Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரிஸ் புறநகரில் வீட்டில் தமிழ் தாயும் மகளும் சடலங்களாக மீட்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ் புறநகரில் வீட்டில் தமிழ் தாயும் மகளும் சடலங்களாக மீட்பு!

AdminAugust 10, 2021
FB_IMG_1628630086962.jpg?resize=611%2C38

பாரிஸ் 95 மாவட்டமான Val-d’Oise இல் அடங்கும் Saint-Ouen-l’Aumône என்ற இடத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 52 வயதான தாய் , 21 வயதான மகள் இருவரது சடலங்களும் இன்று காலை பொலீஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டில் மிகவும் அதிர்ச்சியுற்ற நிலையில் காணப்பட்ட தந்தையும் இரண்டு ஆண் பிள்ளைகளும் பொலீஸாரால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று முதலில் வெளியாகிய தகவல்கள் தெரிவித்தன.

புலம்பெயர்ந்து வசிக்கின்ற தமிழ் குடும்பத்தினரது வீட்டிலேயே இந்தக் கொலைகள் நிகழ்ந்துள்ளன. கொலையுண்டவர்களது பெயர் மற்றும் மேலதிக விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.

வேலை முடிந்து இன்று காலை வீடு திரும்பிய தந்தையார் மனைவியும் மகளும் வீட்டு அறையில் கூரிய ஆயுதத்தால் ஏற்பட்ட காயங்களுடன் சடலமாகக் கிடப்பதைக் கண்டார் என்று கூறப்படுகிறது. அயலவர்களால் அவசர மீட்புப் பிரிவிவினரும் பொலீஸாரும் அங்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வருகை தந்த சமயம் தந்தையாரும் அவரது இரண்டு புதல்வர்களும் மிகவும் அதிர்ச்சியுற்றவர்களாகக் காணப்பட்டனர் என்றும் பின்னர் அவசர முதலுதவிப் பிரிவினரால் மூவரும் பொலீஸ் பாதுகாப்புடன் பொந்துவாஸ் மருத்துவமனைக்குக் (centre hospitalier
René-Dubos de Pontoise) கொண்டு செல்லப்பட்டனர் என்றும் உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

மூவரும் அதிர்ச்சியுற்ற காரணத்தால் வீட்டில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை விசாரணை மூலம் உடனடியாக அறிந்து கொள்ள முடியவில்லை என்று ஊடகங்களில் வெளியாகிய தகவல்கள் கூறுகின்றன.

இக் கொலைகள் தொடர்பான விசாரணைகளைப் பொந்துவாஸ் அரச சட்டவாளர் அலுவலகம், Versailles நீதிமன்றப் பொலீஸாரிடம் ஒப்படைத்துள்ளது என்று ‘பரிஷியன்’ ஊடகம் தெரிவித்துள்ளது.

 

http://www.errimalai.com/?p=66452

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, கிருபன் said:

புலம்பெயர்ந்து வசிக்கின்ற தமிழ் குடும்பத்தினரது வீட்டிலேயே இந்தக் கொலைகள் நிகழ்ந்துள்ளன. கொலையுண்டவர்களது பெயர் மற்றும் மேலதிக விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.

இன்னுமா கண்டு பிடிக்க முடியவில்லை அவர்களது பெயர் விபரங்களை ஆழ்ந்த இரங்கல்கள் 

இலங்கையர்களா??

  • கருத்துக்கள உறவுகள்

அநியாய உயிரிழப்பு...என்ன நடந்திருக்கும்?...கள்ளங்களோ அல்லது தெரிந்தார் கொலை செய்திருப்பார் 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தவர் தாயும் மகளும் வீட்டில் வெட்டிக் கொலை!

 

இணைய விளையாட்டால் வந்த வினை இளைய மகனே அக்காவையும் அம்மாவையும் கொன்றதாக தகவல் வந்திருக்கிறது வடமராட்சியில் இருந்து

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸில் படுகொலைக்குள்ளான தாயும் மகளும் யாழ். உரும்பிராயைச் சேர்ந்தவர்கள்

(சி.எல்.சிசில்)
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை
கூரிய ஆயுதத்தினால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பலியான தாயும், மகளும் யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்தவர்களெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
France-murder-300x246.jpg
கூரிய ஆயுதம் ஒன்றினால் வெட்டிக்கொல்லப்பட்ட இவ்விருவரது உடல்களும், பிரேதப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. தடயங்களைக் கண்டுபிடிப்பதில் தடயவியல் துறையினர் ஈடுபட்டு வருகின்றார்கள்.
கொலையுண்டவர்கள் யாழ்ப்பாணம்,உரும்பிராயைச் சேர்ந்த இராஜதுரை விஜயசிறி (51), இராஜதுரை டிலக்ஷனா (21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் இருவரது சடலங்களும் அவர்களுடைய வீட்டில் இரத்த வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டன.
இவர்களது கொலை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவரும் அதேவேளை, கொல்லப்பட்ட பெண்ணின் கணவர் இராஜதுரையும், அவரது இரு புதல்வர்களும் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

https://thinakkural.lk/article/132593

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, London Ranjan said:

இணைய விளையாட்டால் வந்த வினை இளைய மகனே அக்காவையும் அம்மாவையும் கொன்றதாக தகவல் வந்திருக்கிறது வடமராட்சியில் இருந்து

 

உண்மை  இன்னும்  வெளிவரவில்லை

ஆனால் சில  செய்திகளை  கேட்டபோது???

1 - அயல் வீட்டுக்காறர்கள்  அவலக்குரலை  கேட்டிருக்கிறார்கள்

ஆனால்  உதவிக்கு  செல்லவோ  அல்லது பொலிசை அழைக்கவோ  முயலவில்லை

பொலிசார்  விசாரித்ததற்கு அவர்களது குடும்ப  சண்டை  என்று  நினைத்தோம் என்று  பதில்  வந்திருக்கிறது. இதன்படி  பார்த்தால் இந்த வீட்டில்  இது அடிக்கடி நடந்திருக்க வாய்ப்புண்டு

 

2- கைது செய்யப்பட்ட தகப்பனும்  இரு மகன்களும் தொடர்ந்து  காவலில்.

இதுவும் இவர்களது பங்கை  உறுதி  செய்கிறது.

இனி விசாரணை முடியட்டும்??? 

தகப்பன் யாழ் துன்னாலை பகுதியை சேர்ந்தவர் என்ற படியால் எனது நண்பன் மூலமாக கேள்வி பட்டேன் 

On 11/8/2021 at 12:17, ரதி said:

அநியாய உயிரிழப்பு...என்ன நடந்திருக்கும்?...கள்ளங்களோ அல்லது தெரிந்தார் கொலை செய்திருப்பார் 

இணைய பாவனை மூலம் பழகிய blue game செய்த வினை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, London Ranjan said:

தகப்பன் யாழ் துன்னாலை பகுதியை சேர்ந்தவர் என்ற படியால் எனது நண்பன் மூலமாக கேள்வி பட்டேன் 

இணைய பாவனை மூலம் பழகிய blue game செய்த வினை

இன்னும் விசாரணை நடக்கிறதா?? 
என்னென்ன கோதாரிகளெல்லாம் விளையாடுதுகளோ 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎14‎-‎08‎-‎2021 at 17:35, London Ranjan said:

தகப்பன் யாழ் துன்னாலை பகுதியை சேர்ந்தவர் என்ற படியால் எனது நண்பன் மூலமாக கேள்வி பட்டேன் 

இணைய பாவனை மூலம் பழகிய blue game செய்த வினை

உண்மையாகவா:shocked: ..கொடுமை 

  • கருத்துக்கள உறவுகள்
On 17/8/2021 at 13:05, ரதி said:

உண்மையாகவா:shocked: ..கொடுமை 

blue game என்றால் என்ன??

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Sasi_varnam said:

blue game என்றால் என்ன??

நானும் உங்களைப் போல ஒரு அப்பாவி சசி…!

கூகிளாண்டவரிடம் கேட்டேன். அவர் சொன்னதைக் கேட்ட போது, கை காலெல்லாம் உதறத் தொடங்கி விட்டது!

ஐம்பது நாட்களுக்குள் உங்களை மரணத்துக்குத் தயார் படுத்தும் ஒரு கணணி விளையாட்டு இது!

கொஞ்சம் விலகியே இருங்கள்..!

 

  • கருத்துக்கள உறவுகள்

  இதைப்பற்றித்தான் சொல்கிறார்களோ?

Blue Whale: What is the truth behind an online 'suicide challenge'?

https://www.bbc.com/news/blogs-trending-46505722

 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புங்கையூரன் said:

நானும் உங்களைப் போல ஒரு அப்பாவி சசி…!

கூகிளாண்டவரிடம் கேட்டேன். அவர் சொன்னதைக் கேட்ட போது, கை காலெல்லாம் உதறத் தொடங்கி விட்டது!

ஐம்பது நாட்களுக்குள் உங்களை மரணத்துக்குத் தயார் படுத்தும் ஒரு கணணி விளையாட்டு இது!

கொஞ்சம் விலகியே இருங்கள்..!

 

5 hours ago, Sasi_varnam said:

  இதைப்பற்றித்தான் சொல்கிறார்களோ?

Blue Whale: What is the truth behind an online 'suicide challenge'?

https://www.bbc.com/news/blogs-trending-46505722

 

இதனைப் பற்றி... யாழ்.களத்தில், இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு தலைப்பிலேயே...
பலர் கருத்து எழுதியுள்ளார்கள். அது இப்போ.. எங்கு உள்ளது என்று தெரியவில்லை.

இந்தியாவில்... இதனால், பல குடும்ப உறவுகள், நெருங்கிய  சின்னஞ் சிறுவர்களால்..
கொல்லப் பட்ட கொடுமை நடந்த பின்... 😢
இந்த விளையாட்டை... இந்தியாவில், தடை செய்யப் பட்டுள்ளதாக... 
எங்கோ... ஒரு  செய்தியில் படித்தேன்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.