அதாவது சர்வதேச அளவில் ஏதாவது சதி நடந்ததா என்று நடக்கும் விசாரணை முடிவுக்காகக் காத்திருப்பதாக கவர்னரின் தரப்பில் சொன்னார்கள். ஆனால் உச்சநீதிமன்றமோ ‘அதற்கும் இதற்கும் சம்மந்தமில்லை அந்த விசாரணை வேறு. அதைக் காரணம் காட்டி விடுதலை செய்யமாட்டேன் எனச் சொல்லமுடியாது’ என தெளிவாகச் சொல்லிவிட்டது. இனிமேல் கவர்னருக்கு விடுதலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை. அதனால்தான் மத்திய அரசின் சி.பி.ஐ வழக்கறிஞரே நீதிமன்றத்தில் கவர்னர் இரண்டு நாள்களில் முடிவெடுப்பார் என்று சொல்லிவிட்டார்.

perarivu-300x125.jpg
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஏழு பேரையும் விடுதலை செய்தே ஆகவேண்டும். உச்சநீதிமன்றமும் அதனால்தான் அழுத்தம் கொடுக்கிறது. முதல்வரும் கவர்னரைச் சந்தித்திருக்கிறார். அனைத்து விஷயங்களையும் வைத்துப் பார்க்கும்போது விடுதலை செய்வதற்கான பிராசஸ் நடந்துவருவதாகத் தெரிகிறது. கண்டிப்பாக திங்கள்கிழமை விடுதலை ஆகிவிடுவார்கள் என்றே தெரிகிறது” என்கிறார் நம்பிக்கையாக.

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் இதுகுறித்துப் பேசினோம்இ

”கனர்னருக்கு முதல்வர் ரிமைன்ட் செய்துவிட்டு வந்திருக்கிறார். சுப்ரீம் கோர்ட் ஆர்டர் குறித்தும் சொல்லிவிட்டு வந்திருக்கிறார். ஒருவாரம் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. கவர்னர்தான் இனி முடிவெடுக்கவேண்டும். நல்ல முடிவாக வரவேண்டும் என்றுதான் நாங்களும் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

தொடர்ந்துஇ அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது

”தமிழக மக்களின் வேண்டுகோளை ஏற்று ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என மறைந்த முதல்வர் அம்மா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். நீதிமன்ற வழிகாட்டுதலின்படிஇ விடுதலை செய்வதாகவும் அறிவித்தார். ஆனால்இ அப்போதைய மத்திய அரசு அதற்குத் தடை வாங்கிவிட்டது. தொடர்ந்து அம்மா நீதிமன்றத்தில் கடுமையான சட்டப் போராட்டத்தையும் நடத்தி வந்தாநடத்தி வந்தார்.

அம்மாவின் மறைவுக்குப் பிறகு தமிழக முதல்வரான எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தார்.

ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது கடுமையான விவாதத்துக்கு உள்ளானது. அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக கோரிக்கையை முன்வைத்தன. தொடர்ந்து தமிழக அரசின் சார்பாக நீதிமன்றத்திலும் சட்டப் போராட்டம் நடத்தப்பட்டது. அதன்படி தற்போது மத்திய அரசின் வழக்கறிஞரும் நீதிமன்றத்தில் ஆளுநர் முடிவெடுப்பார் என்று சொல்லியிருக்கிறார். நீதிமன்றமும் விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பரிந்துரைத்தது.  முதல்வரும் நீதிமன்ற உத்தரவையும் கோடிட்டுக் காட்டி ஏழு பேரையும் விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்திப் பேசி வந்திருக்கிறார். ஆளுநரும் பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதனால் ஏழு பேரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என அரசும் நம்புகிறது அ.தி.மு.கவும் நம்புகிறது” என உறுதியாகச் சொல்கிறார்.

https://thinakkural.lk/article/108643

  • கருத்துக்கள உறவுகள்

எழுவர் விடுதலைக்கு ஆளுநர் முட்டுக்கட்டைப் போடுவது  நியாயமில்லை- பா.ம.க தலைவர் ராமதாஸ் அறிக்கை

 
1-1.jpg
 32 Views

தமிழர்கள் விடுதலைக்கு ஆளுநர் முட்டுக்கட்டைப் போடுவது எந்த வகையிலும் நியாயமல்ல என்று மருத்துவர் ராமதாஸ்  தெரிவித்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பேரறிவாளன் விடுதலை குறித்து ஒரு வாரத்தில் தமிழக ஆளுனர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு, 12 நாட்களாகியும் அது குறித்து இன்று வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுனர் மேலும் ஒரு முறை உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காதது மிகவும் வேதனை அளிக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்தன. கடந்த ஜனவரி 20ஆம் தேதி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுனருக்கு அதிகாரம் இல்லை என்றும், இந்த வி‌ஷயத்தில் குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க முடியும் என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதற்கு அடுத்த நாள் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட மத்திய அரசு, 7 தமிழர் விடுதலை குறித்த பரிந்துரை மீது ஆளுனரே முடிவெடுக்கலாம்; அடுத்த 4 நாட்களுக்குள் இதுபற்றி ஆளுனர் முடிவெடுப்பார் என்றும் தெரிவித்தது. அதற்கு அடுத்த நாள் பேரறிவாளன் தரப்பின் கோரிக்கைப்படி, இவ்வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், ஒரு வாரத்திற்குள் ஆளுனர் முடிவெடுக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது.

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் அளித்த வாக்குறுதியின்படி கடந்த 25ஆம் தேதிக்குள் பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டும்; உச்சநீதிமன்ற ஆணைப்படி முடிவெடுப்பதாக இருந்தாலும் கூட 28ஆம் தேதிக்குள் ஆளுனர் தீர்மானித்திருக்க வேண்டும்.

ஆனால், கெடு முடிந்து நான்கு நாட்களாகியும் கூட எந்த நகர்வும் நடக்கவில்லை; அதற்கான காரணத்தையும் ஆளுனர் மாளிகை இதுவரை தெரிவிக்கவில்லை. இந்த தாமதம் பெரும் மனித உரிமை மீறல் ஆகும். பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்கும் விவகாரத்தில் இவ்வளவு கால தாமதம் தேவையில்லை.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் சிறையில் அடைக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகின்றன. அவர்களை விடுதலை செய்வதற்கான பரிந்துரையை ஆளுனருக்கு தமிழக அமைச்சரவை அனுப்பி வைத்து கிட்டத்தட்ட 30 மாதங்கள் நிறைவடையப் போகின்றன. இவ்வளவுக்குப் பிறகும் இல்லாத காரணங்களைக் கூறி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலைக்கு ஆளுனர் முட்டுக்கட்டைப் போடுவது எந்த வகையிலும் நியாயமல்ல. 7 தமிழர் விடுதலை குறித்த உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் மதித்து தமிழக ஆளுனர் செயல்பட வேண்டும்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி, தங்களின் வாழ்நாளில் பெரும்பகுதியை இழந்து விட்ட 7 தமிழர்களின் விடுதலையை இனியும் தாமதிப்பது சரியல்ல. எனவே, பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு அடுத்த 3 நாட்களில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், அவரையும், அவரைத் தொடர்ந்து மற்ற 6 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தமிழக அமைச்சரவையின் பரிந்துரைக்கு தமிழக ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/?p=40950

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

எழுவர் விடுதலைக்கு ஆளுநர் முட்டுக்கட்டைப் போடுவது  நியாயமில்லை- பா.ம.க தலைவர் ராமதாஸ் அறிக்கை

 
1-1.jpg
 32 Views

தமிழர்கள் விடுதலைக்கு ஆளுநர் முட்டுக்கட்டைப் போடுவது எந்த வகையிலும் நியாயமல்ல என்று மருத்துவர் ராமதாஸ்  தெரிவித்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பேரறிவாளன் விடுதலை குறித்து ஒரு வாரத்தில் தமிழக ஆளுனர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு, 12 நாட்களாகியும் அது குறித்து இன்று வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுனர் மேலும் ஒரு முறை உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காதது மிகவும் வேதனை அளிக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்தன. கடந்த ஜனவரி 20ஆம் தேதி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுனருக்கு அதிகாரம் இல்லை என்றும், இந்த வி‌ஷயத்தில் குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க முடியும் என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதற்கு அடுத்த நாள் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட மத்திய அரசு, 7 தமிழர் விடுதலை குறித்த பரிந்துரை மீது ஆளுனரே முடிவெடுக்கலாம்; அடுத்த 4 நாட்களுக்குள் இதுபற்றி ஆளுனர் முடிவெடுப்பார் என்றும் தெரிவித்தது. அதற்கு அடுத்த நாள் பேரறிவாளன் தரப்பின் கோரிக்கைப்படி, இவ்வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், ஒரு வாரத்திற்குள் ஆளுனர் முடிவெடுக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது.

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் அளித்த வாக்குறுதியின்படி கடந்த 25ஆம் தேதிக்குள் பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டும்; உச்சநீதிமன்ற ஆணைப்படி முடிவெடுப்பதாக இருந்தாலும் கூட 28ஆம் தேதிக்குள் ஆளுனர் தீர்மானித்திருக்க வேண்டும்.

ஆனால், கெடு முடிந்து நான்கு நாட்களாகியும் கூட எந்த நகர்வும் நடக்கவில்லை; அதற்கான காரணத்தையும் ஆளுனர் மாளிகை இதுவரை தெரிவிக்கவில்லை. இந்த தாமதம் பெரும் மனித உரிமை மீறல் ஆகும். பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்கும் விவகாரத்தில் இவ்வளவு கால தாமதம் தேவையில்லை.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் சிறையில் அடைக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகின்றன. அவர்களை விடுதலை செய்வதற்கான பரிந்துரையை ஆளுனருக்கு தமிழக அமைச்சரவை அனுப்பி வைத்து கிட்டத்தட்ட 30 மாதங்கள் நிறைவடையப் போகின்றன. இவ்வளவுக்குப் பிறகும் இல்லாத காரணங்களைக் கூறி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலைக்கு ஆளுனர் முட்டுக்கட்டைப் போடுவது எந்த வகையிலும் நியாயமல்ல. 7 தமிழர் விடுதலை குறித்த உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் மதித்து தமிழக ஆளுனர் செயல்பட வேண்டும்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி, தங்களின் வாழ்நாளில் பெரும்பகுதியை இழந்து விட்ட 7 தமிழர்களின் விடுதலையை இனியும் தாமதிப்பது சரியல்ல. எனவே, பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு அடுத்த 3 நாட்களில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், அவரையும், அவரைத் தொடர்ந்து மற்ற 6 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தமிழக அமைச்சரவையின் பரிந்துரைக்கு தமிழக ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/?p=40950

இன்னும்நாலுநாள் முடியேலையோ?

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடியும் மட்டும் 4 நா ட் கள் முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.