Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிஷோர் கே.சாமி மீது ரோகிணி போலீஸ் புகார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தன்னைப் பற்றியும் மறைந்த தன் கணவர் ரகுவரன் குறித்தும் அவதூறாக பதிவிட்டதாக கிஷோர் கே. சுவாமி என்பவர் மீது சென்னை நகரக் காவல்துறையில் திரைக்கலைஞர் ரோகிணி புகார் அளித்துள்ளார்.

ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் தொடர்ந்து எழுதி வந்த கிஷோர் கே சுவாமி, பல்வேறு பெண் பத்திரிகையாளர்கள் குறித்தும் அரசியல் தலைவர்கள் குறித்தும் ஆபாசமாகவும் அவதூறாகவும் எழுதிவந்த நிலையில், அவர் மீது பல்வேறு பத்திரிகையாளர்கள் மற்றும் பெண்கள் புகார்களை அளித்தனர். இவற்றில் சில வழக்குகளில் கைது செய்யப்பட்ட கிஷோர் கே. சுவாமி, ஜாமீனில் விடப்பட்டார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை குறித்து சில நாட்களுக்கு முன்பாக அவதூறான கருத்து ஒன்றைப் பதிவுசெய்தார். இது தொடர்பாக புகார்கள் வந்த நிலையில், அவரை சென்னை சங்கர் நகர் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்குப் பிறகு, பெண் பத்திரிகையாளர் ஒருவர் ஏற்கனவே அளித்திருந்த புகாரில் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் அவரை மீண்டும் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜூன் 30ஆம் தேதிவரை அவரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

ரோஹிணி

பட மூலாதாரம்,ROHINI

இந்த நிலையில் திரைக்கலைஞர் ரோகிணி ஆன்லைன் மூலம் சென்னை நகரக் காவல் துறையிடம் ஆன்லைனில் புகார் ஒன்றைப் பதிவுசெய்துள்ளார்.

அதில், தன்னைப் பற்றியும் மறைந்த தனது கணவர் ரகுவரன் குறித்தும் ஃபேஸ்புக்கில் அவதூறாக கிஷோர் கே சாமி எழுதியுள்ளதாக ரோகிணி புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் கீழ்ப்பாக்கம் காவல்துறைக்கு அனுப்பப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே கிஷோர் கே. சுவாமி கைது செய்யப்பட்டபோது அரசியல் தலைவர்கள் சிலர் அவருக்கு ஆதரவாகப் பதிவிட்ட நிலையில், சில வருடங்களுக்கு முன்பாக கிஷோர் பல தலைவர்களைப் பற்றி மிக இழிவாகவும் அவதூறாகவும் எழுதிய ஃபேஸ்புக் பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டுகளை முன்வைத்து சிலர் நியாயம் கேட்டனர்.

இந்தப் பதிவில்தான் ரோகிணி - ரகுவரன் தம்பதி குறித்து கிஷோர் மிக மோசமாக எழுதியிருந்தார். அதை முன்வைத்தே இப்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகை ரோஹிணிக்கும் நடிகர் ரகுவரனுக்கும் 1996ல் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ரிஷிவரன் என்ற மகன் உள்ளார். 2004ல் இந்த தம்பதி விவகாரத்து பெற்றனர். இருப்பினும் ரகுவரனின் கடைசி காலத்தில் அவருடன் சுமூகாகவே ரோஹிணி பழகி வந்தார்.

கிஷோர் கே.சாமி மீது ரோகிணி போலீஸ் புகார்: "ரகுவரன் பற்றியும் என்னைப் பற்றியும் அவதூறாக பதிவிட்டார்" - BBC News தமிழ்

  • Replies 79
  • Views 4.8k
  • Created
  • Last Reply

சமூகவலைத்தளங்களில் எதையும் எப்படியும் வரம்பு மீறி எழுதலாம், ஆபாசமாக திட்டலாம் என்பவர்களுக்கும், முக்கியமாக அரசியலில், பொது வெளியில் இருக்கும் பெண்களை பாலியல் ரீதியில் எவ்வளவு ஆபாசமகாகவும், அசிங்கமாகவும்திட்டிக் கொண்டு இருக்கும் ஒழுக்கம் கெட்டவர்களுக்கும் இவ்வாறான நடவடிக்கைகளும் முறைப்பாடுகளும் நல்ல பாடங்களை கற்பித்து கொடுக்கும் என நம்புகின்றேன். 

அனந்தியும் இந்திய தூதராலயமூடாக தன்னை ஆபாசமாக திட்டிய கோழைகளுக்கு எதிராக சரியான வழியில் முறைப்பாடு செய்தால் நல்லது.

இந்தச் செய்தியும் இதை போன்றவர்களுக்கு எதிரான செய்தி:

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

சமூகவலைத்தளங்களில் எதையும் எப்படியும் வரம்பு மீறி எழுதலாம், ஆபாசமாக திட்டலாம் என்பவர்களுக்கும், முக்கியமாக அரசியலில், பொது வெளியில் இருக்கும் பெண்களை பாலியல் ரீதியில் எவ்வளவு ஆபாசமகாகவும், அசிங்கமாகவும்திட்டிக் கொண்டு இருக்கும் ஒழுக்கம் கெட்டவர்களுக்கும் இவ்வாறான நடவடிக்கைகளும் முறைப்பாடுகளும் நல்ல பாடங்களை கற்பித்து கொடுக்கும் என நம்புகின்றேன். 

அனந்தியும் இந்திய தூதராலயமூடாக தன்னை ஆபாசமாக திட்டிய கோழைகளுக்கு எதிராக சரியான வழியில் முறைப்பாடு செய்தால் நல்லது.

இந்தச் செய்தியும் இதை போன்றவர்களுக்கு எதிரான செய்தி:

 

நீங்கள், எதனை, எதனூடு முடிச்சு போடுகிறீர்கள்?

உதாரணமாக, நான் உங்களை, இங்கிருந்து நீங்கள் காதை பொத்துற மாதிரி வீடியோ போட்டு திட்டினால், சுந்தர் பிச்சைக்கு சொல்லுவீர்களா அல்லது, பஸ்சை பிடித்து ஒட்டாவா போய், பிரித்தானிய தூதரகத்திடம் முறையிடுவீர்களா? சொல்லுங்கோ, நிழலி...சொல்லுங்கோ? 

விடியோவை யாழ்பாணத்திலை போன இடத்திலை, போட்டு இருந்தால், என்ன செய்வீர்கள்?

சரி, திட்டுறதுக்கு எண்டு பக்கவாத்தியம் மியூசிக், ஜெர்மினியிலை இருந்து வந்திருந்தால், ஜேர்மன் எம்பசிக்குமெல்லே போகோணும்.

IT யில் இருக்கும் உங்களிடம், இதனை எதிர்பார்க்கவில்லை.

youtube ரிப்போர்ட் பண்ணும் வசதிகள் உண்டு.

அரசியலை ஒருபக்கமாக வைத்து விடுங்கள். (இருந்தாலும் ஒரு குறிப்பு: திட்டியவர் சிங்கப்பூர், திட்டு வாங்க கூடிய அளவில், இந்திய அரசியல் வாதியின் தனிப்பட்ட வாழ்வினை தொட்டவர், இலங்கை, ஊடகம் அமெரிக்கா. இதுக்கு, இந்திய தூதரகம் என்ன செய்யலாம் என்று யோசிக்கவில்லையா?)

இந்திய தூதரகம் இப்ப, சம்பந்தரோடை வலு பிஸி. உதே அவயலுக்கு தலை போற பிரச்சனையாக இருக்கும்.

youtube என்பது ஒரு அமெரிக்க ஊடகம். நமக்கு கேடு கெட்ட  வார்த்தைகளாக தெரிபவை, அங்கே, சாதாரண விடயம். இது உங்களுக்கு புரியாததல்ல.

இந்த மதன் சிக்கலுக்குள்ளான ஒரே விசயம்: அவரது சேனலுக்கு சிறுபிள்ளைகளை வரவழைத்து ஆபாசமாக பேசினார் என்பதை.

சிறுபிள்ளைகள் என்ற விசயம் youtube கரிசனைகள் கொள்ளலாம். ஆனாலும், மதன் விடயத்தில், இந்திய நீதிமன்றம் அதனை தண்டித்தால் மட்டுமே சானலை முடக்கும்.

மதன், சாட்டை, சுந்தரவள்ளி, பழனி அனைத்துமே, youtube பொறுத்தளவில் பணம் காய்க்கும் மரங்கள். 

நீங்களும், நானும் ஒருவரை ஒருவர் திட்டி வீடியோ போட்டால், அதனை சனம் விழுந்து, விழுந்து பார்க்குது எண்டால், விசயம் என்ன தெரியுமா? நானும், நீங்களும், பிசினஸ் ஐடியா போட்டு, இந்த வேலை இல்லாத, விடுப்பு பார்க்கும் சனத்தின் நேரத்தில் பணம் சம்பாதிக்க,  அலுவல் பார்க்கிறோம். 

இது புரிந்தால், இந்த youtube வீடியோ போட்டு, சம்பாதிக்கலாமே, எதுக்கு, it வேலை, வரி, டென்ஷன் என்று யோசிக்க தொடங்கி விடுவீர்கள்.

மேலும், இந்த மதனுக்கும் மனைவிக்கும், ஆளுக்கொரு BMW கார்கள், இரண்டு வீடுகள்.... அவர்களது மாத வருமானம் 6 லட்சம் இந்திய ரூபா. இது போலீஸ் கணிப்பு.

ஆனாலும், சிறைக்கு போனாலும், வரி கட்டுவதால், முதல் வகுப்பு.  

Edited by Nathamuni

36 minutes ago, Nathamuni said:

நீங்கள், எதனை, எதனூடு முடிச்சு போடுகிறீர்கள்?

உதாரணமாக, நான் உங்களை, இங்கிருந்து நீங்கள் காதை பொத்துற மாதிரி வீடியோ போட்டு 

 

ஆபாசமாக திட்டியவர் மீது ரோகிணி புகார் கொடுத்தது போன்று அனந்தியை ஆபாசமாக திட்டியவர் மீது புகார் கொடுக்க சொல்வது எப்படி தொடர்பில்லாமல் தெரிகின்றது உங்களுக்கு? அனந்தியை திட்டி படு ஆபாசமாக பேசியவர்கள் தமிழகத்திலும் உள்ளனர். (அல்லது சிங்கபூர் ஆள் திட்டியது மட்டும்தான் நீங்கள் அறிந்ததாக இருக்கலாம்) தமிழகம் இந்தியாவில் இருப்பதால் இந்திய தூதரகத்தின் மூலம் புகார் கொடுக்க சொல்லும் போது உங்களுக்கு ஏன் அது தவறாக தெரிகின்றது.

36 minutes ago, Nathamuni said:

 

 

youtube ரிப்போர்ட் பண்ணும் வசதிகள் உண்டு.

 


நான் யுடீயூப் இற்கு சென்று முறையிடச் சொல்லவில்லை. ஆபாசமாக திட்டியவர் மீது நடவடிக்கை எடுக்கத்தான் சொல்கின்றேன். சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக தனி நபர்களின் படங்களை தரவேற்றுகின்றவர்களில் இரந்து தரங்கெட்ட வகைகளில் பதிவுகள் போடுகின்றவர்கள் வரைக்கு நடவடிக்கை எடுப்பது Cyber crime பிரிவு. அங்கு தான் புகார் கொடுப்பது. சமூகவலைத்தளங்களின் CEO விடம் அல்ல

 

36 minutes ago, Nathamuni said:

 

IT யில் இருக்கும் உங்களிடம், இதனை எதிர்பார்க்கவில்லை.

 

 

உங்களுக்கு என்  IT துறை பற்றிய புரிதலும் இல்லை, சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக பேசுகின்றவர்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுப்பது பற்றிய புரிதலும் இல்லை. ஆனால் இவ்வாறு எதிலும் ஒரு தெளிவான புரிதல் இல்லாமல் மற்றவர்களின் தொழில்களை கருத்துகளில் இழுத்து கருத்தாடுவது ஒன்றும் உங்களுக்கு புதுதும் இல்லை.

Edited by நிழலி
ஒரு வரி சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்

இதிலும்விட மிகவும் கீழ்த்தரமாக இங்கே யாழ் களத்தில் நடக்கிறது 
முதலில் நாம் அதனை தடுப்போம் பின்பு தூரகங்களுக்கு மனு கொடுப்போம் 

1 minute ago, Maruthankerny said:

இதிலும்விட மிகவும் கீழ்த்தரமாக இங்கே யாழ் களத்தில் நடக்கிறது 
முதலில் நாம் அதனை தடுப்போம் பின்பு தூரகங்களுக்கு மனு கொடுப்போம் 

இவ்வாறு சாதாரணமாக நீங்கள் சொல்லிவிட்டு இருக்க முடியாது.

யாழில் எங்கே எந்த இடத்தில் எவரை ஆபாசமாக திட்டியோ, பாலியல் ரீதியில் கொச்சைப்படுத்தியோ அல்லது அனாகரீகமாக தரங்கெட்டு திட்டியோ அது இன்றும் மறைக்கப்படாமல் உள்ளது எனக் காட்டவும். இதை ஒரு சவாலாகவே சொல்கின்றேன். ஒரு பதிவையாவது காட்டவும்

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, என்னாச்சு, கோவிக்கிறீர்கள்?

IT யில் இருப்பவர்களுக்கு லாஜிக் முக்கியம் என்பதனை சொல்லவே, அவ்வாறு சொன்னேன். உங்கள் தொழிலை இழுத்து நக்கல் அடிக்க அல்ல என்பதும் உங்களுக்கு புரியும்.

முதலில், அடிப்படை விடயம் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.

ரோகினி, இப்போது முறைப்பாடு செய்ய போனது அரசியல் தூண்டுதல் காரணமாக. அவர் சம்பந்தமான பேச்சினை, இந்த மனிதர் கிசோர் செய்தது, அதிமுக காலத்தில்.

அதுவே சாட்டை துரைமுருகனுக்கும் நடக்கிறது.

இது நீதிமன்றில் நில்லாது. கருத்து சுதந்திரம் என்றே முடியும். இதுவும் உங்களுக்கு புரியாதது அல்ல.

அரசியல் வேண்டாம் என்றேன். இருந்தாலும் பெயர் குறிப்பிடாமல் சொல்கிறேன். ஐயன் கார்த்திகேயன் தனது சேனலை வளர்க்க, இலங்கையில், வீட்டில் இருக்கும் பெண்மணியின் வாயை கிளற, அதுக்கு சிங்கப்பூரில் இருந்து ஒருத்தர் பதிலை போட, அதனை முறைப்பாடு எடுத்து, டெல்லிக்கு அனுப்பி, இந்திய அரசும், சிங்கப்பூர் அரசும், இலங்கை அரசும் ராஜதந்திர வேலைகள் செய்து, தீர்வு காணவேண்டும் என்கிறீர்களா? இந்திய தூதரகத்துக்கு, இதுவா வேலை? 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

இவ்வாறு சாதாரணமாக நீங்கள் சொல்லிவிட்டு இருக்க முடியாது.

யாழில் எங்கே எந்த இடத்தில் எவரை ஆபாசமாக திட்டியோ, பாலியல் ரீதியில் கொச்சைப்படுத்தியோ அல்லது அனாகரீகமாக தரங்கெட்டு திட்டியோ அது இன்றும் மறைக்கப்படாமல் உள்ளது எனக் காட்டவும். இதை ஒரு சவாலாகவே சொல்கின்றேன். ஒரு பதிவையாவது காட்டவும்

ஆபாசமாக திட்டியோ

பாலியல் ரீதியில் கொச்சைப்படுத்தியோ

அனாகரீகமாக தரங்கெட்டு திட்டியோ

இவற்றை செய்பவர்களின் நோக்கம் என்ன?
அதே நோக்கத்தை இந்த மூன்றையும் தவிர்த்து செய்தால் தகுமா? 

Abusive என்பது எந்த வடிவம் எடுத்தாலும் அது களையப்பட வேண்டும்.
Abuse  செய்பவர்களின் நோக்கமே இன்னொருவரை துன்புறுத்துவதுதான் 
பிஸிக்கல் ரீதியாக செய்ய பலம் இல்லாதபோது வார்த்தை பிரயோகமாக செய்கிறார்கள். 

போராளிகள் மீது பரப்பப்படும் அவதூறுகள் என்ன நோக்கில் இருக்கிறது?
புலிகள் இன்னாரை சுட்டிருந்தால் இவரை புலிகள் சுட்டார்கள் என்பதுக்கும் 
றோட்டில் போனவர்களை புலிகள் சுட்டார்கள் எண்பதுக்கும் இடையில் 
என்ன ரீதியான மனப்பாங்கு இருக்கிறது?

 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நிழலி said:

இவ்வாறு சாதாரணமாக நீங்கள் சொல்லிவிட்டு இருக்க முடியாது.

யாழில் எங்கே எந்த இடத்தில் எவரை ஆபாசமாக திட்டியோ, பாலியல் ரீதியில் கொச்சைப்படுத்தியோ அல்லது அனாகரீகமாக தரங்கெட்டு திட்டியோ அது இன்றும் மறைக்கப்படாமல் உள்ளது எனக் காட்டவும். இதை ஒரு சவாலாகவே சொல்கின்றேன். ஒரு பதிவையாவது காட்டவும்

அதுக்கு தான் நாம் நிர்வாகத்தினை சார்ந்து இருக்கிறோம். 

முதலில், யூடியூபில் முறைப்பாடு கொடுக்கவேண்டும். சைபர் கிரைம் என்பது, ஒருவரை ஏமாத்தினால், மோசடி செய்தால் மட்டுமே கண்டு கொள்ளும். மேலும், சிறுவர், சிறுமியர் பாலியல் வக்கிரகம், யூடியூபில் ஏத்த முடியாது. 

உதாரணமாக, MGR பாட்டு ஒன்றினை 10 செக்கனுக்கு மேல் போட்டாலே, யூடூப்பில், இது ஏத்த முடியாது (copy rights) என்று சொல்லி விடும். அவ்வளவு கண்டிப்பாக சிஸ்டத்தினை வைத்து உள்ளனர்.

சும்மா, அவன் என்னை திட்டினான், பேசினான் என்று போய் நின்றால், அதனை தீர்க்க அவர்களுக்கு (சைபர் கிரைம்) நேரமோ, ஆட்களோ கிடையாது. 


 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

 

மேலும், இந்த மதனுக்கும் மனைவிக்கும், ஆளுக்கொரு BMW கார்கள், இரண்டு வீடுகள்.... அவர்களது மாத வருமானம் 6 லட்சம் இந்திய ரூபா. இது போலீஸ் கணிப்பு.

ஆனாலும், சிறைக்கு போனாலும், வரி கட்டுவதால், முதல் வகுப்பு.  

பையன் மனைவியை பக்கவா வித்து இருக்கிறான் 
என்ன என்ன மாதிரி எல்லாம் உழைக்கிறது உலகம் 

2 minutes ago, Nathamuni said:

 

சும்மா, அவன் என்னை திட்டினான், பேசினான் என்று போய் நின்றால், அதனை தீர்க்க அவர்களுக்கு நேரமோ, ஆட்களோ கிடையாது. 


 

அந்த சனியன் பிடிச்ச கொம்பனியில் இப்போது ஆட்களே கிடையாதுபோலவே இருக்கிறது 
எல்லாம் கொம்ப்யூட்டர்தான்.

நான் யாரோ இணைத்த வீடியோவை நேரம் இண்மையால் பின்பு பார்ப்பதற்காக 
எனது லிஸ்ட்டில் சேர்த்து இருந்தேன் 

அது பயங்கரவாதம் சார்ந்தது என்று என்னை மூன்று மாதம் தடை விதித்து வைத்து இருந்தது 
ஆனால் அப்பீல் பண்ண முடியும் என்று வரும் ... நீங்கள் எழுதலாம் அனால் அந்த சைடில் யாரும் வாசிப்பதில்லை. தடை தடைதான் 
 

5 minutes ago, Maruthankerny said:

ஆபாசமாக திட்டியோ

பாலியல் ரீதியில் கொச்சைப்படுத்தியோ

அனாகரீகமாக தரங்கெட்டு திட்டியோ

இவற்றை செய்பவர்களின் நோக்கம் என்ன?
அதே நோக்கத்தை இந்த மூன்றையும் தவிர்த்து செய்தால் தகுமா? 

Abusive என்பது எந்த வடிவம் எடுத்தாலும் அது களையப்பட வேண்டும்.
Abuse  செய்பவர்களின் நோக்கமே இன்னொருவரை துன்புறுத்துவதுதான் 
பிஸிக்கல் ரீதியாக செய்ய பலம் இல்லாதபோது வார்த்தை பிரயோகமாக செய்கிறார்கள். 

 

இவ்வாறு இங்குள்ளவர்களை Abusive ஆக (Physical லாக அல்லது mentally யாக ) எவராவது திட்டிய கருத்து ஒன்றைக் காட்டவும். 

போராளிகளையும் அவர்களின் தியாகங்களையும் கொச்சைபடுத்துவதில் முன்னிலை வகிப்பது எது என்றால், தான் சொல்லும் கருத்துகள் வலு இழக்கும் போது அவர்களை திரிகளில் இழுத்து அவர்களின் பின்னால் தங்கள் கருத்து பஞ்சத்தை மறைப்பதும் ஆகும். இந்த பதிலில் அதைத் தான் நீங்கள் செய்கின்றீர்கள்.

நான் முதல் கேட்ட மாதிரி ஒரு பதிவை காட்டவும்.

3 hours ago, நிழலி said:

சமூகவலைத்தளங்களில் எதையும் எப்படியும் வரம்பு மீறி எழுதலாம், ஆபாசமாக திட்டலாம் என்பவர்களுக்கும், முக்கியமாக அரசியலில், பொது வெளியில் இருக்கும் பெண்களை பாலியல் ரீதியில் எவ்வளவு ஆபாசமகாகவும், அசிங்கமாகவும்திட்டிக் கொண்டு இருக்கும் ஒழுக்கம் கெட்டவர்களுக்கும் இவ்வாறான நடவடிக்கைகளும் முறைப்பாடுகளும் நல்ல பாடங்களை கற்பித்து கொடுக்கும் என நம்புகின்றேன். 

அனந்தியும் இந்திய தூதராலயமூடாக தன்னை ஆபாசமாக திட்டிய கோழைகளுக்கு எதிராக சரியான வழியில் முறைப்பாடு செய்தால் நல்லது.

இந்தச் செய்தியும் இதை போன்றவர்களுக்கு எதிரான செய்தி:

 

இதை நீங்கள் ஏன் சம்பவம் நடந்த போது கூறவில்லை.( கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் எதற்கு) 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

அனந்தியும் இந்திய தூதராலயமூடாக தன்னை ஆபாசமாக திட்டிய கோழைகளுக்கு எதிராக சரியான வழியில் முறைப்பாடு செய்தால் நல்லது.

இந்திய தூதுவராலயம் எப்ப தொடக்கம் தன்ரை வேலைய  மாற்றியது .?

11 minutes ago, Nathamuni said:

அதுக்கு தான் நாம் நிர்வாகத்தினை சார்ந்து இருக்கிறோம். 

 


 

நீங்கள் நிர்வாகத்தை மட்டுமே இது தொடர்பாக சார்ந்து இருக்க தேவையில்லை.

உதாரணத்துக்கு யாழில் ஒருவர் எழுதும் கருத்து ஒன்று இன்னொருவரையோ அல்லது பொது வெளியில் இருக்கின்ற ஒருவரையோ நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஆபாசமாக, பாலியல் ரீதியில் திட்டியோ அல்லது உண்மைக்கு முற்றிலும் புறம்பாக எழுதியோ இருப்பின் அவர் யாழ் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளாமல் நேரிடையாக சைபர் குற்றங்களை கண்காணிக்கும் அதிகாரம் உள்ள ஒரு இடத்தில் முறையிட முடியும். அவர்கள் யாழில் வந்து உங்கள் விபரங்களை கேட்பின் யாழ் நிர்வாகமும் அதை மறுக்காமல் கொடுக்க வேண்டும். இது தான் இன்றைய நிலையில் உள்ள சட்டம். இவற்றுக்கு கட்டுப்பட்டுத்தான் யாழ் மற்றும் ஏனையை ஆரோக்கியமான தளங்கள் இயங்குகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

இவ்வாறு இங்குள்ளவர்களை Abusive ஆக (Physical லாக அல்லது mentally யாக ) எவராவது திட்டிய கருத்து ஒன்றைக் காட்டவும். 

போராளிகளையும் அவர்களின் தியாகங்களையும் கொச்சைபடுத்துவதில் முன்னிலை வகிப்பது எது என்றால், தான் சொல்லும் கருத்துகள் வலு இழக்கும் போது அவர்களை திரிகளில் இழுத்து அவர்களின் பின்னால் தங்கள் கருத்து பஞ்சத்தை மறைப்பதும் ஆகும். இந்த பதிலில் அதைத் தான் நீங்கள் செய்கின்றீர்கள்.

நான் முதல் கேட்ட மாதிரி ஒரு பதிவை காட்டவும்.

என்ன நிழலி பகிடி விடுகிறீர்கள்?
நியானி நீங்கள் எல்லாம் வெட்டும் கருத்துக்கள் என்ன?

இப்போ இதிலேயே நீங்கள் என் மீது உங்கள் சொந்த வாரத்தை பிரோயோகம் பாவித்து 
என்னை பற்றி இல்லாதைத்தாநீ எழுதுகிறீர்கள்?
இதில் என்ன கருத்து பஞ்சம்? 

நாங்கள் இன்னும் ஒரு பாத்து கருத்து பரிமாற்றம் செய்தால் 
எப்படி இருக்கும்? 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

இவ்வாறு இங்குள்ளவர்களை Abusive ஆக (Physical லாக அல்லது mentally யாக ) எவராவது திட்டிய கருத்து ஒன்றைக் காட்டவும். 

போராளிகளையும் அவர்களின் தியாகங்களையும் கொச்சைபடுத்துவதில் முன்னிலை வகிப்பது எது என்றால், தான் சொல்லும் கருத்துகள் வலு இழக்கும் போது அவர்களை திரிகளில் இழுத்து அவர்களின் பின்னால் தங்கள் கருத்து பஞ்சத்தை மறைப்பதும் ஆகும். இந்த பதிலில் அதைத் தான் நீங்கள் செய்கின்றீர்கள்.

நான் முதல் கேட்ட மாதிரி ஒரு பதிவை காட்டவும்.

நிழலி இன்று ஏதோ அப்செட் ஆகி இருக்கிறார் என்று மட்டும் புரிகிறது.

நான் மீண்டும் சொல்கிறேன். யாராவது என்னை மோசமாக திட்டினால், முதலில் ரிப்போர்ட் பண்ணுவது நிர்வாகத்திடம். 

திட்டியவர் வாழும் நாட்டின் தூதரகத்தில் அல்ல.

அதனையே நானும் சொல்கிறேன், youtube ரிப்போர்ட் வசதி செய்து இருக்கிறது.

தமிழகத்தில் ஒரு அரசியல் தலைவர் குறித்து, தூண்டப்பட்ட ஒரு நடிகை, நேரடியாகவே, தூசனை வார்த்தைகளினால் திட்டினார். அதுகுறித்து சைபர் கிரைம் எதுவுமே செய்யவில்லை.

அதனால் தான் சொல்கிறேன், அவர்களுக்கு நேரமோ, ஆட்களோ இல்லை.

மோசடி, சமூக வலைத்தளம் ஊடாக தொடர்பாகி, பாலியல் உறவு கொண்டு, கை விடல் (பாலியல் பலாத்காரத்துக்கு சமானம்) போன்றவையே அவர்கள் விசாரணைக்கு எடுப்பார்கள்.

Just now, Maruthankerny said:

என்ன நிழலி பகிடி விடுகிறீர்கள்?
நியானி நீங்கள் எல்லாம் வெட்டும் கருத்துக்கள் என்ன?

இப்போ இதிலேயே நீங்கள் என் மீது உங்கள் சொந்த வாரத்தை பிரோயோகம் பாவித்து 
என்னை பற்றி இல்லாதைத்தாநீ எழுதுகிறீர்கள்?
இதில் என்ன கருத்து பஞ்சம்? 

நாங்கள் இன்னும் ஒரு பாத்து கருத்து பரிமாற்றம் செய்தால் 
எப்படி இருக்கும்? 

நியானியும் நானுன் வெட்டும் கருத்துகள் இவ்வாறான தரங்குறைந்த மற்றும் அனாகரீகமான தனிமனித தாக்குதல் மற்றும் யாழ் விதிகளை மீறுகின்ற கருத்துகள். 

அத்துடன் உங்களுக்கு விமர்சனத்துக்கும் ஆபாசமாக / பாலியல் ரீதியில் திட்டுவதற்கும் இடையில் இருக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் கூட தெரிகின்றது இல்லை. இதைச் சுட்டிக் காட்டுவதும் உங்கள் கருத்துகளினூடாக உங்களைப் பற்றி எழும் பிம்பம் சார்ந்து விமர்சனம் வைப்பதும் ஆபாச / தரங்கெட்ட / பாலியல் ரீதியிலான / உண்மைக்கு புறம்பான விடயங்கள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

நியானியும் நானுன் வெட்டும் கருத்துகள் இவ்வாறான தரங்குறைந்த மற்றும் அனாகரீகமான தனிமனித தாக்குதல் மற்றும் யாழ் விதிகளை மீறுகின்ற கருத்துகள். 

அத்துடன் உங்களுக்கு விமர்சனத்துக்கும் ஆபாசமாக / பாலியல் ரீதியில் திட்டுவதற்கும் இடையில் இருக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் கூட தெரிகின்றது இல்லை. இதைச் சுட்டிக் காட்டுவதும் உங்கள் கருத்துகளினூடாக உங்களைப் பற்றி எழும் பிம்பம் சார்ந்து விமர்சனம் வைப்பதும் ஆபாச / தரங்கெட்ட / பாலியல் ரீதியிலான / உண்மைக்கு புறம்பான விடயங்கள் அல்ல.

ok, cool down bro.... not a good day, it seems!!!

44 minutes ago, Maruthankerny said:

இதிலும்விட மிகவும் கீழ்த்தரமாக இங்கே யாழ் களத்தில் நடக்கிறது 
முதலில் நாம் அதனை தடுப்போம் பின்பு தூரகங்களுக்கு மனு கொடுப்போம் 

மருதங்கேணி, மீண்டும் நிர்வாக ரீதியில் கேட்கின்றேன், யாழில் நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் விதமான ஒரு கருத்தை காட்டவும். 

முக்கியமாக இங்கு சொல்லப்பட்டு இருக்கும் செய்தியில் உள்ள சம்பவத்தை விட கீழ்த்தரமான ஒரு பதிலை / பதிவைக் காட்டவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

மருதங்கேணி, மீண்டும் நிர்வாக ரீதியில் கேட்கின்றேன், யாழில் நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் விதமான ஒரு கருத்தை காட்டவும். 

டபாரெண்டு, கருத்தாளர் நிழலி, நிர்வாகத்தரா மாற ஆலய பரிபாலன சபை விடாது என்று நினைக்கிறேன்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிழலி said:

மருதங்கேணி, மீண்டும் நிர்வாக ரீதியில் கேட்கின்றேன், யாழில் நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் விதமான ஒரு கருத்தை காட்டவும். 

நீங்கள் குற்றம் நடக்கிறது 
ஆனால் மகா குற்றம் இல்லை என்கிறீர்கள்

பின்பு என்னிடம் என்ன ஆதாரம் கேட்க்கிறீர்கள்? 

இன்னொரு மனிதரை மனோரீதியாக தாக்குவது என்பதும் 
தனிமனித தாக்குதலும் ஒரே விடயம்தான் 

அண்ணளவாக "கருத்து பஞ்சம்" என்ற சொற்பிரயோகம் பாவித்து 
நீங்களே அதை நிரூபணம் ஆக்கி இருக்கிறீர்கள் 

புலிகள்மீது அவ்வாறு யாரும் எழுதுவதில்லை என்று நீங்கள் கூறவேண்டும் 
அல்லது உங்கள் பாணியில் அவை பெருத்த அவதூறு இல்லை என்று ஒரு 
வாதத்தை முன்வைக்க வேண்டும் 

அதைவிடுத்து என்மீதே ஒருவகையான சொற்பிரயோகம் பாவித்துக்கொண்டு 
என்ன ரீதியான ஆதாரத்தை எதிர்பார்க்கிறீர்கள்?

நான் தேடி இணைத்தால் 
அவை பெருத்த விடயம் இல்லை எனும்போது 
அதை தடுக்க ஏதும் வழி இருக்கிறதா? 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நிழலி said:

நியானியும் நானுன் வெட்டும் கருத்துகள் இவ்வாறான தரங்குறைந்த மற்றும் அனாகரீகமான தனிமனித தாக்குதல் மற்றும் யாழ் விதிகளை மீறுகின்ற கருத்துகள். 

தெலுங்குவந்தேறி என்று தலையங்கம் போடலாம் தனிப்பட்டவர்கள் எழுதினால் பிழை என்கிறீர்கள் அது பக்க சார்பானதுதானே ?

எனக்கு புள்ளி வழங்கியது அந்த அடிப்படையிலே நீங்களே அனுமதி கண்டும் காணாமல் விடுவியல்  நான் எழுதினால் மட்டும் குத்துமாக்கும் ?

3 minutes ago, பெருமாள் said:

தெலுங்குவந்தேறி என்று தலையங்கம் போடலாம் தனிப்பட்டவர்கள் எழுதினால் பிழை என்கிறீர்கள் அது பக்க சார்பானதுதானே ?

இவ்வாறு தெலுங்கர்களை வந்தேறிகள் என்று அவமானப்படுத்தும் அல்லது எந்த இனக் குழுமத்தையும் அவமானப்படுத்தும் கீழ்த்தரமான தலைப்புகளை நாங்கள் அனுமதிப்பதில்லை. அப்படி எங்கள் கண்களில் அகப்படாமல், தவறு என்று தெரிந்தும் எவரும் முறையிடாமல் இருக்கும் ஒரு பதிவை / பதிவுகளைக் காட்டவும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

தெலுங்குவந்தேறி என்று தலையங்கம் போடலாம் தனிப்பட்டவர்கள் எழுதினால் பிழை என்கிறீர்கள் அது பக்க சார்பானதுதானே ?

என்ன பெரும்ஸ்,

இதில கோஷான இழுத்து விட்டு நிழலியோட சேத்து ரெண்டு சாத்து, சாத்துற எண்ணம் போல🤣.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நிழலி said:

நீங்கள் நிர்வாகத்தை மட்டுமே இது தொடர்பாக சார்ந்து இருக்க தேவையில்லை.

உதாரணத்துக்கு யாழில் ஒருவர் எழுதும் கருத்து ஒன்று இன்னொருவரையோ அல்லது பொது வெளியில் இருக்கின்ற ஒருவரையோ நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஆபாசமாக, பாலியல் ரீதியில் திட்டியோ அல்லது உண்மைக்கு முற்றிலும் புறம்பாக எழுதியோ இருப்பின் அவர் யாழ் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளாமல் நேரிடையாக சைபர் குற்றங்களை கண்காணிக்கும் அதிகாரம் உள்ள ஒரு இடத்தில் முறையிட முடியும். அவர்கள் யாழில் வந்து உங்கள் விபரங்களை கேட்பின் யாழ் நிர்வாகமும் அதை மறுக்காமல் கொடுக்க வேண்டும். இது தான் இன்றைய நிலையில் உள்ள சட்டம். இவற்றுக்கு கட்டுப்பட்டுத்தான் யாழ் மற்றும் ஏனையை ஆரோக்கியமான தளங்கள் இயங்குகின்றன.

நீங்கள் சைபர் குற்றங்கள் குறித்து தவறாக புரிந்து கொண்டுளீர்கள் என்று நினைக்கிறேன்.

மீண்டும் சொல்கிறேன், நான் உங்களை, ஆபாசமாக திட்டினேன் என்று நீங்கள் நினைத்தால், போக வேண்டியது, போலீஸ் அல்ல, புரோகிராசியர்.

மான நஷ்ட வழக்கு போடு அவன் மேலே என்று சொல்வீர்கள்.

நான் பெரிய வியாபார பிஸ்தா, ஒரு 10,000 டொலர் தாருங்கள், ஒரே மாதத்தில் 100,000 மாக திருப்பி தருவேன் வ்ந்தரு சொல்லி விட்டு, பணத்துடன் ஓடி விட்டால், போக வேண்டியது போலீஸ், புரோகிராசியர் அல்ல.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.