Jump to content

Recommended Posts

  • Replies 130
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பெருமாள் said:

அப்ப  யாழ்களத்திலே வயது குறைந்தவர் நீங்களாகத்தான் இருக்கனும் .

 

22 hours ago, Justin said:

😂பெருமாள், பையன், நன்னியர் என்று ஒரு இளவட்டப் பட்டாளமே இருக்கிறதே? நாங்கள் முந்தின ஜெனரேசன்!

அவர் உங்களை நக்கலடிக்கிறார் என்று நினைக்கிறேன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பியரையும் ஓட்டத்தையும் பற்றி ஏதோ அரிய தகவல்கள் எழுதப் போவதாக எதிர்ப்பார்ப்பைக் கிளப்பி விட்டேன் போல இருக்கு, எனவே எதிர்பார்ப்பு பலூன் பெரிதாகிப் புஸ்ஸென்று காற்றுப் போக முதல்🤣 இதை முடித்து விடுகிறேன்: இவை என் அனுபவமும், சில தரவுகளும் இணைந்தது: 

பொறுப்புத் துறப்பு: பியர் - அல்கஹோல் அளவு பொதுவாகக் குறைவாக இருந்தாலும் - ஒரு மதுபானமே. அல்கஹோல் உடல்நலத்திற்குக் கேடு, தவிர்ப்பது ஐடியல், குடிக்காதோர் இதைப் பார்த்துக் குடிக்க ஆரம்பிக்காதீர்கள்! 

நெடுந்தூர ஓட்டம் - பியர் தொடர்பு:

அண்மையில் ஒரு கருத்துக் கணிப்பின் வழி எடுத்த ஆய்வொன்றில், அனேக நெடுந்தூர ஓட்டப் பிரியர்கள் பியர் பிரியர்களாகவும் இருப்பதாகக் கணித்திருந்தார்கள். என்ன காரணமாக இருக்கும்? நெடுந்தூர ஓட்டம் செய்வோர் அனேகமாக தங்கள் உடல் நலத்தில் அக்கறையுடையோராக இருப்பதால், அதிக அல்கஹோல் கொண்ட ஏனைய மதுபானங்களை விட பியரை நாடுகின்றனர் என்பது ஒரு விளக்கம். 

இன்னொரு விளக்கம் கொஞ்சம் நரம்பியல் தொடர்பானது: நெடுந்தூர ஓட்ட ஆர்வலர்களாக இருப்போர், அவ்வாறு நெடுந்தூரம் ஓடுவதற்கு அவர்களது உடலில் உற்சாகத்தைத் தூண்டும் எண்டோர்பின்கள் (endorphins) சுரப்பு ஒவ்வொரு ஓட்டத்தின் பின்னும் அதிகரிப்பது பிரதான காரணமாக இருக்கிறது (இது தான் ஓட்டத்திற்கு அடிமையாக addiction வருவதற்கும் காரணம்!). பல்வேறு மதுபானங்களைப் பரிசோதித்துப் பார்த்ததில், பியர் குடிக்கும் போது மட்டும் தான் மூளையில் எண்டோர்பின்கள் அதிகரிக்கின்றன என்கிறார்கள் (இதனால் தான் எப்போதுமே ஒருவர்  ஒரு பியரோடு நிறுத்துவதில்லை - பியர் குடிப்போருக்கு 1 beer = 2 beers 😎; இதன் காரணம் எங்கள் மூளை வெளிப்படுத்தும் reward signal).

இதற்கு பியரில் இருக்கும் திரட்சியான, சிக்கலான சுவை (complex taste) காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் - சுவை மட்டுமன்றி அரோமா எனப்படும் வாசனை, கிளாசில் இருந்தால் அதன் வர்ணம் என்பனவும் காரணமாக இருக்கலாம்! 

என் அனுபவம்: பியர் எனக்கு வெகுமதி போன்றது. ஒரு வாரத்தில் போதியளவு ஓடவில்லையானால் அந்த வெள்ளிக்கிழமை பியர் கட்! அதே போல ஒரு வெள்ளிக்கிழமை இரண்டு பியர் எடுத்தால் அடுத்த நாள் ஒரு மைல் கூடுதல் ஓட்டம்! இப்படி வெகுமதி - தண்டனை (reward-punishment) என்ற சக்கரம் தான் என் அனுபவம். ஏனையோருக்கும் இப்படி இருக்கலாம்!

இனி சசியரின் ஒரிஜினல் பதிவு: உடற்பயிற்சி செய்ய பியரோடு வருகின்றனர்! 

இதில் ஆரோக்கியப் பிரச்சினை இருக்கிறதா?

இதற்கு என் அபிப்பிரயம் பக்கச் சார்பாகத் தான் இருக்கும், ஆனாலும் தரவுகளோடு தருகிறேன்: ஒரு பியரில் அடிப்படையில் இருப்பவை: கார்ப்-carb (இது தான் கலோரி) , புரதம், அல்கஹோல், விற்றமின்கள், antioxidants எனப்படும் உடலுக்கு நன்மை தரும் பொருட்கள் (இந்த நன்மை தரும் பொருட்களும், விற்றமின்களும் ஏனைய மதுபானங்களில்  இருப்பதில்லை என்பதைக் கவனிக்க! - சிவப்பு வைனில் மட்டும் இந்த antioxidants சிறிதளவு உண்டு).  கலோரியின் அளவையும், அல்கஹோலின் அளவையும் குறைவாகக் கொண்ட பியர் ஒப்பீட்டளவில் ஆரோக்கியமானது எனலாம். 

லைற் பியர் வகைக்குள் அடங்கும் லாகர், வியன்னா லாகர், பில்ஸ்னர் ஆகியவை அனேகமாக 5% இலும் குறைந்த அல்கஹோல், கலோரி 100 முதல் 150 இருக்கும் (ஒரு 12 அவுன்ஸ் போத்தலில்) -ஒப்பீட்டிற்குப் பார்த்தால் ஒரு நடுத்தர சைஸ் வாழைப்பழத்தில் 110 கலோரிகள் இருக்கின்றன.

இதுவும் உங்கள் உணவுக்கட்டுப் பாட்டுடன் ஒத்து வரவில்லையென்றால், விசேடமாக டயற்றில் இருப்போருக்கென இப்போது சில 90 கலோரி பியர்களும் இருக்கின்றன.சில கம்பனிகள் ஒரு படி மேலே போய் நெடுந்தூர ஓட்டப் பிரியர்களுக்கென கனியுப்புகள் (electrolytes) நிறைந்த பியர்களையும் உற்பத்தி செய்கின்றனர். எனவே, இவற்றை கடின உடல் உழைப்பின் பின்னர் எடுத்துக் கொள்வது பாரிய ஆரோக்கியக் குறைவைத் தராது!

பியர் வகைகளில் அதிகம் பேர் விரும்புவது (நான் உட்பட) IPA (India Pale Ale) எனப்படும் கசப்பு அதிகமான பியர். ஆனால், இந்த பியரில் கலோரியின் அளவு 200 வரை இருக்கும், அல்கஹோல் அனேகமாக 6% முதல் 8 % வரை இருக்கும்! எனவே IPA டயற்றோடு அவ்வளவு ஒத்து வராது - ஆனால்  IPA பியர் வகையின் சுவையை வேறெந்த பியரும் வெல்ல முடியாது!

இன்னும் மேலே போனால், Double IPA, Triple IPA, Belgian Tripel எனப்படும் வகைகள் இன்னும் அதிக கலோரி, அல்கஹோல் கொண்டவை. இது சுவைக்காக அல்லாமல் வெறிக்காக குடிக்கும் வெறிக்குட்டிகள் குடிப்பது!😜

Stout வகையைச் சேர்ந்த கின்னஸ் போன்றவை, அதிக அல்கஹோல் இல்லா விட்டாலும், 300 கலோரிகள் வரை ஒரு 12 அவுன்ஸ் போத்தலில் கொண்டவை - எனவே இவ்வகையை எடுப்பதானால் உடல் எடை கூடுவதைப் பற்றிய கவலையை விட்டு விட வேண்டும்! 
 

  • Like 4
Link to comment
Share on other sites

21 hours ago, Justin said:

லைற் பியர் வகைக்குள் அடங்கும் லாகர், வியன்னா லாகர், பில்ஸ்னர் ஆகியவை அனேகமாக 5% இலும் குறைந்த அல்கஹோல், கலோரி 100 முதல் 150 இருக்கும் (ஒரு 12 அவுன்ஸ் போத்தலில்) -ஒப்பீட்டிற்குப் பார்த்தால் ஒரு நடுத்தர சைஸ் வாழைப்பழத்தில் 110 கலோரிகள் இருக்கின்றன.

நன்ற்றி ஜஸ்ரின்.

நான் அறிந்த வகையில் உடலுக்குச் சக்தியை (கலோரி) வழங்கும் வழிகளில் அல்கஹோலும் ஒன்று. என்ன பிரச்சனை என்றால் அல்கஹோல் வழங்கும் சக்தியை உடல் கட்டுப்படுத்தி மேலதிகமானதைச் சேமித்து தேவையானபோது பாவிக்க முடியாது. இதை வெறுமையான கலோரிகள் என்று பிரெஞ்சில் சொல்வார்கள். இரத்தத்தில் உடனடியாகச் சேர்க்கப்படும் இச் சக்தி உடனடியாகப் பாவிக்கப்பட வேண்டும் என்பதால் இது முதன்மை பெற்று உடலின் ஏனைய சக்தி வழங்கல்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இது வேறு விடயம்.

ஓட்டத்துக்கு வருவோமேயானால், எனது ஊருக்குப் பக்கத்தில் ஓட்டப் போட்டி ஒன்று ஒவ்வொரு வருடமும் நடக்கும். ஒவ்வொரு 3 கிலோமீற்றரிலும் தண்ணீர்ப்பந்தலில் பியர் வழங்கப்படும். குடித்துவிட்டு ஓட வேண்டும். இப்ப்படியான போட்டி பெல்ஜியத்தில் பரவலாக நடப்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, இணையவன் said:

நன்ற்றி ஜஸ்ரின்.

நான் அறிந்த வகையில் உடலுக்குச் சக்தியை (கலோரி) வழங்கும் வழிகளில் அல்கஹோலும் ஒன்று. என்ன பிரச்சனை என்றால் அல்கஹோல் வழங்கும் சக்தியை உடல் கட்டுப்படுத்தி மேலதிகமானதைச் சேமித்து தேவையானபோது பாவிக்க முடியாது. இதை வெறுமையான கலோரிகள் என்று பிரெஞ்சில் சொல்வார்கள். இரத்தத்தில் உடனடியாகச் சேர்க்கப்படும் இச் சக்தி உடனடியாகப் பாவிக்கப்பட வேண்டும் என்பதால் இது முதன்மை பெற்று உடலின் ஏனைய சக்தி வழங்கல்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இது வேறு விடயம்.

 

ஆம், அல்கஹோல் தினசரி எடுத்துக் கொள்வோருக்கு உடல் பருமன், கொழுப்பு தொடர்பான நோய்கள் வருவதற்கு நீங்கள் சொன்னது தான் காரணம். எனவே தான் பியர் குடிப்போரும் -சிறிதளவே அல்கஹோல் அதில் இருந்தாலும் - அளவுக்கு மிஞ்சிப் போகக் கூடாது. 

Link to comment
Share on other sites

On 22/10/2021 at 14:40, நிழலி said:

பின்னால் ஓடியவர்கள், நின்றவர்களைத் தான் திரும்பி பார்க்க முடியவில்லை, முன்னுக்கு ஒயிலாக ஓடுகின்றவ மயிலின் பெயர், விலாசம் அல்லது ஆகக் குறைந்தது தொலைபேசி இலக்கமாவது வாங்கினீர்களா? 😄

நிழலி, பின்னால் ஓடியவர்களிடம் Start Point ல் பெயர், விலாசம், தொலைபேசி எண் கேட்க போய் தான் இவ்வளவு வேகமாக ஓட முடிந்தது இணையவனுக்கு.😀 அதற்கும் முன்னே ஓடும் மயிலிடம் கேட்க போனால் சுற்றி வளைத்து கும்மிவிடுவார்களே. 🤣

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமொிக்கா நினைத்தாலும் புட்டின் தாக்குதலை நிறுத்தமாட்டாா் – உக்ரேனிய ஜனாதிபதி! ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ள போர்நிறுத்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும் அவர் தனது இராணுவ தாக்குதலை நிறுத்தமாட்டார் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயற்சித்ததால் உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் இன்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துள்ளது. இந்நிலையில் உக்ரைனுடன் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய ஜனாதிபதி புடின் 2 நிபந்தனைகளை விதித்துள்ளார். அதன்படி, ஆக்கிரமிக்கப்பட்ட 4 பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது படைகளை திரும்ப பெற வேண்டும் எனவும் நேட்டோவில் சேருவதற்கான திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் உடனடியாக போரை நிறுத்துவதுடன், அமைதிப்பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்கு ரஷ்யா தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அதன்படி, ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கூறியுள்ள போர்நிறுத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும் அவர் தனது இராணுவ தாக்குதலை நிறுத்தமாட்டார் எனவும் அவரது போர்நிறுத்த ஒப்பந்தம் ஒரு இறுதி எச்சரிக்கை என்பதால் இந்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது எனவும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அத்தோடு, ஹிட்லர் செய்த அதே விடயத்தையே ரஷ்ய ஜனாதிபதி செய்வதாகவும், இதனால் அவர் கூறும் யோசனையை நாம் நம்பக்கூடாது எனவும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1388176
    • உக்ரைன் அமைதி மாநாடு –  ரஷ்யா பக்கேற்காததனால் சீனாவும் புறக்கணிப்பு! நூறு நாடுகளுக்கும் மேல் பங்கேற்கும் ‘உக்ரைன் அமைதி மாநாடு’ சுவிட்ஸர்லாந்தில்(Switzerland) நேற்று(15) ஆரம்பமானது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் 2 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்துவரும் போா் குறித்து விவாதிப்பதற்காக, சுவிட்ஸர்லாந்தில் நிட்வால்ட் பகுதியில் அமைந்துள்ள பா்கன்ஸ்டாக் சுற்றுலா விடுதியில் இந்த சா்வதேச மாநாடு இடம்பெற்று வருகிறது. அதன்படி, இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாடு, நேற்று ஆரம்பமான நிலையில் இன்றும் நடைபெறுகிறது. குறித்த மாநாட்டில், அணுசக்தி பாதுகாப்பு, கடல் பயண சுதந்திரம், உணவு பாதுகாப்பு போன்ற மூன்று விவகாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படம் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில், ஈக்வடாா், ஐவரி கோஸ்ட், கென்யா, சோமாலியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் 50 க்கும் மேற்பட்ட தலைவா்கள் பங்கேற்றுள்ளதுடன், சுமாா் 100 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இதில் பங்கேற்றுள்ள, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீா் ஸெலென்ஸ்கி ஊடகவியலாளர்களை சந்தித்த போது, உலகமே ஒன்று கூடினால் ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவிட முடியும் என தெரிவித்துள்ளார். அதன்படி, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, உலக நாடுகளை ஒன்று திரட்டுவதில் இந்த மாநாடு வெற்றியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இந்த மாநாட்டில், ரஷ்ய பங்கேற்கவில்லை. இதனால் குறித்த ‘உக்ரைன் அமைதி மாநாட்டை சீனாவும் புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1388152
    • இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு ஆரம்பம்! 16 JUN, 2024 | 11:26 AM   தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (16) காலை 10 மணியளவில் ஆரம்பமானது. கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றுவரும் இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், சட்டத்தரணி கே.வி. தவராசா உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இன்றைய கூட்டத்தில் தமிழ் அரசுக் கட்சியின் தலைமை விடயத்தில் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதுடன், தமிழ் பொது வேட்பாளர் விடயம் தொடர்பாகவும் முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன.   https://www.virakesari.lk/article/186180
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பெரியவர்கள், இளம் வயதினரிடையே நீரிழிவு நோய் ஏற்படுவது பரவலாக காணப்படுகிறது. அதுகுறித்த விழிப்புணர்வும் பரவலாக காணப்படுகின்றது. ஆனால், குழந்தைகளுக்கு ஏற்படும் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லை என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் நீரிழிவு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், அதுபல தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர். குழந்தைகளுக்கு எதனால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது? அதற்கான அறிகுறிகள் என்ன? அதனை தடுக்க முடியுமா? சிகிச்சைகள் என்னென்ன என்பது குறித்து இங்கு காண்போம். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். டைப் 1 நீரிழிவு நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES குழந்தைகளுக்கு பொதுவாக ஏற்படுவது டைப் 1 நீரிழிவு நோய். உடல் செல்களுக்கு குளுக்கோஸ் செல்ல உதவும் இன்சுலின் என்ற ஹார்மோனுக்கு பற்றாக்குறை ஏற்படுவதுதான் நீரிழிவு நோய். அந்த இன்சுலின் ஹார்மோன் கணையத்தால் உற்பத்தி செய்யப்படாத நிலையே டைப் 1 நீரிழிவு நோய். பெரியவர்கள், இளம்பருவத்தினருக்கு ஏற்படுவது டைப் 2 நீரிழிவு நோய். அது பெரும்பாலும் வாழ்வியல் முறைகள், மரபியல் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகின்றன. ஆனால், குழந்தைகளுக்கு ஏற்படும் டைப் 1 நீரிழிவு நோய் எவ்வித காரணங்களும் இன்றி, தானாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் ஏற்படுகிறது என்கிறார், குழந்தைகள் நல மருத்துவர் அருண்குமார். “டைப் 1 நீரிழிவு நோய் குழந்தைகளுக்கு ஏற்படுவதால் இது பிறப்பில் ஏற்படும் நோய் என கருதக்கூடாது. குழந்தைப்பருவத்தில் ஒரு வயது முதல் எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களால் இது ஏற்படும். இதனால், கணையத்தில் இன்சுலின் சுரக்கும் செல்கள் பாதிக்கப்பட்டு, இன்சுலின் சுரப்பு நின்றுவிடும். எந்த வைரஸ் தொற்று காரணமாகவும் இது தூண்டப்படலாம்” என விளக்குகிறார் அருண்குமார்.   முக்கிய அறிகுறிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த டைப் 1 நீரிழிவு நோய் பெரியவர்களுக்கும் வரலாம் என்று மருத்துவர் அருண்குமார் கூறுகிறார். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் 2022-ம் ஆண்டு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 14 வயதுக்குட்பட்ட சுமார் 95,000 குழந்தைகள் இத்தகைய டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு ஏற்படும் டைப் 1 நீரிழிவுக்கு முக்கியமான சில அறிகுறிகள் உண்டு. பாலியூரியா - அடிக்கடி சிறுநீர் கழித்தல் பாலிடிப்சியா - அதிக தாகம் எடுத்தல் பாலிபீஜியா - அதிகமாக பசி எடுத்தல் இவைதவிர, அதிகளவில் உணவு உட்கொண்டாலும் எடை இழப்பு அதிகமாக ஏற்படும். பிறப்புறுப்பில் தொற்று நோய்கள் எளிதாக ஏற்படும். “அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடல் எடை குறைதல் உள்ளிட்ட ஆரம்பக்கட்ட அறிகுறிகளில் பெரும்பாலான குழந்தைகளுக்கு இந்நோய் கண்டுபிடிக்கப்படுவதில்லை,” என்கிறார் மருத்துவர் அருண்குமார்.   டயாபடிக் கீட்டோ அசிடோசிஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆரம்பக்கட்ட அறிகுறிகளில் குழந்தைகளுக்கு டைப் 1 நீரிழிவு நோய் கண்டுபிடிக்கப்படாதபோது, இதனால், டயாபடிக் கீட்டோ அசிடோசிஸ் என்ற தீவிர நிலை ஏற்படுவதாக அவர் எச்சரிக்கிறார். டயாபடிக் கீட்டோ அசிடோசிஸ் என்பது, சர்க்கரை அளவு அதிகமாகி, அதனால் ரத்தத்தில் அமிலம் அதிகமாகி பயங்கரமான மூச்சுத்திணறல் ஏற்பட்டு கோமா நிலை ஏற்படும் என்று அவர் கூறுகிறார். பெரும்பாலும் இத்தகைய தீவிர நிலையில் தான் குழந்தைகளுக்கு டைப் 1 நீரிழிவு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்படுவதாகவும் இதில் குழந்தைகள் இறப்பதற்கும் வாய்ப்பிருப்பதாக மருத்துவர் அருண்குமார் எச்சரிக்கிறார். “ஒரு குழந்தைக்கு டயாபடிக் கீட்டோ அசிடோசிஸ் ஏற்படும்போது, அவசர சிகிச்சை அளித்து குழந்தையை காப்பாற்றி, அதன் பின்னரே இன்சுலின் சிகிச்சை தொடங்கப்படும். தீவிரமான பிரச்னைகளின் போது குழந்தையை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்படலாம்” என்கிறார் அவர். குழந்தைகளுக்கு மூன்று மாதங்களில் 5% எடை இழப்பு ஏற்படுகிறது என்றால் குழந்தை நல மருத்துவரை அணுக வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். டைப் 1 நீரிழிவு நோயை தடுக்க முடியாது என்றாலும், ஆரம்பத்திலேயே அதனை கண்டறிந்து இன்சுலின் சிகிச்சை எடுத்தால் மற்ற குழந்தைகளை போலவே ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் அக்குழந்தைகள் வாழ முடியும் என நம்பிக்கையூட்டுகிறார் மருத்துவர் அருண்குமார். உலக சுகாதார மையத்தின் தகவலின்படி, 2017-ம் ஆண்டில் உலகம் முழுவதிலும் 90 லட்சம் பேர் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் பெரும்பான்மையானோர் அதிக வருமானம் கொண்ட நாடுகளில் வாழ்கின்றனர். டைப் 1 நீரிழிவு ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணமோ அல்லது அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளோ தெரியவில்லை. டைப் 1 நீரிழிவு நோய்க்கு என்ன சிகிச்சை வழங்கப்படும்? “இன்சுலின் செலுத்துவதுதான் ஒரே தீர்வு. அதன் அளவு ஒவ்வொரு குழந்தையின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்” என்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர். “டைப் 1 நீரிழிவு நோயில் இன்சுலின் சுரப்பது சுத்தமாக இருக்காது. அப்படிப்பட்ட சமயத்தில் இன்சுலின் கொடுத்தால்தான் அந்த குழந்தைகள் உயிர்வாழ முடியும்” என்கிறார், மருத்துவர் சந்திரசேகர்.   குழந்தைகளுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வராதா? பட மூலாதாரம்,GETTY IMAGES மாறிவரும் வாழ்வியல் முறைகள், உடல் பருமன், மனச்சோர்வு காரணமாக, 10-12 வயது குழந்தைகளுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதாக மருத்துவர் சந்திரசேகர் கூறுகிறார். “இன்சுலின் எதிர்ப்பு தன்மை காரணமாக பெரியவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. வாழ்வியல் காரணிகள், மரபியல் காரணிகளால் இது ஏற்படும். சமீப காலமாக 10-12 வயது உடல் பருமன் கொண்ட குழந்தைகளுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. சரியான உணவுமுறை, உடற்பயிற்சி இல்லாததும் இதற்கு காரணங்கள்” என்கிறார் அவர். சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு டைப் 2 நீரிழிவு நோய் எதிர்காலத்தில் வரலாம் என்று கூறும் அவர், தற்போது அத்தகைய குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே டைப் 2 நீரிழிவு நோய் வந்துவிடுவதாக கூறுகிறார். டைப் 2 நீரிழிவு நோயை தடுக்கக் குழந்தைகளின் உடல் எடையை கண்காணிக்க வேண்டும், 9-11 வயது குழந்தைகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தத்திற்கான பரிசோதனைகள் எடுக்கப்பட வேண்டும் என கூறுகிறார், மருத்துவர் சந்திரசேகர். டைப்2 நீரிழிவு ஏற்படும் குழந்தைகளுக்கு மாத்திரைகள் மூலம் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. இதுதவிர, பிறக்கும் குழந்தைகளுக்கு நியோநாட்டல் நீரிழிவு நோய் மிக அரிதாக ஏற்படும் என்று கூறுகிறார் மருத்துவர் சந்திரசேகர். “இது குழந்தை பிறந்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் ஏற்படலாம். மரபணுக்களில் ஏற்படும் ஒரு குறைபாட்டால் இது ஏற்படுகிறது. பீட்டா செல்களில் சுரப்புகள் மாறி, மரபணுக்களில் ஏற்படும் குறைபாட்டால் இது ஏற்படுகிறது. இது டைப் 1 நீரிழிவு நோய் கிடையாது” என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/c2552x2wpjzo
    • டி20 உலகக்கோப்பை: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள் எவை? பட மூலாதாரம்,GETTY IMAGES 16 ஜூன் 2024, 04:08 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நடப்பு உலகக்கோப்பை போட்டிகளில் அதிர்ச்சிகரமான முடிவுகள் என்பது இயல்பான ஒன்றாகி வருகின்றன. கத்துக்குட்டி அணிகளின் சவால் தரும் ஆட்டத்தால் முன்னணி அணிகள் பலவும் தொடரை விட்டே வெளியேறியுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, அமெரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற, பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து ஆகிய 3 அணிகளும் வெளியேற்றப்பட்டு விட்டன. பி பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளும், சி பிரிவில் ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், டி பிரிவில் இருந்து தென் ஆப்ரிக்காவும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இங்கிலாந்து தகுதி பி பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து 4 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 5 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அந்த அணியின் நிகர ரன் ரேட் 3.611 ஆக இருக்கிறது. இங்கிலாந்துடன் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற போட்டியிட்ட ஸ்காட்லாந்து அணியும் 2 வெற்றிகளுடன் 5 புள்ளிகளை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்து தோற்றுப் போனதால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதால், நிகர ரன் ரேட் அடிப்படையில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES வங்கதேசம், நெதர்லாந்து அணிகள் கடும் போட்டி டி பிரிவில் தென் ஆப்ரிக்கா அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில், இரண்டாவது இடத்திற்கு வங்கதேசம் - நெதர்லாந்து அணிகள் போட்டியிடுகின்றன. தற்போதைய நிலையில் வங்கதேசம் 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றாலோ, அல்லது ஆட்டம் தடைபட்டாலோ கூட வங்கதேசம் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிடும் மறுபுறம், நெதர்லாந்து அணியோ சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற தனது அடுத்த ஆட்டத்தில் இலங்கையை வெல்ல வேண்டும். அதேநேரத்தில், வங்கதேச அணி தனது கடைசி ஆட்டத்தில் நேபாளத்திடம் தோற்க வேண்டும். இவை இரண்டும் நடந்தால் மட்டுமே நெதர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை வெளியேற்றம் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தானும், பி பிரிவில் இடம் பெற்றிருந்த நியூசிலாந்து அணியும், டி பிரிவில் இலங்கை அணியும் கத்துக்குட்டிகளின் சவாலை சமாளிக்க முடியாமல் டி20 உலகக்கோப்பை தொடரை விட்டே வெளியேற்றப்பட்டுள்ளன. நிகர ரன் ரேட் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? ரன்-ரேட் என்பது ஒரு அணி தனது முழு இன்னிங்ஸிலும் ஒரு ஓவருக்கு அடித்த சராசரி ரன்களின் எண்ணிக்கை ஆகும். உதாரணமாக, 20 ஓவர்களில் 140 ரன்கள் என்பது ஒரு ஓவருக்கு ஏழு ரன்களுக்கு சமம். மற்ற அணியின் ரன் ரேட்டிலிருந்து எதிரணியின் ரன் ரேட்டைக் கழிப்பதன் மூலம் நிகர ரன் ரேட் கணக்கிடப்படுகிறது. எனவே வெற்றி பெறும் அணி நேர்மறை நிகர ரன் ரேட்டையும், தோல்வியுற்ற அணி எதிர்மறை நிகர ரன் ரேட்டையும் கொண்டிருக்கும். ஒரு அணி 20 ஓவர்களையும் முழுமையாக ஆடாமல் முன்கூட்டியே ஆட்டமிழந்தால், அந்த அணியின் ரன் ரேட் 20 ஓவர் அடிப்படையிலேயே கணக்கிடப்படும். இவ்வாறு, ஒவ்வொரு ஆட்டத்திலும் கிடைக்கும் நிகர ரன்ரேட் அடிப்படையிலேயே லீக் சுற்றில் அந்த அணியின் ஒட்டுமொத்த ரன் ரேட் கணக்கிடப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா இரண்டாவது முறையாகப் பட்டம் வெல்லுமா? இதுவரை, ஆறு அணிகள் முந்தைய டி20 போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இந்தியா இரண்டாவது முறையாகப் பட்டம் வெல்வதை இலக்காகக் கொண்டுள்ளது. 2007ஆம் ஆண்டு நடந்த முதல் போட்டியில் இந்திய அணி அற்புதமான வெற்றியைப் பதிவு செய்தது. இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றது மறக்க முடியாத நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2014இல் இந்தியா மீண்டும் பட்டத்தை வெல்லும் சூழலில் இருந்தது. ஆனால் இலங்கைக்கு எதிரான அந்தப் போட்டியில் இரண்டாம் இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. பாகிஸ்தான் 2009இல் ஒருமுறை வெற்றி பெற்றது. அதன் பிறகு மூன்று முறை இறுதிப் போட்டி வரை வந்துள்ளது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, 2010 மற்றும் 2022இல் போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு, டி20 உலகக்கோப்பையில் மூன்றாவது பட்டத்தைப் பெற இலக்கு நிர்ணயித்துள்ளனர். போட்டிகளை நடத்தும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் 2012 மற்றும் 2016இல் இரண்டு பட்டங்களைப் பெற்றுள்ளது. 2021இல் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. https://www.bbc.com/tamil/articles/c4nn55n21rwo
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.