Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான் ஒரு தமிழ் குடிமகன்'; நிதி நிறுவனம் வழங்கிய சிங்களத்தில் படிவத்தில் எழுதிக் கொடுத்த இளைஞன்: யாழில் சம்பவம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘நான் ஒரு தமிழ் குடிமகன்’; நிதி நிறுவனம் வழங்கிய சிங்களத்தில் படிவத்தில் எழுதிக் கொடுத்த இளைஞன்: யாழில் சம்பவம்!

274084108_5058697707580362_3604713492371

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சிங்கள மொழியில் வழங்கப்பட்ட படிவத்தில், தனது தாய்மொழி தமிழ் என இளைஞர் ஒருவர் எழுதிக் கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழிலுள்ள நிதி நிறுவனமொன்றில் வாகன விபத்து காப்புறுதிக்கு படிவம் பெற சென்ற இளைஞருக்கு சிங்கள மொழியிலான படிவம் வழங்கப்பட்டுள்ளது. அந்த படிவத்தை நிராகரித்து, தனக்கு தமிழ் மொழியிலான படிவத்தை வழங்கும்படி கேட்டுள்ளார்.

அத்துடன், சிங்கள மொழியிலான படிவத்தின் மேல், ‘எனது தாய் மொழி தமிழ். தமிழ் படிவம் வழங்கவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அந்த இளைஞன் பேஸ்புக்கில் இட்ட பதிவில்,

சிறிய வாகன விபத்து ஒன்றிற்காக claim எடுப்பது தொடர்பாக யாழ்பாண HNB insurance நிறுவனத்திற்கு சென்ற போது பொலிஸ் ரிப்போட் எடுக்க வேண்டும் இந்த படிவத்தை நிரப்பி கொண்டே பொலிஸ்ல ரிப்போட் எடுத்திட்டு வாங்க என்று சொல்லி அங்கே வேலைக்கு நிற்கும் பெண் இந்த படிவத்தை தந்தார் நான் கேட்டன் உன்ட தாய்மொழி தமிழ் என்ட தாய்மொழி தமிழ் யாழ்பாணத்தில நிர்வாக மொழி தமிழ் நீ தந்திருக்கும் இந்த படிவம் என்ன மொழி முடிந்தால் கொழும்பில் உள்ள உன்னுடைய கிளையில் தமிழ் படிவத்தை கொடுத்து இதை நிரப்பி கொண்டு போய் கொடுக்க சொல்லி ஒரு சிங்களவரிடம் கொடுக்க முடியுமா தமிழ் படிவத்தை என்று..

தனியார் நிறுவனமாக இருந்தாலும் இங்கே உங்கள் சேவை தமிழர்கு தான் வழங்குகின்றீர்கள்.

என்ன மயி**** யாழ்பாணத்தில அந்த நிறுவனத்தில் கிளை முகாமையாளர்கள் முதற்கொண்டு வெட்கம் கெட்டு வேலை செய்கின்றீர்கள் ஒரு தமிழ் படிவம் தயாரித்து தமிழர்களிடம் கொடுக்க முடியாமல்.

https://pagetamil.com/2022/02/17/நான்-ஒரு-தமிழ்-குடிமகன்-ந/

Edited by பெருமாள்
அநாகரிக சொற்பதம் சுய தணிக்கை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பெருமாள் said:

‘நான் ஒரு தமிழ் குடிமகன்’; நிதி நிறுவனம் வழங்கிய சிங்களத்தில் படிவத்தில் எழுதிக் கொடுத்த இளைஞன்: யாழில் சம்பவம்!

70,80 வருசமாய் பாராளுமன்றம் போன/ போய்க்கொண்டிருக்கிற எங்கடை தமிழ் எம்பிமாருக்கு செம்புள்ளி கரும்புள்ளி குத்த எல்லாம் சரிவரும்.
கோதாரி விழுந்த எம்பிமார் கட்டையில போக

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

70,80 வருசமாய் பாராளுமன்றம் போன/ போய்க்கொண்டிருக்கிற எங்கடை தமிழ் எம்பிமாருக்கு செம்புள்ளி கரும்புள்ளி குத்த எல்லாம் சரிவரும்.
கோதாரி விழுந்த எம்பிமார் கட்டையில போக

எங்கடை எம்.பி.மார், 
பிள்ளைகளுக்கு சிங்களவரை கலியாணம் கட்டிக்  கொடுக்கிறார்கள். 
சிங்கள ஜனாதிபதியை... பிள்ளைகளின் பிறந்தநாளுக்கு கூப்பிட்டு 
கேக் வெட்டுகிறார்கள்.
அவர்களிடம்  வேறு என்னத்தை, எதிர் பார்க்க முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

70,80 வருசமாய் பாராளுமன்றம் போன/ போய்க்கொண்டிருக்கிற எங்கடை தமிழ் எம்பிமாருக்கு செம்புள்ளி கரும்புள்ளி குத்த எல்லாம் சரிவரும்.
கோதாரி விழுந்த எம்பிமார் கட்டையில போக

2 hours ago, தமிழ் சிறி said:

எங்கடை எம்.பி.மார், 
பிள்ளைகளுக்கு சிங்களவரை கலியாணம் கட்டிக்  கொடுக்கிறார்கள். 
சிங்கள ஜனாதிபதியை... பிள்ளைகளின் பிறந்தநாளுக்கு கூப்பிட்டு 
கேக் வெட்டுகிறார்கள்.
அவர்களிடம்  வேறு என்னத்தை, எதிர் பார்க்க முடியும். 

எம்பிமாரைத் தம்பிமார் திட்டி என்னாகப் போகுது, அதுதான் எங்கட ஒரு எம்பி சொல்லிவிட்டாரே! தமிழரும் சிங்களவரும் ஒருதாய்வழிவந்த பிள்ளைகள் என்று. எல்லோரும் தலையில் மூன்றுதரம் குட்டி விக்னேசுவரப் பெருமானைச் சுற்றிவந்து கும்பிட்டால் எல்லாம் நலமாகும்.🙏

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

70,80 வருசமாய் பாராளுமன்றம் போன/ போய்க்கொண்டிருக்கிற எங்கடை தமிழ் எம்பிமாருக்கு செம்புள்ளி கரும்புள்ளி குத்த எல்லாம் சரிவரும்.
கோதாரி விழுந்த எம்பிமார் கட்டையில போக

அண்னே வெளிநட்டில் பதுங்கி இருந்து கொண்டு உந்த கட்டையிலே போற கதை கதைக்க கூடாது. தில் இருந்தால்,  தாயகம் போய் தமிழ் எம்பிமாருக்கும், அந்த இன்சூரன்ஸ் கொம்பனிகாரனுக்கும் நல்ல பச்சை மட்டை அடிகொடுங்கள், அப்ப நான் சொல்லுவன் நீங்கள் ஒரு மானம் உள்ள தமிழன் என்று. 😋

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, zuma said:

அண்னே வெளிநட்டில் பதுங்கி இருந்து கொண்டு உந்த கட்டையிலே போற கதை கதைக்க கூடாது. தில் இருந்தால்,  தாயகம் போய் தமிழ் எம்பிமாருக்கும், அந்த இன்சூரன்ஸ் கொம்பனிகாரனுக்கும் நல்ல பச்சை மட்டை அடிகொடுங்கள், அப்ப நான் சொல்லுவன் நீங்கள் ஒரு மானம் உள்ள தமிழன் என்று. 😋

சாமியாரை கட்டையில அனுப்ப பிளான் போட்டாச்சடோய்! கனநாளாய் போட்ட திட்டம், வசமாய் மாட்டிட்டார். சிங்களத்துக்கு சார்பாய் பேச ஏலுமெண்டால் பேசுங்கோ, இல்லையோ வாயை மூடிக்கொண்டு இருக்க பழகுங்கோ என்று சொல்லுமாப்போல. 

உலக நாடுகளெல்லாம் ஏன் இலங்கை விவகாரத்தில் தலையிடக்கூடாது, கேள்வி கேட்கக்கூடாது என்று இலங்கை எகிறுகிறது என்பது இப்போது சாமியாருக்கு புரிந்திருக்கும். "அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி." 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

அண்னே வெளிநட்டில் பதுங்கி இருந்து கொண்டு உந்த கட்டையிலே போற கதை கதைக்க கூடாது. தில் இருந்தால்,  தாயகம் போய் தமிழ் எம்பிமாருக்கும், அந்த இன்சூரன்ஸ் கொம்பனிகாரனுக்கும் நல்ல பச்சை மட்டை அடிகொடுங்கள், அப்ப நான் சொல்லுவன் நீங்கள் ஒரு மானம் உள்ள தமிழன் என்று. 😋

தமிழ் எம்பிமார் வயோதிபர்கள் எனவே கட்டையில் போக என்று சொல்லலாம் ஏன்னெனில். உண்மையில் அவர்கள் கட்டையில் தான் போகப் போகிறார்கள்   ஆனால் அந்த வயோதிபர்களுக்கு பச்சை மட்டை அடி கொடுக்கும் படி கோரியது கண்டனத்திற்குரியது  இந்த உலகில் எவருக்கும் மானம் உள்ள தமிழன் என்று சான்றிதழ் கொடுக்கும் தகுதியுமில்லை...உரிமையுமில்லை.   எனவே பெறுமதியற்ற உங்கள் சொல்லுக்கு.....ஆக...பணம்....நேரம்.  பச்சை மட்டை என்பவற்றை செலவு செய்ய முடியாது....தயவுசெய்து மன்னிக்கவும் 😂🤣🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, zuma said:

அண்னே வெளிநட்டில் பதுங்கி இருந்து கொண்டு உந்த கட்டையிலே போற கதை கதைக்க கூடாது. தில் இருந்தால்,  தாயகம் போய் தமிழ் எம்பிமாருக்கும், அந்த இன்சூரன்ஸ் கொம்பனிகாரனுக்கும் நல்ல பச்சை மட்டை அடிகொடுங்கள், அப்ப நான் சொல்லுவன் நீங்கள் ஒரு மானம் உள்ள தமிழன் என்று. 😋

கனடா,ஜேர்மனி மாதிரி பேச்சு சுதந்திரம்,கருத்து சுதந்திரம் எல்லாம் சிறிலங்காவிலை இருக்கா சார்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, zuma said:

அண்னே வெளிநட்டில் பதுங்கி இருந்து கொண்டு உந்த கட்டையிலே போற கதை கதைக்க கூடாது. தில் இருந்தால்,  தாயகம் போய் தமிழ் எம்பிமாருக்கும், அந்த இன்சூரன்ஸ் கொம்பனிகாரனுக்கும் நல்ல பச்சை மட்டை அடிகொடுங்கள், அப்ப நான் சொல்லுவன் நீங்கள் ஒரு மானம் உள்ள தமிழன் என்று. 😋

நீங்களும் அங்குள்ள அரசியல்வாதிகள் போல் உசுப்பேத்தல் கதைகளை சொல்லிக்கொண்டு இன்னும் கொஞ்சநாளில் அப்படி எழுதியவர் எதிர்பாரா விபத்து அல்லது தற்கொலை என்று சேதியுடன் போய் விடுவாரோ என்று கவலைப்படவேண்டி உள்ளது தமிழ் இன அழிப்பு இப்போ விபத்துக்களிலும்  தற்கொலைகளிலும் தொடர்கிறது என்பது உங்களுக்கு தெரியாத விடயமா ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கனடா,ஜேர்மனி மாதிரி பேச்சு சுதந்திரம்,கருத்து சுதந்திரம் எல்லாம் சிறிலங்காவிலை இருக்கா சார்?

வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களே வாயை பொத்திக்கொண்டு இருந்துவிட்டு தங்கட நாட்டில போய் இருந்துகொண்டு அறிக்கைகளும், கண்டனங்களும் விடுகினம் எண்டால் பாருங்கோவேன் நாட்டில இருக்கிற சுதந்திரத்தை! தாயக மக்கள் பொத்திக்கொண்டு இருக்கினம், நீங்களும் கண்ணை மூடிக்கொண்டு, பொத்திக்கொண்டு அவர்களைப்போல் இருக்க பழகுங்கள், இல்லையேல் விசுவாசிகளுக்கு கெட்ட கோவம் வந்து உங்களை திட்டித் தீர்த்தால்  நான் பொறுப்பாளியல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.