Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிகிரியா பிரதேசத்தில் 500க்கும் மேற்பட்ட அரபு மட்பாண்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொல்லியல் பிரச்சினை என்பது எம்மிடையே இருக்கின்ற மிக முக்கியமான பிரச்சினை.தொல்லியல் நிபுணர் ஒருவரின் கருத்துப்படி சிகிரியா பிரதேசத்தில் 500க்கும் மேற்பட்ட அரபு மட்பாண்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனபாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். முஷரப் முதுநபின் தெரிவித்துள்ளார்.

நாடறிந்த கல்விமானும் முன்னாள் கல்வி அதிகாரியுமான மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானா அவர்களது கல்விஇ சமூகஇ சமயஇ அரசியல் மற்றும் கலாசார பணிகளை புதிய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் சட்டத்தரணி றுடானி ஸாஹிர் அவர்களால் தொகுக்கப்பட்ட ‘அபுல் கலாம் ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மெளலானா வாழ்வும் பணியும் (1920-2013)’ நூல் சனிக்கிழமை(10) மாலை(இரவு) மருதமுனைஇ பொது நூலக கேட்போர் கூடத்தில் பழீல் மொலானா பவுண்டேஷனின் ஏற்பாட்டில் செனட்டர் மசூர் மௌலானா அரங்கில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதிதியாக கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில் கூறியதாவது

தொல்லியல் பிரச்சினை என்பது எம்மிடையே இருக்கின்ற மிக முக்கியமான பிரச்சினை.தொல்லியல் நிபுணர் ஒருவரின் கருத்துப்படி சிகிரியா பிரதேசத்தில் 500க்கும் மேற்பட்ட அரபு மட்பாண்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த மட்பாண்ட எச்சங்கள் அரபியினருடையதா?இது எந்த கலாச்சாரத்திற்குரியது என்பதை அறியாதவர்களாகத்தான் இங்கு பகுப்பாய்வு செய்கின்ற தொழிநுட்பவியலாளர்கள் இருக்கின்றார்கள்.எனவே தான் தொல்லியல் செயலணியில் ஏனைய சமூகத்தினரையும் இணைப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றோம் என்றார்.

இந்நிகழ்வில் பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறை முன்னாள் தலைவரும், தேசிய கல்வி நிருவக பேரவை உறுப்பினருமான பேராசிரியர், கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். முஷரப் முதுநபின், முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கிப், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் (நளிமி) உட்பட சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரிகள், பல்கலைக்கழக பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், முக்கிய கல்விமான்கள், கலை, இலக்கிய ஜாம்பவான்கள், அபுல்கலாம் ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மெளலானாவின் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

-பா.டிலான்-https://pagetamil.com/2021/04/11/சிகிரியா-பிரதேசத்தில்-500க/

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தொல்பொருள் எச்சங்களின் கண்டுபிடிப்பை ஆதாரமாக கொண்டால் சிகிரியா பிரதேசத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர்  முஸ்லிம்கள் வாழ்ந்தற்கான ஆதாரங்கள் உண்டு என்பது நிரூபணமாகிறது. பௌத்தர்கள் போலவே அவர்களும் பள்ளிவாசல் ஒன்றை உடனடியாக அவ்விடத்தில் கட்டுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

தொல்லியல் நிபுணர் ஒருவரின் கருத்துப்படி சிகிரியா பிரதேசத்தில் 500க்கும் மேற்பட்ட அரபு மட்பாண்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த மட்பாண்ட எச்சங்கள் அரபியினருடையதா?இது எந்த கலாச்சாரத்திற்குரியது என்பதை அறியாதவர்களாகத்தான் இங்கு பகுப்பாய்வு செய்கின்ற தொழிநுட்பவியலாளர்கள் இருக்கின்றார்கள்.எனவே தான் தொல்லியல் செயலணியில் ஏனைய சமூகத்தினரையும் இணைப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றோம் என்றார்.

முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, பெருமாள் said:

தொல்லியல் பிரச்சினை என்பது எம்மிடையே இருக்கின்ற மிக முக்கியமான பிரச்சினை.தொல்லியல் நிபுணர் ஒருவரின் கருத்துப்படி சிகிரியா பிரதேசத்தில் 500க்கும் மேற்பட்ட அரபு மட்பாண்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனபாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். முஷரப் முதுநபின் தெரிவித்துள்ளார்.

நல்ல செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

தொல்லியல் பிரச்சினை என்பது எம்மிடையே இருக்கின்ற மிக முக்கியமான பிரச்சினை.தொல்லியல் நிபுணர் ஒருவரின் கருத்துப்படி சிகிரியா பிரதேசத்தில் 500க்கும் மேற்பட்ட அரபு மட்பாண்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனபாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். முஷரப் முதுநபின் தெரிவித்துள்ளார்.

சிகிரியா பிரதேசத்தில் முஸ்லீம்களின் பிரசன்னத்தைக் காணவில்லை.
இனிமேல் அப்பிரதேசத்தில் முஸ்லீம்களை குடியேற்ற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

 This Magic Is Magical | Uber humor, Interesting gif, Cool gifs  Arabe GIFs | Tenor

அரபு ஷேக்  எல்லாம்... சிகிரியா பக்கம், கிளம்பி வாங்கய்யா... 

  • கருத்துக்கள உறவுகள்

ஷேக் எல்லாம்...   வேறை அலுவல்,  பாத்துக் கொண்டிருக்கு.  😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மட்பாண்ட எச்சங்கள் எதைக் காட்டுகின்றது என்றால்.....சிங்கள மன்னர்கள் அந்தக் காலத்திலேயே...அரேபிய மதுவுடன், காலத்தை வீணடித்திருக்கின்றனர் என்பது தான்...!

மற்றும் படி....அரபு முஸ்லிம்கள் ....வியாபாரிகளாக வந்து, கண்டிய அரசன், சிறீ விக்கிரம ராச சிங்கனின் உத்தரவுக்கிணங்க கந்தளாய் பகுதியில், குடியமர அனுமதிக்கப்பட்டனர்! இந்த மன்னனின் காலம் 17 ஆம் நூற்றாண்டின் இறுதிக் கூறாகும்! கண்டி உடன்பக்கை செய்யப் பட்டது 1802 என நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் விட்டால்.....சிரியா என்னும் பெயரே , மருவி சிகிரியாவானது எண்டும் சொல்லுவினம்...!😬

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

கொஞ்சம் விட்டால்.....சிரியா என்னும் பெயரே , மருவி சிகிரியாவானது எண்டும் சொல்லுவினம்...!😬

கொஞ்ச நாளைக்கு முன் நல்லூரும் தன்கடை இடம் என்று ஊளையிட்டவர்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.