Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாம்பெண்ணை மருத்துவம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பெண்ணை மருத்துவம்!


18 ஆம்  நூற்றாண்டு காலப்பகுதியில் ஐரோப்பிய, அமெரிக்க தேசங்களில் ஒரு புது வகையான தொழில் துறை கொடி கட்டிப் பறந்தது. குதிரை வண்டியில் ஊரூராகத் திரிந்து சகல வகையான நோய்களையும் தீர்க்கும் "பாம்பு எண்ணை" என்று பெற்றோலியத்தின் ஒரு பகுதியான கனிம எண்ணையை விற்பதே அந்தத் தொழில். இது ஏன் பாம்பு எண்ணை (snake oil) என அழைக்கப் பட்டது என்பதற்கு பல காரணங்கள் சொல்லப் படுகின்றன. ஆனால், இன்று ஆங்கிலத்தில் "பாம்பு எண்ணை" என்பது எந்தப் பலனுமற்ற போலி மருந்துகளைச் சுட்டப் பயன் படும் ஒரு சொல்லாகி விட்டது. போலி மருந்துகளை விற்கும் வியாபாரி "பாம்பெண்ணை விற்பவர் (snake oil salesman)" எனப் படுகிறார். 

கோவிட் 19 இற்கு தீர்வினைத் தேடி மருத்துவ விஞ்ஞானம் உழைத்துக் கொண்டிருக்கும் போது, பல பாம்பெண்ணை மருந்துகளும் வெளிவந்து வியாபாரிகளுக்கு மட்டும் எதிர்பார்த்த  "பலன்களை" கொள்ளை லாபமாகத் தந்து கொண்டிருக்கின்றன. இலங்கையில் கேகாலை வைத்தியரின் பாணி, மடகஸ்காரில் அந்த நாட்டு தலைவர்களே தயாரித்து விற்கும் மருத்துவ சோடா, என்று நீளும் பட்டியலில் இப்போது இணைந்து கொண்டிருப்பது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் பரியாரி நெல்லூர் அனந்தையாவின் மூலிகைப் பாணி!. நேற்று இந்த மூலிகைப் பாணியை அந்த மாநிலத்தில் பயன்படுத்த ஆந்திர மாநில முதலமைச்சர் விசேட கூட்டம் கூட்டி அனுமதியும் வழங்கியிருக்கிறார்.

"முதலமைச்சரே அனுமதி கொடுத்து விட்டார், எனவே மருந்து வேலை செய்கிறது" என்று வட்சப் குழுமங்களில் குதிக்கிறார்கள் - இப்படி மகிழ்ந்து செய்தி பரப்பியோரில் சிலர் விஞ்ஞானத் துறையில் உயர் பட்டம் பெற்றவர்களாக இருந்தது ஆச்சரியமான தகவல் (தொழிலுக்கு அவசியம் என்று மேலதிக பட்டம் பெற்று பிரேம் போட்டிருப்பார்கள் போல, பட்டம் பிரேமிற்குள் முடங்கி விட்டது!). 

சீரியசாக, அந்த ஆந்திரமாநில மூலிகைப் பாணியில் என்ன இருக்கிறது, அனுமதி எப்படி வழங்கப்பட்டது என்று பார்க்கலாம். நான்கு வகையான மூலிகைப் பாணிகளைத் தயாரித்து "கோவிட் எதிர்ப்பு மருந்தாகப் பயன்படுத்த நெல்லூர் அனந்தையா முயன்றார். இதை முதலில் கோவிட் மருந்தாக விளம்பரம் செய்ய ஆந்திர அரசு அனுமதிக்கவில்லை. பல்வேறு அழுத்தங்களின் பின்னர், அகில இந்திய ஆயுர்வேத மருந்து ஆய்வகம் (CCRAS) என்ற அமைப்பு இந்த மூலிகைப் பாணிகளைப் பரிசீலிக்க ஒப்புக் கொண்டது. "பரிசீலித்தல்" என்றால் நோயாளிகளுக்குக் கொடுத்துப் பரிசீலிக்க என்றல்ல - இந்த மூலிகைகளும் அவை கலக்கப் படும் முறைகளும் ஆபத்தானவையா இல்லையா என்பதைப் பரிசீலிக்க அந்த அமைப்பு முன்வந்தது. அதன் படி அவர்கள் முன்னிலையில், தனது நான்கு பாணிகளில் மூன்றை அனந்தையா தயாரித்துக் காட்டினார். நான்காவது பாணிக்கு அவசியமான மூலிகைகள் கையிருப்பில் இருக்காததால், அந்த நான்காவது மூலிகை பரிசீலிக்கப் படவில்லை. 

இந்த “தென்னாசிய பாணியிலான” பரிசோதனை முடிவில் அகில இந்திய ஆயுர்வேத அமைப்பு வெளியிட்ட  முடிவுகள் இரண்டு: 1. இந்த மூலிகைப் பாணிகள் கோவிட்டைக் குணமாக்கும் என்பதற்குரிய ஆதாரங்கள் இல்லை. 2. இந்த மூலிகைகள் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாதவை. 

இந்த முடிவுகளை ஆராய்ந்த ஆந்திர மாநில முதல்வர், பின்வரும் முடிவுகளை அறிவித்தார்: 1. இந்த பரிசீலிக்கப் பட்ட மூன்று மூலிகைப் பாணிகளை மக்கள் பயன்படுத்தலாம். 2. ஆனால், கோவிட்டிற்கு நிவாரணமாக வழங்கப் படும் ஏனைய மருந்துகளை மக்கள் நிறுத்தி விடக் கூடாது.

மேற்கூறிய அறிவிப்பை இந்தியாவின் சில பரபரப்பு மஞ்சள் பத்திரிகை பாணி ஊடகங்கள் வெளியிட்ட தோரணையோ, அனந்தையாவின் மூலிகைப் பாணிகள் கோவிட்டிற்கு மருந்தாக அனுமதிக்கப், பட்டிருக்கின்றன என்ற வகையில் இருந்தன. ஒரு இணைய ஊடகத்தில் அனந்தையாவின் அனுமதிக்கப் படாத நான்காவது மூலிகை மருந்தை எடுத்துக் கொண்ட ஒருவர் "நான் உடனே குணமாகி விட்டேன்" என்று பேட்டி கொடுத்தார் - அது பரபரப்பாக இணைய ஊடகங்களில் பரவியது. மறு நாள் அதே நபர் உடலில் ஒக்சிசன் குன்றி மருத்துவமனையில் காலமாகி விட்டார் - இந்தச் செய்தி பிரதான ஊடகங்களில் மட்டும் வந்தது. 

ஆனால், இப்படியான பாம்பு எண்ணை விற்பவர்களின் வியாபார நுட்பம் வேலை செய்கிறது என்பதற்கு சாட்சியாக, ஆயிரக் கணக்கான மக்கள் அனந்தையாவின் நெல்லூர் நோக்கிப் படையெடுத்துள்ளனர். முட்டி மோதி வரிசையில் நிற்கும் இந்த மக்களில் பலருக்கு கோவிட் பரிசோதனை செய்யப் பட்ட போது சிலருக்கு ஏற்கனவே கோவிட் தொற்று இருப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள். எனவே, பாம்பு எண்ணை வாங்கப் போய் கோவிட் தொற்றைப் பெற்று வரும் "புத்தி சாலிகளை" இந்த அனந்தையா சம்பவம் உருவாக்கி விட்டது எனலாம்!

இது ஆந்திராவில் நடக்கிறது, இதை ஏன் நான் மெனக்கெட்டு எழுதுகிறேன் என்று வாசிப்பவர் யோசிக்கலாம் (நிச்சயமாக என் தெலுங்கு பூர்வீகம் காரணமல்ல!). காரணம்: இந்த பாம்பெண்ணை மருத்துவம் என்பது - பல்வேறு வடிவங்களில்- எங்களிடையேயும் வழக்கத்தில் இருக்கிறது. கறிவேப்பிலை சாப்பிட்டால் முடி வளரும், பாகற்காய் சாப்பிட்டால் சர்க்கரை வியாதி மறையும் போன்ற பாம்பெண்ணை மருத்துவங்களோடு, இன்று பல வகையான கோவிட் கைவைத்தியங்களும் எங்களிடையே தாராளமாகக் கேள்விகள் இன்றிப் பரவி வருகின்றன. இதன் பலன் நோயாளிகளுக்கோ பாவனையாளர்களுக்கோ இல்லை - அப்படி இருப்பதாக நிறுவும் எந்த ஆதாரங்களும் இல்லை. ஆனால், பயன் தாராளமாக பாம்பெண்ணையை விற்பவர்களுக்கு கிடைக்கின்றது. 

சிறந்த உதாரணம் கறி மஞ்சள். யாழ்ப்பாணம் நோக்கி கஞ்சாவுடன் மஞ்சளும் தமிழகத்திலிருந்து கடத்தி வரப்படும் அளவுக்கு அங்கே மஞ்சள் கோவிட் தடுப்புப் பொருளாக பொய்ப்பிரச்சாரம் செய்யப் பட்டிருக்கிறது. கறிமஞ்சள் கொரனாவைரசைக் கொல்லாது, நோயையும் குணமாக்காது, -அது மட்டுமன்றி கறி மஞ்சளில் இருக்கும் மருத்துவ குணம் கொண்ட குகுமின் (Curcumin) என்ற பதார்த்தம் எங்கள் உணவுக் கால்வாயில் இருந்து உறிஞ்சப் படுவதே மிகவும் குறைவு. இந்த நிலையில், ஏமாளிகளிடம் விற்று இலாபம் பார்க்க மட்டுமே கறி மஞ்சள் பயன்படும் என்பது தெளிவு. 

எனவே, அனந்தையாவின் அபூர்வ கோவிட் மூலிகைப் பாணியை யாராவது புலம் பெயர் உறவுகள் இறக்குமதி செய்யும் பிசினஸ் திட்டம் இருந்தால் திட்டத்தைக் கைவிடுங்கள். கோவிட்டிற்கு தற்போதைக்கு சிறந்த நிவாரணம் - தடுப்பு முறைகள் மட்டுமே: 

1. தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள்.
2. முகக் கவசம், கைகழுவுதல் சமூக இடைவெளி பேண வேண்டிய இடங்களில் பேணுங்கள்.
3. ஆரோக்கியமான உணவுமுறை, வாழ்க்கை முறை, உறக்கம் என்பன மூலம் நலம் பேணுங்கள்.

சமூக இடைவெளிக்கு ஆறடியென்றால், பாம்பெண்ணை வியாபாரிகள், விளம்பர தாரிகளிடம் பன்னிரன்டு அடிகள் தள்ளியே நில்லுங்கள்!

-ஜஸ்ரின்


தொடர்பு பட்ட செய்தி: https://timesofindia.indiatimes.com/city/vijayawada/take-decision-on-distribution-of-anandayyas-herbal-medicine-andhra-pradesh-high-court/articleshow/83025305.cms 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், ஜஸ்ரின்..!

தொடர்ந்தும் இப்படியான ஆய்வுகளை இணையுங்கள்..!

யாருக்குத் தெரியும்?

சில வேளைகளில், இப்படியான கட்டுரைகள் பல உயிர்கள் தேவையில்லாமல் பலி போவதைத் தடுக்கக் கூடும்!

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Justin said:

பாம்பெண்ணை மருத்துவம்!


18 ஆம்  நூற்றாண்டு காலப்பகுதியில் ஐரோப்பிய, அமெரிக்க தேசங்களில் ஒரு புது வகையான தொழில் துறை கொடி கட்டிப் பறந்தது. குதிரை வண்டியில் ஊரூராகத் திரிந்து சகல வகையான நோய்களையும் தீர்க்கும் "பாம்பு எண்ணை" என்று பெற்றோலியத்தின் ஒரு பகுதியான கனிம எண்ணையை விற்பதே அந்தத் தொழில். இது ஏன் பாம்பு எண்ணை (snake oil) என அழைக்கப் பட்டது என்பதற்கு பல காரணங்கள் சொல்லப் படுகின்றன. ஆனால், இன்று ஆங்கிலத்தில் "பாம்பு எண்ணை" என்பது எந்தப் பலனுமற்ற போலி மருந்துகளைச் சுட்டப் பயன் படும் ஒரு சொல்லாகி விட்டது. போலி மருந்துகளை விற்கும் வியாபாரி "பாம்பெண்ணை விற்பவர் (snake oil salesman)" எனப் படுகிறார். 

கோவிட் 19 இற்கு தீர்வினைத் தேடி மருத்துவ விஞ்ஞானம் உழைத்துக் கொண்டிருக்கும் போது, பல பாம்பெண்ணை மருந்துகளும் வெளிவந்து வியாபாரிகளுக்கு மட்டும் எதிர்பார்த்த  "பலன்களை" கொள்ளை லாபமாகத் தந்து கொண்டிருக்கின்றன. இலங்கையில் கேகாலை வைத்தியரின் பாணி, மடகஸ்காரில் அந்த நாட்டு தலைவர்களே தயாரித்து விற்கும் மருத்துவ சோடா, என்று நீளும் பட்டியலில் இப்போது இணைந்து கொண்டிருப்பது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் பரியாரி நெல்லூர் அனந்தையாவின் மூலிகைப் பாணி!. நேற்று இந்த மூலிகைப் பாணியை அந்த மாநிலத்தில் பயன்படுத்த ஆந்திர மாநில முதலமைச்சர் விசேட கூட்டம் கூட்டி அனுமதியும் வழங்கியிருக்கிறார்.

"முதலமைச்சரே அனுமதி கொடுத்து விட்டார், எனவே மருந்து வேலை செய்கிறது" என்று வட்சப் குழுமங்களில் குதிக்கிறார்கள் - இப்படி மகிழ்ந்து செய்தி பரப்பியோரில் சிலர் விஞ்ஞானத் துறையில் உயர் பட்டம் பெற்றவர்களாக இருந்தது ஆச்சரியமான தகவல் (தொழிலுக்கு அவசியம் என்று மேலதிக பட்டம் பெற்று பிரேம் போட்டிருப்பார்கள் போல, பட்டம் பிரேமிற்குள் முடங்கி விட்டது!). 

சீரியசாக, அந்த ஆந்திரமாநில மூலிகைப் பாணியில் என்ன இருக்கிறது, அனுமதி எப்படி வழங்கப்பட்டது என்று பார்க்கலாம். நான்கு வகையான மூலிகைப் பாணிகளைத் தயாரித்து "கோவிட் எதிர்ப்பு மருந்தாகப் பயன்படுத்த நெல்லூர் அனந்தையா முயன்றார். இதை முதலில் கோவிட் மருந்தாக விளம்பரம் செய்ய ஆந்திர அரசு அனுமதிக்கவில்லை. பல்வேறு அழுத்தங்களின் பின்னர், அகில இந்திய ஆயுர்வேத மருந்து ஆய்வகம் (CCRAS) என்ற அமைப்பு இந்த மூலிகைப் பாணிகளைப் பரிசீலிக்க ஒப்புக் கொண்டது. "பரிசீலித்தல்" என்றால் நோயாளிகளுக்குக் கொடுத்துப் பரிசீலிக்க என்றல்ல - இந்த மூலிகைகளும் அவை கலக்கப் படும் முறைகளும் ஆபத்தானவையா இல்லையா என்பதைப் பரிசீலிக்க அந்த அமைப்பு முன்வந்தது. அதன் படி அவர்கள் முன்னிலையில், தனது நான்கு பாணிகளில் மூன்றை அனந்தையா தயாரித்துக் காட்டினார். நான்காவது பாணிக்கு அவசியமான மூலிகைகள் கையிருப்பில் இருக்காததால், அந்த நான்காவது மூலிகை பரிசீலிக்கப் படவில்லை. 

இந்த “தென்னாசிய பாணியிலான” பரிசோதனை முடிவில் அகில இந்திய ஆயுர்வேத அமைப்பு வெளியிட்ட  முடிவுகள் இரண்டு: 1. இந்த மூலிகைப் பாணிகள் கோவிட்டைக் குணமாக்கும் என்பதற்குரிய ஆதாரங்கள் இல்லை. 2. இந்த மூலிகைகள் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாதவை. 

இந்த முடிவுகளை ஆராய்ந்த ஆந்திர மாநில முதல்வர், பின்வரும் முடிவுகளை அறிவித்தார்: 1. இந்த பரிசீலிக்கப் பட்ட மூன்று மூலிகைப் பாணிகளை மக்கள் பயன்படுத்தலாம். 2. ஆனால், கோவிட்டிற்கு நிவாரணமாக வழங்கப் படும் ஏனைய மருந்துகளை மக்கள் நிறுத்தி விடக் கூடாது.

மேற்கூறிய அறிவிப்பை இந்தியாவின் சில பரபரப்பு மஞ்சள் பத்திரிகை பாணி ஊடகங்கள் வெளியிட்ட தோரணையோ, அனந்தையாவின் மூலிகைப் பாணிகள் கோவிட்டிற்கு மருந்தாக அனுமதிக்கப், பட்டிருக்கின்றன என்ற வகையில் இருந்தன. ஒரு இணைய ஊடகத்தில் அனந்தையாவின் அனுமதிக்கப் படாத நான்காவது மூலிகை மருந்தை எடுத்துக் கொண்ட ஒருவர் "நான் உடனே குணமாகி விட்டேன்" என்று பேட்டி கொடுத்தார் - அது பரபரப்பாக இணைய ஊடகங்களில் பரவியது. மறு நாள் அதே நபர் உடலில் ஒக்சிசன் குன்றி மருத்துவமனையில் காலமாகி விட்டார் - இந்தச் செய்தி பிரதான ஊடகங்களில் மட்டும் வந்தது. 

ஆனால், இப்படியான பாம்பு எண்ணை விற்பவர்களின் வியாபார நுட்பம் வேலை செய்கிறது என்பதற்கு சாட்சியாக, ஆயிரக் கணக்கான மக்கள் அனந்தையாவின் நெல்லூர் நோக்கிப் படையெடுத்துள்ளனர். முட்டி மோதி வரிசையில் நிற்கும் இந்த மக்களில் பலருக்கு கோவிட் பரிசோதனை செய்யப் பட்ட போது சிலருக்கு ஏற்கனவே கோவிட் தொற்று இருப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள். எனவே, பாம்பு எண்ணை வாங்கப் போய் கோவிட் தொற்றைப் பெற்று வரும் "புத்தி சாலிகளை" இந்த அனந்தையா சம்பவம் உருவாக்கி விட்டது எனலாம்!

இது ஆந்திராவில் நடக்கிறது, இதை ஏன் நான் மெனக்கெட்டு எழுதுகிறேன் என்று வாசிப்பவர் யோசிக்கலாம் (நிச்சயமாக என் தெலுங்கு பூர்வீகம் காரணமல்ல!). காரணம்: இந்த பாம்பெண்ணை மருத்துவம் என்பது - பல்வேறு வடிவங்களில்- எங்களிடையேயும் வழக்கத்தில் இருக்கிறது. கறிவேப்பிலை சாப்பிட்டால் முடி வளரும், பாகற்காய் சாப்பிட்டால் சர்க்கரை வியாதி மறையும் போன்ற பாம்பெண்ணை மருத்துவங்களோடு, இன்று பல வகையான கோவிட் கைவைத்தியங்களும் எங்களிடையே தாராளமாகக் கேள்விகள் இன்றிப் பரவி வருகின்றன. இதன் பலன் நோயாளிகளுக்கோ பாவனையாளர்களுக்கோ இல்லை - அப்படி இருப்பதாக நிறுவும் எந்த ஆதாரங்களும் இல்லை. ஆனால், பயன் தாராளமாக பாம்பெண்ணையை விற்பவர்களுக்கு கிடைக்கின்றது. 

சிறந்த உதாரணம் கறி மஞ்சள். யாழ்ப்பாணம் நோக்கி கஞ்சாவுடன் மஞ்சளும் தமிழகத்திலிருந்து கடத்தி வரப்படும் அளவுக்கு அங்கே மஞ்சள் கோவிட் தடுப்புப் பொருளாக பொய்ப்பிரச்சாரம் செய்யப் பட்டிருக்கிறது. கறிமஞ்சள் கொரனாவைரசைக் கொல்லாது, நோயையும் குணமாக்காது, -அது மட்டுமன்றி கறி மஞ்சளில் இருக்கும் மருத்துவ குணம் கொண்ட குகுமின் (Curcumin) என்ற பதார்த்தம் எங்கள் உணவுக் கால்வாயில் இருந்து உறிஞ்சப் படுவதே மிகவும் குறைவு. இந்த நிலையில், ஏமாளிகளிடம் விற்று இலாபம் பார்க்க மட்டுமே கறி மஞ்சள் பயன்படும் என்பது தெளிவு. 

எனவே, அனந்தையாவின் அபூர்வ கோவிட் மூலிகைப் பாணியை யாராவது புலம் பெயர் உறவுகள் இறக்குமதி செய்யும் பிசினஸ் திட்டம் இருந்தால் திட்டத்தைக் கைவிடுங்கள். கோவிட்டிற்கு தற்போதைக்கு சிறந்த நிவாரணம் - தடுப்பு முறைகள் மட்டுமே: 

1. தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள்.
2. முகக் கவசம், கைகழுவுதல் சமூக இடைவெளி பேண வேண்டிய இடங்களில் பேணுங்கள்.
3. ஆரோக்கியமான உணவுமுறை, வாழ்க்கை முறை, உறக்கம் என்பன மூலம் நலம் பேணுங்கள்.

சமூக இடைவெளிக்கு ஆறடியென்றால், பாம்பெண்ணை வியாபாரிகள், விளம்பர தாரிகளிடம் பன்னிரன்டு அடிகள் தள்ளியே நில்லுங்கள்!

-ஜஸ்ரின்


தொடர்பு பட்ட செய்தி: https://timesofindia.indiatimes.com/city/vijayawada/take-decision-on-distribution-of-anandayyas-herbal-medicine-andhra-pradesh-high-court/articleshow/83025305.cms

அற்புதமான கட்டுரை அண்ணா. மேலே புங்கை அண்ணா சொன்னது போல் ஒரு உயிர் இதை வாசித்து தப்பினாலும் நன்மைதான்.

இந்த பாம்பெண்ணை வைத்தியர் என்ற சொற்பதம் இப்போ அதன் literal meaning ஐ தாண்டி metaphor ஆகவும் பயன்படுத்த படுகிறது என நினைக்கிறேன்.

ஏனெனில் பொய்யான முதலீட்டு திட்டங்கள், இதர பணம் காய்ச்சி போலி திட்டங்களை காவித்திரிபவர்களையும் snake oil salesman என விளிப்பதை கண்டுளேன்.

ஆனால் இதுவரை இதை ஒரு சொல்லாடல் என்று மட்டுமே நினைத்தேன்.

இன்றைக்குத்தான் உண்மையிலேயே பெற்றோலியம் ஜெல்ஐ பாம்பெண்ணை என விற்றார்கள் என்பதை அறிந்து கொண்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

இந்த பாம்பெண்ணை

ஊரிலை வெங்கிடாந்தி பாம்பு எண்ணை விக்குது தெரியுமோ? ஐ மீன் தைலம்😎

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

ஊரிலை வெங்கிடாந்தி பாம்பு எண்ணை விக்குது தெரியுமோ? ஐ மீன் தைலம்😎

மலைப் பாம்பு எண்ணை, மயில் எண்ணை எண்டு விக்கிறார்கள் என்று தெரியும்!

வெங்கணாத்திப் பாம்பு மிகவும் மெல்லிசாக இருக்கும்! 

அதிலிருந்து கனக்க எண்ணை வராது என்று நினைக்கின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

ஊரிலை வெங்கிடாந்தி பாம்பு எண்ணை விக்குது தெரியுமோ? ஐ மீன் தைலம்😎

தெரியாதண்ணை. நீங்கள் பாவிக்கிறனியள் எண்டு தெரியும் 😎😎

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, புங்கையூரன் said:

மலைப் பாம்பு எண்ணை, மயில் எண்ணை எண்டு விக்கிறார்கள் என்று தெரியும்!

வெங்கணாத்திப் பாம்பு மிகவும் மெல்லிசாக இருக்கும்! 

அதிலிருந்து கனக்க எண்ணை வராது என்று நினைக்கின்றேன்!

வணக்கம் புங்கை அண்ணா,

இது வேற மேட்டர். விட்டுடுங்கோ 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

வணக்கம் புங்கை அண்ணா,

இது வேற மேட்டர். விட்டுடுங்கோ 🤣.

எங்கடை ஓர்கானிக் பாம்பெண்ணை விற்க ஏதும் சந்தை இருந்தா சொல்லுங்கோ 
சும்மா வருமானம் ஒன்றும் இல்லாமல் வீணாகுது 🤣

வெங்கணாந்தி பாப்பெண்ணையை பிறகு பார்ப்போம் 

Beware the snake-oil merchants of alternative medicine - your life could  depend on it

http://walyou.com/wp-content/uploads//2012/01/snake-wine.jpg

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

சமூக இடைவெளிக்கு ஆறடியென்றால், பாம்பெண்ணை வியாபாரிகள், விளம்பர தாரிகளிடம் பன்னிரன்டு அடிகள் தள்ளியே நில்லுங்கள்!

என்னதான் சொன்னாலும், கபசுர குடிநீர் தமிழ்க்கடைகளில் அமோகமாக விற்கப்படுகின்றது!

வைரஸுக்கு மருந்து இல்லை. தடுப்பூசிதான் இருக்கு என்று சொல்லியும் கேட்காதவர்கள் கொரோனா அம்மன் ஆட்கொள்ளும்போது நிச்சயம் புரிந்துகொள்வார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2021 at 18:13, புங்கையூரன் said:

வணக்கம், ஜஸ்ரின்..!

தொடர்ந்தும் இப்படியான ஆய்வுகளை இணையுங்கள்..!

யாருக்குத் தெரியும்?

சில வேளைகளில், இப்படியான கட்டுரைகள் பல உயிர்கள் தேவையில்லாமல் பலி போவதைத் தடுக்கக் கூடும்!

நன்றி, பொதுச்சுகாதாரம் ஆரோக்கியம் பற்றிய பதிவுகளில்  நான் 10% விதியை நம்புகிறேன். 10 பேர் வாசித்து ஒருவர் உள்வாங்கிக் கொண்டாலும் வெற்றியே.

On 1/6/2021 at 18:21, goshan_che said:

அற்புதமான கட்டுரை அண்ணா. மேலே புங்கை அண்ணா சொன்னது போல் ஒரு உயிர் இதை வாசித்து தப்பினாலும் நன்மைதான்.

இந்த பாம்பெண்ணை வைத்தியர் என்ற சொற்பதம் இப்போ அதன் literal meaning ஐ தாண்டி metaphor ஆகவும் பயன்படுத்த படுகிறது என நினைக்கிறேன்.

ஏனெனில் பொய்யான முதலீட்டு திட்டங்கள், இதர பணம் காய்ச்சி போலி திட்டங்களை காவித்திரிபவர்களையும் snake oil salesman என விளிப்பதை கண்டுளேன்.

ஆனால் இதுவரை இதை ஒரு சொல்லாடல் என்று மட்டுமே நினைத்தேன்.

இன்றைக்குத்தான் உண்மையிலேயே பெற்றோலியம் ஜெல்ஐ பாம்பெண்ணை என விற்றார்கள் என்பதை அறிந்து கொண்டேன்.

உண்மை, இது மருந்து அல்லாத பயனற்ற பல ஏமாற்றுப் பொருட்கள் சேவைகளுக்கும் பயன்படுகிறது. ஆனால், சீனர்கள் ஒரு வகையான பாம்பில் இருந்து எடுத்த எண்ணையை மருத்துவ குணம் கொண்டது என்று பயன்படுத்தியதால் அமெரிக்காவிலும் இந்தப் பெயரைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று விக்கிபீடியா சொல்கிறது. ஆனால், அமெரிக்காவில் பாம்பைப் பிடித்து எண்ணை எடுக்கும் தில்😂 இல்லாததால் கனிம எண்ணையை விற்றிருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2/6/2021 at 02:47, கிருபன் said:

என்னதான் சொன்னாலும், கபசுர குடிநீர் தமிழ்க்கடைகளில் அமோகமாக விற்கப்படுகின்றது!

வைரஸுக்கு மருந்து இல்லை. தடுப்பூசிதான் இருக்கு என்று சொல்லியும் கேட்காதவர்கள் கொரோனா அம்மன் ஆட்கொள்ளும்போது நிச்சயம் புரிந்துகொள்வார்கள். 

சில மருத்துவர்கள் கபசுரக் குடிநீரையும் கொரனா தடுப்புப் போசணையில் சேர்த்து ஆலோசனை கொடுப்பதைக் கண்டிருக்கிறேன். எந்தத் தீங்கும் இல்லாத பொருட்கள் சேர்க்கப் படும் வரை எதையும் குடிக்கலாம் தானே என்ற எண்ணமென நினைக்கிறேன். ஆனால், குடி நீர் குடிக்கிறோம் என்று தடுப்பூசி எடுக்காமல் திரிவது ஆபத்து.

மூலிகைகளுக்குத் தட்டுப் பாடு வந்தால், கண்டதையும் பரியாரி மாற்றீடாகப் போட்டு அவித்தால் சுமேக்கு நடந்தது போல ஈரல் பாதிப்பு வரலாம். பொதுவாக மூலிகைப் பாணிகளுக்கு GMP தரக்கட்டுபாடுகள் பார்க்கப் படுவதில்லையென்பதால் இந்த ஆபத்து இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நேரத்தில் மிகவும் தேவையான, சிறப்பான பதிவு. இதைவிட மாட்டு முத்திரம், மாட்டு சாணம், ராமதேவ் பாபா வின் Coronil என்று  வடஇந்தியா களைகட்டுது.
நாங்கள் பேராதனையில் இருந்த காலத்தில், கரடித்தைலம்  போட்டால் முடி வளரும் அல்லது கொட்டுவது நின்று விடும்  என்று யாரோ ஒருத்தன் புரளியை கிளம்பிவிட, பொலநறுவையில் இருந்து அதை எடுத்து கொண்டு வா என்று அங்கிருந்து வந்த ஒருவனுக்கு நிறைய பிரஷர் போனது. 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நீர்வேலியான் said:

நாங்கள் பேராதனையில் இருந்த காலத்தில், கரடித்தைலம்  போட்டால் முடி வளரும் அல்லது கொட்டுவது நின்று விடும்  என்று யாரோ ஒருத்தன் புரளியை கிளம்பிவிட, பொலநறுவையில் இருந்து அதை எடுத்து கொண்டு வா என்று அங்கிருந்து வந்த ஒருவனுக்கு நிறைய பிரஷர் போனது. 

கருணாசேனா ஜயலத்தின் சிங்கள நாவல் ஒன்று தம்பிஐயா தேவதாஸ் அவர்களால் “நெஞ்சில் ஒரு இரகசியம்” என வீரகேசரி பிரசுரமாக வந்தது. அந்த நாவல் என்ன கதை என்று மறந்தாலும் அதில் வந்த கரடித் தைலம் பாவித்தால் முடிவளரும் என்ற விசயம் மட்டும் நல்ல ஞாபகம் உள்ளது😂

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, நீர்வேலியான் said:

இந்த நேரத்தில் மிகவும் தேவையான, சிறப்பான பதிவு. இதைவிட மாட்டு முத்திரம், மாட்டு சாணம், ராமதேவ் பாபா வின் Coronil என்று  வடஇந்தியா களைகட்டுது.
நாங்கள் பேராதனையில் இருந்த காலத்தில், கரடித்தைலம்  போட்டால் முடி வளரும் அல்லது கொட்டுவது நின்று விடும்  என்று யாரோ ஒருத்தன் புரளியை கிளம்பிவிட, பொலநறுவையில் இருந்து அதை எடுத்து கொண்டு வா என்று அங்கிருந்து வந்த ஒருவனுக்கு நிறைய பிரஷர் போனது. 

இதுதான் “கரடி விடுதல்” போலும்🤣.

மிக அழகான சூழல் பேரா பல்கலை. அங்கே படிக்கவில்லை என்ற ஏக்கம் இப்போதும் உண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நீர்வேலியான் said:

இந்த நேரத்தில் மிகவும் தேவையான, சிறப்பான பதிவு. இதைவிட மாட்டு முத்திரம், மாட்டு சாணம், ராமதேவ் பாபா வின் Coronil என்று  வடஇந்தியா களைகட்டுது.
நாங்கள் பேராதனையில் இருந்த காலத்தில், கரடித்தைலம்  போட்டால் முடி வளரும் அல்லது கொட்டுவது நின்று விடும்  என்று யாரோ ஒருத்தன் புரளியை கிளம்பிவிட, பொலநறுவையில் இருந்து அதை எடுத்து கொண்டு வா என்று அங்கிருந்து வந்த ஒருவனுக்கு நிறைய பிரஷர் போனது. 

ஆம், நீர்வேலியான். யாழிலேயே சில கட்டுரைகள் இணைக்கப் பட்டிருக்கின்றன (நிர்வாகத்தால் அகற்றப் பட்டிருக்கின்றன அனேகமானவை). ஆட்டு மூளை சாப்பிட்டால் மூளைக்கு நல்லது, ஆட்டு விதை சாப்பிட்டால் ஆண்மைக்கு நல்லது இப்படி.. நீளமாக உங்கள் உறுப்பைப் பலப் படுத்த அதே உறுப்பைச் சாப்பிட வேண்டுமென்று சொல்லும் போலி மருத்துவ கட்டுரைகள். இவற்றைத் தனித்தனியாக மறுப்பது நேர விரயம் - எனவே இது போன்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி மக்களை விழிப்புணர்வூட்ட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

இதுதான் “கரடி விடுதல்” போலும்🤣.

மிக அழகான சூழல் பேரா பல்கலை. அங்கே படிக்கவில்லை என்ற ஏக்கம் இப்போதும் உண்டு.

ஆம்  பேராதனையில் இருந்த காலங்கள் மறக்கமுடியாதவை, அப்பொழுது தமிழர்களும் நிறைய அங்கு படித்தார்கள்   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.