Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

large.0-02-0a-af8a7659afd3c85d3d89aef97cc8e7bb65d77a0e56c422d82f6d53586742f668_1c6da4fbb55557.jpg.e3574bbb081567c99eccdcd5d27f2275.jpg

அப்புவிட அப்புவும்,பேரனும்..!

*********************

கந்தையா அண்ணரும்

காசிம் நானாவும்

றம்பண்டா மல்லியும்

ஒரு குடும்பமாய்

திரிந்த காலம்

அப்போது ..

ஒருநாளும்

நான் கண்டதில்லை 

சண்டையை..

 

புத்த பெருமானுக்கும் 

நபிகள் நாயகத்துக்கும்

ஜேசு பிரானுக்கும் 

சித்தர் சிவனுக்கும்-மதம் 

பிடித்ததாய்..

அப்போது..

ஒருநாளும்

 நான் கண்டதில்லை 

சண்டையை..

 

கண்டியில பெரகராவும் 

திருக்கேதீச்சரத்தில 

சிவராத்திரியும்

கொச்சிக்கடையில

பாலன் பிறப்பும்

மட்டக்களபில 

நோன்புப் பெருநாளும்

அன்பாக நடந்ததே தவிர

அப்போது..

ஒருநாளும்

நான் கண்டதில்லை

சண்டையை..

 

ஒவ்வொரு இடத்தில 

ஒவ்வொரு ஆலயம் கட்டி

வளிபாட்டுத்தலமெல்லாம் 

அனைவரும்

வந்து வணங்கி வளிபட்டு

போனார்களே தவிர

அப்போது..

ஒருநாளும்

நான் கண்டதில்லை

சண்டையை..

 

தமிழ்..

வடக்கு கிழக்கென்றும்

சிங்களம்.. 

தெற்கு மேற்கென்றும்

ஒவ்வொரு பகுதியாக

பிரிந்து வாழ்ந்தாலும்

ஒற்றுமையைத் தவிர

அப்போது..

ஒருநாளும்

நான் கண்டதில்லை 

சண்டையை..

 

இப்படி எனக்கு-என்

அப்புவிட அப்பு 

கனவில வந்து

கதை சொல்லி போனார்.

 

அப்போது நினைத்தேன்

இப்போது நடப்பது

அரசியல் வாதிகளும்-சில

அரசடி வாதிகளும்

தாம் வாழ நினைத்து.

 

வல்லரசு சிலதோட

வறுமையை காட்டி

முக்குலத்தையும்

முட்டி மோதவிடும் 

முடிவால்தான்-இன்று

எங்களுக்குள்ளே

இத்தனை..

சண்டையோ?

 

எண்ணித் திகைத்து

இடையில.. 

எழுப்பி விட்டேன்.

“விடியவில்லை”

ஐயோ பக்கத்தில..

அழுகுரல்கள் கேட்கிறது.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி-

27.03.2021

Edited by பசுவூர்க்கோபி

  • கருத்துக்கள உறவுகள்

ஏறத்தாள இரண்டாயிரம் ஆண்டுகளூக்கு முன்பே, கணியன் திருப்பூங்கனார் கூறியது,

யாதும் ஊரே....யாவரும் கேளிர்

எம்மைச் சுற்றி வட்டங்களை நாங்கள் போடவில்லை! மற்றவர்களே போட்டார்கள்!

உலகம் முழுவதும் விதைக்கப் பட்டிருக்கிறோம்! அறுவடை காலமும் அண்மித்து வருகின்றது!

ஏக்கம் சுமந்து வரும் கவிதை! நன்றி....!

 

Edited by புங்கையூரன்
கூகிள் தமிழ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, புங்கையூரன் said:

ஏறத்தாள இரண்டாயிரம் ஆண்டுகளூக்கு முன்பே, கணியன் திருப்பூங்கனார் கூறியது,

யாதும் ஊரே....யாவரும் கேளிர்

எம்மைச் சுற்றி வட்டங்களை நாங்கள் போடவில்லை! மற்றவர்களே போட்டார்கள்!

உலகம் முழுவதும் விதைக்கப் பட்டிருக்கிறோம்! அறுவடை காலமும் அண்மித்து வருகின்றது!

ஏக்கம் சுமந்து வரும் கவிதை! நன்றி....!

 

அருமையாக பதில் தந்தீர்கள். வாழ்த்துக்ளும் நன்றிகளும் அண்ணா

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்..

வடக்கு கிழக்கென்றும்

சிங்களம்.. 

தெற்கு மேற்கென்றும்

ஒவ்வொரு பகுதியாக

பிரிந்து வாழ்ந்தாலும்

ஒற்றுமையைத் தவிர

அப்போது..

ஒருநாளும்

நான் கண்டதில்லை 

சண்டையை.....!

 

நிஜமான கருத்துக்கள் .......கோபி......!  👏

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்கள் தோன்றிய காலத்தில் இருந்து சக மனிதர்களுடன் சண்டையிட்டு அழித்தும் அழிந்தும் வருகின்றார்கள். எனவே, சண்டையில்லா நிலை கனவில் மட்டும்தான் வரும்!

சிங்களவர்கள் மேலாதிக்க உணர்வுடன் வாழும்வரை இலங்கைத் தீவில் முறுகல்கள் இருந்துகொண்டுதான் இருக்கும்.

யதார்த்தத்தை சொல்லும் கவிதை... வலிசுமந்த வரிகள். பகிர்வுக்கு நன்றி 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, suvy said:

தமிழ்..

வடக்கு கிழக்கென்றும்

சிங்களம்.. 

தெற்கு மேற்கென்றும்

ஒவ்வொரு பகுதியாக

பிரிந்து வாழ்ந்தாலும்

ஒற்றுமையைத் தவிர

அப்போது..

ஒருநாளும்

நான் கண்டதில்லை 

சண்டையை.....!

 

நிஜமான கருத்துக்கள் .......கோபி......!  👏

நன்றிகள் சுவி அண்ணா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கிருபன் said:

மனிதர்கள் தோன்றிய காலத்தில் இருந்து சக மனிதர்களுடன் சண்டையிட்டு அழித்தும் அழிந்தும் வருகின்றார்கள். எனவே, சண்டையில்லா நிலை கனவில் மட்டும்தான் வரும்!

சிங்களவர்கள் மேலாதிக்க உணர்வுடன் வாழும்வரை இலங்கைத் தீவில் முறுகல்கள் இருந்துகொண்டுதான் இருக்கும்.

உங்கள் கருத்துக்கு நன்றிகள் கிருபன் அண்ணா  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 28/3/2021 at 23:00, nige said:

யதார்த்தத்தை சொல்லும் கவிதை... வலிசுமந்த வரிகள். பகிர்வுக்கு நன்றி 

ஊக்கம் உங்கள் வார்த்தைக்கு உளமார்ந்த நன்றிகள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நுரை போல
பொங்கி வரும்
அழகுத்தமிழ் சொற்களால்
கவிதை 
பொங்கி வருகிறது
உங்கள் இதயத்திலிருந்து....👍🏽

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக கவிதை வடிவில் நிஐத்தை சொல்லியுள்ளீர்கள், பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2/4/2021 at 14:34, குமாரசாமி said:

நுரை போல
பொங்கி வரும்
அழகுத்தமிழ் சொற்களால்
கவிதை 
பொங்கி வருகிறது
உங்கள் இதயத்திலிருந்து....👍🏽

உளமார்ந்த நன்றிகள் ஐயா

On 3/4/2021 at 13:14, உடையார் said:

அருமையாக கவிதை வடிவில் நிஐத்தை சொல்லியுள்ளீர்கள், பாராட்டுக்கள்

என்றும் எனது கவிதைக்கு ஊக்கம் தரும்  அன்புடையாருக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

. வேடிக்கை கலந்த கவிதைச் சொந்தக் காரனுக்கு என் பாராட்டுக்கள் 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நிலாமதி said:

. வேடிக்கை கலந்த கவிதைச் சொந்தக் காரனுக்கு என் பாராட்டுக்கள் 😀

நன்றி அக்கா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.