Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொறிக்குள் சிக்கிவிட்டோம்! இவர்கள் கூறுவது பொய் - இலங்கையின் நிலவரத்தை அம்பலப்படுத்திய அமைச்சர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் கோவிட் தொற்று நோய் என அரசாங்கத்தில் இருக்கும் பலர் கூறுவது பொய் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார். சிங்கள வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கை வரலாற்றில் என்றுமே எதிர்நோக்காத நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. பலர் இந்த நெருக்கடியை அடையாளம் காணவில்லை. நெருக்கடியை அடையாளம் காணாது அதற்கு தீர்வு காண முடியாது.

கோவிட் காரணமாக ஏற்பட்ட நெருக்கடி என பலர் கூறுகின்றனர். இது உலக நெருக்கடி என்கின்றனர். இது பொய். இலங்கை வரையறைகள் இன்றி கடனை பெற்றதே இந்த நெருக்கடிக்கு காரணம். கடன் பொருளாதாரம்.

நாம் வரலாறு முழுவதும் கடனை பெற்று செலவிட்ட இனம். உழைத்து செலவிடுவதற்கு பதிலாக கடனை பெற்று செலவிடும் கலாசாரத்தை நாம் 1950 ஆம் ஆண்டில் இருந்து முன்னெடுத்து வருகின்றோம்.

தற்போது மேலதிக கடனை பெற முடியாத அளவுக்கு கடன் பொறியில் சிக்கியுள்ளோம். இந்த நெருக்கடி முழு நாட்டு மக்களும் சிக்கியுள்ளனர். இதனால், அதிகமாக பயிரிடுங்கள். உருவாக்கங்களுக்கான உந்துலை ஏற்படுத்த வேண்டும்.

இந்த முன்னுதாரணத்தை பேச்சில் அல்ல அரசியல் தலைவர்கள் செயலில் காட்ட வேண்டும். பெருந்தொகையான எரிபொருளை விரயமாக்கி சுதந்திர தின வைபவம் போன்ற அரச நிகழ்வுகளை நடத்துவது தவறு. அப்படியான வைபவங்களை நடத்த வேண்டாம் என நான் அமைச்சரவையில் கோரினேன்.

எனினும் அதனை கவனத்தில் கொள்ளவில்லை எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

https://tamilwin.com/article/we-borrow-and-spend-1644125408

  • கருத்துக்கள உறவுகள்

திங்கள் கிழமை… அமைச்சர் பதவி நீக்கம் என்ற செய்தி வரும். 😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

உழைத்து செலவிடுவதற்கு பதிலாக கடனை பெற்று செலவிடும் கலாசாரத்தை நாம் 1950 ஆம் ஆண்டில் இருந்து முன்னெடுத்து வருகின்றோம்.

இலங்கைப் பாராழுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநித்துவம் அதிகமாகிவிடும் என்ற சிங்களவர்களினதும் அவர்களது புத்தபிக்குகளின் காழ்ப்புணர்ச்சியிலுமே பெரும்தொகையிலான மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமை மறுக்கப்பட்டுத் துரத்தப்பட்டதும், பின்பு சிறிமா சாத்திரி ஒப்பந்தத்தில் மிகுதித் தொழிலார்கள் பலர் துரத்தப்பட்டதும், உழைப்பின்றிக் கடன்பெற்று வாழும் கலாச்சாரம், இலங்கையில் தோன்றி வளர்வதற்குக் காரணமாகும். அத்துடன் இலங்கை சிங்களவருடைய அரசாட்சியின் கீழ் இருந்தாலும், நிர்வாகம் அதிகமாகத் தமிழரிடமே இருந்துவந்தமை படிப்படியாகக் குறைக்கப்பட்டதும் அடுத்த காரணமாகும்.  

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

இலங்கைப் பாராழுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநித்துவம் அதிகமாகிவிடும் என்ற சிங்களவர்களினதும் அவர்களது புத்தபிக்குகளின் காழ்ப்புணர்ச்சியிலுமே பெரும்தொகையிலான மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமை மறுக்கப்பட்டுத் துரத்தப்பட்டதும், பின்பு சிறிமா சாத்திரி ஒப்பந்தத்தில் மிகுதித் தொழிலார்கள் பலர் துரத்தப்பட்டதும்,

 

அதற்க்கு சில  யாழ் உயர் குடி தமிழ் தலைவர்களும் முண்டு கொடுத்தார்கள் என்பதும் யாம் அறிந்ததே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, zuma said:

 

அதற்க்கு சில  யாழ் உயர் குடி தமிழ் தலைவர்களும் முண்டு கொடுத்தார்கள் என்பதும் யாம் அறிந்ததே.

தாங்கள் படித்த பரம்பரை என்று சொல்லிக்கொண்டு இனத்துக்கே துரோக வஞ்சகம் செய்த கூட்டம் அவர்களின் வாரிசுகள் எப்படி இப்ப என்ன செய்து கொண்டு இருக்கினம் என்று அறிய ஆவல் ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, பெருமாள் said:

தாங்கள் படித்த பரம்பரை என்று சொல்லிக்கொண்டு இனத்துக்கே துரோக வஞ்சகம் செய்த கூட்டம் அவர்களின் வாரிசுகள் எப்படி இப்ப என்ன செய்து கொண்டு இருக்கினம் என்று அறிய ஆவல் ...

நாங்கள் முந்தி இருந்த இருப்புக்கு......கார் என்ன மாடி வீடென்ன...அதென்ன இதென்ன......உவங்கள் வந்து எல்லாத்தையும் கெடுத்துப்போட்டாங்கள்.😂

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பெருமாள் said:

தாங்கள் படித்த பரம்பரை என்று சொல்லிக்கொண்டு இனத்துக்கே துரோக வஞ்சகம் செய்த கூட்டம் அவர்களின் வாரிசுகள் எப்படி இப்ப என்ன செய்து கொண்டு இருக்கினம் என்று அறிய ஆவல் ...

அவர்களின் வாரிசுகள் இப்ப, குடும்ப  சைக்கிள் கடை நடத்துகின்றார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

 

அதற்க்கு சில  யாழ் உயர் குடி தமிழ் தலைவர்களும் முண்டு கொடுத்தார்கள் என்பதும் யாம் அறிந்ததே.

நான் அறிந்தவரையில், உயர் குடித் தமிழ் தலைவன் என்று அதிகாரம் காட்டியது வவுனியா எம்.பி சுந்தரலிங்கம் அவர்கள்தான்.

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் என்ன.?  அமைச்சர் எல்லாம் ஆளுக்கு ஒரு தட்டை ஏந்தி நாடு நாடா கிளம்புங்கப்பா..👌

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

திங்கள் கிழமை… அமைச்சர் பதவி நீக்கம் என்ற செய்தி வரும். 😁

அவருக்கு ஏற்கெனவே அறிவித்தல் கொடுத்தாயிற்று.  இனி சாண் ஏறினாலென்ன? முழமேறினாலென்ன? என்று மாத்தையா துணிந்து சொல்கிறார்.

16 hours ago, பெருமாள் said:

நாம் வரலாறு முழுவதும் கடனை பெற்று செலவிட்ட இனம். உழைத்து செலவிடுவதற்கு பதிலாக கடனை பெற்று செலவிடும் கலாசாரத்தை நாம் 1950 ஆம் ஆண்டில் இருந்து முன்னெடுத்து வருகின்றோம்.

அதோடு இனக்கலவரங்களை ஏற்படுத்தி, தமிழரை அழித்து, கொள்ளையிட்ட இனம் என்றும் சேர்ந்து வந்திருக்கோணும். மீண்டும் ஒருநாள் சொல்லுவார்கள்.

இப்படி தொடர்ந்து அறிக்கைகள் வரும் என எதிர்பார்க்கலாம். கடைசியில் அரசவையில் ராஜபக்ச குடும்பமே மிஞ்சி, பிறகு அவர்களும் அடிபட்டு அரசியல் இருந்து விரட்டப்படுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.