Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன் ஐயா உட்பட அனைவரும் வாருங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்போம் : வியாழேந்திரன் அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஐயா உட்பட அனைவரும் வாருங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்போம் : வியாழேந்திரன் அழைப்பு

சம்பந்தன் ஐயா உட்பட அனைவரும் வாருங்கள் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக அனைவரும் ஒன்றாகச் சென்று ஜனாதிபதி பிரதமருன் பேசுவோம் என்று நான் பாராளுமன்றத்திலும் தெரிவித்தேன் என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எம்மைப் பொருத்தளவிற்கு கிழக்கு மாகாணத்தில் இரு வலிமையான அரசியல் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இந்த கட்டமைப்பினூடாக எமது மக்களிற்கான எமது மக்களின் தேவைகளை அபிவிருத்திகளை நிச்சயமாக பெற்றுக்கொடுக்கவேண்டும்.

நீண்டகாலமாக புரையோடிப்போய்க்கிடக்கின்ற மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்தோடு இராஜதந்திரமாக பேசி தீர்க்கவேண்டும்.

 

கடந்தகாலத்திலே எமது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாக்கின்ற விடயத்திலே கவணம் செலுத்தினார்களே தவிர தமிழ் மக்களின் பிரச்சினைகளையே அவர்களின் பிரச்சினைக்கான தீர்வைப்பெற்றுக்கொடுக்க முடியவில்லை.

இந்த மாவட்டத்திலே எமது சகோதர சமூகமான முஸ்லிம் சமுகம் அடைந்துள்ள வளர்ச்சியை நீங்கள் பார்க்க முடியும். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எந்த அரசாங்கம் வந்தாலும் அந்த அரசுடன் இணைந்துகொண்டு தங்கள் மக்களின் அபிவிருத்தி சார்ந்த அரசியலை தொடர்சிசயாக முன்னெடுத்து வந்ததால் அவர்கள் கடந்த காலத்தில் அபிவிருத்திக்காக போராடி இன்று இந்த மாவட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் எந்த உரிமையையும் இழக்காத சமூகமாகத்தான் காணப்படுகின்றனர்.

முஸ்லிம் மக்களின் உடலை எரிக்க கூடாது அதை புதைக்கவேண்டும் என முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கினார்கள், அரசுடன் பேசினார்கள் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஜனாதிபதி, பிரதமர், அரச சம்மந்தப்பட்ட அமைச்சர்களோடு பேசினார்கள்.

வாக்களிப்பிலே சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு சார்பாக வாக்களித்தார்கள். அவர்கள் கேட்டது கோவிட்டினால் தமது சமூகத்தில் இறந்தவர்களை புதைக்க வேண்டும் எரிக்க கூடாது என்ற கொள்கையை வைத்து ஆதரவை வழங்கி இன்று அவர்கள் அந்தவிடயத்தில் வெற்றி கண்டுள்ளனர்.

ஆனால் எமது அரசியல் தலைவர்களைப் பொறுத்தளவிற்கு கடந்த ஏழு தாசாப்த காலமாக ஒரேவிடயத்தை பேசினர். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தளவில் பல வகையிலும் மற்றைய சமூகத்துடன் ஒப்பிடும் போது நில, வள, பொருளாதாரம், கல்வி என பல வகைகளில் நாம் பின்னடைவை கண்ட சமூகமாக தமிழ் சமுகம் காணப்படுகின்றது.

இன்று மலையகத்தில் ஆயிரம் ரூபா சம்பளம் கேட்டு எதிர்க்கட்சியிலே ஒரு பிரிவினர் சத்தம் போட்டு பேசினார்கள், எதிர்கட்சியில் சிலர் அரசுக்கு ஆதரவு வழங்கினார்கள். அரசாங்கத்தில் இருக்கின்ற மலையக அரசியல்வாதிகள் அரசுக்கு அழுத்தத்தை கொடுத்தார்கள்.

எதிர்கட்சியிரும் ஆளும்கட்சியிலும் இருந்து அரசுக்கு ஏதோவொருவகையில் அழுத்தத்தை கொடுத்து அரசுடன் பேசியபடியினால் இன்று அந்த ஆயிரம் ரூபா சம்பளத்திற்கான இணக்கப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

முஸ்லிம் மக்களின் உடலைப்புதைப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. நான் பாராளுமன்றத்திலும் தெரிவித்தேன் சம்பந்தன் ஐயா உற்பட அனைவரும் வாருங்கள் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக அனைவரும் ஒன்றாகச் சென்று ஜனாதிபதி பிரதமருன் சென்று பேசுவோம் என. நாம் தயாராக இருக்கின்றோம் காரணம் எமது மக்களின் பிரச்சினை தொடர்பாகவும் அபிவிருத்தி சார்ந்த விடயங்களையும் நாம் முன்னெடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
https://www.meenagam.com/சம்பந்தன்-ஐயா-உட்பட-அனைவ/

 

  • கருத்துக்கள உறவுகள்

 

9 hours ago, கிருபன் said:

சம்பந்தன் ஐயா உட்பட அனைவரும் வாருங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்போம் : வியாழேந்திரன் அழைப்பு

எனது வாழ்வில் ஏதாவது ஒரு விடயம் நடக்கக்கூடாது என்றால் என் மனைவியிடம் அவ்விடயம் நடந்தேயாக வேண்டும் என உறுதியாக உரைப்பேன்.அந்த விடயம் நடக்காது.அது போல் வியாழேந்திரனே உங்ளுக்குத் தெரியும் அவர்கள் வரமாட்டார்கள் என்று.பிறகுஎதற்குநேரத்தைவீண்டித்துக்கொண்டு. “வாருங்கள் என்றால் வரமாட்டார்- வரவேண்டாம் என்றால் வந்துவிடுவார்.தாருங்கள் என்றால் தரமாட்டார்-தரவேண்டாமென்றால் தந்துவிடுவார்”

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தனிய போக பயமா இருக்க?. அண்மையில் கூட ஜனாதிபதி கோடடபயா தன்னை அதிகாரத்துக்கு கொண்டு வர முன்நின்ற ஜனாதிபதி சட்டதரணி விஜியதாச ராஜபக்ஷவுக்கு   
தூஷணத்தில் தும்பு பறக்க பேசியுள்ளார். விஜேந்திரன் கால் தூசு அவருக்கு.
 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, zuma said:

ஏன் தனிய போக பயமா இருக்க?. அண்மையில் கூட ஜனாதிபதி கோடடபயா தன்னை அதிகாரத்துக்கு கொண்டு வர முன்நின்ற ஜனாதிபதி சட்டதரணி விஜியதாச ராஜபக்ஷவுக்கு   
தூஷணத்தில் தும்பு பறக்க பேசியுள்ளார். விஜேந்திரன் கால் தூசு அவருக்கு.
 

மட்டக்களப்பில் இன்னும் ஸ்டிக்கர் ஒட்டவில்லை இந்திய தமிழக  கட்சிகள்  போல இரு கட்சிகள் நடந்துகொள்கின்ற ஒன்று பிள்ளையான் மற்றது அமல் இவர்களுக்கு ஏட்டிக்கு போட்டியாக சாணாக்கியன் .
இதுல முசுப்பாத்தி என்னவென்றால் ஏழை மக்களுக்கு வழங்கி 5000 ரூபாவை வைத்தும் அரசியல் ஏதோ இவர் கொடுத்தது போல போஸ் வேற 

அநேகமாக அவர்களை கூப்பிடுவது வேலமெனக்கேடு மிஸ்டர் வியாழேந்திரன் 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா வாயால் வடை சுடப் பழகிட்டீனம். 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தனிய போய் செய்தால் சனம் இவரை தலையிலை வைச்சு கொண்டாடும் தானே ஏன் சாகப்போற வயசிலை அந்தாளை அலைக்கழிச்சுக்கொண்டு. வியாழனுக்கு தமிழின தலைவனாக விருப்பம் இல்லைப் போலை கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

இவர் தனிய போய் செய்தால் சனம் இவரை தலையிலை வைச்சு கொண்டாடும் தானே ஏன் சாகப்போற வயசிலை அந்தாளை அலைக்கழிச்சுக்கொண்டு. வியாழனுக்கு தமிழின தலைவனாக விருப்பம் இல்லைப் போலை கிடக்கு

வியாழன் குடியை கெடுக்கும் அல்லது அழிக்கும்

அது மட்டுமே அதன் வேலை என்பார்கள் முன்னோர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தேசிக்காய்கள் சரியில்லை, நாங்கள் வெட்டி விழுத்துவோம்  எண்டு சொல்லி வந்த சீயக்காய்களுக்கு என்ன நடத்தது, அவர்கள் பீச்சங் காய்களாய் போய்விட்டார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.