Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

24 மணி நேரமும் மின் துண்டிக்கப்படும் நாள் நீண்ட தூரத்தில் இல்லை - இலங்கை மின்சாரசபை ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published on 2022-03-01 12:22:13

 
 

(எம்.ஆர்.எம்.வசீம்)

 

நாட்டில் தற்போது முன்னெடுத்துவரும் 5 மணி நேர மின் துண்டிப்பு 24 மணி நேரமாக மாறும் காலம் நீண்ட தூரத்தில் இல்லை.

ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற நடவடிக்கையே இதற்கு காரணமாகும் என இலங்கை மின்சாரசபை ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அமைப்பாளர் ரன்ஜன் ஜயலால் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது முன்னெடுத்துவரும் மின் துண்டிப்பு தொடர்பாக நேற்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது கைவசம் இருக்கும் எரிபொருள் தொடர்பாகவும் அதனால் மின்சாரசபை முன்னெடுத்துவரும் மின் துண்டிப்பு தொடர்பாகவும் அரசாங்கமும் நிறுவனங்களும் பொறுப்பற்ற முறையிலேயே கருத்து தெரிவித்து வருகின்றன. 

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிக்கும் விடயங்கள் மின்சாரசபைக்கு தெரியாது. 

அதனால் பொறுப்பக்கூற வேண்டிய விடயத்துக்கு பொறுப்புக்கூறாமல் இருக்கும் ஆட்சியாளர்களும் நிறுவன பிரதானிகளுமே நாட்டில் இருக்கின்றனர்.

தற்போது ஒருநாளைக்கு 5மணி நேரம் மின் துண்டிப்பு மேற்கொண்டு அதற்கான மாற்றுவழியை தேடிக்கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கு இன்னும் சில தினங்களில் 7மணி நேரம் மின் துண்டிப்பு மேற்கொண்டு அதற்கான பதிலை தேடவேண்டிவரும். 

இந்நிலையில் 7 மணி நேரம் மின் துண்டிப்பு மேற்கொள்ளும் ஆட்சியாளர்களுக்கு 24 மணி நேரம் நாட்டில் மின் துண்டிப்பு மேற்கொள்ளும் காலம் நீண்ட துரத்தில் இல்லை.  

மின் துண்டிப்பை தொடர்ந்து முன்னெடுக்கின்றார்களே தவிர, இந்த பிரச்சினையில் இருந்து மீள்வதற்கு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்வதில்லை அதனால் நாடு பாரிய அழிவுக்கே சென்றுகொண்டிருக்கின்றது. 

24 மணி நேரமும் மின் துண்டிக்கப்படும் நாள் நீண்ட தூரத்தில் இல்லை - இலங்கை மின்சாரசபை ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

நாலை 7 மணி நேர மின்வெட்டாம்  எங்கள் பகுதியில் இதுவரை இல்லை பார்ப்போம் @ஏராளன் @சுவைப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நாலை 7 மணி நேர மின்வெட்டாம்  எங்கள் பகுதியில் இதுவரை இல்லை பார்ப்போம் @ஏராளன் @சுவைப்பிரியன்

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

 

200 ரூவாவுக்கு பெற்றோல் கொடுக்கிறான் . டீசல் இல்லை , மாவு இல்லை ( கோதுமை)  கரண்டும் இல்லை  முடியல இதுல பஸ் இல்ல வேலைக்கு போகணும் பஸ் கட்டணம் அதிகம் நிலமை மோசம் 

  • கருத்துக்கள உறவுகள்

முற்பகல் செய்யின் பிற் பகல்.....விளையும்....அரசன் அன்றறுப்பான் ..தெய்வம்..நின்றறுக்கும்.... அப்ப படித்தது...இப்ப நினைவில் வருகுது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

200 ரூவாவுக்கு பெற்றோல் கொடுக்கிறான் . டீசல் இல்லை , மாவு இல்லை ( கோதுமை)  கரண்டும் இல்லை  முடியல இதுல பஸ் இல்ல வேலைக்கு போகணும் பஸ் கட்டணம் அதிகம் நிலமை மோசம் 

எல்லாத்துக்கும் மூல காரணம் என்ன ராசன்?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

200 ரூவாவுக்கு பெற்றோல் கொடுக்கிறான் . டீசல் இல்லை , மாவு இல்லை ( கோதுமை)  கரண்டும் இல்லை  முடியல இதுல பஸ் இல்ல வேலைக்கு போகணும் பஸ் கட்டணம் அதிகம் நிலமை மோசம் 


அட!  நீங்களும் எங்கட வண்டியிலயா இருக்கிறியள்? பரவாயில்லையே! ஒரு கிழமைக்குள்ள நிலைமை இப்படி மாறிப்போச்சா? நம்பவே முடியலை. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:


அட!  நீங்களும் எங்கட வண்டியிலயா இருக்கிறியள்? பரவாயில்லையே! ஒரு கிழமைக்குள்ள நிலைமை இப்படி மாறிப்போச்சா? நம்பவே முடியலை. 

கடுப்பில இருக்கன் சார் நீங்க வேற சம்பளம் எல்லாம் எங்கு போகிறது என எனக்கே தெரியல. 

10 hours ago, குமாரசாமி said:

எல்லாத்துக்கும் மூல காரணம் என்ன ராசன்?

1. கொரோனா

2. இப்படியெல்லாம் நடக்காது என்ற மக்களின் தெரிவு ( சிங்கள) இறுதியாக அரசுக்கு விழுந்த ஆப்பு

அரசாங்கம்தான்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

2. இப்படியெல்லாம் நடக்காது என்ற மக்களின் தெரிவு ( சிங்கள) இறுதியாக அரசுக்கு விழுந்த ஆப்பு

எந்த அரசாங்கம் அங்கு வந்தாலும் நிண்டு பிடிக்க முடியாது காரணம் அங்கு யுத்த முடிவுக்கு முன் வித்து தள்ளிய பண்ட்  பேப்பர்களே பில்லியனை தாண்டுது என்கிறார்கள் உண்மை விபரம் வெளியில் சொல்லாமல் அடக்கி வாசிக்கிறார்கள் . இனி உக்கிரேன் சண்டை நாட்டை பாதாளத்தில் கொண்டுபோய் விடும் .

இங்கு உக்கிரேன் சண்டை என்றால் எண்ணெய் விலை ஏறுது பொருள்களின் விலையும் ஏறுது எண்ணெய் ஏன் விலை ஏறுது பொருள்கள் விலை ஏன் ஏறுது என்று சிந்திக்கினம் இல்லை  ஒரு கூட்டம் உக்கிரேனுக்கு விழும் அடியை பார்த்து மகிழுதுகள்  இன்னும் ஒரு கூட்டம் ரஸ்யா வேண்டிக்கட்டுது என்கினம் ஆனால் பணம் பண்ணும் மாபியாக்கள் கையில் நாங்கள் மாட்டுப்பட்டு இருக்கிறம் என்ற மாயையை உணர மாட்டினம்! இன்னும் சில நாடுகள் சந்தடி சாக்கில் வட்டி வீதம்களை கூட்டி உள்ளனர் . எண்ணெய் உக்கிரேனில் இருந்தா வருகிறது அதை ஏன் கூட்டு கிறார்கள் ? ஒருத்தரிடம் பதில் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கடுப்பில இருக்கன் சார் நீங்க வேற சம்பளம் எல்லாம் எங்கு போகிறது என எனக்கே தெரியல. 

அச்சச்சோ ......  ப்சி!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இன்று 7 1/2 மணி நேர மின் வெட்டு - தொடரும் நெருக்கடி

  • ரஞ்சன் அருண்பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
9 மணி நேரங்களுக்கு முன்னர்
 

மின் தடை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையில் இன்றைய தினம் (2022மார்ச் 2) 7 1/2 மணி நேர மின் தடை அமல்படுத்தப்படுகிறது.

நாட்டில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுபாடு காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.

இதன்படி, இன்றைய தினம் 7 1/2 மணி நேர மின்சார தடையை ஏற்படுத்துவதற்கான அனுமதியை இலங்கை மின்சார சபைக்கு தாம் வழங்கியதாகவும் அவர் கூறுகின்றார்.

இலங்கைக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான மின் உற்பத்தி நிலையங்கள் காணப்படுகின்ற போதிலும், மின்சார உற்பத்திக்கு தேவையான ஏரிபொருள் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

''மின்சார தடையை தவிர்ப்பதற்கான மாற்று திட்டங்கள் எதுவும் கிடையாது. இவ்வாறான நிலைமை உருவாகும் என அரசாங்கத்திற்கு பல்வேறு தடவைகள் கூறினோம். இந்த நிலைமையிலிருந்து மீண்டெழுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை பல்வேறு தடவைகள் வலியுறுத்தினோம். எனினும், அரசாங்கம் இதுவரை எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. எதிர்காலம் தொடர்பில் தற்போதைக்கு ஒன்றும் கூற முடியாது. இன்றைய தினமும் எரிபொருள் கிடைக்கவில்லை என்றால், இந்த நிலைமை மேலும் பாரதூரமானதாக அமையும். தற்போது காணப்படுகின்ற நிலைமைக்கு அமைய, வார நாட்களில் 7 முதல் 8 மணிநேர மின்சார தடைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது" என அவர் தெரிவிக்கிறார்.

இந்த நிலைமையிலிருந்து மீண்டெழுவதற்கு தற்போதைய 150 மில்லியன் ரூபா இருந்தால் போதுமானது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கிறார்.

 

ஜனக்க ரத்நாயக்க

பட மூலாதாரம்,PUCSL MEDIA

 

படக்குறிப்பு,

ஜனக்க ரத்நாயக்க

இதேவேளை, மின்சாரத்தை வழமை போன்று வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

நாடு எதிர்கொண்டுள்ள மின்சார துண்டிப்பை தவிர்ப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் பொதுமக்களுக்கு ஜனாதிபதி இந்த உறுதியை வழங்கியுள்ளார்.

இதன்படி, மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய திறைசேரி மற்றும் மத்திய வங்கி நடவடிக்கை எடுக்கும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.

இலங்கையில் கடந்த சில காலமாகவே தொடர் மின்சார விநியோகம் தடைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், மின்வெட்டு அமல்படுத்தப்படும் நேரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது.

இதன்படி, இன்று (2022மார்ச் 2) மின்வெட்டு அமல்படுத்தப்படும் நேரம் 7 1/2 மணி நேரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sri-lanka-60583573

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.