Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். கலாசார மத்திய நிலையத்தை மத்திய அரசிடம் கையளிக்க ஆர்னோல்ட் உடன்பட்டிருந்தார்- மணிவண்ணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

யாழ். கலாசார மத்திய நிலையத்தை மத்திய அரசிடம் கையளிக்க ஆர்னோல்ட் உடன்பட்டிருந்தார்- மணிவண்ணன்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ்ப்பாண நகரின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணக் கலாசார மத்திய நிலையத்தை மத்திய அரசிடம் கையளிப்பதற்கு யாழ். மாநகர முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் இணங்கியிருந்ததாக தற்போதைய முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாகவே, குறித்த கட்டட நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்தும் அதனைத் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக ஊடக சந்திப்பின்போது அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் கூறுகையில், “யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தினைக் கையேற்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம். குறிப்பாக கலாசார நிலையத்தை இயக்குவதற்கான உத்தியோகத்தர்களை உத்தியோகபூர்வமாகப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம்.

நான் மாநகர முதல்வராகப் பதவியேற்ற காலத்திலிருந்து முதல் பணியாக இந்த விடயத்தினை முன்னிறுத்தி செயற்படுத்தி வருகிறேன். எனினும், குறித்த கட்டடமானது யாழ்ப்பாண மாநகர சபையிடமிருந்து பறிக்கப்படும் நிலை காணப்படுகின்ற நிலையில் அதனை, யாழ். மாநகரசபை பொறுப்பேற்று நடத்துவதற்குரிய செயற்பாட்டை நான் முன்னெடுத்துள்ளேன்.

அத்தோடு, அங்கே பணியாற்றுவதற்காக 67 உத்தியோகத்தர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கான முன்னெடுப்புக்களை முன்னெடுத்துள்ளேன்.

மேலும், அந்தக் கட்டிடத்தினை நிர்மாணித்த பொறியியலாளர்களிடம் கட்டடத்தை எவ்வாறு கையாள்வது, பராமரிப்பது என்பது தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுதுள்ளோம். வெகுவிரைவில் உத்தியோகபூர்வமாக குறித்த கட்டடமானது திறப்புவிழா செய்யப்பட்டு யாழ். மாநகர சபையிடம் கையளிக்கப்படவுள்ளது.

அத்தோடு, இந்தியத் துணைத்தூதுவரிடம் இதுகுறித்து பல விடயங்களைத் தெரியப்படுத்தி உள்ளோம். அவர்களும் இதற்கு ஒத்தாசை வழங்கி வருகின்றார்கள்.

இதேவேளை, முன்னைய மாநகர ஆட்சியாளர் குறித்த கலாசார மத்திய நிலையத்தினை மத்திய அரசாங்கத்திற்குக் கையளிப்பதற்கு இணங்கி இருந்ததன் காரணமாகவே இவ்வளவு காலமும் குறித்த கட்டடம் திறக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றன.

எனினும், இந்த கலாசார மத்திய நிலையமானது யாழ். மாநகர சபையின் சொத்தாகும். அது இந்த ஆட்சி மாற்றத்தின் மூலம் காப்பாற்றப்பட்டு நமது மாநில சபைக்கு மீண்டும் கையளிக்கப்படவுள்ளது என்பதை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/யாழ்-கலாசார-மத்திய-நிலைய/

மேயரின் முயற்சிகளுக்கு நன்றிகள். 👍 இது தொடர்பில் உறுதியாக இருப்பதுடன் இந்திய அரசுடன் தொடர்பினை ஏற்படுத்தி ராஜதந்திர நகர்வுகள் மூலம்  இந்த நிலையம்  எக்காலமும்  யாழ் மாநகர சபையில் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் உறுதியான செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். 

அத்தோடு நிற்காது இக்கட்டத்தை உலக தரத்தில் தொடர்ச்சியாக பராமரிக்கும் பொறிமுறை ஒன்றை உருவாக்கி அதனை யாழ் மாநகர சபையின் நிர்வாக பொறுப்பின் கீழ் நிரந்தரமாக்க வேண்டும். மாநகரசபைக்கு தொடர்ச்சியான வருவாய் மூலமாக( Revenue Source) இது அமையும் என்பதால் இதன் பராமரிப்பு செலவு குறித்து அச்சமடைய தேவையில்லை. 

இலங்கை அரசின் கீழான உள்ளூராட்சி, மாகாண அரசினை பொறுப்பில் எடுப்பவர்கள் தேசிய அரசியலில்  இருந்து சற்றே விலகி இருந்து உள்ளூர் அபிவிருத்திகளில் கூடிய கவனம் செலுத்துவதன் மூலம் தமிழரின் பலம் வெவ்வேறு மட்டங்களில் காப்பாற்ற உதவலாம். அந்நோக்கில் ஆட்சியில்  அதிகாரத்தில் உள்ளவர்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட நல்லுறவை பேணுவதில் தவறில்லை. விக்கினேஸ்வரன் விட்ட தவறை எதிர்காலத்தில் மாகாண சபை ஆட்சியாளர்கள் எவரும் திரும்ப விடக்கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, tulpen said:

மேயரின் முயற்சிகளுக்கு நன்றிகள். 👍 இது தொடர்பில் உறுதியாக இருப்பதுடன் இந்திய அரசுடன் தொடர்பினை ஏற்படுத்தி ராஜதந்திர நகர்வுகள் மூலம்  இந்த நிலையம்  எக்காலமும்  யாழ் மாநகர சபையில் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் உறுதியான செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். 

அத்தோடு நிற்காது இக்கட்டத்தை உலக தரத்தில் தொடர்ச்சியாக பராமரிக்கும் பொறிமுறை ஒன்றை உருவாக்கி அதனை யாழ் மாநகர சபையின் நிர்வாக பொறுப்பின் கீழ் நிரந்தரமாக்க வேண்டும். மாநகரசபைக்கு தொடர்ச்சியான வருவாய் மூலமாக( Revenue Source) இது அமையும் என்பதால் இதன் பராமரிப்பு செலவு குறித்து அச்சமடைய தேவையில்லை. 

இலங்கை அரசின் கீழான உள்ளூராட்சி, மாகாண அரசினை பொறுப்பில் எடுப்பவர்கள் தேசிய அரசியலில்  இருந்து சற்றே விலகி இருந்து உள்ளூர் அபிவிருத்திகளில் கூடிய கவனம் செலுத்துவதன் மூலம் தமிழரின் பலம் வெவ்வேறு மட்டங்களில் காப்பாற்ற உதவலாம். அந்நோக்கில் ஆட்சியில்  அதிகாரத்தில் உள்ளவர்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட நல்லுறவை பேணுவதில் தவறில்லை. விக்கினேஸ்வரன் விட்ட தவறை எதிர்காலத்தில் மாகாண சபை ஆட்சியாளர்கள் எவரும் திரும்ப விடக்கூடாது. 

😂😂

உங்கள் நம்பிக்கையை ஏன் கெடுப்பான்.

எதற்கும் யாழ் பொதுசன நூலகத்தை முழுமையாக பொது மக்களுக்குத் திறந்துவிட்டு, அதனைப் பராமரித்து அதில் பயிற்சி எடுக்கட்டும்.  மிகுதியை பின்னர் பார்ப்போம்...🤥

1 minute ago, Kapithan said:

😂😂

உங்கள் நம்பிக்கையை ஏன் கெடுப்பான்.

எதற்கும் யாழ் பொதுசன நூலகத்தை முழுமையாக பொது மக்களுக்குத் திறந்துவிட்டு, அதனைப் பராமரித்து அதில் பயிற்சி எடுக்கட்டும்.  மிகுதியை பின்னர் பார்ப்போம்...🤥

ஏன் கபிதன் யாழ் பொதுசன நூல் நிலையம் பொதுமக்களுக்கு திறந்து விடப்படவில்லையா?  அந்த கட்டட பராமரிப்பில் தவறு உள்ளதா? 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, tulpen said:

ஏன் கபிதன் யாழ் பொதுசன நூல் நிலையம் பொதுமக்களுக்கு திறந்து விடப்படவில்லையா?  அந்த கட்டட பராமரிப்பில் தவறு உள்ளதா? 

ஆம் துல்பன்.

1) தமிழர்கள் உள்ளே செல்வதற்கு ஒரு நிபந்தனை. சிங்களவருக்கு ஒரு நிபந்தனை. பிற நாட்டவருக்கு ஒரு நிபந்தனை.

2) நூலகம் முளுமையாகப் பாவனைக்குத் திறந்துவிடப்படவில்லை

3) பராமரிப்பில் ஏக குறைபாடுகள். 

4) அலுவலர்களின் தான்தோன்றித்தனம், பொறுப்பின்மை, பயனாளர்களை மதியாமை. இன்னோரன்ன... குறைபாடுகள்.

ஒருமுறை உள்ளே சென்று வாருங்கள். 

வெறுக்கும். 

☹️

 

 

29 minutes ago, Kapithan said:

ஆம் துல்பன்.

1) தமிழர்கள் உள்ளே செல்வதற்கு ஒரு நிபந்தனை. சிங்களவருக்கு ஒரு நிபந்தனை. பிற நாட்டவருக்கு ஒரு நிபந்தனை.

2) நூலகம் முளுமையாகப் பாவனைக்குத் திறந்துவிடப்படவில்லை

3) பராமரிப்பில் ஏக குறைபாடுகள். 

4) அலுவலர்களின் தான்தோன்றித்தனம், பொறுப்பின்மை, பயனாளர்களை மதியாமை. இன்னோரன்ன... குறைபாடுகள்.

ஒருமுறை உள்ளே சென்று வாருங்கள். 

வெறுக்கும். 

☹️

 

 

இவை களையப்பட வேண்டும் எனபதில் எவருக்கும் மாற்று கருத்து இல்லை.  படிக்கும் காலத்தில் (படிக்க மட்டுமில்லை😂)    வாரத்தில் இரண்டு மூன்று முறை சுதந்திரமாக அங்கு சென்று வந்த காலம் ஒன்று இருந்தது. அது ஒரு அழகான சைக்கிள் காலம்.  சுதந்திரத்திற்கான போராட்டம் இருந்த சுதந்திரத்தையும் பறித்தது தான் எமது வரலாறு. எதிர்காலம் அந்த வரலாற்றை திருத்தி எழுதும். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

சரி தொடங்கியாச்சு?? ☹️

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kapithan said:

ஆம் துல்பன்.

1) தமிழர்கள் உள்ளே செல்வதற்கு ஒரு நிபந்தனை. சிங்களவருக்கு ஒரு நிபந்தனை. பிற நாட்டவருக்கு ஒரு நிபந்தனை.

2) நூலகம் முளுமையாகப் பாவனைக்குத் திறந்துவிடப்படவில்லை

3) பராமரிப்பில் ஏக குறைபாடுகள். 

4) அலுவலர்களின் தான்தோன்றித்தனம், பொறுப்பின்மை, பயனாளர்களை மதியாமை. இன்னோரன்ன... குறைபாடுகள்.

ஒருமுறை உள்ளே சென்று வாருங்கள். 

வெறுக்கும். 

☹️

 

 

கபித்தான் சொன்னது சரியானதே.
நான் கடந்தமுறை சென்ற போது(2019) அவதானித்தது எதுவெனில், நூலகத்தை நூதனசாலையாய் மாற்றியுள்ளார்கள். தமிழர் யாரும் படிப்பதற்கு செல்வதில்லை, அதனை ஒரு சுற்றுலா தலமாக தான் மக்கள் பாவிக்கின்றார்கள்.

 

2 minutes ago, zuma said:

கபித்தான் சொன்னது சரியானதே.
நான் கடந்தமுறை சென்ற போது(2019) அவதானித்தது எதுவெனில், நூலகத்தை நூதனசாலையாய் மாற்றியுள்ளார்கள். தமிழர் யாரும் படிப்பதற்கு செல்வதில்லை, அதனை ஒரு சுற்றுலா தலமாக தான் மக்கள் பாவிக்கின்றார்கள்.

 

புதிய மேயராவது அதை மாற்றியமைத்து யாழ் பொது சன நூலகத்தை பழைய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனபதே அனைவரதும் விருப்பமும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, zuma said:

கபித்தான் சொன்னது சரியானதே.
நான் கடந்தமுறை சென்ற போது(2019) அவதானித்தது எதுவெனில், நூலகத்தை நூதனசாலையாய் மாற்றியுள்ளார்கள். தமிழர் யாரும் படிப்பதற்கு செல்வதில்லை, அதனை ஒரு சுற்றுலா தலமாக தான் மக்கள் பாவிக்கின்றார்கள்.

 

 

2 minutes ago, zuma said:

கபித்தான் சொன்னது சரியானதே.
நான் கடந்தமுறை சென்ற போது(2019) அவதானித்தது எதுவெனில், நூலகத்தை நூதனசாலையாய் மாற்றியுள்ளார்கள். தமிழர் யாரும் படிப்பதற்கு செல்வதில்லை, அதனை ஒரு சுற்றுலா தலமாக தான் மக்கள் பாவிக்கின்றார்கள்.

 

போர்க்காலத்தில் நல்லூரில் இருந்த இந்த நூலகம் எவ்வளவோ மேல். 

நூலகத்தில் வேலை செய்வோருக்கு அது நூல்நிலையம் என்பதும் மறந்துவிட்டது, தமிழரின் வரலாறு/அடையாளம் என்பதும் மறந்துவிட்டது. 

☹️

1 minute ago, tulpen said:

புதிய மேயராவது அதை மாற்றியமைத்து யாழ் பொது சன நூலகத்தை பழைய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனபதே அனைவரதும் விருப்பமும். 

முதல்வரால் அது முடியாது.

எங்கள் மனனிலை கறள் பிடித்துவிட்டது. 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

😂😂

உங்கள் நம்பிக்கையை ஏன் கெடுப்பான்.

எதற்கும் யாழ் பொதுசன நூலகத்தை முழுமையாக பொது மக்களுக்குத் திறந்துவிட்டு, அதனைப் பராமரித்து அதில் பயிற்சி எடுக்கட்டும்.  மிகுதியை பின்னர் பார்ப்போம்...🤥

நானும் 2019யில் அங்கு நின்ற போது ஒருக்கால் போய் பார்ப்போம் என்று போக அங்கு நின்ற காவலர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பின் தான் பார்வையாளர்கள் வரலாம் என்று சொன்னார்கள் ...நான் விசரில் திரும்பி வந்திட்டேன் ...அதன் பிறகு போகவில்லை .
அங்கு போய் வாசிப்பதற்கு எல்லோரையும் ஒரே நேரத்தில் விடுவதில் என்ன தயக்கம் என்று தெரியவில்லை ...ஒரு வேளை ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் தான் இந்த நடைமுறையோ தெரியாது 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தின் நிர்வாகம் மாநகர சபையிடமே இருத்தல் வேண்டும் – சி.வி.கே. சிவஞானம்

புதிதாக அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம் தொடர்பான பராமரிப்பு குறித்து வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த விடயத்தில் தனித்து மாநகர சபை மீது பாரிய நிதித் தாக்கத்தைச் சுமத்தி மக்களின் சேவைகளைப் பாதிக்காத வகையில் நிதி மூலங்களுக்கான வாய்ப்புக்களை வடக்கு மாகாண நிர்வாகமும் இணைந்து முன்னெடுக்க வேண்டும். இந்த நிதித்தாக்க விடயத்தில் கவனமும் கட்டுப்பாடும் செலுத்த வேண்டுமென அன்புடன் வேண்டுகிறேன் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில், “புதிதாக யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு தொடர்பாக பல சர்ச்சைக்குரிய செய்திகள் ஊடகங்களில் வெளிவருவதைக் காணக்கூடியதாக உள்ளது.1960-களில் நிர்மாணிக்கப்பட்டு யுத்த சூழ்நிலையில் சேதமடைந்து திறந்தவெளி அரங்குக்குப் பதிலாக இந்தக் கலாசார மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்திலிருந்த திறந்தவெளி அரங்கானது, யாழ். மாநகர சபைக்குரிய ஆதனத்தில், மாநகர சபையின் செலவில் நிர்மாணிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டதாகும்.

இந்நிலையில், இந்தியாவின் பாரிய முழு நிதிப் பங்களிப்பின் மூலம் பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக இந்த கலாசார மத்திய நிலையம் அவ்விடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இதன் பராமரிப்புக்குப் போதுமான நிதிவசதி யாழ். மாநகர சபையிடம் இல்லையென்பது யதார்த்தமானது. எனினும், அதன் நிர்வாகம் மாநகர சபையிடமே இருத்தல் வேண்டும் என்பது எவ்வித கேள்விகளுக்கும் அப்பாற்பட்டது என மேலும் தெரிவித்துள்ளார்.(15)

 

http://www.samakalam.com/யாழ்ப்பாணம்-கலாசார-மத்தி/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.