Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் பொலிஸாக இருந்திருந்தால் பேரணி சென்றிருந்தவர்களின் கால்களை உடைத்திருப்பேன் என்கிறார் மேர்வின்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது காலிமுகத்திடலில் வைத்து திருப்பியனுப்பும் அரசாங்கம் தமிழர்களை இவ்வளவு நீண்ட பேரணி செல்வதற்கு அனுமதித்திருக்கிறது.

நான் அந்த இடத்தில் பொலீஸ் சீருடையில் இருந்திருந்தால் அத்தனை பேரினதும் கால்களையும் உடைத்து விரட்டியிருப்பேன்" என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

பொன்னம்பலம் ராமநாதன் போன்ற தமிழ் கல்விமான்கள் கூட இதே நாட்டில்தான் வாழ்ந்தார்கள்.

அப்படிப்பட்ட இடத்தில் எங்கிருந்தோ வந்து பாராளுமன்றில் நுழைந்தவர்கள் செய்கின்ற எல்லாவற்றுக்கும் தலையாட்ட முடியாது.  

 

அனைவருக்கும் ஒரே நீதி இருக்க வேண்டும். சிங்கள மக்களே விழித்துக் கொள்ளுங்கள். இவற்றுக்கு எதிராக நாங்கள் போராட்டத்தில் குதிப்போம். என்னை யார் தடுக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

உங்களுக்கு தலைமை வகிக்க நான் தயாராக இருக்கிறேன் என ஆதங்கம் கொண்ட மேர்வின் சில்வா,  "ராஜபக்ஷக்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். தயவு செய்து முதுகெலும்பு உடைந்தவர்கள் போல் நடந்துகொள்ளாதீர்கள் என குறிப்பிட்டார்.

 

 

mervyn.JPG

 

 சிங்களவருக்கு பிடித்த மாதிரியோ தமிழருக்கு பிடித்த மாதிரியோ முஸ்லிம்களுக்கு பிடித்த மாதிரியோ ஆட்சி நடத்த அரசாங்கம் தேவையில்லை.

 

கொரோனாவால் இறந்த உடல்களை எரிப்பதா? புதைப்பதா? நேராக வைப்பதா? குறுக்காக வைப்பதா? என்பது பற்றி நாங்கள் பேச தேவையில்லை.

 

அந்த முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை சுகாதாரத்துறையிடம் ஒப்படையுங்கள். அவற்றை பற்றி முழுதாக அறிந்த வைத்தியர்களிடம் ஒப்படையுங்கள்.

 

நான் ஒரு தூய சிங்கள பௌத்தன். இது ஒரு சிங்கள பௌத்த நாடு. நாங்கள் புத்தரின் போதனைகளை பின்பற்றுவதால் ஏனைய மதங்களுக்கு மதிப்பளிக்க கடமைப்பட்டிருக்கிறோம். அதற்காக அவர்கள் செய்வதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என முன்னாளர் அமைச்சர் மேர்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.

நான் பொலிஸாக இருந்திருந்தால் பேரணி சென்றிருந்தவர்களின் கால்களை உடைத்திருப்பேன் என்கிறார் மேர்வின் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

நான் பொலிஸாக இருந்திருந்தால் கால்களை உடைத்திருப்பேன் - மேர்வின்

சாணக்கியன், கருணாகரன் உட்பட்ட 7 பேருக்கு அழைப்பாணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி விசாரணை அறிக்கை எம்மிடம் கையளிக்க வேண்டுமென பொதுபல சேனா கோரிக்கை

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

பொன்னம்பலம் ராமநாதன் போன்ற தமிழ் கல்விமான்கள் கூட இதே நாட்டில்தான் வாழ்ந்தார்கள்.

குலத்தைக் கெடுக்கும் கோடரிக்காம்புகளுக்கு அடிமை வேலை செய்யத் தூண்ட இவர்கள் கொடுக்கும்  பட்டம். இதில் தாங்கள் யாரென்பதையே  மறந்துவிடும் மோட்டுகூட்டம்.

 

2 hours ago, பிழம்பு said:

நான் அந்த இடத்தில் பொலீஸ் சீருடையில் இருந்திருந்தால் அத்தனை பேரினதும் கால்களையும் உடைத்து விரட்டியிருப்பேன்" என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா

இவரது வேலையே இதுதான் இதற்கென்று ஒரு அமைச்சு அதில் இவர் அமைச்சர். அநாகரிகமான பேச்சும், அநாகரிகமான நடத்தையும் கொண்ட சிங்கள பவுத்த நாட்டில் இவர்கள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை. இதை சரியென்று ஏற்கும் பவுத்த மக்கள் இதுதான் புத்தரின் போதனை என்கிறார்களோ?   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, பிழம்பு said:

நான் அந்த இடத்தில் பொலீஸ் சீருடையில் இருந்திருந்தால் அத்தனை பேரினதும் கால்களையும் உடைத்து விரட்டியிருப்பேன்" என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

எனக்கு இன்னொரு முகம் இருக்கெண்டு சொன்னார் ஜனாதிபதி
கால் அடிச்சு முறிப்பன் எண்டுறார் இவர்
போர் எண்டால் போர் எண்டார் அண்டொருத்தர்

சொல்ல வேண்டிய பாசையில சொல்லுவன் எண்டுறார் டக்ளஸ் அண்ணர்...

பிரமாதம்.

  • கருத்துக்கள உறவுகள்

ரூபவாகினியில் மேர்வின் வாங்கிய அடி யாருக்காவது நினைவுள்ளதா??😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எனக்கு இன்னொரு முகம் இருக்கெண்டு சொன்னார் ஜனாதிபதி
கால் அடிச்சு முறிப்பன் எண்டுறார் இவர்
போர் எண்டால் போர் எண்டார் அண்டொருத்தர்

சொல்ல வேண்டிய பாசையில சொல்லுவன் எண்டுறார் டக்ளஸ் அண்ணர்...

பிரமாதம்.

இதுதான் இலங்கை அரசு. இதுக்கு நாங்களும் முண்டு கொடுக்கிறோமில்ல. மக்களுக்கும் பழகிப்போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

பேரணியில் பங்கேற்ற தமிழர்களின் கால்களை அடித்து உடைத்திருப்பேன் - மேர்வின் சில்வா.!

Screenshot-2021-02-14-08-39-19-899-com-a 

"சிங்களவர்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது காலி முகத்திடலில் வைத்து திருப்பியனுப்பும் அரசு, தமிழர்களை இவ்வளவு நீண்ட பேரணி செல்வதற்கு அனுமதித்திருக்கின்றது. நான் அந்த இடத்தில் பொலிஸ் சீருடையில் இருந்திருந்தால் அத்தனை பேரினதும் கால்களையும் உடைத்து விரட்டியிருப்பேன்."

- இவ்வாறு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"பொன்னம்பலம், இராமநாதன் போன்ற தமிழ் கல்விமான்கள் கூட இதே நாட்டில்தான் வாழ்ந்தார்கள். அப்படிப்பட்ட இடத்தில் இன்று எங்கிருந்தோ வந்து நாடாளுமன்றில் நுழைந்தவர்கள் செய்கின்ற எல்லாவற்றுக்கும் தலையாட்ட முடியாது.

அனைவருக்கும் ஒரே நீதி இருக்க வேண்டும். சிங்கள மக்களே விழித்துக் கொள்ளுங்கள். இவற்றுக்கு எதிராக நாங்கள் போராட்டத்தில் குதிப்போம். என்னை யார் தடுக்கின்றார்கள் என்று பார்க்கலாம். உங்களுக்கு தலைமை வகிக்க எப்போதும் நான் தயாராக இருக்கிறேன்.

ராஜபக்சக்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன். தயவு செய்து முதுகெலும்பு உடைந்தவர்கள் போல் நடந்துகொள்ளாதீர்கள்.

சிங்களவருக்குப் பிடித்த மாதிரியோ தமிழருக்குப் பிடித்த மாதிரியோ முஸ்லிம்களுக்கு பிடித்த மாதிரியோ ஆட்சி நடத்த இந்த அரசு தேவையில்லை.

கொரோனாவால் இறந்த உடல்களை எரிப்பதா? புதைப்பதா? நேராக வைப்பதா? குறுக்காக வைப்பதா? என்பது பற்றி நாங்கள் பேசத் தேவையில்லை.

அந்த முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை சுகாதாரத்துறையிடம் ஒப்படையுங்கள். அவற்றைப் பற்றி முழுதாக அறிந்த வைத்தியர்களிடம் ஒப்படையுங்கள்.

நான் ஒரு தூய சிங்கள பௌத்தன். இது ஒரு சிங்கள பௌத்த நாடு. நாங்கள் புத்தரின் போதனைகளைப் பின்பற்றுவதால் ஏனைய மதங்களுக்கு மதிப்பளிக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

அதற்காக அவர்கள் செய்வதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது" - என்றார்.

http://aruvi.com/article/tam/2021/02/14/22603/

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பேரணியில் பங்கேற்ற தமிழர்களின் கால்களை அடித்து உடைத்திருப்பேன் - மேர்வின் சில்வா.!

Screenshot-2021-02-14-08-39-19-899-com-a 

"சிங்களவர்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது காலி முகத்திடலில் வைத்து திருப்பியனுப்பும் அரசு, தமிழர்களை இவ்வளவு நீண்ட பேரணி செல்வதற்கு அனுமதித்திருக்கின்றது. நான் அந்த இடத்தில் பொலிஸ் சீருடையில் இருந்திருந்தால் அத்தனை பேரினதும் கால்களையும் உடைத்து விரட்டியிருப்பேன்."

- இவ்வாறு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"பொன்னம்பலம், இராமநாதன் போன்ற தமிழ் கல்விமான்கள் கூட இதே நாட்டில்தான் வாழ்ந்தார்கள். அப்படிப்பட்ட இடத்தில் இன்று எங்கிருந்தோ வந்து நாடாளுமன்றில் நுழைந்தவர்கள் செய்கின்ற எல்லாவற்றுக்கும் தலையாட்ட முடியாது.

அனைவருக்கும் ஒரே நீதி இருக்க வேண்டும். சிங்கள மக்களே விழித்துக் கொள்ளுங்கள். இவற்றுக்கு எதிராக நாங்கள் போராட்டத்தில் குதிப்போம். என்னை யார் தடுக்கின்றார்கள் என்று பார்க்கலாம். உங்களுக்கு தலைமை வகிக்க எப்போதும் நான் தயாராக இருக்கிறேன்.

ராஜபக்சக்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன். தயவு செய்து முதுகெலும்பு உடைந்தவர்கள் போல் நடந்துகொள்ளாதீர்கள்.

சிங்களவருக்குப் பிடித்த மாதிரியோ தமிழருக்குப் பிடித்த மாதிரியோ முஸ்லிம்களுக்கு பிடித்த மாதிரியோ ஆட்சி நடத்த இந்த அரசு தேவையில்லை.

கொரோனாவால் இறந்த உடல்களை எரிப்பதா? புதைப்பதா? நேராக வைப்பதா? குறுக்காக வைப்பதா? என்பது பற்றி நாங்கள் பேசத் தேவையில்லை.

அந்த முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை சுகாதாரத்துறையிடம் ஒப்படையுங்கள். அவற்றைப் பற்றி முழுதாக அறிந்த வைத்தியர்களிடம் ஒப்படையுங்கள்.

நான் ஒரு தூய சிங்கள பௌத்தன். இது ஒரு சிங்கள பௌத்த நாடு. நாங்கள் புத்தரின் போதனைகளைப் பின்பற்றுவதால் ஏனைய மதங்களுக்கு மதிப்பளிக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

அதற்காக அவர்கள் செய்வதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது" - என்றார்.

http://aruvi.com/article/tam/2021/02/14/22603/

லூசுக் கூ.....

  • கருத்துக்கள உறவுகள்

 

13 hours ago, பிழம்பு said:

நான் அந்த இடத்தில் பொலீஸ் சீருடையில் இருந்திருந்தால் அத்தனை பேரினதும் கால்களையும் உடைத்து விரட்டியிருப்பேன்" என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மகிந்தருக்கு இளரத்தம் ஏத்தி, அவரை நீண்டநாள் இன்பம்மேவி வாழவைக்க, இந்தோனேசியா, தாய்லாந்து என்று ஓடி ஓடி உடைந்த அவரது கால்களைப் பார்க்கும் போதெல்லாம், அவைகள் அவரை இப்படித்தான் சிந்திக்கவைக்கும். 😩

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பிழம்பு said:

நான் அந்த இடத்தில் பொலீஸ் சீருடையில் இருந்திருந்தால் அத்தனை பேரினதும் கால்களையும் உடைத்து விரட்டியிருப்பேன்" என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

spacer.png

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.