Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியா வருகை - நோக்கம் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியா வருகை - நோக்கம் என்ன?

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
54 நிமிடங்களுக்கு முன்னர்
 

Prof. G L Peiris

பட மூலாதாரம்,PROF. G L PEIRIS/FACEBOOK

இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இன்று இந்தியாவிற்கு மூன்று நாள் அலுவல்பூர்வ பயணம் மேற்கொள்கிறார்.

இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள இந்த தருணத்தில், வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு வருவது, மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது.

சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிகள், இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்;.

வெளியுறவுத்துறை அமைச்சர், பல்வேறு காரணங்களை முன்னிலைப்படுத்தி, இந்தப் பயணத்தில் ஈடுபடுவதாக வெளியுறவுத்துறை அமைச்சரின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில், இந்தியா வழங்கிய உதவிகள் குறித்து கலந்துரையாடல்களை நடத்துவதற்கும், பௌத்த மதம் தொடர்பிலான பல்வேறு திட்டங்களை ஆரம்பிப்பதற்கும், இந்திய - இலங்கை மீனவப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியாவினால் இலங்கைக்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக 500 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் இந்தியாவிடமிருந்து கிடைக்கும் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடல்களை நடத்துவதற்காகவே வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியாவிற்கான வருகையை மேற்கொள்கிறார்.

 

Prof. G L Peiris

பட மூலாதாரம்,PROF. G L PEIRIS/FACEBOOK

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் இந்த விஜயத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட மேலும் சிலரை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மூத்த பத்திரிகையாளரின் பார்வை

இலங்கை பெரிய பொருளாதார நெருக்கடியில் இருந்த தருணத்தில், இந்தியாவினால் வழங்கப்பட்ட உதவித் திட்டங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கிலேயே வெளிவிவகார அமைச்சர் இந்தியப் பயணத்தை மேற்கொள்வதாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.

 

R.SIVARAJA

பட மூலாதாரம்,R.SIVARAJA

அதேபோன்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்தியப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கான முன் ஏற்பாடுகளை செய்வதற்காகவுமே, வெளிவிவகார அமைச்சர், இந்தியப் பயணம் மேற்கொள்கிறார்.

இந்தியாவினால் வழங்கப்பட்ட நிதி உதவிகளினாலேயே, இலங்கை பொருளாதார ரீதியில் எதிர்கொண்ட பாதிப்புக்களிலிருந்து மீண்டெழ முடிந்ததாகவும் அவர் கூறுகிறார்.

இலங்கை எதிர்நோக்கியுள்ள எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினை குறித்து, இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, அந்த நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறார்.

இலங்கை மின்சார சபைக்கு, எரிபொருளை இந்தியாவிடமிருந்து நேரடியாக பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இந்த கலந்துரையாடல் தொடங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளதார நெருக்கடியை தணிப்பதற்காக, இந்தியாவின் உதவிகளை மேலும் எதிர்பார்ப்பதே, இலங்கை வெளிவிவகார அமைச்சரின் இந்தியப் பயணத்துக்கான முக்கிய நோக்கமாகத் தெரிகிறது என்றும் ஆர்.சிவராஜா தெரிவிக்கிறார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-60277902

  • கருத்துக்கள உறவுகள்

படகையும் , மீனவர்களையும் விடுவிக்க சொல்வினம்..

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

படகையும் , மீனவர்களையும் விடுவிக்க சொல்வினம்..

அது அவையோடா நாட்டான் இல்லீங்க.....

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிகள், இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்;.

 

14 hours ago, ஏராளன் said:

அத்துடன், இந்தியாவினால் இலங்கைக்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக 500 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்பட்டுள்ளது

யானைப்பசிக்கு சோளப்பொரி! எத்தனை நாளைக்கு அங்கேயும் இங்கேயும் ஓடியோடி கடன் வாங்குவது? ஒரேயடியாக ஓர் விலையை பேசி நாட்டை வாங்கலாமே!    

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

படகையும் , மீனவர்களையும் விடுவிக்க சொல்வினம்..

படகையும் , மீனவர்களையும் விடுவிக்க சொல்வினம்..

படகையும் , மீனவர்களையும் விடுவிக்க சொல்வினம்..

படகையும் , மீனவர்களையும் விடுவிக்க சொல்வினம்.. (50% :50% sharing basis ? 🤫)

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, alvayan said:

அது அவையோடா நாட்டான் இல்லீங்க.....

Image preview

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியா வருகை - நோக்கம் என்ன?

இன்றைய நிலையில் சிறீலங்காவிலிருந்து எந்த  அமைச்சர்  வெளிநாடு  போனாலும் பிச்சை  கேட்கத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சோம்பேறி சிங்களவன் தீவுக்குள் வந்து இனம் பெருகியதுதான் ஒரே சாதனை பெருகிக்கிடக்குறாங்கள் என்று நாட்டை கொடுக்க கடனுக்கு கடன் வாங்கியே அழகான தீவை சிதிலமாக்கி போட்டான்கள் வாங்கிற கடனும் ஏறுகிற விலைவாசியும் சாதாரண சிங்களவனுக்கு தெரியக்கூடாது என்பதுக்கு இனவாதம் எனும் பேயை அவுட்டு விட்டு கடைசியில் நாட்டை மற்றைய நாடுகளுக்கு வித்தது தான் சாதனை .

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாத பயங்கரவாதத்தை அழிக்கிறேன் என்று சொல்லி எல்லோரையும் பேய்க்காட்டிக்கொண்டு நாட்டையும் அதன் வளங்களையும் அழித்ததுதான் மிச்சம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.