Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் அவன் இல்லை பட பாணியில் 4 பெண்களை மணந்த வாலிபர் கல்லூரி மாணவியுடன் ஓட்டம்

Featured Replies

நான் அவன் இல்லை பட பாணியில்

4 பெண்களை மணந்த வாலிபர் கல்லூரி மாணவியுடன் ஓட்டம்

நாகர்கோவில், ஜூன் 29-

Ôநான் அவன் இல்லைÕ பட பாணியில் 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் தற்போது கல்லூரி மாணவியுடன் ஓட்டம் பிடித்தார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

பாதிக்கப்பட்ட ஒரு பெண் இது குறித்து இன்று நாகர்கோவில் போலீசில் புகார் செய்யதுள்ளார்.

இது பற்றிய விவரம் வருமாறு:

மதுரையை சேர்ந்தவர் தர்மசேகர் (29). பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக இருப்பார். இனிக்க இனிக்கபேசி பெண்களை மயக்குவதில் மிகவும் வல்லவர். ஏற்கனவே இவருக்கு திருமணமாகி முதல் மனைவிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மதுரையிலேயே 2-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவரின் நடவடிக்கைகள் இவரது குடும்பத்தாருக்கே பிடிக்காமல் போக இவரை வீட்டில் இருந்து வெளியேற்றினர்.

மனைவிகள் மற்றும் குடும்பத்தை விட்டு விட்டு சென்னையில் தர்மசேகர் குடியேறினார். எப்போதும் டிப்-டாப்பாக உடைந்து அணிந்து செல்வார். மொபைல் போன் பேசிக் கொண்டும், எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டும் இருப்பார். இவரின் வலையில் சென்னையிலும் பெண்கள் விழ தொடங்கினர்.

நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் சுமிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இவர்கள் குடியிருந்த வீட்டு அருகில் வாடகை வீட்டில் தர்மசேகர் தங்கி இருந்தார்.

முதலில் சாதாரண முறையில் சுமிதாவிடம் பழகிய தர்மசேகர் படிப்படியாக அவரது மனதில் இடம் பிடிக்க ஆரம்பித்தார். தான் ஏர்போர்ட்டில் வேலை செய்வதாகவும், தனக்கு திருமணமாக வில்லை என்றும் கூறினார். இதை தம்பி சுமிதாவும், காதல் மன்னன் தர்மசேகரிடம் நெருங்கி பழகினார். இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு இருவரும் சென்னையில் இருந்து நாகர்கோவில் வந்து விட்டனர்.

திடீர், திடீரென காலை மற்றும் மாலை வேளைகளில் மோட்டார் சைக்கிளில் வெளியே கிளம்பி விடுவார். வீட்டில் இருந்த யாருக்கும் இது குறித்து சந்தேம் வரவில்லை. இந்த நிலையில் நாகர்கோவிலைச் சேர்ந்த கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. நேற்று (வியாழன்) இந்த மாணவியுடன் தர்மசேகர் ஓடி விட்டார். இருவரையும் பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. மேற்கொண்டு சுமிதாவின் உறவினர்கள் விசாரித்ததில், இதுவரை 5 பெண்களை தர்மசேகர் ஏமாற்றியது தெரிய வந்தது.

ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு பெயர்களை சொல்லி உள்ளார். தர்மா, சேகர், தர்மேஷ் என்ற பல பெயர்களில் இவர் பெண்களை ஏமாற்றி இருக்கிறார். இது குறித்து பாதிக்கப்பட்ட சுமிதா நாகர்கோவில் போலீசில் இன்று புகார் மனு அளித்தார்.

எப்படிய்யா இது

கொஞ்சம் சொல்லித்தாங்கோவன்

அட நல்லா இருக்குது கதை நாமளும் செய்து பார்கலாம் போல இருக்கு...............நான் தயார் என்னோட சேர யார் தயார்..................... :P

நான் தயார். பிறகு மயில்சாமி மாதிரி என்னை மாட்டிவிடுறேல்லை

நான் அப்படி எல்லாம் மாட்டமாட்டேன் எப்ப இருந்து ஆரம்பிகிறது என்று சொன்னா நல்ல நேரம் பார்த்து ஆரம்பிக்கலாம்.............

ஆஹா கிளம்பிட்டாங்கப்பா..................... நான் அவனில்லை படத்தில் கடைசியில் ஹீரோவுக்கு என்ன நடந்தது எண்டு தெரியும் தானே ? :unsure: ஹாஹா :D

Edited by அனிதா

  • தொடங்கியவர்

ஆஹா கிளம்பிட்டாங்கப்பா..................... நான் அவனில்லை படத்தில் கடைசியில் ஹீரோவுக்கு என்ன நடந்தது எண்டு தெரியும் தானே ? :huh: ஹாஹா :lol:

ஒரு அழகான பையனைக்க கண்டா பின்னால வழிஞ்சிட்டு போறது. அவன பற்றி எதுவுமே தெரியாமல். அப்புறம் ஏமாத்திட்டான் என்று சொல்றது B)

பாவம்மதுரை தர்மசேகர். ஐந்து பெண்களை மணந்துள்ளார். இருந்தும் அவரது வாழ்க்கை எதிர்பார்த்ததுபோல அமையவில்லை. ஐந்துபெண்களும் ஒரேமாதிரி இருந்திருக்கிறார்கள். அதுதான் அவர்ஊருவிட்டு ஊரு ஓடவேண்டியதாகிவிட்டது. ஆறாவது பெண்ணாவது அவரது விருப்பத்திற்கு ஏற்றவாளாக இருக்கிறாளா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அழகான பையனைக்க கண்டா பின்னால வழிஞ்சிட்டு போறது. அவன பற்றி எதுவுமே தெரியாமல். அப்புறம் ஏமாத்திட்டான் என்று சொல்றது B)

மறுதலையும் உண்மை தானே வானவில்.

ஏமாறிறவங்க இருக்கும் வரை ஏமாற்றிறவங்களும் இருக்கத்தான் செய்வாங்க..! :huh:

ஆஹா வானவில் அப்ப ஜம்மு , பரணி அண்ணா கூட சேர்ந்து நீங்களும் தயாரா....... சரி கடைசியில் யாரிட்ட கத்தியால் குத்து வாங்குறியளோ தெரியல ;)

ஒரு அழகான பையனைக்க கண்டா பின்னால வழிஞ்சிட்டு போறது. அவன பற்றி எதுவுமே தெரியாமல். அப்புறம் ஏமாத்திட்டான் என்று சொல்றது B)

இது தங்களுக்கும் பொருந்துமல்லவா ? :P

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அழகான பையனைக்க கண்டா பின்னால வழிஞ்சிட்டு போறது. அவன பற்றி எதுவுமே தெரியாமல். அப்புறம் ஏமாத்திட்டான் என்று சொல்றது

இது தங்களுக்கும் பொருந்துமல்லவா ? :P

வில்லுக்குப் பொருந்துதோ இல்லையோ... எங்கட நெடுக்ஸ் மூக்கில வேர்த்தமாதிரி வந்துட்டாரே..!! :P

  • தொடங்கியவர்

ஆஹா வானவில் அப்ப ஜம்மு , பரணி அண்ணா கூட சேர்ந்து நீங்களும் தயாரா....... சரி கடைசியில் யாரிட்ட கத்தியால் குத்து வாங்குறியளோ தெரியல ;)

இது தங்களுக்கும் பொருந்துமல்லவா ? :P

ஹீ ஹீ நாங்க அப்படி இல்லை.

ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று B) :lol::huh:

இந்தியாவில் இப்படி செய்யலாம் என்று முன்கூட்டியே தெரிந்திருந்தால் 15 நாட்களிற்குள் 15பேரை ஏமாற்றி இருக்கலாம். சீ தெரியாமல் போச்சே என்ன பண்ணலாம்.

இப்பவும் சொல்றன் நான் அவன் இல்லை

ஜம்முவோட சேர்ந்து ஏமாற்றப்போறது நான் இல்லை

அட என்னோட எல்லாரும் உடனே கூட்டி சேர்ந்து போட்டாங்கள் அது சரி பரணி அண்ணா கரக்டராகவே மாறிவிட்டீங்க போல இருக்கு................நல்லா தான் இருக்கு நடிப்பு.........

நானும் அவன் இல்லை

அப்ப வரட்டா.............

அட பயந்தாங்கொள்ளிகளா நீங்க எல்லாரும்? :D

சும்மா வார்த்தைக்கு கூட சொல்ல பயப்பிட்டு ஒதுங்குறீங்க...

யோசிச்சு பாருங்க..அப்போ இப்படி செய்தவருக்கு என்ன திமிர்,துணிவு இருக்கணும் என்று.

அதை விட இந்த பெண்கள்.. அட சா... கதைச்சா டென்சன் :angry:

அதனால நானும் போறன்பா...

பாவம் அந்தப்பெடியனை நான் அவனில்லை படம் தான் சீரழிச்சிட்டுது. நான் அவனில்லை படத்தின் முடிவைப்போலன்றி தன் வாழ்வு முடியக்கூடாது என்று வீரம் கொண்டிருப்பான் போலும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் வெண்ணிலாக்கா...

படத்தை பார்த்து கெடும் அளவுக்கு ஆண்களுக்கு அறிவு இல்லையா? :D

சொந்த அறிவு இருக்க வேண்டாமோ? இல்லை மனிதாபிமானம் இருக்க வேண்டாமோ?

செய்யுறதுக்கெல்லாம் மற்றதுகளை காரணம் சொன்னா செய்தது நியாயமாயிடுமா :angry: :angry:

பெண்கள் கல்யாணத்திற்கு பிறகு கணவன்மாருக்கு உண்மையாகத்தான் இருக்கினம், ஆனா ஆண்களால் அப்படி முடியிறது இல்லை அது ஏன்?

ஆகா..............

ஆ ர ம் பி ச் சி ட் டா ங் கை ய் யா...ஆ ர ம் பி ச் சி ட் டா ங் க... :D

Edited by பிரியசகி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் வெண்ணிலாக்கா...

படத்தை பார்த்து கெடும் அளவுக்கு ஆண்களுக்கு அறிவு இல்லையா? :D

சொந்த அறிவு இருக்க வேண்டாமோ? இல்லை மனிதாபிமானம் இருக்க வேண்டாமோ?

செய்யுறதுக்கெல்லாம் மற்றதுகளை காரணம் சொன்னா செய்தது நியாயமாயிடுமா :angry: :angry:

நான் அவனில்லை படம் இப்ப எல்லோ வந்தது.. இது ஐந்துபேரை ஏமாற்றினது என்றால் இவற்றை கதை எப்பவோ தொடங்கிட்டுது.. உண்மையிலை இவருடைய வாழ்க்கையை வைத்துதான் அந்த படமே தயாரித்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாலிபர் கில்லாடிதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்கள் கல்யாணத்திற்கு பிறகு கணவன்மாருக்கு உண்மையாகத்தான் இருக்கினம், ஆனா ஆண்களால் அப்படி முடியிறது இல்லை அது ஏன்?

சும்மா கெளப்புறாங்கையை பீதியை.. :D

எந்த உலகத்திலை இருக்கிறீங்கள்..

உங்கடை மனதிலை கையை வைச்சு சொல்லுங்க எல்லா பெண்களும் தங்கடை கணவருக்கு உண்மையாதான் இருக்கிறாங்க எண்டு..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடலில் கப்பல் போனா அடையாளமா தெரியுது?

சொல்லவருகிற விடயம் புரியவில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அப்படி அவசரப்பட்டு ஓடவேனும்? அவசரத்துக்கு ஒரு ஓட்டோ கூடவா கிடைக்கவில்லை! சே. :D:D

அட பயந்தாங்கொள்ளிகளா நீங்க எல்லாரும்? :)

சும்மா வார்த்தைக்கு கூட சொல்ல பயப்பிட்டு ஒதுங்குறீங்க...

சகி அக்கா எவ்வளவு தைரியமா நான் சொல்லி இருகிறேன்............என்னை பார்த்து இப்படி கேட்டு போட்டீங்கள்..........சது சரி மம்மியிட்ட மாட்டி கொடுதுடாதையுங்கோ..........

அப்ப நான் வரட்டா.........

:P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.