Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண நகரத்தின் அடையாளங்களை மேம்படுத்தல்! ஐந்திறன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

எதை வைச்சு வெள்ளைக்காரன் இலங்கை முழுக்க  ரோட்டுக்கள் போட்டு பாலங்கள் எல்லாம் கட்டினான்?
வருமானத்தை வைச்சுதானே?

வெள்ளைக்காரன் காலத்தில் இலங்கையின் வளங்கொளிக்கும் பிரதேசங்களை கண்டுபிடித்து தேயிலை ரப்பர், கொக்கோ வாசனை திரவியங்கள், கனிமங்கள் தாதுபொருட்கள் என்று அனைத்தையும் இலங்கை மக்கள் அறியுமுன்னமே அவனே பயிரிட்டு அவனே அகழ்ந்தெடுத்து  இலங்கையருக்கு அறிமுகபடுத்தி அவனே அறுவடை செய்து அவனே கப்பல் கப்பலா ஏற்றுமதியும் செய்தான்,

அப்போ எல்லாம் தேத்தண்ணீ, பாண் என்பது எல்லாம் என்னவென்றே இலங்கையர்களுக்கு தெரிந்திருக்கவில்லையென்று வரலாறு கூறுகிறது.

ஏற்றுமதி வருமானமும் அவனுக்கு இறக்குமதி வருமானமும் அவனுக்கு, வரிகள் எல்லாம் அவனுக்கு , உலக சட்ட வரைமுறைகள் முன்னேறாமல் இருந்த அந்த காலத்தில் உள்ளூரில் சுயமாய் சம்பாதித்தவர்களுக்கும் ஆங்கிலேயன் வரி விதித்தான், மறுத்த மக்களை குறு நில மன்னர்களை கொலையும்  செய்தான், பின்பு கொள்ளையும் அடித்தான் என்பது வரலாறு.

செலவுகள் பெரிதாக இன்றி வருமானம் மட்டும் பல நூறு  மடங்கு பெற்றவன் தனது தேவைகருதி பலதும்  மக்கள் நலனுக்காக சிலதும் செய்தான் என்பதே காலம் காலமாய் நாமறிந்த ஒன்று.

On 4/9/2021 at 19:35, குமாரசாமி said:

எத்தினை நாளைக்குத்தான் புளொரிடா அழகை பாத்து கொட்டாவி விடுவியள்? சேம் வெதர் சேம் வெள்ளை மண் சேம் மரம் கொடியள்.....அரசு நினைத்தால் அல்லது முக்கிய பிரமுகர்கள் நினைத்தால் முடியாதது ஏதுமில்லை.

ஸ்பெயினை பாருங்கோ.....சுவீஸ்ச பாருங்கோ எல்லாம் சுற்றுலா பயணிகள் வசமெல்லோ? இதே முறையை ஏன் நாங்கள் புங்குடுதீவு,அனலைதீவு,மண்கும்பான் ஏரியாக்களுக்கு பயன்படுத்தக்கூடாது?

உங்களுக்கு உள்ளதை போலவே எனக்கும் சாவகச்சேரியை டோக்கியோ போல் ஆக்கவேண்டும், கொடிகாமத்தை சியோல் போல் ஆக்க வேண்டும், மண்கும்பானை மன்ஹாட்டன் ஆக்கவேண்டும் என்று ஆசைகள் பல உண்டு.

வடபகுதியின் தீவுகளை, வடமராட்சி கரையோரங்களை சுற்றுலாதலமாக ஆக்கவேண்டுமெனில் பனங்காணிகளை அழித்து நவீனமாக்கவேண்டும், 

மனிதகழிவுகள் இல்லாத பிரதேசமாக ஆக்கவேண்டும்.

கரையோரங்கள் ஆழபடுத்தப்பட்டு நவீன படகுதுறைகள் அமைக்கப்படவேண்டும், ஐந்து  நட்சத்திர ஹோட்டல்கள் கட்டியெழுப்ப வசதியாய் அந்த பகுதிக்கு 24 மணி நேரமும்  மின்சாரம் குடிநீர் இணைப்புக்கள் வழங்கப்பட வேண்டும்.

பலாலி விமான நிலையம் சர்வதேச தரத்துக்கு நவீன மய படுத்தபட வேண்டும், பல எண்ணிக்கையில் சர்வதேச தரத்து சிறுரக விமானங்கள், உலங்கு வானூர்திகள் கொள்வனவு செய்யபடவேண்டும்,வெள்ளைக்காரர்கள் வந்து போக வசதியாய் சாலைகள் அகலபடுத்தப்படவேண்டும்,  உல்லாச பயணிகளுக்கான தடையில்லா  பல லட்சம்  கலன்கள் நல்ல தண்ணீர்  உல்லாச பயணிகள் பிரதேசத்துக்கு வழங்கபடவேண்டும். உள்ளூர்  மக்களுக்கான நன்னீரே  எந்த வேளையும் சாக்கடை உவர்நீர் கலந்து  ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்தமாய் இல்லாமல் போகலாம் என்ற சூழலே நிலவுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன,

அதனால் கடல்நீரை உல்லாச பயணதுறை தேவை கருதி நன்னீராக்கவேண்டும்.

நிலத்துக்கு அடியினால் மனித கழிவுகள்  போய்வர வடிகாலமைப்பு செய்யவேண்டும், அம்பன் நாகர் கோவில் எல்லாம் வெளிநாட்டில் நாங்கள் சினோ வழிக்குறதுபோல, கடல் அலைகளூம் காற்றும் கரை ஒதுக்கும்  மணல் கும்பிகளை உல்லாச பயணிகள் தேவைகள் கருதி அடிக்கடி  புல்டோசர் வைச்சு ஒதுக்கி கொண்டே இருக்க வேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் இலங்கை பணமதிப்பில் சில லட்சம் கோடிகள் ரூபாய் தேவைபடும்

அதை தருவது யார்? பெறுவது யார்?

இந்த  லட்சம் கோடிகளை  செலவு செய்து உல்லாச பயணதுறையை ஊக்குவிக்க முடியுமானால் அதே பணத்தை வைத்து உலக வரைபடத்தில் தொழில்துறைகளை உருவாக்கி நாமே சுயமாய் முன்னேறலாமே, அதை தடுப்பது யார்?

.ஒரு துறைமுக நகரம் அமைத்ததுக்கே நாட்டை அடைவு வைத்தது மட்டுமன்றி பொருளாதார அரசியல் ரீதியில் இலங்கை அரசே புட்டுகிச்சு.

ஸ்பெயினையும் சுவிசையும் அமெரிக்காவையும் நாங்கள் பார்க்கதான் முடியும் அவர்கள் அளவிற்கு நாம் உயரலாம் என்று உடனடியா நினைக்க கூடாது, அவர்கள் தாமும் வளர்ந்து  தங்கள் நாட்டுக்குள் நுழைந்த பல லட்சம் வெளிநாட்டவர்களையும் வாழ வைக்கும் அளவிற்கு அசுர பொருளாதார பலம் கொண்டவர்கள்.

3 கோடி மக்கள் சன தொகையை வைத்துக்கொண்டு இன்னமும் 130 கோடி மக்கள் தொகையை கொண்ட சீனாவிடமும் இந்தியாவிடமும் அரிசி உள்ளி மஞ்சள் பருப்பு வாங்கும் நாங்கள்  மேற்குலகத்தின் வளர்ச்சியை  நூற்றாண்டுகள் கடந்த பின்பும் எட்டி பார்க்க வாய்ப்பிருக்கிறதா?

நமது பிரதேசத்தவர்கள், இன்றும் பாணி பினாட்டும் புளுக்கொடியலும் கீரை பிடியும், சிரட்டையை சீவி அகப்பை தயாரித்தும்,   வித்து அரை வயிறை கழுவுகிறவர்கள்.

அவர்களையும் அவர்களை ஆழும் அரசையும்  போய் ஏன் சுவிஸ்போல ஸ்பெயின் போல ஆக முடியவில்லை என்று கேட்காதீர்கள்..

ஓவென்று அழுவார்கள்.

  • Replies 145
  • Views 9.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2021 at 00:35, குமாரசாமி said:

எதை வைச்சு வெள்ளைக்காரன் இலங்கை முழுக்க  ரோட்டுக்கள் போட்டு பாலங்கள் எல்லாம் கட்டினான்?
வருமானத்தை வைச்சுதானே?
நெடுந்தீவையும் மண்டைதீவையும் சுற்றுலா அபிவிருத்தி பிரதேசமாக்குங்கோ காசு வருமெல்லே?

எத்தினை நாளைக்குத்தான் புளொரிடா அழகை பாத்து கொட்டாவி விடுவியள்? சேம் வெதர் சேம் வெள்ளை மண் சேம் மரம் கொடியள்.....அரசு நினைத்தால் அல்லது முக்கிய பிரமுகர்கள் நினைத்தால் முடியாதது ஏதுமில்லை.

ஸ்பெயினை பாருங்கோ.....சுவீஸ்ச பாருங்கோ எல்லாம் சுற்றுலா பயணிகள் வசமெல்லோ? இதே முறையை ஏன் நாங்கள் புங்குடுதீவு,அனலைதீவு,மண்கும்பான் ஏரியாக்களுக்கு பயன்படுத்தக்கூடாது?

சூரிய வளமும் பால் போன்ற வெள்ளை மணல் வளமும் அருகே உப்பு நீர் கடல் வளமும் எல்லா நாடுகளுக்கும் அமைவதில்லை. ஆனால் எமது வட பிரதேசத்தில் சகலதும் அமைந்துள்ளது. அம்பன் நாகர்கோவில் பக்கம் போவீர்களாயின் புளோரிடாவை ஒத்த பிரதேசம் அங்கும் இருக்கும். இந்த சூழலை ஏன் நாங்கள் வியாபாரமாக்க முடியவில்லை என்பதை முதலில் சிந்தியுங்கள்.

நான் ஏதோ மில்லியன் கணக்கில டொலரை வைத்துக்கொண்டு, ஆசுப்பத்திர்யை மண்டைதீவுக்கு மாத்துங்கோ எண்ட மணிக்கு சொன்னது போல, மண்டை காய்சல இருக்கினம், யாழ் ஆஸ்பத்திரிய தள்ளிக்கொண்டு போனால், இப்ப பாவிக்கிற தண்ணிய குழாயில கொண்டோட முடியும் என்ற  சின்ன விடயமே புரியாத, குடம் தண்ணி விலை கேக்குற வித்துவான்கள்.😁

ஒரு தீவானிடம், தீவுப்பகுதி போயிருக்கிறீர்களா?  என்று கேள்வி வேற.🤗

மணிக்கு சொல்லும் போது, அவரது தேர்தல் குறித்த வழக்கு நீதிமன்றில். மேலும் அவர் எனது நண்பர் வேறு.

தீவுப்பகுதிக்கு பலாலியை நகர்த்துவது, ரணில் பிரதமராக, நோர்வே சமாதான காலத்தில் கூட்டமைப்பின் யாழ் எம்பி ஒருவரால் பிரேரிக்கப்பட்டு, கண்டு கொள்ளப்படவில்லை. இது பத்திரிகையில் வந்து, இங்கே திரியிலும் பேசினோம்.

பத்தியா, எழுந்தமானமாக எமுதாமல், நிதானமாக எழுதினால், தரமான கருத்துக்கள் வரும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2021 at 20:42, Nathamuni said:

சிங்களத்துக்கு 'விளப்பம்' இல்லையா அல்லது, கடன் வாங்கி ஓட்டினால் போதும் என்று நினைக்கிறதா?

உங்களோடு வாதாட வரவில்லை.

அனால்,  கொறன 2ம்  அலை தமிழகத்தில் தாக்கிய போது, மிகவும் பிரபல்யமான சிங்கல தொலைக்காட்சி  நாடகம் , தமிழ் நாட்டில் இருந்து  இருந்து சொறி சிங்களத்தை நோக்கி பெருமளவில் மக்கள் படை எடுப்பதாகவும், அதை சொறி சிங்கள நேவி அடித்து கலைப்பதாகவும்.    
 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, valavan said:

வெள்ளைக்காரன் காலத்தில் இலங்கையின் வளங்கொளிக்கும் பிரதேசங்களை கண்டுபிடித்து தேயிலை ரப்பர், கொக்கோ வாசனை திரவியங்கள், கனிமங்கள் தாதுபொருட்கள் என்று அனைத்தையும் இலங்கை மக்கள் அறியுமுன்னமே அவனே பயிரிட்டு அவனே அகழ்ந்தெடுத்து  இலங்கையருக்கு அறிமுகபடுத்தி அவனே அறுவடை செய்து அவனே கப்பல் கப்பலா ஏற்றுமதியும் செய்தான்,

அப்போ எல்லாம் தேத்தண்ணீ, பாண் என்பது எல்லாம் என்னவென்றே இலங்கையர்களுக்கு தெரிந்திருக்கவில்லையென்று வரலாறு கூறுகிறது.

ஏற்றுமதி வருமானமும் அவனுக்கு இறக்குமதி வருமானமும் அவனுக்கு, வரிகள் எல்லாம் அவனுக்கு , உலக சட்ட வரைமுறைகள் முன்னேறாமல் இருந்த அந்த காலத்தில் உள்ளூரில் சுயமாய் சம்பாதித்தவர்களுக்கும் ஆங்கிலேயன் வரி விதித்தான், மறுத்த மக்களை குறு நில மன்னர்களை கொலையும்  செய்தான், பின்பு கொள்ளையும் அடித்தான் என்பது வரலாறு.

செலவுகள் பெரிதாக இன்றி வருமானம் மட்டும் பல நூறு  மடங்கு பெற்றவன் தனது தேவைகருதி பலதும்  மக்கள் நலனுக்காக சிலதும் செய்தான் என்பதே காலம் காலமாய் நாமறிந்த ஒன்று.

உங்களுக்கு உள்ளதை போலவே எனக்கும் சாவகச்சேரியை டோக்கியோ போல் ஆக்கவேண்டும், கொடிகாமத்தை சியோல் போல் ஆக்க வேண்டும், மண்கும்பானை மன்ஹாட்டன் ஆக்கவேண்டும் என்று ஆசைகள் பல உண்டு.

வடபகுதியின் தீவுகளை, வடமராட்சி கரையோரங்களை சுற்றுலாதலமாக ஆக்கவேண்டுமெனில் பனங்காணிகளை அழித்து நவீனமாக்கவேண்டும், 

மனிதகழிவுகள் இல்லாத பிரதேசமாக ஆக்கவேண்டும்.

கரையோரங்கள் ஆழபடுத்தப்பட்டு நவீன படகுதுறைகள் அமைக்கப்படவேண்டும், ஐந்து  நட்சத்திர ஹோட்டல்கள் கட்டியெழுப்ப வசதியாய் அந்த பகுதிக்கு 24 மணி நேரமும்  மின்சாரம் குடிநீர் இணைப்புக்கள் வழங்கப்பட வேண்டும்.

பலாலி விமான நிலையம் சர்வதேச தரத்துக்கு நவீன மய படுத்தபட வேண்டும், பல எண்ணிக்கையில் சர்வதேச தரத்து சிறுரக விமானங்கள், உலங்கு வானூர்திகள் கொள்வனவு செய்யபடவேண்டும்,வெள்ளைக்காரர்கள் வந்து போக வசதியாய் சாலைகள் அகலபடுத்தப்படவேண்டும்,  உல்லாச பயணிகளுக்கான தடையில்லா  பல லட்சம்  கலன்கள் நல்ல தண்ணீர்  உல்லாச பயணிகள் பிரதேசத்துக்கு வழங்கபடவேண்டும். உள்ளூர்  மக்களுக்கான நன்னீரே  எந்த வேளையும் சாக்கடை உவர்நீர் கலந்து  ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்தமாய் இல்லாமல் போகலாம் என்ற சூழலே நிலவுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன,

அதனால் கடல்நீரை உல்லாச பயணதுறை தேவை கருதி நன்னீராக்கவேண்டும்.

நிலத்துக்கு அடியினால் மனித கழிவுகள்  போய்வர வடிகாலமைப்பு செய்யவேண்டும், அம்பன் நாகர் கோவில் எல்லாம் வெளிநாட்டில் நாங்கள் சினோ வழிக்குறதுபோல, கடல் அலைகளூம் காற்றும் கரை ஒதுக்கும்  மணல் கும்பிகளை உல்லாச பயணிகள் தேவைகள் கருதி அடிக்கடி  புல்டோசர் வைச்சு ஒதுக்கி கொண்டே இருக்க வேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் இலங்கை பணமதிப்பில் சில லட்சம் கோடிகள் ரூபாய் தேவைபடும்

அதை தருவது யார்? பெறுவது யார்?

இந்த  லட்சம் கோடிகளை  செலவு செய்து உல்லாச பயணதுறையை ஊக்குவிக்க முடியுமானால் அதே பணத்தை வைத்து உலக வரைபடத்தில் தொழில்துறைகளை உருவாக்கி நாமே சுயமாய் முன்னேறலாமே, அதை தடுப்பது யார்?

.ஒரு துறைமுக நகரம் அமைத்ததுக்கே நாட்டை அடைவு வைத்தது மட்டுமன்றி பொருளாதார அரசியல் ரீதியில் இலங்கை அரசே புட்டுகிச்சு.

ஸ்பெயினையும் சுவிசையும் அமெரிக்காவையும் நாங்கள் பார்க்கதான் முடியும் அவர்கள் அளவிற்கு நாம் உயரலாம் என்று உடனடியா நினைக்க கூடாது, அவர்கள் தாமும் வளர்ந்து  தங்கள் நாட்டுக்குள் நுழைந்த பல லட்சம் வெளிநாட்டவர்களையும் வாழ வைக்கும் அளவிற்கு அசுர பொருளாதார பலம் கொண்டவர்கள்.

3 கோடி மக்கள் சன தொகையை வைத்துக்கொண்டு இன்னமும் 130 கோடி மக்கள் தொகையை கொண்ட சீனாவிடமும் இந்தியாவிடமும் அரிசி உள்ளி மஞ்சள் பருப்பு வாங்கும் நாங்கள்  மேற்குலகத்தின் வளர்ச்சியை  நூற்றாண்டுகள் கடந்த பின்பும் எட்டி பார்க்க வாய்ப்பிருக்கிறதா?

நமது பிரதேசத்தவர்கள், இன்றும் பாணி பினாட்டும் புளுக்கொடியலும் கீரை பிடியும், சிரட்டையை சீவி அகப்பை தயாரித்தும்,   வித்து அரை வயிறை கழுவுகிறவர்கள்.

அவர்களையும் அவர்களை ஆழும் அரசையும்  போய் ஏன் சுவிஸ்போல ஸ்பெயின் போல ஆக முடியவில்லை என்று கேட்காதீர்கள்..

ஓவென்று அழுவார்கள்.

ஐ லைக் தட் மண்கும்பான் மான்ஹட்டன் ஐடியா வெரி மச்🤣.

இப்பவே கூகிள்ள சில பரப்பை வேண்டி விட்டால் மண்டைதீவு ஆஸ்பத்திரிக்கு வாற சனத்துக்கு 5ஸ்டார் தங்குமிடம் கட்டி காசை டிப்பர்ல அள்ளலாம் 🤣.

என்னது தீவா? கொழும்பு பக்கம் ஏது சார் தீவு?🤣.  ஓ… crow island ஆ🤣

 

  • கருத்துக்கள உறவுகள்

“இதுல ஒரு டியூப்ப சொருகிவிட்டா, சைக்கிளுக்கு காத்தடிச்சாவது பிழைக்கலாம் - அதெல்லாம் இந்த ஊரில யாருக்கு தெரியுது ஐடியா இல்லாத பசங்க”🤣.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, valavan said:

அப்போ எல்லாம், பாண் என்பது எல்லாம் என்னவென்றே இலங்கையர்களுக்கு தெரிந்திருக்கவில்லையென்று வரலாறு கூறுகிறது.

இலங்கைத் தீவில் இருந்த வேடுவர்கள் அறிந்திருந்ததை, அறியாமல் எழுதிய பறங்கியின் மமதை  கருது இது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இலங்கைத் தீவில் இருந்த வேடுவர்கள் அறிந்திருந்ததை, அறியாமல் எழுதிய பறங்கியின் மமதை  கருது இது.

 

 

இரெண்டு விடயம் கடஞ்சா,

1. இது இலங்கை சுற்றுலா துறையின் staged விடியோவாக இருக்கலாம் என நான் நினைகிறேன். மரவெள்ளி இலையை சமைக்கிறார். மரவெள்ளி ஐரோப்பியர் அறிமுக படுத்தியது என்றே நான் நினைகிறேன்.

2. அதே போல் ரொட்டியாக தினைமாவை தட்டி உண்பது எம்மிடையே இருந்திருக்கும் என்றாலும், கோதுமை மாவில் பேக் பண்ணி சாப்பிடும் - பாண் ஐரோப்பிய வருகைக்கு முன் இருக்கவில்லை என்றே நான் நினைகிறேன்.

இந்த பேக் பண்ணும் பாண் கூட மத்திய கிழக்கில் இருந்து ஐரோப்பா வந்தாக எங்கோ வாசித்தேன்.

மத்திய கிழக்கில், வட இந்தியாவில் வெதுப்பி (oven) பாவனை நெடுங்காலமாக இருந்திருக்க கூடும் (தந்தூரி அடுப்புகள்,   ஆப்கானிஸ்தானில் மண்ணாலான வெதுப்பிகள்).  
தென்னிந்தியாவில், இலங்கையில் clay oven பாவனை இருந்ததா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அதே போல் ரொட்டியாக தினைமாவை தட்டி உண்பது எம்மிடையே இருந்திருக்கும் என்றாலும், கோதுமை மாவில் பேக் பண்ணி சாப்பிடும் - பாண் ஐரோப்பிய வருகைக்கு முன் இருக்கவில்லை என்றே நான் நினைகிறேன்.

 எனது அப்பாவின் தாயார் 105 வயசுவரை உயிர் வாழ்ந்தார் , அவர் சொன்னார் வெள்ளைக்காரர் காலத்தில் கோதுமை மற்றும் பாணை அறிமுகபடுத்தியபோது யாரும் அதை வாங்கவில்லையாம், பள்ளிக்கூடங்களிலும், பொது இடங்கள் மற்றும் சந்திகளிலும் பெட்டியில் சின்ன சின்ன பாணா செய்து வைத்திருந்து பொதுமக்களுக்கு இலவசமா வழங்கி பழக்கத்தை ஏற்படுத்தினார்களாம்.

Bun  என்று சொல்லியே மக்களுக்கு அதை அறிமுகபடுத்தினார்களாம், அதுவே பின்னாளில் பாண் என்று மருவியதாக பழங்கதை சொன்னார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, valavan said:

 எனது அப்பாவின் தாயார் 105 வயசுவரை உயிர் வாழ்ந்தார் , அவர் சொன்னார் வெள்ளைக்காரர் காலத்தில் கோதுமை மற்றும் பாணை அறிமுகபடுத்தியபோது யாரும் அதை வாங்கவில்லையாம், பள்ளிக்கூடங்களிலும், பொது இடங்கள் மற்றும் சந்திகளிலும் பெட்டியில் சின்ன சின்ன பாணா செய்து வைத்திருந்து பொதுமக்களுக்கு இலவசமா வழங்கி பழக்கத்தை ஏற்படுத்தினார்களாம்.

Bun  என்று சொல்லியே மக்களுக்கு அதை அறிமுகபடுத்தினார்களாம், அதுவே பின்னாளில் பாண் என்று மருவியதாக பழங்கதை சொன்னார்.

எனது பூட்டி , அம்மம்மாவும் இப்படி சொல்ல கேள்வி பட்டுள்ளேன்.

தேனீரை வீதிகளில் வைத்து ஆரோக்கிய பானம் என இலவசமாக கொடுத்தார்களாம். கூடவே bun உம். 

இங்கிலாந்தில் கூட அசுத்தமான நீர், பியருக்கு மாற்று என்றே தேனீர் பிரபல்யமாக்க பட்டதாக, ஒரு ரேடியோ நிகழ்சியில் சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

எனது அப்பாவின் தாயார் 105 வயசுவரை உயிர் வாழ்ந்தார் , அவர் சொன்னார் வெள்ளைக்காரர் காலத்தில் கோதுமை மற்றும் பாணை அறிமுகபடுத்தியபோது யாரும் அதை வாங்கவில்லையாம், பள்ளிக்கூடங்களிலும், பொது இடங்கள் மற்றும் சந்திகளிலும் பெட்டியில் சின்ன சின்ன பாணா செய்து வைத்திருந்து பொதுமக்களுக்கு இலவசமா வழங்கி பழக்கத்தை ஏற்படுத்தினார்களாம்.


இது இரண்டாம் கட்ட முயற்சி என்று நினைக்கிறன். (சவப்பெட்டி மா) என்பதை இருந்து வேறுபட்டது  என்று சொல்லி.

வந்த புதிதில், சவப்பெட்டி மா / பாடை ஒட்டி என்று என்ற விளக்கம் ஏற்பட்டு, இந்த மாவை ஒருவரும் அணுகவே அருவருத்தனர்.   எனது பாட்டி சொன்னது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, valavan said:

நமது பிரதேசத்தவர்கள், இன்றும் பாணி பினாட்டும் புளுக்கொடியலும் கீரை பிடியும், சிரட்டையை சீவி அகப்பை தயாரித்தும்,   வித்து அரை வயிறை கழுவுகிறவர்கள்.

அவர்களையும் அவர்களை ஆழும் அரசையும்  போய் ஏன் சுவிஸ்போல ஸ்பெயின் போல ஆக முடியவில்லை என்று கேட்காதீர்கள்..

ஓவென்று அழுவார்கள்.

இதென்ன கோதாரியாய் கிடக்கு...நான் ஏதோ சொல்லாப்போக குமுறல் வேறை விதமாய் போகுது.....😃

நான் சொல்ல வந்தது உதாரணத்தை காட்டி ஒரு வித நோக்கங்கள் மட்டுமே. வைச்சால் குடுமி இல்லையேல் மொட்டை எனும் கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை. எமது பூமியில் இருக்கும் வளத்தையும் காலநிலையையும் வைத்து சிந்திக்க வேண்டுமே தவிர சீனாக்காரன் போல் கொப்பி பண்ணும் நோக்கில் நான் எதுவுமே சொல்லவில்லையே?

ஒரு மனிதனுக்கு நோக்கங்கள் இருக்கவேண்டும். அது இருந்தால் தான் முன்னேற முடியும்.
நான் புலம்பெயர்ந்து வந்த புதிதில் என்னைப்பார்த்து ஒரு ஜேர்மன் அதிகாரி கேட்டார் நீங்களும் உங்கள் ஆட்களும் தனிநாடு கேட்கின்றீர்களே? அப்படி என்ன வளம் உங்களிடம் இருக்கு? உங்களால் பிற நாடுகளின் உதவியில்லாமல் தனித்து நிற்க முடியுமா? இதே கேள்வியை உங்களிடம் திருப்பி விடுகின்றேன். பதிலை சொல்லுங்கள்.

 கனவு காணுங்கள் அது என்று அப்துல் கலாம் மேடைக்கு மேடை சொல்வாராம்.அது உங்கள் போன்றோருக்கும் தெரிந்திருக்கும் என நினக்கின்றேன்.

எப்பவும் பினாட்டு ஓடியல் புட்டு  தான் எங்களிட்டை இருக்கு எண்டு  சொல்லுறவையிட்ட நான் சொல்லுறது என்னவெண்டால் சிங்கப்பூரிட்டை அதுவுமில்லை 🤣 
 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இதென்ன கோதாரியாய் கிடக்கு...நான் ஏதோ சொல்லாப்போக குமுறல் வேறை விதமாய் போகுது.....😃

நான் சொல்ல வந்தது உதாரணத்தை காட்டி ஒரு வித நோக்கங்கள் மட்டுமே. வைச்சால் குடுமி இல்லையேல் மொட்டை எனும் கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை. எமது பூமியில் இருக்கும் வளத்தையும் காலநிலையையும் வைத்து சிந்திக்க வேண்டுமே தவிர சீனாக்காரன் போல் கொப்பி பண்ணும் நோக்கில் நான் எதுவுமே சொல்லவில்லையே?

ஒரு மனிதனுக்கு நோக்கங்கள் இருக்கவேண்டும். அது இருந்தால் தான் முன்னேற முடியும்.
நான் புலம்பெயர்ந்து வந்த புதிதில் என்னைப்பார்த்து ஒரு ஜேர்மன் அதிகாரி கேட்டார் நீங்களும் உங்கள் ஆட்களும் தனிநாடு கேட்கின்றீர்களே? அப்படி என்ன வளம் உங்களிடம் இருக்கு? உங்களால் பிற நாடுகளின் உதவியில்லாமல் தனித்து நிற்க முடியுமா? இதே கேள்வியை உங்களிடம் திருப்பி விடுகின்றேன். பதிலை சொல்லுங்கள்.

 கனவு காணுங்கள் அது என்று அப்துல் கலாம் மேடைக்கு மேடை சொல்வாராம்.அது உங்கள் போன்றோருக்கும் தெரிந்திருக்கும் என நினக்கின்றேன்.

எப்பவும் பினாட்டு ஓடியல் புட்டு  தான் எங்களிட்டை இருக்கு எண்டு  சொல்லுறவையிட்ட நான் சொல்லுறது என்னவெண்டால் சிங்கப்பூரிட்டை அதுவுமில்லை 🤣 
 

இதை தானே ஆரம்பத்தில் இருந்து சொல்கிறேன். விதண்டாவாதம் தானே பேசுகிறார்கள்..... ஆக்கபூர்வமாக பேசாமல்...

நெடுந்தீவு; ஒரு ஜரோப்பிய வரலாறும், இயற்கை கடலோரங்களும் கொண்ட அழகிய தீவு. பாலைதீவு, அனலைதீவு, ஊர்காவற்துறை கடற்கோட்டை, யாழ் கோட்டை உல்லாசப் பயணிகளை கொண்டு வந்து கொட்டு்ம். மக்கள் வாழாத கச்சதீவை, இரணைதீவை காசீட்டும் தீவாக்கலாம்.

சிங்களவரும் நயினாதீவு, மாதகல் என்று வருவர். இப்போது இராணுவம் அமைக்கும் பெளத்த விகாரைகள், எரிச்சல் தந்தாலும், நாளை, அவர்களுக்கு கதிர்காமம் போல, நமக்கு வருமானம் தரும்.

இந்திய பயணிகளே ஆரம்பத்தில் போதும். இப்போது மாலைதீவு ஓடுகிறார்கள். அது நீரில் மூழ்கும்.

பசில் நெடுந்தீவை பார்த்து தானே போனார்..... உல்லாச பயண தீவாக்க சிறப்பானது என்றார். இனரீதியான பார்வை தடுத்திருக்கலாம்.

எனது கனவு, இருபது, முப்பது வருசத்துக்கானது.

அதை இன்றைய நிலையில் வைத்து விவாதிப்பதே அபத்தம்.

சிங்கப்பூரில் நீர்வளம் இல்லை.

இலண்டணில் அகதியாக வந்து, கற்று, அங்கு போன யாழ் இந்து மாணவர் தலைமையில் அமைந்த குழு, மலசல கூட கழிவு நீர் (கறுப்பு தண்ணீர்) அல்லது அவரது சொல்லாடலில், கக்கா தண்ணிய குடிநீராக்கும் செயலில் 1998ல் வெற்றி கண்டது.

மனமிருந்தால் மார்க்கம் உண்டு.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, valavan said:

 எனது அப்பாவின் தாயார் 105 வயசுவரை உயிர் வாழ்ந்தார் , அவர் சொன்னார் வெள்ளைக்காரர் காலத்தில் கோதுமை மற்றும் பாணை அறிமுகபடுத்தியபோது யாரும் அதை வாங்கவில்லையாம், பள்ளிக்கூடங்களிலும், பொது இடங்கள் மற்றும் சந்திகளிலும் பெட்டியில் சின்ன சின்ன பாணா செய்து வைத்திருந்து பொதுமக்களுக்கு இலவசமா வழங்கி பழக்கத்தை ஏற்படுத்தினார்களாம்.

Bun  என்று சொல்லியே மக்களுக்கு அதை அறிமுகபடுத்தினார்களாம், அதுவே பின்னாளில் பாண் என்று மருவியதாக பழங்கதை சொன்னார்.

எந்த வெள்ளைக்காரர் என்ற விடயம் முக்கியம்.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரிட்டிஸ் ?

எனக்கு புரிந்த வகையில் கோதுமை, பாண், பிரித்தானியார்களுக்கு முன்னம் வந்திருக்கவேண்டும்.

டச்சுக்காரரின், லவ் கேக், கிறிஸ்மஸ் கேக் இன்றும் பேமஸ்.

அநேகமாக, உங்கள் பாட்டி சொன்ன விடயம், பிரிட்டிஸ்காரர் காலத்தில் மிசனரி பாடசாலை கள், போட்டியாக இந்து பாடசாலைகள் என வந்த போது, இலவச Bun, Bread உணவுகள் கொடுத்து மாணவர்களை கவர்ந்தார்கள். இந்தக்காலமே பெண்கள் கல்வி கற்க வெளியே வந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மனமிருந்தால் மார்க்க பந்து🤣

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றுக்கும் முதல் அங்கு சாதியால் பிரிவதை எப்படி அணை போடலாம் என்பதை விவாதிப்பது நன்று.

ரட்ணஜீவன் ஹூல் உம் (சுமந்திரனின் வரலாற்றாசிரியர்), சில யாழ் பல்கலைக்கழக  விற்பனர்களும் சேர்ந்து, பாரம்பரியத்தை காப்பது என்ற பெயரில், 500 வருடத்துக்கு முன்பு இருந்த சாதிகளின் பெயர் கொண்ட வீதிகள் மீட்கப்படவேண்டும் வரவேண்டும் என்று இப்பொது வெளிக்கிட்டு இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

இதென்ன கோதாரியாய் கிடக்கு...நான் ஏதோ சொல்லாப்போக குமுறல் வேறை விதமாய் போகுது.....😃

நான் சொல்ல வந்தது உதாரணத்தை காட்டி ஒரு வித நோக்கங்கள் மட்டுமே. வைச்சால் குடுமி இல்லையேல் மொட்டை எனும் கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை. எமது பூமியில் இருக்கும் வளத்தையும் காலநிலையையும் வைத்து சிந்திக்க வேண்டுமே தவிர சீனாக்காரன் போல் கொப்பி பண்ணும் நோக்கில் நான் எதுவுமே சொல்லவில்லையே?

ஒரு மனிதனுக்கு நோக்கங்கள் இருக்கவேண்டும். அது இருந்தால் தான் முன்னேற முடியும்.
நான் புலம்பெயர்ந்து வந்த புதிதில் என்னைப்பார்த்து ஒரு ஜேர்மன் அதிகாரி கேட்டார் நீங்களும் உங்கள் ஆட்களும் தனிநாடு கேட்கின்றீர்களே? அப்படி என்ன வளம் உங்களிடம் இருக்கு? உங்களால் பிற நாடுகளின் உதவியில்லாமல் தனித்து நிற்க முடியுமா? இதே கேள்வியை உங்களிடம் திருப்பி விடுகின்றேன். பதிலை சொல்லுங்கள்.

 கனவு காணுங்கள் அது என்று அப்துல் கலாம் மேடைக்கு மேடை சொல்வாராம்.அது உங்கள் போன்றோருக்கும் தெரிந்திருக்கும் என நினக்கின்றேன்.

எப்பவும் பினாட்டு ஓடியல் புட்டு  தான் எங்களிட்டை இருக்கு எண்டு  சொல்லுறவையிட்ட நான் சொல்லுறது என்னவெண்டால் சிங்கப்பூரிட்டை அதுவுமில்லை 🤣 
 

அண்ணை,

உங்களை கனவு காண வேண்டாம் எண்டு சொல்லேல்ல, ஆனால் அது ஒரு நடைமுறை கனவாக இருக்க வேண்டும்.

Ambition (கனவு) ற்கும் fantasy (பகற்கனவு) க்கும் வித்தியாசம் உள்ளது.

இலங்கையில் தெற்கே இல்லாதா உல்லாச பயண வருவாயா? இலங்கை மட்டும் அல்ல, மாலைதீவு, தாய்லாந்து, பாலி எல்லா இடமும்தான் - இவை வாழ்க்கையின் தரத்தை பெரிதும் உயர்த்தும், ஒரு கணிசமான பொருளாதார வளர்ச்சியை தரும் ஆனால் இருக்கும் விமான நிலையத்தை தூக்கி இடம்மாற்ற, தண்ணியில்லா தீவுக்கு ஆஸ்பத்திரியை மாற்றி பெரும் செலவில் குழாய் மூலம் தண்ணி எடுத்து போகும் அளவுக்கு நாட்டை முன்னேற்றாது.

அப்படி முன்னேற துபாய், சிங்கபூர் போல நிலத்தின் பெறுமதி (தண்ணியில்லாத, தீவின் கூட) மிக அதிகமாகும் நிலை வரவேண்டும்.

தயவு செய்து எல்லாவற்றிற்கும் “வளமில்லாத சிங்கபூர்” என உதாரணம் காட்டாதீர்கள். சிங்கபூரில் 3 பெரும் வளங்கள் இருந்தன.

1. தீர்க்கமான தலைமைதுவம்

2. கடின உழைப்பு, கட்டுப்பாடு மிக்க மனிதவளம்

3. சிங்கபூர் நீரிணை, மலாக்கா நீரிணை சந்தியில், சர்வதேச கப்பல் போக்குவரத்து வீதியில் இருந்த அமைவிடம்

4. எல்லாவற்றிலும் முக்கியமாக சிங்கபூருக்கு இருந்த “சுய நிர்ணயம்”.

4 வது இல்லாமல் வேறு எது இருந்தும் பயனில்லை. ஏனென்றால் பெளத்த-சிங்கள இலங்கையிடம் 1, 2ம் இல்லை.

3 யாழ்பாணதுக்கு இல்லவே இல்லை.

1 தலைவரிடம் மட்டும் இருந்தது.

2 ஒரு காலத்தில் யாழில் இருந்தது. இப்போ இல்லை.

நான் மேலே சொன்ன 4 வளங்களும் இன்றைக்கு திடீரென இறை அருளால் கைகூடி, தலைவர் போல ஒரு அதிபர் வாய்த்தாலும் - மண்டைதீவுக்கு ஆஸ்பத்திரியை மாத்தவோ, பலாலியை தூக்கி ஊறாத்துறையில் இறக்கவோ, அது லாபம் தரும் செயலாக (economically viable) வர இன்னும் குறைந்தது 40 ஆண்டு எடுக்கும்.

அடுத்து Batam, Bintam உட்பட சிங்க்பூரின் அதே அமைவிடத்தோடு எதிர் கரையில் இந்தோனேசியாவின் பல தீவுகள் உள்ளன. உள்ளது ஓரளவு முன்னேறியது பதாம். அதை போய் பார்த்தால் - அது யாழ்பாணம் அளவுக்குத்தான் முன்னேறியுள்ளது. ஆகவே எல்லாராலும் சிங்கபூர் ஆக முடியாது. 

நான் வடகிழக்கில் உல்லாசதுறையில் முதலிட்ட அனுபவத்தையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

கனவு காணலாம், பகற்கனவு காணக்கூடாது. 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

எந்த வெள்ளைக்காரர் என்ற விடயம் முக்கியம்.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரிட்டிஸ் ?

பாட்டி தன்னோட காலத்து பாண் கதை சொன்னால் அது Automatic'கா ஆங்கிலேயர் காலம்தானே நாதம்ஸ்,

போத்துக்கேயர் ஒல்லாந்தர்கால 250,300  ஆண்டுகளுக்கு முன்னர் பாட்டி பிறந்திருக்கவே வாய்ப்பில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, valavan said:

பாட்டி தன்னோட காலத்து பாண் கதை சொன்னால் அது Automatic'கா ஆங்கிலேயர் காலம்தானே நாதம்ஸ்,

போத்துக்கேயர் ஒல்லாந்தர்கால 250,300  ஆண்டுகளுக்கு முன்னர் பாட்டி பிறந்திருக்கவே வாய்ப்பில்லையே.

உங்க பாட்டிட பெயர் ஒளவையா🤣.

21 minutes ago, Kadancha said:

எல்லாவற்றுக்கும் முதல் அங்கு சாதியால் பிரிவதை எப்படி அணை போடலாம் என்பதை விவாதிப்பது நன்று.

ரட்ணஜீவன் ஹூல் உம் (சுமந்திரனின் வரலாற்றாசிரியர்), சில யாழ் பல்கலைக்கழக  விற்பனர்களும் சேர்ந்து, பாரம்பரியத்தை காப்பது என்ற பெயரில், 500 வருடத்துக்கு முன்பு இருந்த சாதிகளின் பெயர் கொண்ட வீதிகள் மீட்கப்படவேண்டும் வரவேண்டும் என்று இப்பொது வெளிக்கிட்டு இருக்கிறார்கள்.

லின்ங்ஸ் ஏதும்?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

லின்ங்ஸ் ஏதும்?

https://island.lk/place-names-say-who-we-are-nallur-triumphs-nellore/

https://www.colombotelegraph.com/ யிலும் வந்தது.

https://island.lk/the-tenacity-of-caste/

அனால், ரட்ணஜீவன் ஹூல் 2014 மட்டத்தில் இருந்து இந்த சாதியை தூக்கி  பிடித்து வருகிறார். ஆறுமுக நாவலரின், சாதி பார்ட்டியா பார்வையை நியாயப்படுத்தும் படைப்பும் வெளியிட்டு இருக்கிறார், பாரம்பரியம் காப்பது என்ற நோக்கில்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kadancha said:

https://island.lk/place-names-say-who-we-are-nallur-triumphs-nellore/

https://www.colombotelegraph.com/ யிலும் வந்தது.

https://island.lk/the-tenacity-of-caste/

அனால், ரட்ணஜீவன் ஹூல் 2014 மட்டத்தில் இருந்து இந்த சாதியை தூக்கி  பிடித்து வருகிறார். ஆறுமுக நாவலரின், சாதி பார்ட்டியா பார்வையை நியாயப்படுத்தும் படைப்பும் வெளியிட்டு இருக்கிறார், பாரம்பரியம் காப்பது என்ற நோக்கில்.

நன்றி.

ஓம் முந்தியும் ஒருக்கா தான் பெரிய கத்தோலிக்க உயர் சாதிகாரன் எண்டு எழுதினவர்😡.

என்னத்தை படிச்சு…என்னத்தை கிழிச்சு…

  • கருத்துக்கள உறவுகள்

வாசித்து விட்டு சொல்லவும், ரட்ணஜீவன் ஹூல் மற்றும் Jaffna university விற்பனர்கலின் எண்ணம் , ஆயுதப் போராட்டத்தின் மூலம், ஓரளவு தணிக்கப்பட்ட  சாதி வேறுபாடுகள், எங்கே எமது சமூகதத்தை கொண்டு போகும்   என்று.

இது, சுமந்திரனின் மறுபக்க (அதாவது சமூக ஒத்திசைவு மற்றும் ஒருங்கு தன்மை குலைத்தல் ) திட்டமோ  என்று, சுமந்திரனின் உள்ளூர் / மற்றும் சர்வதேச பேரங்ககளை தடை  இன்றி அறிமுகப்படுத்துதற்கும், கொண்டு செல்வதற்கும்  சந்தேகிக்க வேண்டி இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, valavan said:

பாட்டி தன்னோட காலத்து பாண் கதை சொன்னால் அது Automatic'கா ஆங்கிலேயர் காலம்தானே நாதம்ஸ்,

போத்துக்கேயர் ஒல்லாந்தர்கால 250,300  ஆண்டுகளுக்கு முன்னர் பாட்டி பிறந்திருக்கவே வாய்ப்பில்லையே.

தேன், தினை, கொள்ளு, கம்பு, குரக்கன்… போன்றவற்றை… சாப்பிட்ட எமது முப்பாட்டி, கொள்ளுப் பாட்டி எல்லாரும்…

200, 300 வருசம் வாழ்ந்து இருப்பார்கள் தானே…

வெள்ளைக்காரனின்… கோதம்ப மாவை சாப்பிடத் தொடங்கின பிறகுதான்… அல்ப ஆயுசிலை சாக வேண்டி வந்திட்டுது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

பாட்டி தன்னோட காலத்து பாண் கதை சொன்னால் அது Automatic'கா ஆங்கிலேயர் காலம்தானே நாதம்ஸ்,

போத்துக்கேயர் ஒல்லாந்தர்கால 250,300  ஆண்டுகளுக்கு முன்னர் பாட்டி பிறந்திருக்கவே வாய்ப்பில்லையே.

நல்ல நகைச்சுவை, வளவர்.....

எனது குறிப்பு உங்கள் பாட்டியின் வாழ்ந்த காலம் குறித்ததல்ல....

நீஙகள் சொன்ன கோதுமை, பாண் அறிமுகப்படுத்தினது குறித்தது.

(வெள்ளைக்காரர் காலத்தில் கோதுமை மற்றும் பாணை அறிமுகபடுத்தியபோது )

கொப்பிழக்காமல் கருத்தாடுவோம்.....

கொப்பிழக்க வைக்கவும், பார்த்து கைதட்டவும் அண்ணாச்சிகள் அலைமோதுவர்...... கவனம். 😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

நல்ல நகைச்சுவை, வளவர்.....

எனது குறிப்பு உங்கள் பாட்டியின் வாழ்ந்த காலம் குறித்ததல்ல....

நீஙகள் சொன்ன கோதுமை, பாண் அறிமுகப்படுத்தினது குறித்தது.

(வெள்ளைக்காரர் காலத்தில் கோதுமை மற்றும் பாணை அறிமுகபடுத்தியபோது )

கொப்பிழக்காமல் கருத்தாடுவோம்.....

கொப்பிழக்க வைக்கவும், பார்த்து கைதட்டவும் அண்ணாச்சிகள் அலைமோதுவர்...... கவனம். 😁

நாதம்ஸ்… இது, யாருக்கோ… உள் குத்துப் போலை கிடக்குது. 🤣😂

அது… யார் எண்டு, கண்டு பிடிக்கிறது தான்… கஸ்ரமாயிருக்கு. 😂😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

நாதம்ஸ்… இது, யாருக்கோ… உள் குத்துப் போலை கிடக்குது. 🤣😂

உள்குத்தெல்லாம் இல்லை.

சகலதையுமே, என்னத்தே கன்னையா ஸ்ரைலில பார்க்காமல், கனவு காணுங்கோ என்று சொல்கிறேன்.

தலைவர், கைத்துவக்கு வாங்க காசிலாமல் தவித்தார். கனவு.... பின்னாளில் வல்லரசொன்றுடன் மோத வைத்தது.

யாருமே, அவருக்கு பகல்கனவு காணாதே என்று சொல்லவில்லை.

மேலே சாமியார் சொன்ன, அப்துல் கலாம், உறக்கத்தில் வருவதில்லடா கனவு, உறக்கமில்லாமல் உழைக்க வைப்பதே கனவு என்றார்.

நான் யாரையும் குறை சொல்லவில்லை.

ஆனால், இருபது, முப்பது வருடத்தில் தாயகம் எப்படி இருக்கவேண்டும் என்று கனவாவது காண்போம். 👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.