Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அளவோடு ஆசைப்படு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அளவோடு ஆசைப்படு !


ஒருவன் பாறைகளிலிருந்து கல்லுடைக்கும் வேலையைச் செய்து வந்தான். கடுமையான வேலை, குறைவான கூலி. அதனால் அவன் வேலையின் மீது அதிருப்தி கொண்டான். அவன் ஒரு நாள் தெய்வமே நான் உன்னை தினமும் வணங்குகிறேன், நீ என்னை பணக்காரனாக்கக் கூடாதா? என்னை பட்டு மெத்தையில் படுக்க வைக்கக் கூடாதா? என்று பிரார்த்தித்தான்.

தெய்வம் அவன் முன் தோன்றி "நீ விரும்பிய வண்ணமே ஆவாய்" என்று வரம் கொடுத்தது. அவன் பணக்காரனாகி விட்டான்.

பட்டு மெத்தையில் படுத்திருந்தான். ஒரு நாள் அந்த நாட்டு அரசன் அவன் மாளிகை வழியாக அழகிய தேரில் முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் சென்றான். அதைப் பார்த்ததும் அவனுக்கு அரசனைப் போல் இருக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது.

தெய்வமே என்னை அரசனாக்கக் கூடாதா? என்று வேண்டினான். தெய்வமும் "அப்படியே ஆவாய்" என்றது. அவன் அரசனாகி விட்டான்.முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் தேரில் ஊர்வலம் போனான். அப்போது கடுமையான வெயிலடித்தது. அவன் வெயிலின் கொடுமையால் வெந்து புழுங்கினான்.

அவன் "தெய்வமே அரசனை விட சூரியனே அதிக சக்தி படைத்ததாகத் தெரிகிறது. எனவே நீ என்னை சூரியனாக்கி விடு" என்றான். தெய்வமும் "அப்படியே ஆகட்டும்" என்றது. அவன் சூரியனாகி எல்லோரையும் சுட்டான்.அப்போது ஒரு மேகம் அவனுக்கும் பூமிக்கும் இடையில் வந்தது. அதனால் பூமியில் உள்ளவர்களைச் அவனால் சுட முடியவில்லை.

 
 "தெய்வமே மேகம் சூரியனின் கதிர்களையே தடுக்கக் கூடிய சக்தியுடையதாக இருக்கிறது. ஆகையால் என்னை மேகமாக்கி விடு" என்று வேண்டினான். தெய்வமும் "அப்படியே ஆகட்டும்" என்றது. அவன் மேகமாகி சூரியக் கதிர்களைத் தடுத்தான்.பூமி மீது பெரு மழை பொழிந்தான். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, வீடுகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டன, வயல்களெல்லாம் அழிந்து விட்டன. ஆனால் ஒரு பாறை மட்டும் அசையாமல் நின்று கொண்டிருந்தது. அவன் வெள்ளத்தை உண்டாக்கி எவ்வளவோ முயன்று பார்த்தான் அந்தப் பாறையை அசைக்கவே முடியவில்லை
 
. "தெய்வமே மேகத்தை விடப் பாறையே சக்தி வாய்ந்தது எனவே என்னை பாறையாக்கி விடு" என்றான். தெய்வமும் "அப்படியே ஆகட்டும்" என்றது. அவன் பாறையாகி விட்டான்.

கர்வத்தோடு அமர்ந்திருந்தான். அப்போது அங்கே ஒருவன் உளியும் சுத்தியலும் கொண்டு வந்து அந்தப் பாறையை உடைக்க தொடங்கினான். அவன் உளி பாறையைத் தகர்க்கத் தொடங்க்கியது. 
 
"தெய்வமே பாறையை விடக் கல்லுடைப்பவன் சக்தி மிகுந்தவன். என்னை கல்லுடைப்பவனாகவே ஆக்கி விடு.” என்றான். தெய்வமும் "அப்படியே ஆகட்டும்" என்றது. அவன் மீண்டும் கல்லுடைப்பவனாக ஆகி விட்டான்.

கல்லுடைப்பவன் கல்லுடைப்பவனாகவே இருக்க வேண்டும். ஆசைப்படக் கூடாது என்பதல்ல இந்தக் கதையின் நீதி. ஆசைக்கு எல்லை இல்லை. ஆசைப்படுபவன் நிம்மதியாக இருக்க முடியாது என்பது தான்.

படிப்பினையான கதை ..வாசித்துபயன் அடை யுங்கள்.
 
 " ஆசையே  அலை போல நாமேலாம் அதன் மேலே".......



நினைவில் நின்றவை  ( படித்த ஞாபகம்) 

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வமே எனக்கு சிங்கள ராணுவத்தை அழிக்கும் சக்தியை மட்டும் கொடு.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

தெய்வமே எனக்கு சிங்கள ராணுவத்தை அழிக்கும் சக்தியை மட்டும் கொடு.

இவருக்கு புளுக்கத்தில தலை கால் புரியேல்லை தெய்வமே கொஞ்சம் பொறு.  சிங்கள ராணுவம் என்பது வெறும் அம்புதான் அதனால் அவர்களை இயக்கம் அரசியல்வியாதிகளையும் அந்த வியாதிகளை உருவாக்கி உலாவ விட்டிருக்கும் காருண்யமற்ற பிக்குகளையும் அழிக்கிற சக்தி கொடு என்றுதான் கேட்க நினைக்கிறார்.....!  😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

இவருக்கு புளுக்கத்தில தலை கால் புரியேல்லை தெய்வமே கொஞ்சம் பொறு.  சிங்கள ராணுவம் என்பது வெறும் அம்புதான் அதனால் அவர்களை இயக்கம் அரசியல்வியாதிகளையும் அந்த வியாதிகளை உருவாக்கி உலாவ விட்டிருக்கும் காருண்யமற்ற பிக்குகளையும் அழிக்கிற சக்தி கொடு என்றுதான் கேட்க நினைக்கிறார்.....!  😂

ராணுவ வெற்றிகள் தான் பேச்சு வார்த்தை வரை போனது.

நான் நினைக்கும் ராணுவ வெற்றி எல்லைகளை நிர்மாணிக்கும் அரசுக்கும் அரசுக்குமான பேச்சு வரை போக வேண்டும்.

அதுக்கிடையில் நான் பிடித்த நாட்டில் தலைவரைத் தேடுகிறேன்.

நீங்களும் பரிந்துரைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன  தான் எண்ணையை பூசிக்கொண்டு 

உருண்டு பிரண்டாலும்  ஒட்டுவது  தான் ஒட்டும்

இதுவும் அனுபவ  பாடம் தான்

நன்றி பாட்டி கதைக்கும்  நேரத்துக்கும்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்கா அத்தனைக்கும் ஆசைப்படு என்று தான் சாமியார்களே சொல்லும்போது அளவோடு ஆசைப்படசொல்றீங்க!

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தன் சொல்கிறாரே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது ஆசை உழைப்பிற்கும்/தகுதிக்கும் ஏற்ற மாதிரி இருக்கும். உரிமை விடயத்தில் கூட அளவிற்கு மிஞ்சி ஆசைப்பட்டதில்லை.உன்னைப்போல் நானும் அவ்வளவுதான்.....எனது மண்ணில் எனது வீட்டில் எனது வாழ்க்கையை நான் தீர்மானிக வேண்டும். அயலவன் அல்ல.

நிலாமதிக்கு நன்றி. நல்லதொரு கருத்தாளமும் சிந்தனையும் மிக்க ஒரு பதிவு.

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 18/3/2021 at 08:02, ஏராளன் said:

நிலாமதி அக்கா அத்தனைக்கும் ஆசைப்படு என்று தான் சாமியார்களே சொல்லும்போது அளவோடு ஆசைப்படசொல்றீங்க!

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தன் சொல்கிறாரே.

கல்லுடைப்பவன் ஒன்றுக்குமேற்படட ஆசையை வளர்த்து கொள்கிறான். எதிலும் திருப்தி படாதவனாக இருக்கிறான். அதனால் தான் "அளவு " என்பது போதுமென்ற மனம் .உனக்கு ஏற்றதைக் கேள் பெற்றுக் கொள் . உன்னால் முடிந்ததை, உனக்கானதை    கேட்டு பெறு   அதற்காக உழை.   என்பதாகும். 

நல்லதொரு பதிவு அக்கா. ஆழமான கருத்தை சொல்லும் பதிவு . வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.