Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில், விவசாயப் பண்ணைகள்... படையினர் வசமிருப்பது உண்மையே – சமல் ராஜபக்ஷ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் விவசாயப் பண்ணைகள் படையினர் வசமிருப்பது உண்மையே – சமல் ராஜபக்ஷ

வடக்கில், விவசாயப் பண்ணைகள்... படையினர் வசமிருப்பது உண்மையே – சமல் ராஜபக்ஷ

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பல விவசாய பண்ணைகளை சிவில் பாதுகாப்பு படையணி நடத்தி வருவது உண்மையே என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது உரையாற்றிய அவர், நாட்டுக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்குவதே இதன் பிரதான நோக்கம் என கூறினார்.

வடக்கு மாகாணத்தில் பாதுகாப்பு படைகளின் கீழ் இயங்கும் விவசாய பண்ணைகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், மன்னார் மாவட்டத்தில் வெள்ளம்குலம் பிரதேசத்தில் உள்ள நூறு ஏக்கர் நிலப்பரப்பில் இலங்கை இராணுவம் விவசாய பண்ணைகளை நடத்தி வருவதாக கூறினார்.

மேலும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதே இதன் நோக்கமெனவும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார். (நன்றி கேசரி)

https://athavannews.com/2021/1232485

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதே இதன் நோக்கமெனவும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

A.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் காணிகளை பறிப்பதற்கான  நொண்டிச்சாட்டு.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

இதற்கு பதிலளித்த அமைச்சர், மன்னார் மாவட்டத்தில் வெள்ளம்குலம் பிரதேசத்தில் உள்ள நூறு ஏக்கர் நிலப்பரப்பில் இலங்கை இராணுவம் விவசாய பண்ணைகளை நடத்தி வருவதாக கூறினார்.

ஏன் மக்களுக்கு விவசாயம் செய்யத் தெரியாதோ? அவர்களது காணியை அவர்களிடம் ஒப்படையுங்கள். அவர்களது காணியில் உங்களுக்கு என்ன பண்ணை வேண்டிக்கிடக்கு? மகாவலியில் போய் பண்ணையை நடத்துங்கள்.  யஸ்மின் சூகாவுக்கு எங்கள் மட்டில் உள்ள அக்கறை கூட நம்ம தலைமைகளுக்கு இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

ஏன் மக்களுக்கு விவசாயம் செய்யத் தெரியாதோ? அவர்களது காணியை அவர்களிடம் ஒப்படையுங்கள். அவர்களது காணியில் உங்களுக்கு என்ன பண்ணை வேண்டிக்கிடக்கு? மகாவலியில் போய் பண்ணையை நடத்துங்கள்.  யஸ்மின் சூகாவுக்கு எங்கள் மட்டில் உள்ள அக்கறை கூட நம்ம தலைமைகளுக்கு இல்லை.

எங்களுடைய தலைமைகள்…. அரசாங்கத்திடம் பல சலுகைகளைப் பெற்று விட்டு,

அமுசடக்கி கள்ளர் மாதிரி… பம்மிக் கொண்டு இருக்கிறார்கள். 

1 hour ago, satan said:

ஏன் மக்களுக்கு விவசாயம் செய்யத் தெரியாதோ? அவர்களது காணியை அவர்களிடம் ஒப்படையுங்கள். அவர்களது காணியில் உங்களுக்கு என்ன பண்ணை வேண்டிக்கிடக்கு? மகாவலியில் போய் பண்ணையை நடத்துங்கள்.  யஸ்மின் சூகாவுக்கு எங்கள் மட்டில் உள்ள அக்கறை கூட நம்ம தலைமைகளுக்கு இல்லை.

 

1 hour ago, தமிழ் சிறி said:

எங்களுடைய தலைமைகள்…. அரசாங்கத்திடம் பல சலுகைகளைப் பெற்று விட்டு,

அமுசடக்கி கள்ளர் மாதிரி… பம்மிக் கொண்டு இருக்கிறார்கள். 


இதை வாசித்துப் பாருங்கள்; எங்கள் தமிழ் தலைமைகளும் மக்களும் எந்தளவுக்கு பொறுப்பற்று உள்ளார்கள் என்று அறிய 

 

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இப்ப தமிழ் மக்களுக்கு தலைமை என்று ஒன்று உள்ளதா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

இதை வாசித்துப் பாருங்கள்; எங்கள் தமிழ் தலைமைகளும் மக்களும் எந்தளவுக்கு பொறுப்பற்று உள்ளார்கள் என்று அறிய 

 

எமது அரசியல் வாதிகளின்  பொறுப்பற்ற தன்மையை,
மிக விரக்தியுடன் எழுதிய கட்டுரை, நிழலி.

இப்படிப் பட்ட அரசியல் வாதிகள்... தம்மால் முடியாவிட்டால்,
அரசியலில் இருந்து, ஒதுங்கி     இருக்காமல், 
என்ன இழவுக்கு தேர்தலில் போட்டியிட்டு...
ஈழத் தமிழ் இனத்தை... சொல்ல முடியாத துன்பத்துக்கு, 
ஆளாக்குகின்றார்களோ தெரியவில்லை.

7 hours ago, நிழலி said:

 


இதை வாசித்துப் பாருங்கள்; எங்கள் தமிழ் தலைமைகளும் மக்களும் எந்தளவுக்கு பொறுப்பற்று உள்ளார்கள் என்று அறிய 

 

எங்களது அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சணைகளுக்கு எல்லாம் காரணம் வெளியார்கள் (சிங்களவர்கள்/மேற்குலகம்/எமது அரசியல்வாதிகள்) என்று சிந்திக்கும் தன்மை எம்மிடையே நன்றாக வேரூன்றிவிட்டது. நாம் ஒரு தனிமனிதனாக அல்லது ஒரு சமூதாயமாக எமக்கு எம்மைச் சுற்றி நடக்கும் விடயங்களுக்கு நாம் ஒரு பக்குவம் மிக்க ஒரு சமூதாயமாக பொறுப்பெடுக்கத் தொடங்கும்போதே எமக்கான தீர்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக வரத்தொடங்கும். 

அதுவரை நாம் வெள்ளி பார்க்கும் கூட்டமாக இருந்து புழுங்கிக் கொண்டு இருக்வேண்டியதுதான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.