Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரதமரின் வங்கிக் கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாய் மோசடி செய்தவர் பதவி நீக்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமரின் வங்கிக் கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாய் மோசடி செய்தவர் பதவி நீக்கம்!

spacer.png

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாய்களை மோசடி செய்த பிரதமரின் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்ட குறித்த நபரே இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பிரதமர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலப்பகுதியிலேயே அவரின் செயலாளராக செயற்பட்டார் என்றும் அதன்போது, அரச வங்கியில் உள்ள பிரதமரின் வங்கிக்கணக்கிற்கான ஏடிஎம் கார்ட் அவரிடம் வழங்கப்பட்டிருந்தது என்றும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் குறித்த ஏடிஎம் கார்ட்டினை பயன்படுத்தியே பிரதமரின் வங்கிக்கணக்கில் அவர் மோசடி செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
 

 

https://athavannews.com/2022/1263804

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, கிருபன் said:

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாய்களை மோசடி செய்த பிரதமரின் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பதிக்கே லட்டு குடுத்திருக்கான்யா....😂

  • கருத்துக்கள உறவுகள்

"நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்" 

அடிக்குற காசில் அவருக்கு உரிய கொமிசன் தொகையை கொடுத்தால் ஏன் இந்த வேலை செய்ய போகிறார்.?😢

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

திருப்பதிக்கே லட்டு குடுத்திருக்கான்யா....😂

 

2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

"நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்" 

அடிக்குற காசில் அவருக்கு உரிய கொமிசன் தொகையை கொடுத்தால் ஏன் இந்த வேலை செய்ய போகிறார்.?😢

“இளநீர் குடிச்சவன் ஆரோ… கோம்பை சூப்பினவன் ஆரோ..”🤪
அவங்களே…. காசை, அமுக்கிப் போட்டு…
ஒரு அப்பாவியை பலிக்கடா ஆக்கி இருக்கவும் சாத்தியங்கள் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டா?
கள்ளனிடமே ஆட்டையை போட்டுள்ளான் ஒருவன்.

  • கருத்துக்கள உறவுகள்

 பலே கில்லாடியா? பலிக்கடாவா? பழிவாங்கலா? அந்த நபரின் பெயர் பிறகுதான் அறிவிப்பார்களோ அல்லது அநாம நபரோ? அவர் பிரதமரின் மோசடியை வெளிப்படுத்த முதல், அவரை குற்றவாளியாக்கிவிட்டால் யாரும் அவர் சொல்வதை நம்ப மாட்டார்கள் என்று எண்ணியிருக்கலாம். ஆனால் நாட்டில் இவர்களால் குற்றம் சுமத்தப்பட்டவர்களும், பழிவாங்கப்பட்டவர்களும்  இவர்களின் குற்றங்களை சுமப்பவர்களுமே அதிகம். எல்லோரையும் குற்றம் சுமத்தி தங்கள் முடிவை நோக்கி விரைகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

பிரதமரின் வங்கிக் கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாய் மோசடி செய்தவர் பதவி நீக்கம்!

ஓமோம்

நம்பீட்டம் நம்பீட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாய்களை மோசடி செய்த பிரதமரின் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மில்லியன் கணக்கில் மோசடி செய்யும்வரை பிரதமர் என்ன மப்பிலேயே கிடந்தவர்? அல்லது கணக்கு வழக்கு தெரியாமல் கொள்ளைஅடிச்சு வைச்சிருந்தாரோ? நல்லா சுத்துவான்கள் சுருட்டினதை.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் சபாநாயகர் WJM. லொக்குபண்டாரவின் மகன், உதித்த லொக்குபண்டாரவே அப்பணத்தை கையாடல் செய்தவர் ஆவர். 2005 ஆண்டில் இருந்து மஹிந்தவின் அரச சம்பளம், அந்த கணக்கில்  வைப்பு செய்யப்பட் டுவருகின்றது. அண்மை வரை மஹிந்தவுக்கு அப்படி ஒரு வங்கி கணக்கு இருப்பதே நினைவில் வரவில்லை, நாட்டை கொள்ளையடிக்கும் பணத்துடன் ஒப்பிடும்போது  உதுவெல்லாம் அவருக்கு peanut.  

  • கருத்துக்கள உறவுகள்

பணம் திருடப்பட்ட சம்பவம்: பிரதமரின் ஊடக செயலாளர் பதில்

 

 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கிலிருந்து பெருமளவிலான பணம் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரை முறைப்பாடு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

பிரதமரின் முன்னாள் செயலாளராகப் பணியாற்றிய ஒருவர்,  பிரதமரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கை அணுகக்கூடிய ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி மில்லியன் கணக்கான பணத்தை எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

மேலும், பணம் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த நபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ரொஹான் வெலிவிட்ட ,

இவ்வாறானதொரு சம்பவம் குறித்து பிரதமர் அலுவலகம் அறிந்திருக்கவில்லை.

மேற்படி சம்பவம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் எனக்குத் தெரிந்த வகையில் தவறானவை என்றார்.

 

Tamilmirror Online || பணம் திருடப்பட்ட சம்பவம்: பிரதமரின் ஊடக செயலாளர் பதில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.