Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை வருகின்றார்... இந்திய கோடீஸ்வரர், கவுதம் அதானி – ஜனாதிபதியை சந்திக்க திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வருகின்றார் இந்திய கோடீஸ்வரர் கவுதம் அதானி – ஜனாதிபதியை சந்திக்க திட்டம்

இலங்கை வருகின்றார்... இந்திய கோடீஸ்வரர், கவுதம் அதானி – ஜனாதிபதியை சந்திக்க திட்டம்

இந்திய அதானி குழுமத்தின் தலைவர் கௌவுதம் அதானி இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க உள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வருவதற்கு அவர் திட்டமிட்டுள்ளதாக உயர்மட்ட அதிகாரிகளை மேற்கோளிட்டு இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்குகளை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒரு மாதத்திற்கு முன்னர் கைச்சாத்திடப்பட்டது.

இந்நிலையில் இலங்கையின் துறைமுகங்கள், மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொடர்பான திட்டங்களில் முதலிடுவதற்கு அதானி ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கும் போது இந்த துறைகளில் சாத்தியமான திட்டங்கள் குறித்து அதானி விவாதிப்பார் என்றும் இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

https://athavannews.com/2021/1246681

  • கருத்துக்கள உறவுகள்

அதானி குழுமத்தின் தலைவர் இன்று ஜனாதிபதி கோட்டாபயவை சந்திக்கிறார் | Virakesari.lk

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத் திட்டத்தை உருவாக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

kviGoDga?format=jpg&name=small

கொழும்பு மற்றும் புதுடில்லியில் உள்ள அதிகாரப்பூர்வ வட்டாரங்களை மேற்கொள்காட்டி இந்த தகவலை 'தி இந்து' தெரிவித்துள்ளது.

"இது ஒரு தனிப்பட்ட விஜயம் மற்றும் மேற்கு கொள்கலன் முனையம் திட்டம் பற்றி விவாதிக்க திரு. அதானி ஜனாதிபதியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தி இந்துவிடம் உறுதிபடுத்தியுள்ளார்.

அதேநேரம் இலங்கை வந்துள்ள அதானி, நாட்டின் உயர்மட்ட பிரமுகர்களுடனான சந்திப்புகளையும் மேற்கொள்ளவுள்ளார்.

அதானி குழுமம் ஒரு மெய்நிகர் விழாவில், அதன் இலங்கைப் பங்காளியான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை (SLPA) ஆகியவற்றுடன் ஒரு ஒப்பந்தத்தில் (BOT) கையெழுத்திட்ட ஒரு மாதத்திற்குள் அதானியின் விஜயம் அமைந்துள்ளது.

அதானி குழுமத்தின் தலைவர் இன்று ஜனாதிபதி கோட்டாபயவை சந்திக்கிறார் | Virakesari.lk

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, பிழம்பு said:

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத் திட்டத்தை உருவாக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

அதானி  ஐயா  நீங்கள் ஏன் நெடுந்தீவிலை ஒரு துறைமுகம் கட்டக்கூடாது?  😎

625.298.560.350.160.300.053.800.522.160.90%2B%252825%2529.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் வாருங்கோ! வந்து பாருங்கோ! வேண்டியதுக்கு தீருங்கோ விலையை,  நான் கைச்சாத்திடுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றுச் சூழல் பற்றிச் சற்றும் கண்ச்க்கிலெடுக்காத ஒரு ஒப்பந்தக் காரர் இவர்.இந்தியாவில் இவர் கொங்கிறீற் கழிவுகளைக் கடலுக்குள் கொட்டுவது வழக்கம். அவுஸில் ஒரு நிலக்கரி அகழ்வுத் திட்டம் ஒன்றைப் பொறுப்பெடுத்திருக்கிறார். இவரது கொம்பனியை ஒரு ட்ரஸ்ற் அமைப்பாக அமைத்துள்ளார். உலகின் மிகப் பெரிய பவளப் பாறைத்தொடர் இவரது கப்பல் கழிவுகளால் பாதிக்கப் பட்டால், இவரது கம்பனியைச் சட்டத்தால் குற்றவாளியாக்க இயலாது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

அதானி  ஐயா  நீங்கள் ஏன் நெடுந்தீவிலை ஒரு துறைமுகம் கட்டக்கூடாது?  😎

மன்னிக்கவும்.

அது ஏற்கனவே சீனாக்காரனுக்கு கொடுத்தாகிவிட்டது.

வேற இடம் பிடித்தா சொல்லுங்க.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு முனையம் மாத்திரமல்ல ஏனைய உட்கட்டமைப்புகளிலும் கூட்டாண்மை - கௌதம் அதானி

(எம்.மனோசித்ரா)

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு மேலதிகமாக, அதானி குழுமம் ஏனைய உட்கட்டமைப்பு கூட்டாண்மைகளை ஆராயும் என்று அதானி குழுமத்தின் தலைவரும், இந்தியாவின் பிரபல வர்த்தகருமான கௌதம் அதானி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையுடனான இந்தியாவின் வலுவான பிணைப்பு பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்று உறவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் கௌதம் அதானி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டுள்ள கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் அதானி குழுமத்தின் தலைவரும், இந்தியாவின் பிரபல வர்த்தகருமான கௌதம் அதானி நேற்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பின்னர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

249119346_1002163396997127_7745831921358

'இலங்கைக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் ராஜபக்ஷவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு மேலதிகமாக, அதானி குழுமம் ஏனைய உட்கட்டமைப்பு கூட்டாண்மைகளை ஆராயும். இலங்கையுடனான இந்தியாவின் வலுவான பிணைப்பு பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்று உறவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.' என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

242903187_419737142866174_48782946913619

பிரத்தியேக இரண்டு விமானங்களில் கௌதம் அதானி உள்ளிட்ட குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நாட்டை வந்தடைந்தனர். இவ்வாறு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கௌதம் அதானி, மேற்கு முனைய அபிவிருத்தி மாத்திரமின்றி, எரிசக்தி துறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக 'த இந்து'  செய்தி வெளியிட்டிருந்தது.

இது தொடர்பில் செவ்வாயன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பப்பட்ட போது , ' இலங்கைக்குள் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்துவதற்காக செயற்படுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடுகள் அத்தியாவசியமானவையாகும். நாம் எதிர்கொள்ளும் டொலர் தட்டுப்பாட்டுக்கு தீர்வாகவும் , நாட்டின் அபிவிருத்திக்காகவும் குறித்த முதலீடுகளை பெற்றுக் கொள்வது விசேட காரணியாகும்.

தற்போது காணப்படுகின்ற நிலைமைகளின் கீழ் உலக நாடுகள் பலவற்றுடன் செயற்படும் போது முதலீட்டார்கள் குறைவாகக் காணப்படுகின்ற நாடு இலங்கை என்ற நிலைமையை சீராக்கி , நாட்டுக்கு முதலீட்டார்களை வரவேற்பது அவசியமாகும். அதற்கான வாய்ப்பினை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.' என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண பதிலளித்தார்.

இந்நிலையில் துறைமுகம், எரிசக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி செயற்றிட்டம் தொடர்பில் இலங்கையின் உயர் அதிகாரிகளுடன் கௌதம் அதானி கலந்துரையாடவுள்ளதாகவும் த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. 

இதனிடையே, இந்திய வர்த்தகர்கள் சிலர் செவ்வாய்கிழமை மாலை மன்னாருக்கு சென்றுள்ளனர். இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக, இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் சஞ்சய மொஹொட்டால ஆகியோரும் அவர்களுடன் அங்கு சென்றிருந்தார்.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்கை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கை கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையிலேயே அவரது விஜயம் அமைந்துள்ளது. 

அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார வலயத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியான கௌதம் அதானியின் மகன், அதானி பசுமை எரிசக்தி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் உள்ளிட்டோரும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இதற்கு முன்னர் இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையில் கூட்டுத் திட்டமாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு பிரேரிக்கப்பட்டிருந்தது. தற்போதைய அரசாங்கம் அந்தத் திட்டத்தை நிறுத்தி, மேற்கு முனையத்தை அதானி குழுமம் தலைமையிலான கூட்டுத் திட்டத்திற்கு வழங்கியது.

 

https://www.virakesari.lk/article/116088

 

  • கருத்துக்கள உறவுகள்
On 26/10/2021 at 12:03, புங்கையூரன் said:

. அவுஸில் ஒரு நிலக்கரி அகழ்வுத் திட்டம் ஒன்றைப் பொறுப்பெடுத்திருக்கிறார். இவரது கொம்பனியை ஒரு ட்ரஸ்ற் அமைப்பாக அமைத்துள்ளார். உலகின் மிகப் பெரிய பவளப் பாறைத்தொடர் இவரது கப்பல் கழிவுகளால் பாதிக்கப் பட்டால், இவரது கம்பனியைச் சட்டத்தால் குற்றவாளியாக்க இயலாது.

இன்னமும் இது தொடர்பான வழக்கு நடந்துகொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.. சுற்றுபுற சூழல் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அமைப்பான ACF (Australian Conservation Foundation) Suttor ஆற்றிலிருந்து இந்த coal mineற்கு தண்ணீர் எடுப்பது சம்பந்தமான வழக்கில் வெற்றி பெற்றுள்ளது. Traditional owners வழக்கிலும் பிரச்சனைகள்.. 

இவருடைய இந்த Carmichael coal mine பற்றிய விபரங்களை அறியும் பொழுது, இந்த திட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு செய்யும் செயல்களை பார்க்கும் பொழுது ஆபத்தான ஒருவர் என்பது தெரிகிறது.. 

 

@குமாரசாமிஅண்ணா இவரை ஏன் நெடுந்தீவிற்கு எல்லாம் போகசொல்கிறீர்கள்.. இருப்பதையும் அழிப்பதற்காகவா? 

Edited by பிரபா சிதம்பரநாதன்
சொல் சேர்க்கப்பட்டது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.