Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர்ந்துவாழும் இலங்கையர்கள் இலங்கையில் முதலீடு செய்வதை ஊக்குவிப்பதற்கான புதியதிட்டம் உருவாக்கப்படுகின்றது – முதலீட்டுச்சபை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்துவாழும் இலங்கையர்கள் இலங்கையில் முதலீடு செய்வதை ஊக்குவிப்பதற்கான புதியதிட்டம் உருவாக்கப்படுகின்றது – முதலீட்டுச்சபை

 

 

புலம்பெயர்ந்துவாழும் இலங்கையர்கள் இலங்கையில் முதலீடு செய்வதை ஊக்குவிப்பதற்கான புதிய திட்டமொன்றை உருவாக்கும் நடவடிக்கையில் இலங்கை முதலீட்டுச்சபை ஈடுபட்டுள்ளது.
இலங்கையில் முதலீடுசெய்யும் புலம்பெயர்ந்தவர்களிற்கு விசேட ஊக்குவிப்பு திட்டங்களை உள்ளடக்கியதாக புதிய திட்டம் காணப்படும்.
இது புதிய யோசனை என தெரிவித்துள்ள இலங்கை முதலீட்டுசபை வட்டாரங்கள் ஜனாதிபதிதனது சுதந்திர தின உரையில் புலம்பெயர் இலங்கையர்களை இலங்கையின் அபிவிருத்தியில் இணைந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்ததன்பின்னணியில் இந்த திட்டம் உருவாக்கப்படுகி;ன்றது என இலங்கை முதலீட்டு சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தனது சுதந்திரதின உரையில் ஜனாதிபதிராஜபக்ச வெளிநாடுகளில் வாழும் மில்லியன் கணக்கான இலங்கையர்களை தங்கள் சேமிப்புகளை இலங்கையில் முதலீடு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
boi-srl.jpg
சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கை மிகமோசமான கடன் நெருக்கடியை தற்போதே எதிர்கொண்டுள்ள நிலையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
முதலீட்டு வலயஅபிவிருத்திக்கான அமைச்சர் டிவிசானக இலங்கை முதலீட்டுசபையை ஊக்குவிப்பு திட்டமொன்றை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
புலம்பெயர்ந்த இலங்கையர்களிற்கு கவர்ச்சிகரமான விசேட ஊக்குவிப்பினை வழங்கும் திட்டமொன்றினை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது.
அவர்களை இதற்காக ஒன்றிணைப்பதற்காக தனியான திட்டமொன்றைஉருவாக்கவேண்டும்,என தெரிவித்துள்ள இலங்கை முதலீட்டுசபை முதலீட்டு சபை அதிகாரிகளிற்கும் அமைச்சருக்கும் இடையில் இது தொடர்பாக ஆராய்வதற்கான சந்திப்பொன்று இடம்பெற்றதாகவும் வெளிநாட்டு பிரஜாவுரிமையை கொண்ட இலங்கையர்கள் இலங்கையில் முதலீடு செய்வற்கான விசேட திட்டமொன்று குறித்து கவனம்செலுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/166800

  • கருத்துக்கள உறவுகள்

புலம்  பெயர்  இலங்கையரிடம்  பணமோ  அறிவோ  இல்லை

அது  ஈழத்தமிழனிடம் தான்  இருக்கிறது

கேள்வி  ஈழத்தமிழர்களிடம்  என்று  வந்தால்  பிழைக்கலாம்

வரும்?

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விசுகு said:

புலம்  பெயர்  இலங்கையரிடம்  பணமோ  அறிவோ  இல்லை

அது  ஈழத்தமிழனிடம் தான்  இருக்கிறது

கேள்வி  ஈழத்தமிழர்களிடம்  என்று  வந்தால்  பிழைக்கலாம்

வரும்?

அதைத்தான் நானும் நினைச்சன்.. புலம்பெயர் ஈழத்தமிழர் எண்டுகூட சொல்லவேண்டாம்.. புலம்பெயர் தமிழ்மக்கள் எண்டு சொன்னாகூட போதும்.. ஆனா சொல்லமாட்டினம்.. கெளரவ மசிர் விடாது.. ஆனா எங்கட காசுமட்டும் வேணும் நக்க.. சிங்கள ஓட்டு வாங்குரதுக்கு தமிழன் தமிழன் எண்டு வேற்றுமை காட்டி கதைப்பானுங்க.. இதுக்கு மட்டும் இலங்கையர் எண்டு இன ஒற்றுமை கதைக்கினமாம்.. கடுப்பாகுது..😡😡

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அதைத்தான் நானும் நினைச்சன்.. புலம்பெயர் ஈழத்தமிழர் எண்டுகூட சொல்லவேண்டாம்.. புலம்பெயர் தமிழ்மக்கள் எண்டு சொன்னாகூட போதும்.. ஆனா சொல்லமாட்டினம்.. கெளரவ மசிர் விடாது.. ஆனா எங்கட காசுமட்டும் வேணும் நக்க.. சிங்கள ஓட்டு வாங்குரதுக்கு தமிழன் தமிழன் எண்டு வேற்றுமை காட்டி கதைப்பானுங்க.. இதுக்கு மட்டும் இலங்கையர் எண்டு இன ஒற்றுமை கதைக்கினமாம்.. கடுப்பாகுது..😡😡

கடன் வாங்கியே உலகில் அழியிற இனம் சிங்களம் வாங்கியக்கடனுக்கு வட்டி கட்ட கூட முடியாத நிலையில் சிங்களம் இருக்கு இந்தநிலையில் அதிக வட்டி ஆசைகாட்டி முதலே இல்லாமல் போக பண்ணபோகினம் . தமிழருக்கு ஒரு தீர்வை கொடுத்து காணிகளை  விடுவித்தாலே தானாகவே முதலீடு வரும் அதைவிட்டு காசு மட்டும் வேணும் என்றால் ............

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அதைத்தான் நானும் நினைச்சன்.. புலம்பெயர் ஈழத்தமிழர் எண்டுகூட சொல்லவேண்டாம்.. புலம்பெயர் தமிழ்மக்கள் எண்டு சொன்னாகூட போதும்.. ஆனா சொல்லமாட்டினம்.. கெளரவ மசிர் விடாது.. ஆனா எங்கட காசுமட்டும் வேணும் நக்க.. சிங்கள ஓட்டு வாங்குரதுக்கு தமிழன் தமிழன் எண்டு வேற்றுமை காட்டி கதைப்பானுங்க.. இதுக்கு மட்டும் இலங்கையர் எண்டு இன ஒற்றுமை கதைக்கினமாம்.. கடுப்பாகுது..😡😡

 

உலகத்திலெல்லாம் கடன் பட்டு  திவாலாகியாச்சு

உலகத்துக்கெல்லாம் நாட்டை விக்கவும் தயாராகியாச்சு

இனி  நம்ம வேலையை  காட்டவேணும்

தயாராகுங்கள் உறவுகளே

சேமியுங்கள்

அறிவாயுதத்தை பெருக்குங்கள் ஊட்டுங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

 

உலகத்திலெல்லாம் கடன் பட்டு  திவாலாகியாச்சு

உலகத்துக்கெல்லாம் நாட்டை விக்கவும் தயாராகியாச்சு

இனி  நம்ம வேலையை  காட்டவேணும்

தயாராகுங்கள் உறவுகளே

சேமியுங்கள்

அறிவாயுதத்தை பெருக்குங்கள் ஊட்டுங்கள்

 

இப்படிச் செய்யப்படும் முதலீடுகள் இலங்கை அரசால் முடக்க முடியுமா? இந்த முதலீட்டாளர்களுக்கு என்ன பாதுகாப்பு உண்டு?

  • கருத்துக்கள உறவுகள்+

இன்னும் நல்லா அழியிற நிலைக்குப் போகட்டும். அப்ப முதலீட்ட பற்றி ஓசிக்கலாம். அதுவரை தமிழா முதலிட்டு விடாதே.

நல்லா விட்டால் அவன் நல்லா இறங்கி வருவான். பொறுத்திருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

இன்னும் நல்லா அழியிற நிலைக்குப் போகட்டும். அப்ப முதலீட்ட பற்றி ஓசிக்கலாம். அதுவரை தமிழா முதலிட்டு விடாதே.

நல்லா விட்டால் அவன் நல்லா இறங்கி வருவான். பொறுத்திருப்பம்.

சோழன்”..யோசிக்காலாம்.....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நன்னிச் சோழன் said:

இன்னும் நல்லா அழியிற நிலைக்குப் போகட்டும். அப்ப முதலீட்ட பற்றி ஓசிக்கலாம். அதுவரை தமிழா முதலிட்டு விடாதே.

நல்லா விட்டால் அவன் நல்லா இறங்கி வருவான். பொறுத்திருப்பம்.

நல்லாய் படிக்க, கடிக்க, கெஞ்ச விடவேண்டும், அப்பதான் புத்தி வரும். தமிழன் இல்லாமல் இலங்கையில் பொருளாதாரம் இல்லை என்பதை தெரிந்து கொள்ள விட வேண்டும். "பட்டால் அறிவான் சண்டாளன், மழை பெய்தால் அறிவான் வேளாளன்." சிங்களவர் இவர்களை அடிச்சு விரட்டுமளவு ஆவது விட்டுவைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்+
16 minutes ago, satan said:

நல்லாய் படிக்க, கடிக்க, கெஞ்ச விடவேண்டும், அப்பதான் புத்தி வரும். தமிழன் இல்லாமல் இலங்கையில் பொருளாதாரம் இல்லை என்பதை தெரிந்து கொள்ள விட வேண்டும். "பட்டால் அறிவான் சண்டாளன், மழை பெய்தால் அறிவான் வேளாளன்." சிங்களவர் இவர்களை அடிச்சு விரட்டுமளவு ஆவது விட்டுவைக்க வேண்டும்.

ஆனாலும் உவன் இந்தியன் கொஞ்சக் காசைக் குடுத்து சாதுவா தூக்கிவிட்டாலும் விடுவான். முழு அடிமட்டத்திற்கு போகும் என்டு எண்ணேலாது என்பது என்னுடைய கருத்து.

1 hour ago, Kandiah57 said:

சோழன்”..யோசிக்காலாம்.....

😅😅

👍👍

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நன்னிச் சோழன் said:

ஆனாலும் உவன் இந்தியன் கொஞ்சக் காசைக் குடுத்து சாதுவா தூக்கிவிட்டாலும் விடுவான். முழு அடிமட்டத்திற்கு போகும் என்டு எண்ணேலாது என்பது என்னுடைய கருத்து.

முற்றிலும் உண்மை சோழா! நாரதருக்கு வாய்ச்சதுபோல நமக்கு வாய்ச்சது அது. அது லேசில விடாது, தான் பிச்சை கலசம் ஏந்தினாலும் இந்த அழகியை மட்டும் தெருவில விடாது, காரணம் தமிழன் மேலெழக்கூடாது என்கிற எண்ணம்.

  • கருத்துக்கள உறவுகள்+
1 minute ago, satan said:

முற்றிலும் உண்மை சோழா! நாரதருக்கு வாய்ச்சதுபோல நமக்கு வாய்ச்சது அது. அது லேசில விடாது, தான் பிச்சை கலசம் ஏந்தினாலும் இந்த அழகியை மட்டும் தெருவில விடாது, காரணம் தமிழன் மேலெழக்கூடாது என்கிற எண்ணம்.

அதே 😥
சொல்வதற்கு ஒன்றுமில்லை.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.