Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆடி 83- இலங்கையின் இனகலவரம் வீடியோவில்-video

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி.நாங்களே பார்த்து இரத்தக் கொதிப்படையாமல் மற்ற இனத்தவருக்கும் சென்றடைய வேண்டும்.

நெஞ்சை உறையவைக்கும் சந்தர்பத்தை தந்த சின்னகுட்டிக்கு நன்றி.........இந்த சந்தர்பத்தில் நான் பிறக்கவே இல்லை ...........ஆனாலும் கேட்டு தெரிந்து கொண்ட விச்சயங்கள் இருக்கு அதில் ஒன்று அதாவது அந்த கறுப்பு ஜிலையில்.........தமிழர்களை இணம் கண்டு கொள்ள காடையர்கள்............பாலிய என்ற ஒரு வசனத்தை சொல்ல சொன்னவர்களாம் அதாவது அதை சரியான முறையில் சிங்கள்வர்களாள் மட்டும் தான் சொல்லமுடியுமாம்.....பாலிய என்று தான் நினைகிறேன் பிழையா இருந்தா மன்னிகவும்..............இவ்வாறு கேட்டு சொல்லாதவர்களை வெட்டியதாகவும்.........தன்னை ஒரு சிங்கள குடும்பம் காப்பாற்றி கொண்டு போன போது நடுவழியில் வானை நிற்பாட்டி விட்டார்களாம் அதற்குள் நான் சொல்பவரின் குடும்பமும் சிங்கள நண்பர்களும் இருந்தவர்களாம்........அவர்கள் முன்னால் இருந்தவரிடம் கேட்க அவர் சிங்களம் என்றபடியால் சரியா சொல்லிவிட்டார் ஆகவே தான் அன்று உயிர் தப்பினோம் என்று அந்த உறவினர் சொன்ன கதை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் ...........

இணைப்புக்கு நன்றிகள். இன்றைய நாட்கள் எண்பத்து மூன்றுகளில் எவ்வளவு துயரமானது என்பதை சொல்லத்தேவையில்லை. இருபத்தி நான்கு வருடங்களுக்கு பின்னும் இன்னும் தொடரும் அரச பயங்கர வாதம் எவ்வளவு கால நீட்சியானது, எந்த ஒரு தீர்வும் அற்ற இந்த கால நீட்சியை சர்வதேசம் கணக்கில் எடுக்கவில்லை. அன்று தமிழர்களின் கண்களை தோண்டி எடுத்தார்கள் குழந்தைகளை கொதிக்கும் தாரில் போட்டார்கள் இன்றும் அல்லைப்பிட்டி வங்கலைக கிரமங்களில் குழந்தைகளையும் பெரியவர்களையும் ஈவிரக்கமின்றி கென்றதை போல் கொன்ற வண்ணம் உள்ளனர்.

கறுப்ப யூலையின் இறுதி நாட்களான இன்னாட்களில் நாம் நினைவு மீட்ட வேண்டிய துயரம் மிக்க கணங்கள் இவை. எமது துயரங்களின் தொடர்ச்சியை உலகத்துக்கு சொல்ல வேண்டய இன்றியமையாத பொழுதுகள் இவை. கறுப்பு யூலையின் கனமான இந்த நாட்களில் காலத்தை கருத்தில் கொண்டு இவ்வாறான இணைப்பை தந்ததுக்கு மீண்டும் ஒரு முறை சின்னக்குட்டி அவர்களுக்கு நன்றிகள்.

நெஞ்சை உறையவைக்கும் சந்தர்பத்தை தந்த சின்னகுட்டிக்கு நன்றி.........இந்த சந்தர்பத்தில் நான் பிறக்கவே இல்லை ...........ஆனாலும் கேட்டு தெரிந்து கொண்ட விச்சயங்கள் இருக்கு அதில் ஒன்று அதாவது அந்த கறுப்பு ஜிலையில்.........தமிழர்களை இணம் கண்டு கொள்ள காடையர்கள்............பாலிய என்ற ஒரு வசனத்தை சொல்ல சொன்னவர்களாம் அதாவது அதை சரியான முறையில் சிங்கள்வர்களாள் மட்டும் தான் சொல்லமுடியுமாம்.....பாலிய என்று தான் நினைகிறேன் பிழையா இருந்தா மன்னிகவும்..............இவ்வாறு கேட்டு சொல்லாதவர்களை வெட்டியதாகவும்.........தன்னை ஒரு சிங்கள குடும்பம் காப்பாற்றி கொண்டு போன போது நடுவழியில் வானை நிற்பாட்டி விட்டார்களாம் அதற்குள் நான் சொல்பவரின் குடும்பமும் சிங்கள நண்பர்களும் இருந்தவர்களாம்........அவர்கள் முன்னால் இருந்தவரிடம் கேட்க அவர் சிங்களம் என்றபடியால் சரியா சொல்லிவிட்டார் ஆகவே தான் அன்று உயிர் தப்பினோம் என்று அந்த உறவினர் சொன்ன கதை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் ...........

பாலிய அல்ல.. பால்திய.. பால்திய என்றால் வாளி எனப்பொருள்படும்.

:D

நெஞ்சை உறையவைக்கும் சந்தர்பத்தை தந்த சின்னகுட்டிக்கு நன்றி.........இந்த சந்தர்பத்தில் நான் பிறக்கவே இல்லை ...........ஆனாலும் கேட்டு தெரிந்து கொண்ட விச்சயங்கள் இருக்கு அதில் ஒன்று அதாவது அந்த கறுப்பு ஜிலையில்.........தமிழர்களை இணம் கண்டு கொள்ள காடையர்கள்............பாலிய என்ற ஒரு வசனத்தை சொல்ல சொன்னவர்களாம் அதாவது அதை சரியான முறையில் சிங்கள்வர்களாள் மட்டும் தான் சொல்லமுடியுமாம்.....பாலிய என்று தான் நினைகிறேன் பிழையா இருந்தா மன்னிகவும்..............இவ்வாறு கேட்டு சொல்லாதவர்களை வெட்டியதாகவும்.........தன்னை ஒரு சிங்கள குடும்பம் காப்பாற்றி கொண்டு போன போது நடுவழியில் வானை நிற்பாட்டி விட்டார்களாம் அதற்குள் நான் சொல்பவரின் குடும்பமும் சிங்கள நண்பர்களும் இருந்தவர்களாம்........அவர்கள் முன்னால் இருந்தவரிடம் கேட்க அவர் சிங்களம் என்றபடியால் சரியா சொல்லிவிட்டார் ஆகவே தான் அன்று உயிர் தப்பினோம் என்று அந்த உறவினர் சொன்ன கதை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் ...........

அது சிங்களத்தில் ( Ba ) பால்டிய, தமிழில் வாளி (Bucket), சிங்களம் தெரிந்த தமிழரும் அதனை வாளிய என்றுதான் சொல்வார்களாம், அதனால் சந்திகளில் நின்று தப்பிச் சென்று கொண்டிருந்தவர்களிடம் வாளியை காட்டி இது என்ன என்று கேட்டு அவர்களை இனம் கண்டு கொண்டனராம். இதை எனக்கு பெருமிதத்துடன் சொன்னவர் இவ்வாறு செய்த சாரம் கட்டிய சிங்களவனின் வழித்தோன்றலான காற்சட்டை போட்ட, முச்சக்கரவண்டி ஓட்டும் சிங்களவன்.

Edited by சாணக்கியன்

நன்றி சின்னக்குட்டி யுடியுப்பில் tag பண்ணும் போது ltte,srilanka,sinhala,eelam gosl பொன்ர வார்த்தைகளையும் சேருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றிங்க சின்னக்குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

சின்னகுட்டி இணைப்புக்கு மிக்க நன்றி அநுபவித்த கொடுமைகள் கண் முன்னே வந்து நிற்கின்றன,நானும் கொழும்பில் இருந்து சரக்கு கப்பலிலே காங்கேசன் துறைமுகதிற்கு சென்றனான் கிட்டதட்ட 54 மணித்தியாலங்கள் சென்றன.

கவனமாக பாதுக்காக்கவேண்டிய வீடியோக்கள்!!!

Edited by இணையவன்

  • தொடங்கியவர்

சின்னகுட்டி இணைப்புக்கு மிக்க நன்றி அநுபவித்த கொடுமைகள் கண் முன்னே வந்து நிற்கின்றன,நானும் கொழும்பில் இருந்து சரக்கு கப்பலிலே காங்கேசன் துறைமுகதிற்கு சென்றனான் கிட்டதட்ட 54 மணித்தியாலங்கள் சென்றன.

இந்த இனகலவரத்துக்கு சில மாதங்களுக்கு முன் பேராதனை பல்கலை கழக தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதலை ஒன்றை மேற்கொண்டார்கள். இத்தாக்குதல் பற்றி அமிர்தலிங்கம் பாரளுமன்றத்தில் கூறினார் இத்தாக்குதல் இனகலவரத்துக்கு ஒத்திகையோ என்று . அப்பிடியே நடந்து விட்டது. அந்த காலத்தில் ஜேஆரின் அரசாங்கத்தில் சிறில் மத்தியூ என்ற அமைச்சன் இனதுவேசத்தை கக்கி கொண்டிருந்தான்

உந்த இனகலவரத்தில் அகப்படவில்லை.. கண்டியில் ஒரு வாரம் முந்தி தான் யாழ் திரும்பியிருந்தோம். பல்கலைகழக ஆர்பாட்ட பகிஸ்கரிப்பு காரணமாக..

புத்தன் கப்பலில் உந்த நேரம் திரும்பி இருந்தது என்று கூறீனீர்கள்.... உங்கள் அநுபவங்களை எழுதுங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இனைப்புக்கு நன்றி சின்னக்குட்டி.அந்த நாளை நினைக்கவே நெஞ்சு பகீர் என்குது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.