Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியக் கொடிகளை குறைத்து பெளத்த, இராணுவ கொடிகளுடன் சுதந்திர தினக் கொண்டாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி)

 

இராணுவ அணிவகுப்புகள், போர் வெற்றியை பறைசாற்றுகின்ற கோஷங்களுடன்  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று கொழும்பு சுதந்திர சதுக்க மண்டப வளாகத்தில் நடைபெற்று முடிந்தது. 

 

spacer.png

 

பிரதமர், அமைச்சர்கள், முப்படை பிரதானிகள், சர்வதேச இராஜதந்திரிகள் என பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர். தேசிய கொடிகளை குறைத்து பெளத்த சிங்கள கொடிகளுடனும், இராணுவ கொடிகளுடனும் சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வு  இன்று காலை 7.15 மணிக்கு தேசபிதா டி.எஸ்.சேனாநாயகவின் உருவச்சிலைக்கு முன்னாள் மலரஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அதிதிகளின் வருகை இடம்பெற்றது. முப்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர் மற்றும் அவரது பாரியார், பாதுகாப்பு செயலாளர் மற்றும் அவரது பாரியார், பாதுகாப்பு பிரதானி, அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அவரது பரியார், பிரதம நீதியரசர் மற்றும் அவரது பரியார், சபாநாயகர் மற்றும் அவரது பரியார், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அவரது பாரியார், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ மற்றும் அவரது பரியார் ஆகியோர் முறையே அதிதிகளாக வருகை தந்திருந்தனர். 

மேலும் வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள், அமைச்சின் செயலாளர்கள், இராணுவ அதிகாரிகள் என பலரும் நேற்றைய நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதனை அடுத்து தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டதுடன், 45 பாடசாலை மாணவ, மாணவிகளினால் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பாடசாலை மாணவர்களினால் ஜயமங்கள கீதம் பாடப்பட்டதுடன், நாட்டிற்காக உயிர் நீத்த சகல தேசாபிமானிகளுக்கும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஜனாதிபதிக்கு மரியாதை வணக்கம் செலுத்தும் விதமாக 21 மரியாதை பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.

 

spacer.png

இதனை அடுத்தே ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஜனாதிபதியின் உரையை அடுத்து இலங்கை தரைப்படை, இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை பொலிஸ், சிவில் பாதுகாப்பு படையணி மற்றும் தேசிய மாணவர் படையணி ஆகியவற்றின் மரியாதை அணிவகுப்புகளும் அதனை தொடர்ந்து கலாசார அனுவகுப்புகளும் இடம்பெற்றன.

 

இந்நிலையில் இன்று சுதந்திரதினத்தை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களுக்கு முன்னரே கொழும்பு சுதந்திர சதுக்க வளாகம் பலத்த பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட நிலையில் அப்பகுதியெங்கும் பெளத்த கொடிகளும், சௌபாக்கியத்தை வெளிப்படுத்தும் கடுஞ்சிவப்பு சிங்கள கொடிகளும், முப்படைகளின் ஒவ்வொரு படையணியையும் வெளிப்படுத்தும் இராணுவ கொடிகளும் அளவுக்கு அதிகமாக பறக்கவிடப்பட்டிருந்தன. இந்த கொடிகளுக்கு மத்தியில் ஆங்காங்கே இலங்கையின் தேசிய கொடிகளும் மிகக் குறைவாக பறந்ததையும் பார்க்கக்கூடியதாக இருந்தது.

 

நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் காரணமாக நேற்றைய சுதந்திர தின நிகழ்வுகள் மிகவும் கட்டுப்பாட்டுடன், சுகாதார வழிமுறைகளுக்கு அமைய இடம்பெற்றன.

ஒவ்வொரு சுதந்திரதின நிகழ்வுகளின் போதும் பொதுமக்கள் நிகழ்வுகளை பார்வையிட அழைக்கப்படுவது வழக்கமாக இருந்தாலும் இம்முறை  அவை அனைத்துமே நிறுத்தப்பட்டு வெறுமனே அதிதிகளுடன் மாத்திரம் நிகழ்வுகள் இடம்பெற்று முடிந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

தேசியக் கொடிகளை குறைத்து பெளத்த, இராணுவ கொடிகளுடன் சுதந்திர தினக் கொண்டாட்டம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, பிழம்பு said:

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வு  இன்று காலை 7.15 மணிக்கு தேசபிதா டி.எஸ்.சேனாநாயகவின் உருவச்சிலைக்கு முன்னாள் மலரஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கப்பட்டது.

பாவி மனிசன் செய்த வேலை. இன்று ஈழத்தமிழினம் நடுத்தெருவில்....

Bildergebnis für டட்லி சேனாநாயக்க சேர் பொன் ராமநாதன்

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா மட்டும் இல்லையென்றால் இவர்களின் ஆட்டத்தை சொல்லியிருக்கமுடியாது.  இயற்கையும் ஒருபக்கம் கொடுத்தாலும் இன்னொருபக்கம் அடக்கிதான்  வைக்குது.  

  • கருத்துக்கள உறவுகள்

27545667_1626596270758612_21663327138267

  • கருத்துக்கள உறவுகள்

Image

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, vanangaamudi said:

27545667_1626596270758612_21663327138267

எவ்வளவு விமரிசனங்கள் இருந்தாலும்...பிரபாகரனாகட்டும் அல்லது சேர். பொன். இராமனாதனாகட்டும்..அவர்கள் நிமிர்ந்து நிற்கும் போது...எவ்வளவு கம்பீரமாக நிற்கின்றார்கள்...!

அன்று தேர் இழுத்தவர்கள்....இன்று தேரில் இருக்கின்றார்கள்..!

காலம் என்பது ஒரு சக்கரம் போன்றது...!😒

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.