Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவிடமிருந்து... 61.5 பில்லியன் கடன் ஒப்பந்தத்தில், இலங்கை கைச்சாத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவிடமிருந்து 61.5 பில்லியன் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து

சீனாவிடமிருந்து...  61.5 பில்லியன் கடன் ஒப்பந்தத்தில், இலங்கை கைச்சாத்து

சீன அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கைக்கு இடையில் 2 பில்லியன் நிதியுதவிக்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான சீன தூதரகம் ருவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் கொரோனா தடுப்பு நடவடிக்கை, பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இலங்கை ரூபாய் மதிப்பில் இது 61.5 பில்லியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1234835

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா  நாட்டின் எந்தப்பகுதியை அடகு வைக்கலாம் என்ற துணிவில் கடன் வாங்கி இருக்கினம் என்று தெரியலையே ?

  • கருத்துக்கள உறவுகள்

 சிங்களவர் தமிழர் சோனகர் பறங்கியர் என்று முன்பெல்லாம் இலங்கையில் நான்கு இனங்கள்.

இப்போது சீனர்களையும் சேர்த்து இலங்கையில் ஐந்து இனங்கள்.

தற்போது இலங்கையில் பல ஆயிரம் சீனர்கள் பல்வேறுபட்ட காரணங்களை சொல்லி சரளமாக சிங்களம் பேசியபடி இலங்கையில் நிரந்தரமாக வசிக்கிறார்களாம், அவர்கள் தொகை பறங்கியரைவிட அதிகம் என்று கூறபடுகிறது.

அதாவது நான்காவது பெரிய இனம் சீனர்கள், கடனுக்குமேல் கடன்வாங்கி திரும்ப கட்டவே முடியாமல்போய் நாடு திவாலாகும்போது அந்த சிறுபான்மை சீனர்கள்தான் இலங்கையின் பெரும்பான்மை அதிகாரத்திலிருப்பார்கள், ஒருகாலம் தென்னாப்ரிக்கா சிறுபான்மை வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டதுபோல்.

வெளிநாடுகளிலிருந்தபடி உண்டியல்மூலம் கோடி கோடியாய் இலங்கைக்கு அனுப்பி பின்னர் அங்குள்ளவர்கள் மூலமாக இலங்கையின் வங்கிகளில் வைப்பிலிட்டு பெரும் தொகை வட்டி பார்த்த புலம்பெயர்ந்தவர்கள் எச்சரிக்கையாய் இருக்கவேண்டிய தருணம் இது.

எந்த நேரம் வேண்டுமென்றாலும் அவர்களின் பணம் வந்த வழிகேட்டு கணக்குகள் முடக்கப்பட்டு ராஜபக்ச அரசினால் அவர்கள் வாங்கிய கடனை கட்டுவதற்காக வங்கியில் முறையான ஆவணம் இன்றி வந்த பணம் என்று அமுக்கப்படலாம்.

அங்குள்ளவர்கள் மத்தியில் அப்படி ஒரு பேச்சு அடிபடுவதாகவும் பலர் கணக்கில் இருந்த பணத்தை எடுத்து நகைகள் வாங்கி குவிப்பதாகவும் ஊரில் உள்ளவர்கள் சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

வெளிநாடுகளிலிருந்தபடி உண்டியல்மூலம் கோடி கோடியாய் இலங்கைக்கு அனுப்பி பின்னர் அங்குள்ளவர்கள் மூலமாக இலங்கையின் வங்கிகளில் வைப்பிலிட்டு பெரும் தொகை வட்டி பார்த்த புலம்பெயர்ந்தவர்கள் எச்சரிக்கையாய் இருக்கவேண்டிய தருணம் இது.

இந்த கதையை சொன்னால்  நக்கலாய் பார்க்கினம் உண்டியல் முதலீட்டாளர்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, valavan said:

எந்த நேரம் வேண்டுமென்றாலும் அவர்களின் பணம் வந்த வழிகேட்டு கணக்குகள் முடக்கப்பட்டு ராஜபக்ச அரசினால் அவர்கள் வாங்கிய கடனை கட்டுவதற்காக வங்கியில் முறையான ஆவணம் இன்றி வந்த பணம் என்று அமுக்கப்படலாம்.

அங்குள்ளவர்கள் மத்தியில் அப்படி ஒரு பேச்சு அடிபடுவதாகவும் பலர் கணக்கில் இருந்த பணத்தை எடுத்து நகைகள் வாங்கி குவிப்பதாகவும் ஊரில் உள்ளவர்கள் சொன்னார்கள்.

பண வீக்கம் சம்பந்தமாக அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலும் இந்த நிலை வரும் என கூறுகின்றார்கள்.

அதனால் தான் வீடுகளின் விலை உச்சத்தை எட்டியுள்ளதாம்.

எனது இடத்தில்  கொரோனாவிற்கு முன் 120 ஆயிரம் ஈரோ விற்ற வீடுகள் இன்று 190ஆயிரம் ஈரோ விலை  போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

சீலையை வித்துச் சீலா மீன் வாங்கு என்று ஊரில் சொல்வார்கள். இனிமேல் சிறீலங்காவை வித்து சீனாவை வாங்கு என்று சொல்வார்களோ....🤔.

 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

பண வீக்கம் சம்பந்தமாக அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலும் இந்த நிலை வரும் என கூறுகின்றார்கள்.

அதனால் தான் வீடுகளின் விலை உச்சத்தை எட்டியுள்ளதாம்.

எனது இடத்தில்  கொரோனாவிற்கு முன் 120 ஆயிரம் ஈரோ விற்ற வீடுகள் இன்று 190ஆயிரம் ஈரோ விலை  போகின்றது.

குமாரசாமியண்ணை,ஐரோப்பாவில் நீங்கள் வங்கியில் பெரும்தொகை பணம் வைப்பிலிடவேண்டுமென்றால் கட்டாயம் வரவு செலவு கணக்கு தெளிவாக வங்கிக்கும் அரசாங்கத்திற்கும் காட்டவேண்டும். 2000 டொலர் யூரோ பவுண்டுகள் வைப்பிலிடுவதென்றாலும் ஆயிரம் கேள்விகள் கேப்பான்.

சட்டரீதியாக நீங்கள் வைப்பிலிட்ட பணத்தை எவரும் தொட்டுபார்க்கமுடியாது .

ஆனால் இலங்கையில் போர்கால நெருக்கடியில் எங்கிருந்து பணம் வந்தாலும் ஓகே என்று எதுவும் கேட்காமல் நேரடியாக வங்கிக்கு அனுப்பாமல் உண்டியல்மூலம் பலநூறு கோடிகளை அனுப்பி வங்கியில் வைப்பிலிட்டபோதும், பல கோடிகளில் கொழும்பில் சொத்துக்களை வாங்கி குவித்தபோதும்  கண்டுக்காமல் இருந்துவிட்டான், இப்போ அவனுக்கு காசுவேண்டும் சட்டதிட்டங்களை திடீரெண்டு சரியா கடைபிடிக்கபோறான்.

ஏற்கனவே யாழ்ப்பாணத்துக்கு உரியமுறையின்றி பெரும்தொகை பணம் அனுப்பியதாக சொல்லி சிலரின் வங்கி கணக்குகளை முடக்கியதாக செய்தி வந்தது அதை யாழில் படித்ததாகவும் ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

எந்த நேரம் வேண்டுமென்றாலும் அவர்களின் பணம் வந்த வழிகேட்டு கணக்குகள் முடக்கப்பட்டு ராஜபக்ச அரசினால் அவர்கள் வாங்கிய கடனை கட்டுவதற்காக வங்கியில் முறையான ஆவணம் இன்றி வந்த பணம் என்று அமுக்கப்படலாம்.

அங்குள்ளவர்கள் மத்தியில் அப்படி ஒரு பேச்சு அடிபடுவதாகவும் பலர் கணக்கில் இருந்த பணத்தை எடுத்து நகைகள் வாங்கி குவிப்பதாகவும் ஊரில் உள்ளவர்கள் சொன்னார்கள்.

பல  முறை இங்கு சொல்லி உள்ளேன், மிகவும் இக்கட்டான நிலைமையில், அசைய கூடிய தனியார்  சொத்துக்களை தேசிய உடமை ஆக்குவது சிங்கள அரசுக்குள்ள ஓர் தெரிவு, .

இதில் எல்லாம் அடங்கும், பணம், நகை, தனியாரிடம் உள்ள பங்குகள்,  கம்பனிகளின் பங்குகள் என்று பல வகை., வருங்கால ஓய்வூதியம் கூட அடங்கும் . 

மற்றது, இலங்கையில் உலா வாங்கி இடம் இருந்து பணத்தை எடுத்து, வேறு  சொத்து வாங்கினால், தடம் வழி  வந்து இலகுவாக தேசிய உரிமை ஆக்குவதற்கு வேண்டிய கட்டுமானமமும், நிதி தொழில் நுட்பமும் சிங்களத்திடம்    உள்ளது.

 

4 hours ago, பெருமாள் said:

ஆகா  நாட்டின் எந்தப்பகுதியை அடகு வைக்கலாம் என்ற துணிவில் கடன் வாங்கி இருக்கினம் என்று தெரியலையே ?

புலம் பெயர் இளித்தவாய், பேராசைக்காரர்களை,  அவர்களின் உறவுகளை நம்பி என்றும் சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

அதாவது நான்காவது பெரிய இனம் சீனர்கள்,

நீங்கள் குடிபெயர்ந்துள்ள நாடுகளில் உள்ள சீனர்களை  பார்த்தால் வேறு ஆதாரம் தேவையில்லை. சீனாவில் மட்டுமல்ல அந்தந்த நாடுகளிலும் அவர்களே கூடிய சனத்தொகை.

 

38 minutes ago, Kadancha said:

இதில் எல்லாம் அடங்கும், பணம், நகை, தனியாரிடம் உள்ள பங்குகள்,  கம்பனிகளின் பங்குகள் என்று பல வகை., வருங்கால ஓய்வூதியம் கூட அடங்கும்

உண்மை. போர் முடிவடைந்து, பல மக்கள் புலம் பெயர்ந்தபின் பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளரிடம் இருந்து உறுதிப்படுத்தல் கடிதம் கோரியிருந்தது. உரிமை கோராதவர்களின் பணத்தை அரசாங்கம் தனது இராணுவத்துக்கு பயன்படுத்தப்போகிறது என்று எண்ணி புலம்பெயர்ந்த பலர் தங்கள் உறவுகளுக்கு தம் பணத்தை சாட்டுதல் செய்து உறுதிப்படுத்தியிருந்தனர். உரிமை கோர யாருமற்று இறந்தவர்களின் பணத்துக்கு என்ன நடந்திருக்கும்....?

 

1 hour ago, valavan said:

பல கோடிகளில் கொழும்பில் சொத்துக்களை வாங்கி குவித்தபோதும்  கண்டுக்காமல் இருந்துவிட்டான், இப்போ அவனுக்கு காசுவேண்டும் சட்டதிட்டங்களை திடீரெண்டு சரியா கடைபிடிக்கபோறான்.

கண்டுக்காமல் அல்ல, கணக்கோடுதான் விட்டுவைத்திருப்பான், இனி கைவைப்பான். வங்கியிலுள்ள பணத்திற்கெல்லாம் அதிக வரி. முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரின் சொத்து நல்ல உதாரணம். புலம் பெயர்ந்தவர்கள் மட்டுமல்ல, உள்நாட்டில் உள்ள பண முதலைகளின் சொத்துக்களும் கேள்விக்குறியே. காணிவேண்டி தீவு செய்து பணம் பார்க்கும்  திட்டத்துக்கும் ஆப்பு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.