Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

சிறு  வயதில் கனக்க  கதைகள் படித்திருப்போம்

கேட்டிருப்போம்

ஏன் கனக்க அனுபவங்களை  கதைகளாக நாமே  கண்டிருப்போம்

அவை  சொல்லப்படும் விதமும் எம்மை  வந்து சேர்ந்த  விதமும் மாறுபடுவது  போல

கதையை அல்லது அனுபவத்தை கிரகித்தலும் மாறுபடலாம் மாறுபட்டு விடக்கூடும்

ஆனால் கதையின் கருவும் அனுபவத்தின்  அனுகூலமும்  மாறுவதில்லை

அதேநேரம்  அதை நாம் கடந்து  செல்வதும்  கூட 

அல்லது  கண்டும் காணதுபோவதும் 

போவது  போல  பாசாங்கு  செய்வதும் கூட நடக்கும் நடந்திருக்கலாம்?

சின்ன சின்னக்கதைக்குள் 

திருக்குறளைப்போல பெரும் புதையலும் கருவும் பாடமும் புதைந்து  கிடக்கின்றன

அவரவரது அனுபவங்களுக்கேற்ப

ஒன்றிலிருந்து இன்னொன்றாக  மாறுபடுமே

அன்றைய சமூக கால நேர நிலைக்கேற்ப மாறுபடுமே  தவிர

புதிதாக  எதையும் கண்டு  பிடிப்பதில்லை என்பதைப்போன்றதே  கதையும் கருவும்  ஏன் இசையும்  கூட.

இதில் சில  விடயங்களை  நாம் தவிர்த்தே  செல்கின்றோம்

தவிர்க்கின்றோம் என்பதற்காக அவை  எம்மை  விட்டு வைப்பதில்லை

நாமுண்டு எம் வாழ்வுண்டு  என்று நாம் விலகிச்சென்றாலும் 

இந்த  சமூகமும் அதன் கட்டுமானங்களும்  எம்மை தங்களுக்குள்  இழுக்காமல்  விடுவதில்லை

பொருளாதாரம் சார்ந்த இன்றைய உலக  ஒழுங்கில்..... 

 

அப்படியொரு  கதையை சொல்ல  விளைகின்றேன்

(எல்லோரும்  தாண்டி  வந்த  பாதையாதலால்  சிலரை குத்தக்கூடும் பலரது  மனதை சாந்தப்படுத்தக்கூடும்)

 

ஆமையும் முயலும்

இந்த  சின்னக்கதைக்குள் எவ்வளவு  அர்த்தங்கள்??

ஆமை :

தளராத முயற்ச்சி

தன்னம்பிக்கை

அடுத்தவரைப்பார்த்து  தன்னை  மாற்றாமை

கல்லெறிகளின்  போது பொறுமை

எவருடனும்  போட்டி போடாத  தன்மை

 

முயல்:

ஆணவம்

அதீத நம்பிக்கை

சோம்பேறித்தனம்

வல்லவன் என்ற  மமதை

அகங்காரம்

தனக்கு கீழுள்ளோரை  மிதித்தல்

முக்கியமாக தமக்கு பிடிக்காதவரை பிரச்சினைகளுக்குள் தள்ளி விட்டு நகைத்தல்.....

தொடரும்....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கள் விசுகர்! நல்லது கெட்டதெல்லாம் நால்வருக்கும் தெரிய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க ஆர்வமாக உள்ளோம்....!

எழுதுங்கள், விசுகர்....!

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சின்னதிரைகள் வந்தபின் எல்லாமே தொடரும் தொடரும் தொடரும்

விசுகு என்ன விதிவிலக்கா.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமை வேகத்தில் எழுதாமல் முயல் வேகத்தில் எழுதுங்கோ😄 .....தொடருங்கள் விசு வாசிக்க ஆர்வமாக உள்ளோம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

ஆமை வேகத்தில் எழுதாமல் முயல் வேகத்தில் எழுதுங்கோ😄 .....தொடருங்கள் விசு வாசிக்க ஆர்வமாக உள்ளோம்

ஆமா.. ஆமா.. ஆமை நல்ல விருப்பம்😀

சிறு வயதில் பஞ்சதந்திரக் கதைகளை விரும்பிப் படித்ததுண்டு. அதில் சொல்லப்பட்ட நீதிகளை விட கதை என்ற அம்சமே அப்போது என்னைக் கவர்ந்தது. 

இப்போது அவற்றை மீண்டும் படித்தால் இக்காலத்துக்கும் பொருத்தமான பல உள்ளார்ந்த அர்த்தங்கள் புலப்படும் என நினைப்பதுண்டு. 

கால ஓட்டத்தில் நாம் பெறும் அனுபவங்கள் நமது கண்ணோட்டத்தையும் தொடர்ச்சியாக மாற்றி பல புதிய விஷயங்களை நமக்குக் கற்பிக்கின்றன.

அந்த வகையில் உங்களது இந்தத் திரி என்னை மிகவும் கவர்ந்தது விசுகு அண்ணா. உங்கள் கோணத்தில் இருந்து நீங்கள் பார்த்ததை படிக்க நானும் ஆவலாக உள்ளேன். தொடருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆமையும் முயலும்

இந்த  சின்னக்கதைக்குள் எவ்வளவு  அர்த்தங்கள்??

ஆமை :

தளராத முயற்ச்சி

தன்னம்பிக்கை

அடுத்தவரைப்பார்த்து  தன்னை  மாற்றாமை

கல்லெறிகளின்  போது பொறுமை

எவருடனும்  போட்டி போடாத  தன்மை

 

முயல்:

ஆணவம்

அதீத நம்பிக்கை

சோம்பேறித்தனம்

வல்லவன் என்ற  மமதை

அகங்காரம்

தனக்கு கீழுள்ளோரை  மிதித்தல்

முக்கியமாக தமக்கு பிடிக்காதவரை பிரச்சினைகளுக்குள் தள்ளி விட்டு நகைத்தல்.....

உண்மையில் இவை ஒவ்வொரு குணம்  தரம் குறித்தும்

அனுபவங்கள்  குறித்தும் ஆயிரக்கணக்கான  கதைகளை  தரமுடியும்

வந்தும் இருக்கின்றன

ஆனால் இந்த  ஆமையும் முயலும் கதையின் முடிவின் பின்....

அந்த  ஆமையும்  முயலும் மனிதர்களாக  இருந்தால்  ஏற்படும் விளைவுகள் சார்ந்து 

எல்லோருக்கும்  அனுபவங்கள்  இருக்கும்

 

தாமாக  சென்று வலிய போட்டிக்கிழுத்து  விட்டு

தமது மமதையால் சோம்பேறித்தனத்தால் தோற்றுவிட்டாலும்

தான் என்ற  மமதையும் ஒப்பீட்டளவில் தனக்கு  கீழ் உள்ள  ஒருவரிடம் தோற்றதை ஏற்கமுடியாமல்  அவர்கள்  படும்பாடு  இருக்கிறதே???

தமது தோல்வியை மூடிமறைக்க அல்லது மீண்டும் மீண்டும் போட்டிக்கிழுத்து அழிக்க

அல்லது  அந்த  ஆமையின் வெற்றியை கேலிக்குரியதாக்க அவர்கள் எதையும்  செய்வதை

ஏன் கொலைவரை செல்வதையும் பார்க்கலாம்

அதுவும்  தோற்குமிடத்து

நிரந்தர மதுவுக்கு  அடிமையாதல்

மனநோயாளியாகுதல்

தற்கொலை  செய்தல்  ...................

 

எனக்கு தனிப்பட்ட முறையிலும்

தொழில்  சார்ந்தும்

ஓரளவு பொதுவாழ்வில் இருந்தவன்  என்ற ரீதியிலும் வேறுபட்ட பல  அனுபவங்களுண்டு

இந்த  அனுபவங்களை  பகிரங்கப்படுத்துவதல்ல எனது  நோக்கம்

ஒருவராவது இந்த முயல்களின் சதியில்  சிக்காமல் இருந்தாலே போதும்?

நமது  வாழ்வை நாம்  தான் கட்டணும்

எவரது  வாழ்வையாவது வளர்ச்சியையாவது

ஓட்டங்களையாவது பார்த்து நாமும்  ஓடத்தொடங்கினால்???

வாழ்வே நாசமாகும்

ஆனால் எப்பொழுதும் பிசியாக இருப்பதாக  சொல்லப்படும் இன்றைய  உலகில்

இது  தான்  ஒவ்வொரு வீட்டிலும்  நடக்கிறது

மனைவியுடன்  பேச  நேரமில்லை

பிள்ளைகளுடன் கொஞ்ச ஒன்றாக  சாப்பிட 

பிள்ளைகளின்  குறை நிறைகளை உரையாட நேரமொதுக்க முடியவில்லை

எமது  விரலுக்கான  வீக்கத்துக்குள்  தான் எம்  வாழ்வை கட்டியமைத்திருக்கின்றோமா???

ஏன் இந்த  இயந்திர வாழ்வு??

இதன்  பலாபலன்கள்  என்ன???

நாம்  ஆமைகளா?

முயல்களா??

அல்லது  ஆமைகளாக  இருந்து  முயல்கள் ஆனவர்களா??

அல்லது  முயல்களாக  இருந்து அடி  வாங்கி ஆமையானவர்களா???

தொடரும்....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, கிருபன் said:

ஆமா.. ஆமா.. ஆமை நல்ல விருப்பம்😀

இவருக்கு எங்கை போனாலும் ஆமை நினைப்புத்தான். 😷

முயல் எல்லாம் நினைப்புக்கு வராது...:cool:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.