Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
🤔🤭🤔🤭🤔🤭🤔🤭🤔
*😒பயமாக இருக்கிறது....* *இன்றைய தலைமுறையினரின் போக்கு.....*
*2K KIDS க்கு -- 20ம் நூற்றாண்டின் குழந்தைகளுக்கு*
பிடித்த பேச்சாளர் - சீமான்
பிடித்த இயக்குநர் - அட்லீ
*பிடித்த சாப்பாடு - புரோட்டா& நூடுல்ஸ்*
பிடித்த இசையமைப்பாளர் - அனிருத்
*பிடித்த விளையாட்டு - பப்ஜி, ப்ளூ வேல்*
*பிடித்த வரலாற்றுப் புத்தகம் - வாட்ஸ்அப்*
*பிடித்த சொல் - மொக்கை*
*பிடித்த ஒரே பொருள் - செல்ஃபோன்*
*படிக்காமல் பாஸ் ஆக வேண்டும்.*
*கஷ்டப்படாமல் வேலை கிடைக்க வேண்டும்...*
*யாருக்குமே மரியாதை தரக்கூடாது..*
*தனக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லை என்ற மனநிலை...*
*எல்லாமே உடனே கிடைக்க வேண்டும்.. காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்...*
*விழுமியங்களே தேவையில்லை, சாதி, மதம்தான் எல்லாம்...*
*சினிமா, கிரிக்கெட், செல்ஃபோன் இவைதான் உலகம்..*
*பெண்கள் மீது மரியாதையே இல்லை..*
*ஆசிரியர்கள், மூத்தோர்கள் எல்லாம் புழு பூச்சி மாதிரி...*
*சினிமா பாடல் வரிகளைக் கூட சொந்த ரசனையோடு சொல்லத் தெரியாது..*
*வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல் குறித்த அடிப்படை புரிதல்கள் கூட இல்லை‌..*
*ஒரு பேங்க் செலான் கூட நிரப்பத் தெரியாது..*
*ஒரு வரி கூட வாசிப்பதில்லை..*
*தப்பில்லாமல் தமிழோ, ஆங்கிலமோ எழுதவும், பேசவும் வராது...*
*ஒரு விஷயத்தை கோர்வையாகச் சொல்ல வராது..*
*பிரபலங்கள் வீதியில் நின்று விஷம் குடித்துக் கொண்டிருந் தாலும் அதையும் சுயமி selfee எடுத்து முகநூலில் போட வேண்டும்..*
*பள்ளிச் சீருடையுடன் கூட டாஸ்மாக் போகிற அளவுக்கு தைரியம்‌‌..*
*சின்ன வயசிலேயே வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தை‌..*
*எப்போதும் ஏதாவது ஒரு போதையில் தன்னை மூழ்கடித்துக் கொள்ள விரும்புகிற மனநிலை..*
*எதிலும் நிரந்தரமாக நிலை கொள்ளாத அலைபாயும் மனம்..*
*ஜட்டி தெரிய பேண்ட் போட்டு, காண்டாமிருகம் மாதிரி முடிவெட்டி, எவரையும் கண்களைப் பார்த்து பேச முடியாமல் விநோதமாக வெறித்த பார்வையுடன் நடப்பது....*
*இந்த அபாயத்தை சமூகம் இன்னும் முழுமையாக உணரவில்லை..*
*பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓரளவுதான் தெரியும்..*
*பெற்றோர்கள் சுத்தம்;*
*அவர்களின் அளவுக்கு மீறிய செல்லம்தான் சகலத்துக்கும் காரணம்..*
*தங்களை அறியாமல் அவர்கள் இவர்களின் அனைத்து அடாவடிகளுக்கும் துணை போகிறார்கள்...*
*வீட்டில் அவர்கள் பார்க்கிற பிள்ளைகளில்லை இவர்கள்....*
*இவர்கள் உள்ளுக்குள்* *வேறொரு உருவமாய்*
*வளர்ந்து கொண்டிருக் கிறார்கள்..*
*பள்ளியில் படிக்கிற போது அவன் தன்னை முழுமையாக வெளிப்படுத்துவ தில்லை..*
*கடந்த ஐந்தாண்டுகளில் கல்லூரி மாணவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்‌‌..*
*தான் பார்க்கும் பெண்ணோ ஆனோ தான் தன் எதிர்கால துணை என இருபாலருமே முடிவெடுத்துக் கொண்டு பெற்றோருக்கும் உற்றோருக்கும் தெரியாமலேயே தங்கள் உறவை வளர்த்துக் கொண்டு உடம்பையும் உள்ளத்தையும் இழக்கிறார்கள்.*
*நான் 80, 90 s kid களுக்கும் வகுப்பெடுத்திருக்கிறேன்...*
*இவர்களுக்கும் அந்த இரு தலைமுறையினருக்கும் மலையளவு வித்தியாசம்..*
*மேற்சொன்னவை ஏதோ ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் என்று என்ன வேண்டாம்.* *இது இருபாலருக்கும் பொருந்தும்.*
*நான் பேசுவது பொதுவான மனநிலை குறித்த பார்வையில்தான்..*
*விதிவிலக்கு களை அல்ல..*
*பல பெற்றோர்கள் தம் பிள்ளைகள் அந்த விதிவிலக்குகளில் தம் பிள்ளையும் ஒரு ஆள் என்று பொய்யாக நம்பிக் கொண்டிருக்கின்றனர்.*
*காலம் காலமாக மூத்தோர் இளையோர் மீது வைக்கிற குற்றச்சாட்டாக இதை எண்ணி விடாதீர்கள்*.
*எனக்கு இரண்டுக்கும் வேறுபாடு தெரியும்.*
*சமீபமாக வகுப்பறைகளில் ரசித்த சினிமா பாடல்களின் வரிகளையாவது சொல்லுங்க என்று கேட்டு அதற்குக் கூட பதில் வராமல் ஏமாந்து கொண்டிருக்கி றேன்*.
*ஐந்தாண்டு களுக்கு முன்பெல்லாம் இப்படிக் கேட்டால் மாணவர்கள் அசத்தி விடுவார்கள்.* *காரணம் யாராக, எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்*.
*ஆனால் யதார்த்தம் இதுதான்.*
*காதுகளே இல்லாத தலைமுறையிடம் நாம் பழைய சொற்களோடு தோற்றுக் கொண்டிருக் கிறோம்*
*கடந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட வருடங்களில்* *இப்படி ஒரு ரசனை கெட்ட,*
*சுய சிந்தனையற்ற*, *சோம்பலும் அலட்சியமும் கொண்ட* *தலைமுறையை உலகம் சந்திக்கவே இல்லை*.
*எதிர்கால வரலாறு இந்தத் தலைமுறையைக் காறி உமிழும்.*
*மறுக்க முடியாத வேதனை தரும் உண்மை.*
*😒பயமாக இருக்கிறது...*
*இன்றைய தலைமுறையின் போக்கு.....*
-சமூக அக்கறையுள்ள ஆசிரியராய்
-புலவர்காளமேகம்-
😤😎😤😎😤😎😤😎😤
  • Like 3
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👌

  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and people sitting

இந்தத்  தாயின்... சாபமும், பாவமும்... இப்ப தான் வேலை செய்யுது.

குருவி குருவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, standing and outdoors

பெண் பெயரில்,  வரும் Fake  ஐடி, எல்லாம்... இப்படித்தான் இருக்கும்🤣

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு பெண்மணி தன்னோட பொறந்தநாளும் அதுவுமா பியூட்டி பார்லர் போயி 15000/- ரூபா செலவு பண்ணிஃபேஸ் லிஃப்டிங் ட்ரீட்மென்ட் பண்ணிக்கிட்டா.
அப்படியே நம்ம ஒரிஜினல் எழுபது வயசு ரஜினி எப்படி மேக்அப்போட இள வயசா ஜொலிக்கிறாரோ, அப்படி தன்னையும் மாத்திக்கிட்டா.
பெருமை பிடிபடல்லே அந்தம்மாவுக்கு.
பார்லர்லேர்ந்து வர்ற வழிலே ஒரு மெடிக்கல் ஷாப்புக்கு போயி விக்ஸ் வாங்கற சாக்குலே கடைக்காரருகிட்ட "எனக்கு என்ன வயசு இருக்கும்ன்னு நெனைக்கிறீங்க?"ன்னு கேட்க, அவரு "என்னம்மா, ஒரு இருபத்தெட்டு இருக்குமா"ன்னு சொல்ல, இந்தம்மா பெருமையா "எனக்கு நாப்பத்தேழு வயசாக்கும்" ன்னு சொல்லிச்சு.
அங்கிருந்து அப்படியே அடையார் ஆனந்தபவன் போய் ஸ்வீட் வாங்கறப்ப இதே கேள்வியை அங்கேருந்த சேல்ஸ்கேர்ள்கிட்ட கேட்க அந்த பொண்ணு "ஒரு முப்பது வயசு இருக்குமாம்மா"ன்னு கேட்க இவ செம குஷியா "எனக்கு நாப்பத்தேழு வயசாக்கும்"ன்னு பெருமபட்டுக்கிட்டா.
அந்தம்மாவுக்கு வீட்டுக்கு வர்ற வழிலே ஒதுக்குப்புறமா ஒரு பஸ் ஸ்டாப். அதுல எப்பவுமே ஜனங்க யாரும் இருக்கமாட்டாங்க.
யாராவது ஒருத்தரு ரெண்டுபேர் இருந்தாலே அபூர்வம்.
அந்த பஸ் ஸ்டான்ட்ல இந்தம்மா பஸ்ஸுக்காக நிக்க, பக்கத்துலே ஒரு எழுபத்தஞ்சு வயசு பெரியவரும் நின்னுட்டிருந்தாரு.
இந்தம்மா அவராண்ட போயி "சார், நீங்க தப்பா நெனச்சிக்கில்லேன்னா, எனக்கு என்ன வயசு இருக்கும்ன்னுசொல்ல முடியுமா"ன்னு கேட்க, அவரு சொன்னாரு "நான் உன்னோட கரெக்ட் வயச சொல்லிடுவேன். ஆனா அதுக்கு ரெண்டு கண்டிஷன்.
ஒண்ணு நான் உன் கன்னத்த நல்லா தடவிக்கொடுப்பேன்.
ரெண்டாவது உன்ன ஒரு அரை நிமிஷம் கட்டிப்பிடிச்சிக்குவேன். ஓகேயா?" கேட்க
இந்தம்மாவும் சுத்தும்முத்தும் பாத்துச்சி.
பஸ் ஸ்டாப்லேயும் யாரும் இல்லே.
ஓகே சொல்லிடிச்சு.
பெருசும் இவ கன்னத்த நல்லா
தடவி கொடுத்துச்சு. பொறவு
நல்லா இறுக்கி கட்டிபிடிச்சுட்டு
அவ காதாண்டே "உனக்கு நாப்பத்தேழு வயசு"ன்னு சொல்ல இவளுக்கு செம ஷாக்கு.
"எப்படி பெரியவரே கட்டிப் பிடிச்சவுடனே கரெக்டா என் வயச கண்டுபிடிச்சீங்கன்னு கேட்க
பெருசு சொல்லிச்சு...
"நீ அடையார் ஆனந்தபவன்ல அந்த சேல்ஸ் புள்ளையாண்ட பேசச் சொல்லோ, நான் பின்னாடி நின்னுட்டிருந்தேன்"!!
😜😜😜😜😜
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

நினைவு நாள் வணக்கம்.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இதெப்படி இருக்கு??
பொண்ணு வீட்டுக்காரங்க பண்ணுன டார்ச்சரால் கடுப்பான யாரோ எழுதியது போல் இருக்கிறது... ஆனால் க்ளைமாக்ஸ் செம டிவிஸ்ட்டு.👍
.
💋சார்... நான் T. Nagar லேந்து பேசறேன் உங்ககிட்ட, உங்க பொண்ணு கல்யாண விஷயமா பேசணும்.
💋நீங்க என் பொண்ணு கல்யாண விஷயமா பேசுறதுக்கு முன்னால, நாங்க எங்க பொண்ணுக்கு எப்படிப்பட்ட, வரனா பார்க்கறோம்ன்னு சொல்றோம்! அப்புறம் நீங்க பேசுங்க.
💋 சார்! கொஞ்சம் பொறுங்க! நான் என்ன சொல்ல வர்றேன்னா...
💋 நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்... நான் சொல்றதை முதல்லே கேளுங்க! பிறகு நீங்க சொல்லுங்க!...
💋 சரி! முதல்லே நீங்க என்ன சொல்லனுமோ சொல்லுங்க! அப்புறம் நான் சொல்லறேன்.
.
💋 நாங்க எங்க பொண்ணுக்கு 6,5,4,3,2,1 இருக்கிற பையனாக பார்க்கறோம்.
💋 6,5,4,3,2,1, அப்படின்ன என்ன?
💋6,5,4,3,2,1 ங்கறது என்னதுன்னா..
🌹6 ன்ன பையன் 6 டிஜிட்ல சம்பளம் வாங்கனும். அதாவது குறைஞ்ச பட்சம் மாசம் 1லட்சம் சம்பளம் சம்பாதிக்கணும்.
🌹5 ன்னா பொண்ணுக்கு நிச்சயதார்த்தின் போது 5 லட்சத்துக்கு வைர நெக்லஸ் போடணும்.
🌹4 ன்னா, 4 சக்கரம் உள்ள கார், பையன் பேருலே வச்சு இருக்கணும்.
🌹3 ன்னா மூணு ரூம் உள்ள சொந்த பிளாட் பையன் பேருலே இருக்கணும்.
🌹2 ன்னா பையனோட அப்பா, அம்மா கல்யாணத்திற்கு பிறகு, 2 பேரும் பையனோட சேர்ந்து இருக்கக்கூடாது.
🌹1 ன்னா கல்யாணத்துக்கு பிறகு, என் பொண்ணு 1குழந்தை தான் பெத்துப்பா! அதுவும் அவ விருப்பப்படும் போதுதான்.
💋அப்புறம் எங்களுக்கு பையனை பிடிச்சுடுத்துன்னா, நீங்க பையனோட salary சர்டிபிகேட் கொடுக்கனும்!
💋வைர நெக்லஸ் போடறதுக்கு, தகுதி இருக்கான்னு தெரிஞ்சுக்கறதுக்கு, பையனோட பேங்க் ஸ்டேட்மெண்ட் வேணும்.
.
💋பையன் பேர்ல இருக்கிற காரோட RC certificate, பிளாட்டோட property document வேணும்.
💋: மேலே சொன்ன விஷயங்களெல்லாம் உங்க பொண்ணு தன்னுடைய கல்யாணத்திற்கு போட்ட கண்டிஷன்களா?
🌹 என் பொண்ணு சின்ன பொண்ணு சார்! அவளுக்கு இதெல்லாம் தெரியாது! ரொம்ப வெகுளியா பழகுவா சார்! இதெல்லாம் நாங்க போடற கண்டிஷன்கள்!
🌹ஒரே பொண்ணு ரொம்பவே செல்லம் கொடுத்து வளர்த்து இருக்கோம்!"
🌹 புகுந்த வீட்டிலே போய் கஷ்டப் படக்கூடாது என்பதற்காக நாங்க போடற கன்டிஷன்கள் இது!
🌹மேலும், அவளுக்கு வாசல் தெளித்து கோலம் போடத்தெரியாது!
🌹 சமையல் பண்ண தெரியாது! லீவு நாளுன்னா 10 மணிக்குத்தான் எழுந்துப்பா, புடவை கட்டிக்க தெரியாது! அதனாலே விசேஷங்களுக்கு சுடிதார்தான் போட்டுப்பா!
🌹அப்புறம் இன்னொரு விஷயம்! என் பொண்ணு சுயமரியாதைக்காரி,
யார் காலிலேயும் விழுந்து கும்பிடமாட்டா!
🌹 இதுக்கெல்லாம் நீங்க ok ன்னு சொன்னா மேற்கொண்டு, என் பொண்ணு கல்யாண விஷயமா, என் மனைவி உங்ககிட்ட பேசுவா!
.
💋சார்! எனக்கு நீங்க பேசினதே தலைய சுத்தறது... இதுலே உங்க மனைவி வேறயா? நான் என் பையனுக்கு வரன் தேடலே சார்!
.
💋அப்புறம் எதுக்கு என் பொண்ணு கல்யாண விஷயமா பேசணும்ன்னு சொன்னீங்க...
💋என்ன எங்க சார் பேசவிட்டீங்க நீங்க! நான் T Nagar லே இருக்கிற போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பேசறேன்...
உங்க பொண்ணு, இன்னிக்கு உங்க தெரு மெக்கானிக் ஷாப் பக்கத்திலே இருக்கிற ஒரு பையனை காதலிச்சு, தெருமுனையிலே இருக்கிற கோயிலிலே கல்யாணம் பண்ணிட்டு ஸ்டேஷனுக்கு வந்துருக்கா!
💋நீங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க
மாட்டீங்க! மேலும் நீங்க உங்க ஊரு சனத்தை கொண்டு கல்யாணம் பண்ணினா இவங்களை பிரிச்சுடுவீங்களாம்! அதனாலே, அவங்க குடும்பம் நடத்தறதுக்கு, போலீஸ் protection வேணும்ன்னு கேட்டு வந்துருக்கா சார்!
💋என்னது... என்றவாறே மயக்கமாய் கீழே சாய்கிறார்...
இனிமேல் யாராச்சும் condition போடுவீங்க????
படித்ததில் பிடித்தது.👏
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 9 people and text that says 'ΤΗ The Hindu @the_hindu Karunanidhi launches fast on Sri Lankan issue Apchate Tweet 8:53 am 7 Apr 09 Twitter Web Client The Hindu @the_hindu ΤΗ Karunanidhi ends fast 12:35 PM Apr 27, 2009 Twitter Web Client ๑๐0 G0๐'

இன்று, கருணாநிதியின்..
உலகப்  புகழ் பெற்ற உண்ணாவிரத தினம்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, தமிழ் சிறி said:

இன்று, கருணாநிதியின்..
உலகப்  புகழ் பெற்ற உண்ணாவிரத தினம்.

Bild

இபிடியும் ஒண்டு புழங்குது 😂

இப்பிடியும் ஒண்டு புழங்குது 😂

  • Like 1
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'NEWS AMR உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசை 2 3 ஐஸ்லாந்து சுவிட்சர்லாந்து டென்மார்க் 127 இலங்கை 121 பாகிஸ்தான் 136 இந்தியா 20하 MA'

ரீவியிலை.... போடுற அழுகை நாடகத்தை நிப்பாட்டினால் தான், 
இவர்கள் மகிழ்ச்சியாக  இருப்பார்கள்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில மூத்த பொடியனுக்கு தாயார்காரி அவன் கேட்ட நேரமெல்லாம் தெரிஞ்சும் தெரியாமலும் பணம் குடுத்து கெடுக்கிறமாதிரி இந்தியாவும் ஸ்ரீ லங்காவுக்கு கடன் கடனாகவும் இலவசங்களாகவும் குடுத்து குடுத்து இப்ப அழுமூஞ்சியாக மாறீ 136 ல் நிக்குது.........!  😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

வீட்டில மூத்த பொடியனுக்கு தாயார்காரி அவன் கேட்ட நேரமெல்லாம் தெரிஞ்சும் தெரியாமலும் பணம் குடுத்து கெடுக்கிறமாதிரி இந்தியாவும் ஸ்ரீ லங்காவுக்கு கடன் கடனாகவும் இலவசங்களாகவும் குடுத்து குடுத்து இப்ப அழுமூஞ்சியாக மாறீ 136 ல் நிக்குது.........!  😂

சீனா எண்ட  தேப்பன் காரனும்... காசை குடுத்து,
செல்லக் குட்டியை... நாசமறுத்து, வைச்சிருக்கிறாங்கள். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

May be an image of text that says 'NEWS AMR உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசை 2 3 ஐஸ்லாந்து சுவிட்சர்லாந்து டென்மார்க் 127 இலங்கை 121 பாகிஸ்தான் 136 இந்தியா 20하 MA'

ரீவியிலை.... போடுற அழுகை நாடகத்தை நிப்பாட்டினால் தான், 
இவர்கள் மகிழ்ச்சியாக  இருப்பார்கள்.

இங்கை தெரிஞ்ச ஒரு ஆண்ட்டி, டிமென்ஷியா வருத்தம், அதாவது தமிழிலை அறளை பெயர்ந்துவிட்டது.

ஆரம்பத்தில், நல்லா பேசுவா.... பொழுது போகவில்லை என்று, yupp டிவி எடுத்துக் கொடுத்தார் மகன்.

நாடகம் பார்த்து, அழுது, இரவிரவா யோசித்து, அறளை பெயர்ந்து விட்டது என்று மருமகள் சொல்லுறா.

இந்தியாவில் தனிமை இல்லை. வேறு பொழுது போக்கு இருக்கும். இப்படி இங்கு இல்லை என்பதால், இந்த நாடக கோதாரி யாருக்குமே வேண்டாம். 

இது, ஒருவர், இருவர் இல்லை. பலரிடம் அவதானிக்க கூடியதாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நகைச்சுவையாளன் இமயத்தில் ஏறுகின்றான்......!   💐  🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text

 

கருணாநிதி பேசிய... அநாகரிக வார்த்தைகள்.

தரக்குறைவாக பேச, கலைஞர் எங்களுக்கு கற்றுக் கொடுக்க வில்லை.
-மு.க.ஸ்டாலின்
 
எழுதிக் கொடுத்ததை பேசவே தகராறு...
இதில கருணாநிதி மாறி அநாகரிகமாக பேசுவதற்கு சாமர்த்தியம் பத்தாது டலீவரே😅
 
கருணாநிதி எப்படியெல்லாம் *நாகரீகமாக?*
பேசினார் என்பதை பாருங்கள்...
 
"பருவப்பெண்களின் தோள்களில், கைபோட்டு பவனி வரும் காந்தி...!"
"நேருவோ மனைவியை இழந்தவர், பண்டாரநாயகாவோ கணவரை இழந்தவர்... இருவரும், இரண்டு மணி நேரம் அப்படி என்ன பேசினர்?"
"காஷ்மீரத்து பாப் வெட்டிய பாப்பாத்தி, விதவை இந்திரா...!!!"
"வெளிநாட்டுக்காரியை மணந்த போபர்ஸ் புகழ் ராஜிவ்...!"
"சாணான், மரமேறி, பனைஏறி, எருமைத் தோலன், காண்டாமிருகத் தோலன், அண்டங்காக்கா, கட்டைப்பீடி காமராஜன்...!!"
"பாவாடை நாடா அனந்தநாயகி...!!!"
"கறுப்பன், கருத்திருமன்; ஐஸ் புரூட் சம்பத்...!"
"வழிப்போக்கன் வாழப்பாடி...!!"
"மூப்பனார் மூளையில் கோளாறு...!!"!
"செவிடன் ஜீவா...!"
"நொண்டி ராமமூர்த்தி...!!"
"காவடி கல்யாணசுந்தரம்...!!!"
"மலையாளி, கூத்தாடி, எம்.ஜி.ஆர்...!"
"இதயத்தில் ஈரமில்லா இத்தாலிக்காரி சோனியா...!!"
"பண்டாரம் வாஜ்பாய்...!!!"
"பரதேசி அத்வானி...!"
"ஆக்டோபஸ் மோடி...!!"
"காந்தாரி, கவுதாரி, சூர்ப்பனகை ஜெயலலிதா...!!!"
"செல்லாக்காசு ஓ.பன்னீர் செல்வம்...!"
"அவசரக் குடுக்கை, வாய்க்கொழுப்பு, மரம் வெட்டி ராமதாஸ்...!!"
"போதை நடிகர் விஜயகாந்த்...!!!"
"தரகர், தா.பாண்டியன்...!"
"கம்யூனிஸ்ட் வேடதாரி, ஜி.ராமகிருஷ்ணன்...!!"
"மந்தபுத்தி திருமாவளவன்...!!!
"வேலி தாண்டிய வெள்ளாடு குஷ்பு...!"
"ஓடுகாலி திருநாவுக்கரசு...!!"
"கள்ளத் தோணி, வைகோ...!"
"இந்து என்றால் திருடன்...!!"
"ராமன் ஒரு குடிகாரன்...!!!"
"சொரணை கெட்ட தமிழன், மரமண்டைகள், வாழை மட்டைகள்...!!!"
"கலாம் என்றாலே கலகம்...!"
"பனையைறி காமராஜ்"
"கருவாட்டுக்காரி மகன் காமராஜ். ".
"உன் தலைவிக்கு (இந்திராவை) என்ன மாதவிடாய் மண்டையில் வருகிறது?"
 
இதைவிடவா கேவலமா ஒருத்தன் பேசிவிட முடியும்?
இப்படி உலகத்திற்கே அரசியல் பண்பாடு கற்றுக் கொடுத்த, நாகரீகத்தின் தொட்டிலாக இருந்தவர் தான் கருணாநிதி!
Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of car and road

May be an image of 12 people, car and road

ஸ்ரீலங்காவில்... ஒரே  இலக்கத் தகடுடன், இரண்டு வாகனங்கள்.  🤣

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
    • கைக்காப்பு, கைப்பற்று மற்றும் தொலைநோக்கி பூட்டப்பட்ட ஏ.கே. 103 துமுக்கியால் சுட்டுப் பார்க்கிறார் தலைவர் மாமா காலம்: நான்காம் ஈழப்போர்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.