Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சர் டக்ளஸை சந்தித்து அமெரிக்க இராஜதந்திரிகள் பேச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செய்திப்பிரிவு

 

 

தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக தமிழர் தரப்புக்களிடம் ஒருமித்த கருத்து நிலவுவது முக்கியம் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் கடற்றொழில்சார் செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கைக்கான அமெரிக்க பதில் தூதுவர் மார்டின் ரி ஹீலி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் திங்கட்கிழமை (13) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது, தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கேட்டறிந்த அமெரிக்க  பதில் தூதுவர்,  தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக தமிழர் தரப்புக்களிடம் ஒருமித்த கருத்து நிலவுவது முக்கியம் என்ற கருத்தினை முன்வைத்தார்.

இதன் போது கருத்து வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  தமிழ் மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தாத நியாயமான வழிமுறைகளைப் பின்பற்றுகின்ற தரப்புக்களுடன் இணைந்து செயற்படுவதற்கான சமிக்கைகளை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருவதாகவும், ஆனால் ஏனைய சில தரப்புக்கள் சுயலாபங்களுக்காக மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய தோற்றுப்போன வழிமுறைகளையே தொடர்ந்தும் பேசுவதாக தெரிவித்தார்.

 

 

Douglus.JPG

 

 

அத்துடன் கடந்த காலங்களில் தன்னால் வெளிப்படுத்தப்பட்ட எதிர்வுகூறல்கள் சரியானது என்பதை வரலாறு நிரூபித்திருப்பதனையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், காணாமல் போனோர் விவகாரத்திற்குப் பரிகாரம் காண்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அணுகுமுறைகள் தொடர்பாகவும் புலம்பெயர் தமிழ் மக்களுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு  ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ  ஆர்வம் வெளியிட்டுள்ள நிலையில், அதுதொடர்பில் தன்னால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விடயங்கள் தொடர்பாகவும்  அமெரிக்கத் தரப்பிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெளிவுபடுத்தினார்.

அதேபோன்று, கடற்றொழில் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கு மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும், கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளுகின்ற சவால்கள் தொர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அமெரிக்காவின்  உதவித் திட்டங்கள் பற்றியும் அவற்றின் அவசியம் பற்றியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமெரிக்காவின் இலங்கைக்கான பதில் தூதுவருடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் டக்ளஸை சந்தித்து அமெரிக்க இராஜதந்திரிகள் பேச்சு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ உந்த சின்ராசுக்கு பெருமை தாங்க  முடியாமல் என்ன கூத்து அடிக்கப்போகுதோ 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

ஐயோ உந்த சின்ராசுக்கு பெருமை தாங்க  முடியாமல் என்ன கூத்து அடிக்கப்போகுதோ 🤣

 

3 hours ago, பிழம்பு said:

தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக தமிழர் தரப்புக்களிடம் ஒருமித்த கருத்து நிலவுவது முக்கியம் என்ற கருத்தினை முன்வைத்தார்.

இவருக்கு அட்வைஸ் கொடுக்க அழைத்ததை, மரியாதைக்காக சந்திப்பு என்று போட்டிருக்கிறார்கள். சும்மாவே உள்ளூரில் அழையா விருந்தாளியா எல்லாவற்றிற்குள்ளும் பூந்து போஸ் கொடுக்கிற மனிதன், தலைகால் தெரியாமல் ஆடி விழுந்தடிக்கப்போகுது!

 

3 hours ago, பிழம்பு said:

தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக தமிழர் தரப்புக்களிடம் ஒருமித்த கருத்து நிலவுவது முக்கியம் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அவர்கள் சந்திப்பின் முக்கிய நோக்கம் இதுவே! இத்தனை அரசியல் வாதிகள் இருக்க, இவரைமட்டும் அழைத்து வலியுறுத்தியத்தின் நோக்கம் என்னவோ? இவர்தான் சிங்களத்தின் முதன்மையான அடிவருடி, குழப்பி என்று யாரோ அமெரிக்காவுக்கு கோள் சொல்லிப்போட்டானுகள்!

  • கருத்துக்கள உறவுகள்

https://www.colombotelegraph.com/index.php/wikileaks-pararajasingham-and-raviraj-killings-karuna-and-douglas-killing-mps-epdp-vigneswaran-to-us/

இந்த கொலைகாரனைப் பற்றி 2008 இல் அன்றைய அமெரிக்கத் தூதர் ரொபேர்ட் ஓ பிளேக் விலாவாரியாக வோஷிங்டனுக்குச் செய்தியனுப்பியிருக்கிறார்.

- அரசியல்ப் படுகொலைகள்
- அப்பாவிகளைப் படுகொலை செய்தது
- அப்பாவிகளைக் கடத்திச் சென்று கப்பம் கோருவது
- சிறுமிகளைக் கடத்திச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது
- அரச ராணுவத்தின் துணைராணுவக் குழுவாகச் செயற்பட்டு சட்டத்திற்குமுரணான கடத்தல்கள், காணமாற்போதல்களில் ஈடுபடுவது 

என்று பெரிய பட்டியலே இட்டிருந்தார்.

இதுபோதும். இங்கே ஒருத்தருக்குப் பொத்துக்கொன்டு வரப்போகுது. ஏன், எங்கடையாள் மட்டுமே செய்தவர், புலி செய்ய இல்லையோ எண்டு வரப்போறார். தான் நடுநிலைவாதியாம், ஆனால் செய்யிறதெல்லாம் புலியெதிர்ப்பு. 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரஞ்சித் said:

இங்கே ஒருத்தருக்குப் பொத்துக்கொன்டு வரப்போகுது. ஏன், எங்கடையாள் மட்டுமே செய்தவர், புலி செய்ய இல்லையோ எண்டு வரப்போறார். தான் நடுநிலைவாதியாம், ஆனால் செய்யிறதெல்லாம் புலியெதிர்ப்பு. 

யாரா  இருக்கும்?

ச... சா... அவரா இருக்காது 😎

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On ‎15‎-‎12‎-‎2021 at 03:31, ரஞ்சித் said:

https://www.colombotelegraph.com/index.php/wikileaks-pararajasingham-and-raviraj-killings-karuna-and-douglas-killing-mps-epdp-vigneswaran-to-us/

இந்த கொலைகாரனைப் பற்றி 2008 இல் அன்றைய அமெரிக்கத் தூதர் ரொபேர்ட் ஓ பிளேக் விலாவாரியாக வோஷிங்டனுக்குச் செய்தியனுப்பியிருக்கிறார்.

- அரசியல்ப் படுகொலைகள்
- அப்பாவிகளைப் படுகொலை செய்தது
- அப்பாவிகளைக் கடத்திச் சென்று கப்பம் கோருவது
- சிறுமிகளைக் கடத்திச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது
- அரச ராணுவத்தின் துணைராணுவக் குழுவாகச் செயற்பட்டு சட்டத்திற்குமுரணான கடத்தல்கள், காணமாற்போதல்களில் ஈடுபடுவது 

என்று பெரிய பட்டியலே இட்டிருந்தார்.

இதுபோதும். இங்கே ஒருத்தருக்குப் பொத்துக்கொன்டு வரப்போகுது. ஏன், எங்கடையாள் மட்டுமே செய்தவர், புலி செய்ய இல்லையோ எண்டு வரப்போறார். தான் நடுநிலைவாதியாம், ஆனால் செய்யிறதெல்லாம் புலியெதிர்ப்பு. 

அதே அமெரிக்காரன் தான் இன்று போய் சந்தித்து இருக்கிறான் ...யாருடைய கையில் அதிகாரமும் ,பவரும் இருக்குது என்று இப்ப தெரியுதா ?
வீம்புக்கு பழசை எழுதிறதை விட்டுட்டு யதார்த்தமாய் யோசியுங்கோ.
புலிகளையும் அமெரிக்கா தடை செய்து இருந்தது ....நாளைக்கு கூப்பிட்டு பேச்சு வார்த்தை நடத்தினால் வேண்டாம் ன்று சொல்லப் போறீங்களா?
நீங்கள் விரும்பினாலும் , விரும்பா விடடாலும் வடக்கில் டக்ளஸ் அசைக்க முடியாத சக்தி 
 

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரமா? மரியாதையா? என்றுதான் சொன்னார்கள். எச்சரிக்கையா? என்பது போகப் போக புரியும். அமெரிக்கா ஒருவரை அணைத்தால் அந்த ஆளை அழிக்காமல் விடாது என்பது பலருக்கு புரியும். கற்றுக்கொண்ட பாடங்கள். லிபியா, ஆப்கானிஸ்தான் பட்டியல் தொடரும் கோத்தாவை, சவேந்திர சில்வாவை தன்நாட்டில் வைத்து இருந்துவிட்டு, இப்போ மனித உரிமை, தடை என்று வசனம் பேசுதில்லே....... புரிய அதிக நேரமில்லை. அது சாவு மணி அடிக்கப்போகுது என்றும் கொள்ளலாம்!  

  • கருத்துக்கள உறவுகள்

அலன் தம்பதிகளை கட்டாயமாக கடத்தி வைச்சு.. பணம் கேட்டு மிரட்டிய இந்தப் பயங்கரவாதியுடன்.. சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் ஐ நா மனித உரிமை கவுன்சில் அறிக்கைகள் உட்பட பலவற்றில்.. பகிரங்கமாக மனித இனத்துக்கு எதிரான கொலைகள் தொடர்பில் பகிரங்கமாக குற்றஞ்சாட்டப்பட்ட இந்த நபர் மீதும்.. இவரின் ஈபிடிபி பயங்கரவாத அமைப்பான.. அது செய்த சொந்த இனப்படுகொலை மீதும்.. குற்றச்சாட்டுக்கள் இருக்க.. ஹிந்தியாவில் தேடப்படும்.. மனிதப் படுகொலை தொடர்பில் தேடப்படும் குற்றவாளியான இவரிடம்.. அமெரிக்க பிரயாணத் தடை உள்ள இந்த நபரிடம்..  எப்படி அமெரிக்க தூதுவர் பேச முடியும்...?!

அப்படி என்றால்.. ஏன் அமெரிக்கா கடாபி.. சதாம் குசைன்.. பின்லேடன்.. மிலேசவிச் போன்ற தலைவர்களுடன் பேசவில்லை. புலிகளை ஏன் பயங்கரவாதிகள் என்றனும்.

இந்தக் கொலைஞனுக்கு அளிக்கப்படும் மன்னிப்பை ஏன் மற்றையவர்களுக்கு அமெரிக்கா அளிக்கவில்லை. அதை தடுத்தது அமெரிக்காவின் எந்த சட்டம்..???! 

அமெரிக்கன் உலகத்துக்கே கண்ணா மூஞ்சி விளையாட்டுக்காட்டுறான்.. அணு மற்றும் ஆயுத தொழில்நுட்ப பலத்தையும் பணத்தையும் வைச்சுக்கிட்டு. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

அணு மற்றும் ஆயுத தொழில்நுட்ப பலத்தையும் பணத்தையும் வைச்சுக்கிட்டு. 

வெகு விரைவில் ஒன்றுமில்லை என்பது நிரூபிக்கபட்டுவிடும். அதனாலேயே அவர் ரொம்ப பயந்து எல்லா இடமும் மூக்கை நுழைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nedukkalapoovan said:

அலன் தம்பதிகளை கட்டாயமாக கடத்தி வைச்சு.. பணம் கேட்டு மிரட்டிய இந்தப் பயங்கரவாதியுடன்.. சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் ஐ நா மனித உரிமை கவுன்சில் அறிக்கைகள் உட்பட பலவற்றில்.. பகிரங்கமாக மனித இனத்துக்கு எதிரான கொலைகள் தொடர்பில் பகிரங்கமாக குற்றஞ்சாட்டப்பட்ட இந்த நபர் மீதும்.. இவரின் ஈபிடிபி பயங்கரவாத அமைப்பான.. அது செய்த சொந்த இனப்படுகொலை மீதும்.. குற்றச்சாட்டுக்கள் இருக்க.. ஹிந்தியாவில் தேடப்படும்.. மனிதப் படுகொலை தொடர்பில் தேடப்படும் குற்றவாளியான இவரிடம்.. அமெரிக்க பிரயாணத் தடை உள்ள இந்த நபரிடம்..  எப்படி அமெரிக்க தூதுவர் பேச முடியும்...?!

இவருடன் மரியாதைக்குரிய சந்திப்பை நடத்தியுள்ளார் அமெரிக்க தூதுவர் சொல்கிறார்கள்!  இதன்மூலம் அமெரிக்கா சொல்ல வருவது என்ன? கத்தியை தூக்கிவிட்டேன் என்கிறாரா? நீ என்னைவிட ஒன்றும் பெரிதாக செய்யவில்லை, அதே நேரம் பெரிய நீ புனிதனுமில்லை. எனக்கு ஒரு உதவி வேணும் என்கிறாரா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.