Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி : டொலரின் விலை 201.75 ரூபாவாக அதிகரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ரூபாவின் பெறுமதி ஜனவரி முதல் மார்ச் வரையான காலப்பகுதியில் 5.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. 

adas.jpg

இந்நிலையில் அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி 201.75 ரூபா வரை அதிகரித்துள்ள நிலையில், இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. 

ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி : டொலரின் விலை 201.75 ரூபாவாக அதிகரிப்பு | Virakesari.lk

விரைவில் 1$US=LKR 300 ஐ எட்டும்

Do not invest in Buddhist Sinhala country. Sooner or later you will lose all investment. 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Sean said:

விரைவில் 1$US=LKR 300 ஐ எட்டும்

Do not invest in Buddhist Sinhala country. Sooner or later you will lose all investment. 

வெளிநாடுகளில் வட்டி குறைய என்று பலர் இலங்கை வங்கிகளில் முதலீடு செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sean said:

விரைவில் 1$US=LKR 300 ஐ எட்டும்

Do not invest in Buddhist Sinhala country. Sooner or later you will lose all investment. 

நல்ல விடயம் .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

வெளிநாடுகளில் வட்டி குறைய என்று பலர் இலங்கை வங்கிகளில் முதலீடு செய்கிறார்கள்.

விளங்கித்தான்  முதலீடு செய்கிறாரகள்  என்று நானும் நினைத்தேன் சமீபத்தில் இப்படி கொழும்பில் முதலீடு பிளாட் மூன்று கோடிக்கு வாங்கியவர் பெருமையாக தன்னுடைய பிளாட் மூன்றரை கோடிக்கு விலை போயுள்ளது என்று சொன்னார் அரைக்கோடி லாபம் என்கிறார்  அந்த பிளாட் வாங்கும்போது இலங்கை பெறுமதி 200  இப்ப அரைக்கோடி விலை கூடினாலும் அண்ணளவாக 15ஆயிரம்  பவுன்ஸ் நட்டமடைகிறார் என்பதை அவர் புரிந்து கொள்கிறார் இல்லை .

அவரை போல் புலம்பெயர் தேசங்களில் இருந்து போய்  இலங்கையில்  காணிகள் நிலங்களில் முதலீடு செய்தவர்களின் நிலையும்  ரூபாவின் பெறுமதி வரும்காலங்களில் இன்னும் மோசமாக அதால பாதாளம் நோக்கி பாய்வதுக்கு தயராகிறது கோடிக்கணக்கில் இலங்கையில் முதலிட்டவர்கள் பல லட்சக்கணக்கான பவுன்ஸ் இழப்பு ஏட்பட  போகுது .

இதைவிட அரச உதவியில் இருந்து சீட்டு  அது இது செய்தவர்கள் பணத்தை இங்கு வங்கியில் காட்ட முடியாதவர்கள் கறுப்பு பணத்தை கொண்டு போய்  காணிகளை வாங்கியவர்களும் திருமண மண்டபம் கட்டியவர்களும் ரூபா வீழ்ச்சியால் பலத்த அடிவாங்க வேண்டி வரும் .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

நல்ல விடயம் .

மக்கள் தாங்குவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

மக்கள் தாங்குவார்களா?

ரூபா...டொலர....யூரோ....ஆக. வங்கியில் கணக்கிருத்தால் பிரச்சனையில்லை ...ரூபாவை.  டொலர்...யூரோ.......ஆக மாற்றும்போதுதான் நட்டம் என நினைக்கிறேன்       சரியா?பிழையா?..தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

ரூபா...டொலர....யூரோ....ஆக. வங்கியில் கணக்கிருத்தால் பிரச்சனையில்லை ...ரூபாவை.  டொலர்...யூரோ.......ஆக மாற்றும்போதுதான் நட்டம் என நினைக்கிறேன்       சரியா?பிழையா?..தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

ஆம் அப்படித்தான் டொலர் அல்லது பவுன்ஸ் அல்லது யூரோ ஆக வைப்பில் இருந்தால் கவலைப்படதேவையில்லை திருப்பி எடுக்கும்போது பவுன்சில் 10ஆயிரம் பவுன் வைப்பிட்டு இருந்தீர்கள் என்றால் திருப்பி எடுக்கும்போது 10 ஆயிரம் பவுன்சாக  வரும் .

ஆனால் 10 ஆயிரம் பவுன்சை இலங்கை ரூபாயில் 190 ரூபா படி வைப்பில் இட்டால் 10000*190=1900000 ரூபாயாக இருக்கும் அதே பணத்தை தற்போதைய இலங்கை பணமதிப்பில்  திருப்பி எடுத்தால் 1900000/270=7037 ஆக குறைந்து விடும் 3000 பவுன் குறைந்து விடும் இன்னும் ஒரு வருடங்களின் பின் 600 ரூபவாக இலங்கை பணம் மதிப்பிழக்கும் என்று சிங்கள அரசியல்வாதிகளே அழுகினம் அப்படி பார்த்தால் அதே கணக்கை 1900000/600=3166 தான் உங்களின் பணம் 7ஆயிரம் பவுன் நட்டப்பட்டு  இருப்பீர்கள் அதனால் டொலர் கணக்கு என்று இருக்கும் அதில் டாலரில் பணத்தை வைப்பில் இடுங்க  சேதாரம் வராது .

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் அப்படி ஒரு நிலைமை வரும்போது கோத்தா பலவங்கிகளை  முடக்குவார் உறுதியாய் நம்பலாம் எனவே சொறிலங்காவில் முதலீடு பாதுகாப்பற்றது .

1 hour ago, ஈழப்பிரியன் said:

மக்கள் தாங்குவார்களா?

எங்கடை சனம்  ஏற்கனவே  யுத்த காலப்பகுதிக்குள் உணவுத்தடைகளை கண்டதுகள்  அத்துடன் வெளிநாட்டு பணம் புழங்கும் கஷ்ட்டந்தான்  ஆனால் சிங்களவர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

வன் நாணயங்களில் சம்பளம் வாங்கும் புலம்பெயர் தமிழர்களின் குடும்பங்கள், சொந்தங்கள் 
இலங்கை நாணயம் எந்த அளவு அதள பாதாளத்திற்கு பாய்ந்தாலும் நின்று பிடிப்பார்கள், 
உதாரணமாக ஒருவர் ஒவ்வொரு மாதமும் 1000 டொலர் நாட்டிற்கு குடும்ப பராமரிப்பிற்கு அனுப்புகிறார் என்றால் இலங்கை நாணயம் மதிப்பிழக்க மதிப்பிழக்க டொலருக்கு நிகரான உள்நாட்டு நாணய மாற்று வீதம் அதிகரித்தே செல்லும், வன் நாணய பரிமாற்றம் என்பதால் பெறுமதி அதிகரிப்பு வாழ்க்கை செலவு அதிகரிப்பை நேரடியாக சமன் செய்யும், போரால் பாதிக்கப்பட்ட சாதாரண தமிழ் மக்களும், பான் அண்ட் பரிப்புடனும், அக்குறுகட்டியுடன் தேயிலை சாயம் குடித்துவிட்டு இன துவேசம் பேசும்  சிங்கள மஹதனமுத்தாக்களும் தான் இதனால்  நேரடியாக  பாதிக்கப்படுவவர்கள்    

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அக்குறுகட்டியுடன்

இதென்ன பொருள் ?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

இதென்ன பொருள் ?

பனை வெல்லம்

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, அக்னியஷ்த்ரா said:

பனை வெல்லம்

நன்றி விளக்கத்துக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

வன் நாணயங்களில் சம்பளம் வாங்கும் புலம்பெயர் தமிழர்களின் குடும்பங்கள், சொந்தங்கள் 
இலங்கை நாணயம் எந்த அளவு அதள பாதாளத்திற்கு பாய்ந்தாலும் நின்று பிடிப்பார்கள், 
உதாரணமாக ஒருவர் ஒவ்வொரு மாதமும் 1000 டொலர் நாட்டிற்கு குடும்ப பராமரிப்பிற்கு அனுப்புகிறார் என்றால் இலங்கை நாணயம் மதிப்பிழக்க மதிப்பிழக்க டொலருக்கு நிகரான உள்நாட்டு நாணய மாற்று வீதம் அதிகரித்தே செல்லும், வன் நாணய பரிமாற்றம் என்பதால் பெறுமதி அதிகரிப்பு வாழ்க்கை செலவு அதிகரிப்பை நேரடியாக சமன் செய்யும், போரால் பாதிக்கப்பட்ட சாதாரண தமிழ் மக்களும், பான் அண்ட் பரிப்புடனும், அக்குறுகட்டியுடன் தேயிலை சாயம் குடித்துவிட்டு இன துவேசம் பேசும்  சிங்கள மஹதனமுத்தாக்களும் தான் இதனால்  நேரடியாக  பாதிக்கப்படுவவர்கள்    

உண்மை அக்கினி 
நான் இங்கு 10-15 வருடமாக எழுதிவருவது இதுதான் 
புலம்பெயர்ந்தவர்கள் அந்நியநாட்டு செலவாணியால் உள்ளூரில் பணவீக்கத்தை உருவாக்கி 
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் போராளிகளை மேலும் கீழ்நிலைக்கு தள்ளுவார்கள் என்று. 

3 hours ago, பெருமாள் said:

ஆம் அப்படித்தான் டொலர் அல்லது பவுன்ஸ் அல்லது யூரோ ஆக வைப்பில் இருந்தால் கவலைப்படதேவையில்லை திருப்பி எடுக்கும்போது பவுன்சில் 10ஆயிரம் பவுன் வைப்பிட்டு இருந்தீர்கள் என்றால் திருப்பி எடுக்கும்போது 10 ஆயிரம் பவுன்சாக  வரும் .

ஆனால் 10 ஆயிரம் பவுன்சை இலங்கை ரூபாயில் 190 ரூபா படி வைப்பில் இட்டால் 10000*190=1900000 ரூபாயாக இருக்கும் அதே பணத்தை தற்போதைய இலங்கை பணமதிப்பில்  திருப்பி எடுத்தால் 1900000/270=7037 ஆக குறைந்து விடும் 3000 பவுன் குறைந்து விடும் இன்னும் ஒரு வருடங்களின் பின் 600 ரூபவாக இலங்கை பணம் மதிப்பிழக்கும் என்று சிங்கள அரசியல்வாதிகளே அழுகினம் அப்படி பார்த்தால் அதே கணக்கை 1900000/600=3166 தான் உங்களின் பணம் 7ஆயிரம் பவுன் நட்டப்பட்டு  இருப்பீர்கள் அதனால் டொலர் கணக்கு என்று இருக்கும் அதில் டாலரில் பணத்தை வைப்பில் இடுங்க  சேதாரம் வராது .

நான் இதை நல்ல சந்தர்ப்பமாகவே பார்க்கிறேன் ..... 
நீங்கள் மேலே எழுதிய 3 கோடி பிளாட் வாங்கிய உதாரணத்தில் கூட 
வீதாசாரத்தின் படி நீங்கள் கணக்கு பார்த்தால் . இப்போதும் லாபம்தான் 
15% ரெட்டர்ன் பெறுவது என்பது அமெரிக்க லண்டனில் ரிஸ்க் .. அதே நேரம் 
அங்கு  வரி ஏய்ப்பும் செய்து கொள்ளலாம் என்பது கூடுதல் போனஸ். 

பண வீழ்ச்சி வெறும் 5 வீதம்தான் 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Maruthankerny said:

உண்மை அக்கினி 
நான் இங்கு 10-15 வருடமாக எழுதிவருவது இதுதான் 
புலம்பெயர்ந்தவர்கள் அந்நியநாட்டு செலவாணியால் உள்ளூரில் பணவீக்கத்தை உருவாக்கி 
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் போராளிகளை மேலும் கீழ்நிலைக்கு தள்ளுவார்கள் என்று. 

மறுவளமாக பாருங்கள் ....புலம்பெயர்ந்தவர்களாலும்  வெளிநாட்டு பணியாளர்களாலும் தான் இலங்கை 
தற்போது மிதக்கிறது, இல்லையென்றால் எப்போதோ மூழ்கியிருக்கும்,இலங்கையில்  பண வீக்கத்தை ஏற்படுத்துவது இந்தக்காரணியல்ல, கட்டற்ற ஊழலும், வரைமுறையற்ற வெளிநாட்டு  கடன் வாங்கலும், முறையற்ற நிதி முகாமைத்துவமும், குறுகிய,நீண்டகால எவ்வித பொருளாதார  நலனுமற்ற அரச முதலீடுகளும் தற்போது ஏற்பட்டுள்ள ஏற்றுமதி சிக்கல்களும், தொழில்துறைகள் பாதிப்பால் ஏற்பட்டுள்ள மொத்த தேசிய உற்பத்தி சரிவுமே ,
புலம் பெயர்ந்தவர்களின் மாதாந்த அந்நிய செலவாணி  பரிமாற்றம் கூட ஒருவகை லாப நோக்கற்ற வெளிநாட்டு முதலீடே , இலங்கை அரசாங்கத்தின் உடனடித்தேவையும் இந்த வகை வருமானம் தான்.
 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, அக்னியஷ்த்ரா said:

மறுவளமாக பாருங்கள் ....புலம்பெயர்ந்தவர்களாலும்  வெளிநாட்டு பணியாளர்களாலும் தான் இலங்கை 
தற்போது மிதக்கிறது, இல்லையென்றால் எப்போதோ மூழ்கியிருக்கும்,இலங்கையில்  பண வீக்கத்தை ஏற்படுத்துவது இந்தக்காரணியல்ல, கட்டற்ற ஊழலும், வரைமுறையற்ற வெளிநாட்டு  கடன் வாங்கலும், முறையற்ற நிதி முகாமைத்துவமும், குறுகிய,நீண்டகால எவ்வித பொருளாதார  நலனுமற்ற அரச முதலீடுகளும் தற்போது ஏற்பட்டுள்ள ஏற்றுமதி சிக்கல்களும், தொழில்துறைகள் பாதிப்பால் ஏற்பட்டுள்ள மொத்த தேசிய உற்பத்தி சரிவுமே ,
புலம் பெயர்ந்தவர்களின் மாதாந்த அந்நிய செலவாணி  பரிமாற்றம் கூட ஒருவகை லாப நோக்கற்ற வெளிநாட்டு முதலீடே , இலங்கை அரசாங்கத்தின் உடனடித்தேவையும் இந்த வகை வருமானம் தான்.
 

நாம் டொலரை கொண்டுவந்து ரூபவாக மாற்றும்போது அரசு பயன்பெறும் 
அதையே வைத்து மட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை (காணி நிலம் வாகனம்) கொள்வனவு செய்யும்போது 
விலைவாசி ஏறும். இலங்கை ரூபாயில் வருமானம் கொண்டவர்கள் பாதிப்பு அடைவார்கள். 
நாம்  அங்கிருக்கும் மக்களை முதலில் ஏழ்மையில் இருந்து தூக்கவேண்டும் 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.