Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை தொடர்ந்து முஸ்லிம்களையும் விட்டு வைக்காத பயங்கரவாத தடைச்சட்டம்  :  அம்பிகா சற்குணநாதன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை தொடர்ந்து முஸ்லிம்களையும் விட்டு வைக்காத பயங்கரவாத தடைச்சட்டம்  :  அம்பிகா சற்குணநாதன்

ஆரம்பத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்கள் மீது பயன்படுத்தப்பட்டபோதும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மீதும் பயன்படுத்தப்படுகின்றது என  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.  

வீரகேசரிக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனைக் கூறினார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள எத்தனையோ நபர்களுக்கு எதிராக வழங்கு தொடுக்கப்படவில்லை. 

அவ்வாறு வழக்கு தொடுக்கப்படவும் தகுந்த ஆதாரங்கள் இல்லை. அவர்களின் குற்றங்களை கண்டுபிடிக்க 10 - 12 வருடங்களுக்கு மேல் உரிய தரப்பினருக்கு செல்கின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.

சட்டத்தரணியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான அம்பிகா சற்குணநாதன் வீரகேசரிக்கு வழங்கிய நேர்காணலைக் காண.....

https://www.virakesari.lk/article/115537

 

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறையினை அரசாங்கம் உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - சர்வதேச மன்னிப்பு சபை

2013 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் முஸ்லிம் சமூகம் தொடர்ச்சியான பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் வன்முறை சம்பவங்களை அனுபவித்து வருவதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

இது சிறுபான்மை குழுவை வெளிப்படையாக குறிவைக்கும் அரசாங்கக் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதில் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

எரியும் வீடுகள் முதல் எரியும் உடல்கள் வரை இலங்கையில் முஸ்லிம் துன்புறுத்தல், பாகுபாடு மற்றும் வன்முறை, சிங்கள- பெளத்த தேசியவாதத்தின் மத்தியில் 2013 முதல் இலங்கையில் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வின் வளர்ச்சியைக் கண்டறிந்துள்ளது. 

இந்த பாகுபாடு, தண்டனையின்றி தொடர்ச்சியான கும்பல் தாக்குதல்களிலிருந்து, முஸ்லிம்களுக்கு எதிராக வெளிப்படையாக பாகுபாடு காட்டும் அரசாங்கக் கொள்கைகளாக உருவானது.

இதில் கொவிட் -19 இதனால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்வது மற்றும் நிகாப் (முகத்திரை) மற்றும் மதரசாக்கள் (மதப் பாடசாலைகள்) இரண்டையும் தடை செய்ய தற்போதைய திட்டங்கள் ) போன்ற திட்டங்களும் உள்ளடங்கும்.

இலங்கையில் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வு ஒன்றும் புதிதல்ல என்றாலும், சமீபத்திய ஆண்டுகளில் நிலைமை கடுமையாக பின்னடைவை சந்தித்துள்ளது. 

இலங்கை அதிகாரிகள் இந்த ஆபத்தான போக்கை கைவிட்டு, முஸ்லிம்களை மேலும் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பது, குற்றவாளிகளை பொறுப்பேற்கச் செய்வது மற்றும் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து, துன்புறுத்துதல் மற்றும் பாகுபாடு காட்டுவதற்கான அரசாங்கக் கொள்கைகளின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்பு சபை அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறையினை அரசாங்கம் உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - சர்வதேச மன்னிப்பு சபை | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழர்களை வைத்தே முஸ்லிம்களுக்காக ஓங்கி குரல் கொடுக்கிறது வீரகேசரி. 

பயங்கரவாத தடை சட்ட காலத்தில் அதை கொடூரமாக தமிழர்கள்மீது ஏவிவிட  புலனாய்வாளர்களாக, ராணுவத்தினராக, பொலிஸ் அதிகாரிகளாக  தமிழர்கள்பற்றி தகவல் கொடுப்போராக , பல படுகொலைகள் காணாமல் போதலுக்கு சிங்களவர்களுடன்  தோளோடு தோள் நின்று பாடுபட்டது இஸ்லாமிய சமூகம்.

அந்நாட்களின் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றி முஸ்லீம்களை வைத்து ஒரு நேர்காணலை வீரகேசரி நடத்தியதாக நினைவிலேயே இல்லை.

இலங்கை மட்டுமல்ல உலகம் எங்கிலும் முஸ்லீம்கள் தினசரி  இந்த உலகுக்கு இழைக்கும் அநீதிகளைபற்றி பேசுவதைக்காட்டிலும், முஸ்லீம்களுக்கு சிறு அநீதி இழைக்கப்பட்டால் அதை உலகம் முழுவதும் பாரிய மனித உரிமை மீறலாக பார்க்கப்படுவதே அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ஆமாம் இந்த உலகில் முஸ்லிம்களுக்கு மட்டும்தான் அநீதி இழைக்கப்படுகின்றது. முஸ்லீம்கள் பத்தரை மாற்றுத் தங்கங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச மன்னிப்பு சபையின் இரட்டை வேடம் பலர் அறிந்தது தான்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.