Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கு மாகாண ஆளுநராக மறுபடியும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி யொருவர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண ஆளுநராக மறுபடியும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி யொருவர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்!

கிழக்கு மாகாண ஆளுநராக மறுபடியும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி யொருவர் நியமிக்கப்பட உள்ளதாக கிழக்கு வாழ் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகின்றது.

கிழக்கில் அரச நிலங்களை அபகரிதது அரபு தனவந்தர்களுக்கு விற்பனை செய்த ஒரு அரசியல்வாதியே புதிய ஆளுநராக நியமிக்கப்பட இருப்பதாக கிழக்கு மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது.

முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெறும் வகையில் அரசாங்கம் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பாக கிழக்கு மகாண ஆளுநரைத் தொர்புகொண்டு வினவியபோது, தான் இன்னும் பதவி விலகவில்லை என்று மாத்திரம் தெரிவித்தார்.

கிழகக்கில் தமிழ் மக்களின் கோயில் காணிகளை அபகரித்து பள்ளிவாசல் கட்டி இன விரோதத்திற்கு வித்திட்டு, பல இன வன்முறைகளை நேரடியாக மேற்கொண்டவரும், இஸ்லாமிய ஆயுதக் குழுக்களுக்கு பக்கபலமாக இருந்தவரும், ஈஸ்டர் குண்டுவெடிப்பின் முக்கிய சந்தேகதாரயுமான அந்த குறிப்பிட்ட அரசியல்வாதி கிழக்கின் ஆளுனராக நியமிக்கப்படுவது, மீண்டும் கிழக்கில் வன்முறைகள் பாரிய அளவில் வெடிப்பதற்கு வகைதேடித்தரும் என்று அச்சப்படுகின்றார்கள் கிழக்கு வாழ் தமிழ்- முஸ்லிம் மக்கள்.
 

 

https://www.meenagam.com/கிழக்கு-மாகாண-ஆளுநராக-மற/

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண ஆளுநராக முபாரக் மௌலவியை நியமிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடப்பட்டது.

AVvXsEiC78O6QAOMmlYDnJa4AiH-ulrLJW2RYA0oqy6OxzpMp2Uxr578omr4eCZCqwQdBguBXOzuqGZIL1_lYqAJS9qzweMik2l5U2AkTn2hOqWa8v0pFnAysqRBvg2XwYveHfGTPRS0WU7IjOGHBI4O87Oem4BozdqhtKHT5Rj84RlpyXWR4yUdBnFfVnZK=s16000

கிழக்கு மாகாண ஆளுநராக ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீதை நியமிக்குமாறு

கட்சியின் பிரதித் தலைவர் கா.மு. மழ்ஹர்தீன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

கிழக்கு மாகாண ஆளுநராக மறுபடியும்  முஸ்லிம் அரசியல்வாதி யொருவர் நியமிக்கப்பட உள்ளதாக கிழக்கு வாழ் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகின்ற நிலையில்

ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநராக நியமனம் செய்யுமாறு குறித்த கட்சியின் பிரதித்தலைவர் கா.மு. மழ்ஹர்தீன் அவர்களால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றின் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அவர் குறித்த கடிதத்தில்  தெரிவித்துள்ளதாவது; 

2005ஆம் ஆண்டு முதல் ராஜபக்ச அரசோடு தொடர்ந்தும் இணைந்திருக்கும் ஒரே முஸ்லிம் கட்சி முபாரக் அப்துல் மஜீத் அவர்களின் தலைமையிலான கட்சி என்றும் அனைத்து சவால்களின் பொழுதும் அரசுக்கு உறுதுணையாக அவர் செயற்பட்டவர் என்ற அடிப்படையிலும் கிழக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு மிகவும் தகுதி தகுதியானவர் என்பதால் அவரை அப்பதவிக்கு நியமிக்குமாறு கா.மு. மழ்ஹர்தீன் தெரிவித்துள்ளார்.

 

எனினும் கடந்த ஆட்சியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் கிழக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டு இனவாத கெடுபிடிகளால் பதவியை ராஜினாமா செய்த கலாநிதி எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் பெயரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகுதாவுத் அவர்களின் பெயரும் இப்பதவிக்கு ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ளதுதாக சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது

AVvXsEjyhNE_H0KFuGyXWGTrWXfdvODhZfjvz1OeCWT3719N1CbM0nxCMewGQNM1GNtbYrUw___QNTyju1WudF6Bf-PO3OR5SaL3cpUgzKHbAFox1Hfs3w3iXvOakrowh4jJZGWS6sLAs7bW7isvs69yvU5TySho0uMw999PENyMAz9k507W3-JB4VH5L1S2=s16000

https://www.madawalaenews.com/2021/10/mub.html

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, colomban said:

ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநராக நியமனம் செய்யுமாறு குறித்த கட்சியின் பிரதித்தலைவர் கா.மு. மழ்ஹர்தீன் அவர்களால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றின் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அடப்பாவி இந்தலூசையா ஆளுனராக்கப்போறீங்கள்....? வேற ஆள் கிடைக்கலயாடா உங்களுக்கு 
கூட்டத்தொடரில் கக்காக்கு இருந்திவிட்டு வருவதற்கு தான் இது லாயக்கு   

  • கருத்துக்கள உறவுகள்

இவர் நம்ம… கொழும்பானின் உற்ற நண்பர். 😂 🤣 😜

  • கருத்துக்கள உறவுகள்

அரபிக்கில் முபாறக் என்றால் வாழ்துக்கள்    என்று அர்த்தம் என நினைக்கிறேன்.

முபாரக், முபாரக் ஜி🤣.

இனி ஆளுனர் லெட்டர்பார்ட்டில் அக்மார்க் ஜோக்குகளை எதிர்பார்க்கிறோம் ( கோட்டா அவ்வளவு முட்டாளா?).

ஆனால் கிழக்கை முஸ்லிம்களிடம் இருந்து மீட்பதாக புறப்பட்டு போன எம்பிகள், அமைச்சர்கள் இதுக்கு என்ன சொல்ல போகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

அரபிக்கில் முபாறக் என்றால் வாழ்துக்கள்    என்று அர்த்தம் என நினைக்கிறேன்.

முபாரக், முபாரக் ஜி🤣.

இனி ஆளுனர் லெட்டர்பார்ட்டில் அக்மார்க் ஜோக்குகளை எதிர்பார்க்கிறோம் ( கோட்டா அவ்வளவு முட்டாளா?).

ஆனால் கிழக்கை முஸ்லிம்களிடம் இருந்து மீட்பதாக புறப்பட்டு போன எம்பிகள், அமைச்சர்கள் இதுக்கு என்ன சொல்ல போகிறார்கள்?

நான் பார்த்த இவரின் படங்களில் எல்லாம்… ஒரேயொரு சிவப்பு தொப்பியுடன்தான், காட்சி தருகிறார்.

ஆளுராக வந்தபின்… பச்சை, நீலம், வெள்ளை என்று… பல்வேறு நிறங்களில், தொப்பி வாங்கிப் போட வாழ்த்துகின்றோம்.  🤣

(இவர் ஆளுனர் என்றால்… அவரே நம்ப மாட்டார்) 😂

ஆளுனருக்கு என்று… ஒரு முகவெட்டு இருக்குது. அது… இவரிடம் சுத்தமாக… “மிஸ்சிங்” 😜

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அரபிக்கில் முபாறக் என்றால் வாழ்துக்கள்    என்று அர்த்தம் என நினைக்கிறேன்.

முபாரக், முபாரக் ஜி🤣.

இனி ஆளுனர் லெட்டர்பார்ட்டில் அக்மார்க் ஜோக்குகளை எதிர்பார்க்கிறோம் ( கோட்டா அவ்வளவு முட்டாளா?).

ஆனால் கிழக்கை முஸ்லிம்களிடம் இருந்து மீட்பதாக புறப்பட்டு போன எம்பிகள், அமைச்சர்கள் இதுக்கு என்ன சொல்ல போகிறார்கள்?

கிட்டத்தில சொன்ன ஜோக் வா

ஹிஜ்ரி 70ல் இல‌ங்கையில் இருந்து ப‌ச‌ரா நோக்கி புற‌ப்ப‌ட்ட‌ முஸ்லிம்க‌ளின் க‌ப்ப‌லை சிந்துவைச்சேர்ந்த‌ கூட்ட‌ம் கைப்ப‌ற்றிய‌து. அதில் ப‌ல‌ முஸ்லிம் பெண்க‌ள் இருந்த‌ன‌ர். இவ‌ர்க‌ளை மீட்டெடுப்ப‌த‌ற்காக‌ 17 வ‌ய‌து நிர‌ம்பிய‌ முஹ‌ம்ம‌த் இப்னு காசிமின் த‌லைமையில் ஹ‌ஜ்ஜாஜ் இப்னு யூசுப் ப‌ண்ணிர‌ண்டாயிர‌ம் பேர் கொண்ட‌ ப‌டையை அனுப்பி சிந்து ப‌ள்ள‌த்தாக்கை வெற்றி கொண்டார்.
ஆக‌வே இற்றைக்கு சுமார் 1350 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் இல‌ங்கையில் முஸ்லிம்க‌ள் வாழ்ந்துள்ளார்க‌ள் என்ப‌தும் ந‌பிக‌ளார் கால‌த்திலும் இல‌ங்கையில் முஸ்லிம்க‌ள் வாழ்ந்திருக்கிறார்க‌ள் என்ப‌தும் தெளிவாகிற‌து. த‌னியான‌ க‌ப்ப‌ல் ஒன்றில் ப‌ய‌ண‌ம் செய்யும‌ள‌வு இல‌ங்கை முஸ்லிம்க‌ள் ப‌ல‌முள்ள‌வ‌ர்க‌ளாக‌வும் இருந்துள்ளார்க‌ள்.
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, colomban said:

ஹ‌ஜ்ஜாஜ் இப்னு யூசுப்

இதில் ஒரு தரவு பிழை உள்ளது.

அது ஹஜ்ஜாஜ் அல்ல, அது பஜாஜ் இப்னு யூசுப்.

அவர்கள் கப்பலில் போகவில்லை, புதிதாக ஒரு மூன்று சக்கர நீர்மூழ்கியை தயாரித்து போனார்கள். இன்றும் இந்தியாவில் ஆட்டோக்கள் பஜாஜ் என்ற பெயரில் இருப்பது இதனால்தான். இந்திய துணைகண்டம் இந்தோனேசியா எங்கினும் முஸ்லீம்கள் பெரிதும் ஆட்டோ ஓடுவதை கண்டிருப்பீர்கள், இதற்கும் பஜாஜ் இப்னு யூசுப் என்ற இலங்கை முஸ்லீமே காரணம்.

 - உடான்ஸ் சாமியார் - 

2 hours ago, தமிழ் சிறி said:

ஆளுனருக்கு என்று… ஒரு முகவெட்டு இருக்குது. அது… இவரிடம் சுத்தமாக… “மிஸ்சிங்

கோட்டா விட்ட கேட்டா ஒண்டு ரெண்டு வெட்டா போட்டுவிட மாட்டாரா என்ன🤣🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

முழு இலங்கைக்குமே முஸ்லீம் சமுதாயத்தை சார்ந்த ஒருவர் விரைவில் ஜனாதிபதியாக வரும் வாய்ப்பு உள்ள போது இதில் அலட்டி கொள்ள என்ன உள்ளது..?

201808142042195046_BJP-MPs-petition-to-P

பெரும்பான்மை சனம் தீர்மானிப்பது தான் சனநாயகம் எனில் விரைவில் இது நடக்கும் .👍

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

கிழக்கு மாகாண ஆளுநராக மறுபடியும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி யொருவர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்!

கிழக்கு மாகாண ஆளுநராக மறுபடியும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி யொருவர் நியமிக்கப்பட உள்ளதாக கிழக்கு வாழ் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகின்றது.

கிழக்கில் அரச நிலங்களை அபகரிதது அரபு தனவந்தர்களுக்கு விற்பனை செய்த ஒரு அரசியல்வாதியே புதிய ஆளுநராக நியமிக்கப்பட இருப்பதாக கிழக்கு மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது.

முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெறும் வகையில் அரசாங்கம் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பாக கிழக்கு மகாண ஆளுநரைத் தொர்புகொண்டு வினவியபோது, தான் இன்னும் பதவி விலகவில்லை என்று மாத்திரம் தெரிவித்தார்.

கிழகக்கில் தமிழ் மக்களின் கோயில் காணிகளை அபகரித்து பள்ளிவாசல் கட்டி இன விரோதத்திற்கு வித்திட்டு, பல இன வன்முறைகளை நேரடியாக மேற்கொண்டவரும், இஸ்லாமிய ஆயுதக் குழுக்களுக்கு பக்கபலமாக இருந்தவரும், ஈஸ்டர் குண்டுவெடிப்பின் முக்கிய சந்தேகதாரயுமான அந்த குறிப்பிட்ட அரசியல்வாதி கிழக்கின் ஆளுனராக நியமிக்கப்படுவது, மீண்டும் கிழக்கில் வன்முறைகள் பாரிய அளவில் வெடிப்பதற்கு வகைதேடித்தரும் என்று அச்சப்படுகின்றார்கள் கிழக்கு வாழ் தமிழ்- முஸ்லிம் மக்கள்.
 

 

https://www.meenagam.com/கிழக்கு-மாகாண-ஆளுநராக-மற/

அந்த முக்கிய அரசியல்வாதியின் பெயரை வெளிப்படையாக எழுத மீனகம். கொம் அஞ்சுகின்றதா அல்லது இது ஒரு கிசுகிசு செய்தியா? 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, அக்னியஷ்த்ரா said:

அடப்பாவி இந்தலூசையா ஆளுனராக்கப்போறீங்கள்....?

ஒருலூசு இன்னொரு லூசை நியமிப்பதில் என்ன தவறு கண்டீர்கள்? எதற்கெடுத்தாலும் புலிகளை இழுத்து மழுப்பும் மாத்தையாவிற்கு, கூட இருந்து ஒத்தாசை புரிந்தவரை பதவியில் வைத்தால் பக்கப்பாட்டுக்கு ஆமா போடா வசதியாய் போகும். அவர்களே நெடுங்குரலெடுத்து சொல்லுகிறார்கள் "விடுதலை போராட்டத்தில் எங்கள் உதவியில்லாமல் இராணுவத்தினரால் வெற்றியடைந்திருக்க முடியாதாம்" ஆக இது ராஜபக்சக்களின் வெற்றி மட்டுமல்ல, அவர்கள் மட்டும் சொந்தம் கொண்டாடவும் முடியாது. அது ஈஸ்ரர் குண்டுத் தாக்குதலானாலும் சரி. இவர்களோடு கூட இருந்தால் இன்னும் பல தாக்குதல்களை வெற்றியாய் நிறைவேற்றலாம் என்று யோசித்திருப்பார். என்ன... கிழக்கின் விடிவெள்ளிகள் இனி அடக்கிக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.