Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீசபாரத்தினத்தை விடுதலைப் புலிகளே கொன்றனர் - செல்வம் அடைக்கலநாதன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீசபாரத்தினத்தை விடுதலைப் புலிகளே கொன்றனர் - செல்வம் அடைக்கலநாதன்

ஸ்ரீசபாரத்தினத்தினை விடுதலைப்புலிகளே கொன்றனர்.  வடுக்கள் எமது மனங்களில் இருந்தாலும், தேசத்தின் விடுதலைக்காக விடுதலைப் புலிகளுடன் இணைந்து பணியாற்றினோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.  

ரெலோ அமைப்பின் தலைவரை கொன்றது யார் என்பதை வெளிப்படுத்த முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் பாராளுமன்றில் நேற்று கேள்வி எழுப்பியிருந்தார். 

இது தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  தொடர்ந்து தெரிவித்த அவர்,

நாங்கள் பகிரங்கமாகவே சொல்லி வந்திருக்கின்றோம். அது ஒரு சகோதரப் படுகொலை. விடுதலைப் புலிகள் தான் எமது ரெலோ இயக்கத்தின் தலைவரான ஸ்ரீசபாரத்தினத்தினை கொலை செய்தார்கள். இது உலகறிந்த உண்மை.

பாராளுமன்ற உறுப்பினர் திலீபனுக்கு புதிதாக சொல்ல வேண்டிய தேவை ஒன்றுமில்லை. நாங்கள் ஏற்கனவே அதனை சொல்லியிருந்தோம். 

விடுதலைப் புலிகள் இருக்கின்ற போதும் நாங்கள் வெளிப்படையாக சொல்லியிருக்கின்றோம். உண்மையை நாம் மறக்க முடியாது. இதனை நாம் வெட்ட வெளிச்சமாக சொல்லிக் கொள்கின்றோம்.

வடுக்கள் எமது மனங்களில் இருந்தாலும் இந்த தேசத்தின் விடுதலைக்காக நாங்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து பணியாற்றினோம். 

இதேவேளை போராட்டத்தின் உச்சகட்டத்தில் இலங்கை அரசாங்கம் போராடிக்கொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸ் விடயத்தில்  கடந்த காலங்களில் இந்த அரசாங்கம் மெத்தனப்போக்கினை காட்டியமையினாலேயே இந்த நிலமை உருவாகியுள்ளது.

மக்களை பாதுகாப்பதில் இருந்து அவர்கள் தவறியிருக்கின்றனர். வைரஸை தடுப்பதற்காக களனிப்பாலத்தில் முட்டிகளை போட்டு மூடநம்பிக்கைகளை கொண்டுள்ளவர்களை இந்த அரசாங்கம் அமைச்சர்களாக வைத்துள்ளது. 

எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் மெத்தனப்போக்கினையே காட்டி வருகின்கறது.

வெள்ளைவான் கடத்தல் சம்பவங்கள் வடக்கில் நடக்கும் போது தென்னிலங்கையில் வாய்மூடி மௌனிகளாக இருந்தார்கள். ஆனால் இன்று தென் இலங்கையில் வெள்ளைவான் கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றது. 

இவ்வாறான சம்பவங்களை யாரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது என்பது எனது கருத்து என்றார். 
 

https://www.tamilmirror.lk/செய்திகள்/ஸ்ரீசபாரத்தினத்தை-விடுதலைப்-புலிகளே-கொன்றனர்/175-278213

 

  • கருத்துக்கள உறவுகள்

வடுக்கள் எல்லாருக்கும் இருக்குது. ஒரு பொது நோக்கமான தமிழீழத் தாயகம் மீட்பு என்ற இலக்கில் எல்லோரும் பயணித்திருந்தால்.. வடுக்களை முற்றாகத் தவிர்த்திருக்கலாம். புலிகள் என்று நோக்காமல்..தமிழீழ விடுதலைப் போராளிகள் என்று என்று நோக்கி.. அவர்களை.. கடத்தி வைச்சு பேரம் பேசி கொலை செய்திருப்பதுகளையும் எல்லாரும் தவிர்த்திருக்கலாம். 

வடுக்களுக்கு காரணம்.. வரலாற்றுத் தவறுகளே. எனியும் அதனை செய்யாமல்.. எஜமான விசுவாசங்களுக்கு முன்னுரிமை அளிக்காமல்.. மக்கள் உரிமை மண் மீட்புக்கு முன்னுரிமை அளித்து ஒற்றுமையாகப் பயணிப்பதே தேவை.. தமிழ் மக்களுக்கு. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

ஸ்ரீசபாரத்தினத்தை விடுதலைப் புலிகளே கொன்றனர் - செல்வம் அடைக்கலநாதன்

குட்டிமணி தங்கதுரையை காட்டி கொடுத்தது ஸ்ரீ என்று கதை கிளம்புதே அடைக்கலம் என்ன சொல்றார் ?

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தைக்கு வந்த புலி உறுப்பினரை கொலை செய்தது  ரெலோ தானே. அதை எப்படி அடைக்கலம் மறைக்கிறார். இருவரும் செய்தது பிழை என காலம் கடந்தும்  அடைக்கலத்தால் உணர முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

குட்டிமணி தங்கதுரையை காட்டி கொடுத்தது ஸ்ரீ என்று கதை கிளம்புதே அடைக்கலம் என்ன சொல்றார் ?

தேசியத்தலைவர் ரெலோவிடம் தஞ்சம் அடைந்திருந்த நேரம் குட்டிமணி தங்கதுரையை அவர்தான் இரகசியமாக காட்டிக்கொடுத்தார் என்பதுதானே அறியக்கிடைத்த தகவல்? அது பழைய கதையா?

9 hours ago, nunavilan said:

பேச்சுவார்த்தைக்கு வந்த புலி உறுப்பினரை கொலை செய்தது  ரெலோ தானே. அதை எப்படி அடைக்கலம் மறைக்கிறார். இருவரும் செய்தது பிழை என காலம் கடந்தும்  அடைக்கலத்தால் உணர முடியவில்லை.

இருவரும் என்றால். …. தேசியத்தலைவரும் பிழை செய்தார் என்கிறீர்களா? இது காலம்கடந்த ஞானமல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கற்பகதரு said:

தேசியத்தலைவர் ரெலோவிடம் தஞ்சம் அடைந்திருந்த நேரம் குட்டிமணி தங்கதுரையை அவர்தான் இரகசியமாக காட்டிக்கொடுத்தார் என்பதுதானே அறியக்கிடைத்த தகவல்? அது பழைய கதையா?

ஆதாரம் இல்லை. சந்தேகப்பட்டிருக்கலாம்.

Just now, கற்பகதரு said:

இருவரும் என்றால். …. தேசியத்தலைவரும் பிழை செய்தார் என்கிறீர்களா? இது காலம்கடந்த ஞானமல்லவா?

தவறுகள் யாரும் விடலாம். தேசியத்தலைவரும் மனிதர் தானே.
என்ன ஒரு  நையாண்டியுடன் வெளிக்கிட்டு இருக்கிறீர்கள்??🙃

ஞானம் என்றால் என்ன??😄

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் டெலோவுடன் இருந்தபோது செட்டியின் தலைமையிலேயே டெலோ இயங்கியது. பெரிய சோதி , சின்ன சோதி என்பவர்கள் முடிவெடுக்கும் முக்கிய பொறுப்பில் இருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

தவறுகள் யாரும் விடலாம். தேசியத்தலைவரும் மனிதர் தானே.

பலருக்கு அவர் கடவுளாகிவிட்டார். அடுத்த நூற்றாண்டில் கோவில்களிலும் இருப்பார் போலவே தெரிகிறது. வேறு சிலர் அவரை கடவுளும் இல்லை மனிதரும் இல்லை என்கிறார்கள்.

2 hours ago, MEERA said:

தலைவர் டெலோவுடன் இருந்தபோது செட்டியின் தலைமையிலேயே டெலோ இயங்கியது. பெரிய சோதி , சின்ன சோதி என்பவர்கள் முடிவெடுக்கும் முக்கிய பொறுப்பில் இருந்தார்கள்.

இரகசியமாக காட்டிக்கொடுப்பதையெல்லாம் தலைமைப்பீடம் கலந்தாலோசித்து முடிவெடுத்து செய்வது அபூர்மானதாகவே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

ரெலோ அமைப்பின் தலைவரை கொன்றது யார் என்பதை வெளிப்படுத்த முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் பாராளுமன்றில் நேற்று கேள்வி எழுப்பியிருந்தார். 

திலீபன் ஏன் இப்போது பழைய குட்டையை  குழப்பி, யாருக்காக மீன் பிடிக்க முயற்சிக்கிறார்? அரசுடன் பேரம் பேசுகிறாரா? என்றொரு சந்தேகம் வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

தேசியத்தலைவர் ரெலோவிடம் தஞ்சம் அடைந்திருந்த நேரம் குட்டிமணி தங்கதுரையை அவர்தான் இரகசியமாக காட்டிக்கொடுத்தார் என்பதுதானே அறியக்கிடைத்த தகவல்? அது பழைய கதையா?

எதிர்த்து போராடிய சிங்களவனால் கூட தலைவர் மீது குற்றம் குறை கண்டுபிடிக்கமுடியாது புகழாரம் சூட்டுகின்றான் உங்களை போல் தடம்மாறும் காட்டிக்கொடுக்கும்  முடிவுகளை எடுப்பது இல்லை .

இதே யாழில் 2007ல் பெருமையாக உங்களின் கருத்து உங்களையார் என்று சொல்லாமல் சொல்லும் முதலில் கொண்ட கொள்கையை கடைபிடிக்க பாருங்கள் பின்பு மற்றவர்களை பற்றி ஆராயலாம் .

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.