Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்டி உயர் சிங்கள மக்களிடையே பல கணவர் முறை இருந்தது.😍

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ராசவன்னியன் said:

அந்த சாப வரிகளை, எப்படி இங்கே எழுதுவது..?

"நான் (தருமர்) புணர நீ பார்க்க, நீ புணர ஊரே பார்க்கும்"

இதை செம்மொழியில் சொல்வதா,  தருமரின் நாய்களுக்கான சாபம்?

  • Replies 74
  • Views 5.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kadancha said:

"நான் (தருமர்) புணர நீ பார்க்க, நீ புணர ஊரே பார்க்கும்"

இதை செம்மொழியில் சொல்வதா,  தருமரின் நாய்களுக்கான சாபம்?

தருமர் அந்த இக்கட்டான சமயத்திலும் தன்னுணர்வுடன் செயல்பட்டிருக்கின்றார்......அதனால்தான் அவர் தருமர்என்று போற்றப்படுகின்றார்........ அந்த நாய்க்கு சாபம் கொடுத்ததற்கு பதிலாக அதே சாபத்தை நகுலனுக்கு கொடுத்திருந்தால் நம் எல்லோருடைய நிலைமைகளையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்............!   🤔

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, suvy said:

தருமர் அந்த இக்கட்டான சமயத்திலும் தன்னுணர்வுடன் செயல்பட்டிருக்கின்றார்......அதனால்தான் அவர் தருமர்என்று போற்றப்படுகின்றார்........ அந்த நாய்க்கு சாபம் கொடுத்ததற்கு பதிலாக அதே சாபத்தை நகுலனுக்கு கொடுத்திருந்தால் நம் எல்லோருடைய நிலைமைகளையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்............!   🤔

இதை பகிடியாக சொல்லவில்லை.

தருமருக்கு அப்படி எண்ணம் வந்திராது என்று எண்ணுகிறேன்.

சமநேரக் கலவி நடந்து இருபதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

ஏனெனில்,வேதங்களில், யாகங்களின் ஓர் நோக்கம், அதுவும் அஸ்வ மேத யாகம், (பெண்களின்) புணர்ச்சி இச்சையை மிருகங்களை கொண்டு  தணிப்பதற்காக, என்ற அர்த்தப்பட வேதங்களில் சுலோகங்கள் இருப்பதாக கேள்விப்பட்டு இருக்கிறேன்.

உண்மை, பொய் தெரியவில்லை.   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

"நான் (தருமர்) புணர நீ பார்க்க, நீ புணர ஊரே பார்க்கும்"

இதை செம்மொழியில் சொல்வதா,  தருமரின் நாய்களுக்கான சாபம்?

"நீ" என்பதைல் மாற்றம் வேண்டும்.. இச்சாபம் அந்த பிராணிகளை குறிப்பிட்டு கொடுக்கப்பட்டது.

டி.ராஜேந்தர் பாணியே இல்லையே..? அதில்தானே விசேசம்..! 🤗

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

"நீ" என்பதைல் மாற்றம் வேண்டும்.. இச்சாபம் அந்த பிராணிகளை குறிப்பிட்டு கொடுக்கப்பட்டது.

டி.ராஜேந்தர் பாணியே இல்லையே..? அதில்தானே விசேசம்..! 🤗

முழுக்க நனைந்த பின்… முக்காடு எதற்கு? 😂
ராஜேந்தர்பாணியிலேயே… நீங்களே, சொல்லி விடுங்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kadancha said:

நீங்கள், பிறந்ததில் இருந்து ஆரம்ப பதின்ம வயது வரையும் (விபரம் அறியும் வரை ) ஓரே இடத்தில் வளர்ந்து இருந்தால் - அந்த ஊர்களில்  - சில குடும்பங்களை - குறிப்பிட்ட பெயர் கொண்டு அழைகப்படும் குடும்பங்கள் இருக்கிறது. 

இப்பொது வழக்கொழிந்து வந்தாலும், இப்பொது 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தெரிந்து இருக்கும், ஒரே ஊரில் பூர்விகம் (முக்கியமாக, மிகவும் சிறு வயதில் இருந்து, விபரம் அறியும் வரை வளர்ந்து இருந்தால்).   

பொதுவாக 'ஓர் பெயர்' வீடு என்று அழைக்கப்படும் குடும்பங்கள், இப்போதும் வடக்கில், கிழக்கில் இருக்கிறது.

குறிப்பிட்ட நடத்தை கொண்ட பெயர்களும் இருக்கிறது. பெயர்களை இங்கே குறிப்பிட விரும்பவில்லை.

இது ஒரு புது தகவல், இதுவரை கேள்விப்பட்டதில்லை. இது யாழ்ப்பாணதில் பரவலாக இருந்ததா அல்லது குறிப்பிட்ட சில இடங்களில் இருந்ததா? இந்தியாவின் தேவதாசி முறை போல ஏதாவது ஒரு சாதியை மையப்படுத்தி நடந்த விடயமா? சாதியை குறிப்பிட்டு சொல்ல தேவையில்லை. எந்தக்கால கட்டத்தில் இவை வழக்கொழிந்தன?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நீர்வேலியான் said:

இது ஒரு புது தகவல், இதுவரை கேள்விப்பட்டதில்லை. இது யாழ்ப்பாணதில் பரவலாக இருந்ததா அல்லது குறிப்பிட்ட சில இடங்களில் இருந்ததா? இந்தியாவின் தேவதாசி முறை போல ஏதாவது ஒரு சாதியை மையப்படுத்தி நடந்த விடயமா? சாதியை குறிப்பிட்டு சொல்ல தேவையில்லை. எந்தக்கால கட்டத்தில் இவை வழக்கொழிந்தன?

இதற்கு, வாய் வழி வரலாறு தெரிய வேண்டும். சந்ததி, சந்ததியாக ஓர் இடத்தில்  இருந்திருக்காவிட்டட்டால், இது எவருக்குமே தெரிய வாய்ப்பில்லை.

போத்துக்கேயர் வருகையுடன் - நல்லூர் (உண்மையில் நெல்லூர், செம்மணி வயலில் விளையும் செம்மணி போன்ற அரிசியை விளைவிக்கும் நெற்கதிர்களால் உருவாக்கிய காரணப் பெயர்) மற்றும் யாழ் நகரை அண்டிய பகுதிகளை தவிர, மற்ற ஊர்களில் பரவலாக குடிமக்கள், போத்துக்கேயரின் ஒரு பக்கம் வரி கொடுமை, மற்றையது விவசாய விளைச்சல்கள் பறிப்பது,  முக்கியமாக கத்தோலிக்கம் மதத்துக்கு மாற்றம், சைவ முறை புழக்கத்தில் இருந்தால் தண்டனை என்பன, பாரிய குடிபெயரவுக்கு வழிவகுத்தது. இப்படி குடிபெயர்வு பொதுவாக வன்னிக்கே நடந்தது.

முக்கியமாக நல்லூர் ராஜதானி மற்றும் இப்போதைய யாழ் நகரை அண்டிய பகுதிகளிகல், இந்த பகுதிகளில், முக்கியமாக ராஜதானி பகுதிகளில் இருந்த அப்போதைய ஆட்சியாளர் குடும்பங்கள்  கத்தோலிக்கத்துக்கும் மாறியமையால், முதலில் மிகவும் அழிவு இருந்தாலும்  இடப்பெயர்வு பெருமளவில் நடக்கவில்லை. ஆனல், போத்துக்கேயரை எதிர்த்தவர்கள் குடும்பமாக நாடு கடத்தப்பட்டது நடந்தது.

போத்துக்கேயர் அனறைய கோயிகளை உடைத்து, அழித்து அதில் இருந்த கருங்கல் பாளங்களை கொண்டே யாழ் கோட்டையை நிர்மாணித்தார். இப்படியாக உடைத்த கருங்கற்களை பொத்துகேயர் வண்டிலில் கொண்டு சென்றபோது, எனது மூதாதையர் ஆத்திரத்தால் கல் எறிந்து, அவர்களின் குடும்பம் நாடுகடத்தப்பட்டதை சந்ததி, சந்தியாக அறிந்து இருக்கிறோம்.  

மற்றது,  நல்லூர் ராஜதானி மற்றும் இப்போதைய யாழ் நகரை அண்டிய பகுதிகளிகல், போத்துகேயக்கருக்கு தொழிலாளர் வேண்டி இருந்தமையால், இந்த பாரிய குடி பெயர்வு நடக்கவில்லை.

நான் நினைக்கிறன், அநேகமாக இப்போது கோட்டைகள் அல்லது அப்படியான சிதைபாடுகளுக்கு சுற்றி உள்ள இடங்களில் இருந்து, பெரும்பாலும் குடிபெயர்வு நடக்கவில்லை. ஏனெனில், வணிகம், வர்த்தகம், போத்துக்கேயருக்கு வேலை செய்வதத்திற்கு தொழிலாளர் தேவை பொன்னர காரணங்கள். அத்துடன் அப்படியான இடங்களில் தான், அப்போதைய ஆட்சியாளர், நிர்வாகம் செய் தோர் இருந்தனர். அவர்களில் பெரும்பாலோனோர் கத்தோலிக்க மதத்துக்கு மாறியதால், போத்துக்கேயர் அவர்களை கொடூரமாக நடத்தவில்லை.

குடி பெயர்வு பாரிய அளவில் நடக்காத இடங்களில், இப்படியான குடும்பகளின் பெயர் சந்தித்த சந்ததியாக வழங்கி வந்தது, இப்பொது வழக்கொழிந்து வருகிறது.

ஆனாலும், என்னுடைய ஆச்சி (அப்பாவின் அம்மா), இப்படியான குடும்பங்கள் பல இடங்களலும் இருந்ததாதாக, எனது ஆச்சியின் சந்ததி வழியாக, ஆச்சியின் தாய் தந்தையர் சொன்னதாக மற்றும் ஆச்சியின் பாட்டன், ப்படி சொன்னதாக , இப்படியான கதைகள் வரும் பொது சொல்லி உள்ளார்.

இதை வாய் வழி வரலாறு - எந்தவொரு சரித்திர குறிப்பிலும்  இருக்காது.

இதனால் தான், சந்ததி, சந்ததி  வழியாக ஒரே இடத்தில் (உங்களது அல்லது எபரினதும்) குடும்பங்கள்    வேர் விட்டு இருந்தால் ஒழிய, இது தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

உ.ம். இங்கு ஒரு சில முறை சொல்லி இருக்கிறேன், சரசுவதி மகால் எனும் நூலகமும், அருங்காட்சியகமும், அன்றைய நல்லூர் (நெல்லூர் அப்போது) ராஜதானி நகர் புறத்தில் இருந்ததாக. இது, இங்கு எவருக்குமே தெரியாது; சிலர் மறுத்தும் இருந்தனர். அதை போத்திகேயர் கொளுதியதால் தான், எம்மிடம் மகாவம்சம் போன்ற வரலாற்று குறிப்பு எழுத்து வடிவில் இல்லை.   

மற்றது இப்பதியான குடும்பங்கள், மதம் மாறி இப்பொது கதோலிக்கர்  ஆக இருபதற்கும் மிக கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

அனால், இப்படியான குடும்பங்கள், அதாவது இராச்சியத்துக்குள் (நிர்வாகம் மற்றும் ராஜதானி) செல்லக் கூடிய, அனுமதி உள்ள  எல்லா சாதிகளிலும் இருந்திருக்க வேண்டும். (குறிப்பிட சாதி மட்டும் அல்ல).  

நான் குறிப்பாக சொல்வது,  நல்லூர் இராசதானியை அண்டிய பகுதி (முக்கியமாக, அன்றைய இராஜ தானியின் நகர் புறம்).

காம சிற்பங்கள் இருந்த எல்லா கோயிகளும் (அநேகமாக அவை  பெரிய கோயிகள்)  போத்துக்கேயரால் அழிக்கப்பட்டு விட்டன. இப்பொது இருப்பவை எல்லாம், ஒல்லாந்தர் காலத்தில் பெரும்பாலும் அதே இடத்தில்  கட்டப்பட்ட கோயில்கள்.

நல்லூர் அதன் உண்மையான இடத்தில் போத்துக்கேயர் St James church ஐ (முத்திரை சந்தியில் இருந்து பார்க்கும் போது, செம்மணி வீதியில் இருக்கும் St JamesChurch தெரியும்)  கட்டிவிட, நல்லூர் கோயில்  இப்போதைய இடத்தில கட்டப்பட்டு விட்டது.

இந்த படம், பழைய நல்லூர் (நெல்லூர்) கோயிலின் கேணி. இப்போதும், யமுனாரி என்றே அழைக்கப்படுகிறது.

2017-09-22.jpg?fit=1280,695&ssl=1

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி கடைஞ்சா .......!

கல்வியங்காட்டை அண்டிய பகுதிகளில் பரங்கியர்  போன்ற சில கலப்பினக் குடும்பங்கள் முன்பு இருந்தன என்று தெரியும். இப்பவும் இருக்கினமோ தெரியவில்லை.......!   

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

இதற்கு, வாய் வழி வரலாறு தெரிய வேண்டும். சந்ததி, சந்ததியாக ஓர் இடத்தில்  இருந்திருக்காவிட்டட்டால், இது எவருக்குமே தெரிய வாய்ப்பில்லை.

போத்துக்கேயர் வருகையுடன் - நல்லூர் (உண்மையில் நெல்லூர், செம்மணி வயலில் விளையும் செம்மணி போன்ற அரிசியை விளைவிக்கும் நெற்கதிர்களால் உருவாக்கிய காரணப் பெயர்) மற்றும் யாழ் நகரை அண்டிய பகுதிகளை தவிர, மற்ற ஊர்களில் பரவலாக குடிமக்கள், போத்துக்கேயரின் ஒரு பக்கம் வரி கொடுமை, மற்றையது விவசாய விளைச்சல்கள் பறிப்பது,  முக்கியமாக கத்தோலிக்கம் மதத்துக்கு மாற்றம், சைவ முறை புழக்கத்தில் இருந்தால் தண்டனை என்பன, பாரிய குடிபெயரவுக்கு வழிவகுத்தது. இப்படி குடிபெயர்வு பொதுவாக வன்னிக்கே நடந்தது.

முக்கியமாக நல்லூர் ராஜதானி மற்றும் இப்போதைய யாழ் நகரை அண்டிய பகுதிகளிகல், இந்த பகுதிகளில், முக்கியமாக ராஜதானி பகுதிகளில் இருந்த அப்போதைய ஆட்சியாளர் குடும்பங்கள்  கத்தோலிக்கத்துக்கும் மாறியமையால், முதலில் மிகவும் அழிவு இருந்தாலும்  இடப்பெயர்வு பெருமளவில் நடக்கவில்லை. ஆனல், போத்துக்கேயரை எதிர்த்தவர்கள் குடும்பமாக நாடு கடத்தப்பட்டது நடந்தது.

போத்துக்கேயர் அனறைய கோயிகளை உடைத்து, அழித்து அதில் இருந்த கருங்கல் பாளங்களை கொண்டே யாழ் கோட்டையை நிர்மாணித்தார். இப்படியாக உடைத்த கருங்கற்களை பொத்துகேயர் வண்டிலில் கொண்டு சென்றபோது, எனது மூதாதையர் ஆத்திரத்தால் கல் எறிந்து, அவர்களின் குடும்பம் நாடுகடத்தப்பட்டதை சந்ததி, சந்தியாக அறிந்து இருக்கிறோம்.  

மற்றது,  நல்லூர் ராஜதானி மற்றும் இப்போதைய யாழ் நகரை அண்டிய பகுதிகளிகல், போத்துகேயக்கருக்கு தொழிலாளர் வேண்டி இருந்தமையால், இந்த பாரிய குடி பெயர்வு நடக்கவில்லை.

நான் நினைக்கிறன், அநேகமாக இப்போது கோட்டைகள் அல்லது அப்படியான சிதைபாடுகளுக்கு சுற்றி உள்ள இடங்களில் இருந்து, பெரும்பாலும் குடிபெயர்வு நடக்கவில்லை. ஏனெனில், வணிகம், வர்த்தகம், போத்துக்கேயருக்கு வேலை செய்வதத்திற்கு தொழிலாளர் தேவை பொன்னர காரணங்கள். அத்துடன் அப்படியான இடங்களில் தான், அப்போதைய ஆட்சியாளர், நிர்வாகம் செய் தோர் இருந்தனர். அவர்களில் பெரும்பாலோனோர் கத்தோலிக்க மதத்துக்கு மாறியதால், போத்துக்கேயர் அவர்களை கொடூரமாக நடத்தவில்லை.

குடி பெயர்வு பாரிய அளவில் நடக்காத இடங்களில், இப்படியான குடும்பகளின் பெயர் சந்தித்த சந்ததியாக வழங்கி வந்தது, இப்பொது வழக்கொழிந்து வருகிறது.

ஆனாலும், என்னுடைய ஆச்சி (அப்பாவின் அம்மா), இப்படியான குடும்பங்கள் பல இடங்களலும் இருந்ததாதாக, எனது ஆச்சியின் சந்ததி வழியாக, ஆச்சியின் தாய் தந்தையர் சொன்னதாக மற்றும் ஆச்சியின் பாட்டன், ப்படி சொன்னதாக , இப்படியான கதைகள் வரும் பொது சொல்லி உள்ளார்.

இதை வாய் வழி வரலாறு - எந்தவொரு சரித்திர குறிப்பிலும்  இருக்காது.

இதனால் தான், சந்ததி, சந்ததி  வழியாக ஒரே இடத்தில் (உங்களது அல்லது எபரினதும்) குடும்பங்கள்    வேர் விட்டு இருந்தால் ஒழிய, இது தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

உ.ம். இங்கு ஒரு சில முறை சொல்லி இருக்கிறேன், சரசுவதி மகால் எனும் நூலகமும், அருங்காட்சியகமும், அன்றைய நல்லூர் (நெல்லூர் அப்போது) ராஜதானி நகர் புறத்தில் இருந்ததாக. இது, இங்கு எவருக்குமே தெரியாது; சிலர் மறுத்தும் இருந்தனர். அதை போத்திகேயர் கொளுதியதால் தான், எம்மிடம் மகாவம்சம் போன்ற வரலாற்று குறிப்பு எழுத்து வடிவில் இல்லை.   

மற்றது இப்பதியான குடும்பங்கள், மதம் மாறி இப்பொது கதோலிக்கர்  ஆக இருபதற்கும் மிக கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

அனால், இப்படியான குடும்பங்கள், அதாவது இராச்சியத்துக்குள் (நிர்வாகம் மற்றும் ராஜதானி) செல்லக் கூடிய, அனுமதி உள்ள  எல்லா சாதிகளிலும் இருந்திருக்க வேண்டும். (குறிப்பிட சாதி மட்டும் அல்ல).  

நான் குறிப்பாக சொல்வது,  நல்லூர் இராசதானியை அண்டிய பகுதி (முக்கியமாக, அன்றைய இராஜ தானியின் நகர் புறம்).

காம சிற்பங்கள் இருந்த எல்லா கோயிகளும் (அநேகமாக அவை  பெரிய கோயிகள்)  போத்துக்கேயரால் அழிக்கப்பட்டு விட்டன. இப்பொது இருப்பவை எல்லாம், ஒல்லாந்தர் காலத்தில் பெரும்பாலும் அதே இடத்தில்  கட்டப்பட்ட கோயில்கள்.

நல்லூர் அதன் உண்மையான இடத்தில் போத்துக்கேயர் St James church ஐ (முத்திரை சந்தியில் இருந்து பார்க்கும் போது, செம்மணி வீதியில் இருக்கும் St JamesChurch தெரியும்)  கட்டிவிட, நல்லூர் கோயில்  இப்போதைய இடத்தில கட்டப்பட்டு விட்டது.

இந்த படம், பழைய நல்லூர் (நெல்லூர்) கோயிலின் கேணி. இப்போதும், யமுனாரி என்றே அழைக்கப்படுகிறது.

2017-09-22.jpg?fit=1280,695&ssl=1

 

 

மிக விரிவான பதிலுக்கு நன்றி கடைஞ்சா, இதில் போத்துக்கேயரின் மதமாற்றம் மற்றும் கோவில் அழிப்பு, நாலூர் வரலாறு  பற்றி ஓரளவு தெரிந்திருந்தாலும், நீங்கள் சொன்ன வாய் வழி கதை சுவாரசியமாகவும் புதிதாகவும் இருந்தது. இவற்றை பற்றி மேலதிகமாக அறிவதற்கு ஏதாவது இணையவழி புத்தகங்களோ கட்டுரைகளோ இருக்கிறதா? 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

கல்வியங்காட்டை அண்டிய பகுதிகளில் பரங்கியர்  போன்ற சில கலப்பினக் குடும்பங்கள் முன்பு இருந்தன என்று தெரியும். இப்பவும் இருக்கினமோ தெரியவில்லை.......!   

அவர்களை தெரியும்.

ஒரு மகனின், ஒரு மகளும், முழுப் பறங்கி தோற்றம் - தலை மயிர் செம்படை, , நீல நிற , புழுந்தும் பூனை கண்கள்,  பறங்கியலும் வெளிறிய நிறம்.

மற்றம் பிள்ளைகள்  எல்லோரும், சாதாரண தோற்றம்.

எனவே இது கலப்பால் வந்தததா, அல்லது நிறக் குறைபாடா (albino) என்பது சரியாக தெரியாது. அந்த நேரத்தில் சந்தேகம் இருந்தது நியாயமானது.

அவர்களின் தகப்பனுக்கும், பின்பு தோலின் னிரசம் வெளிற  தொடங்கிவிட்டது. அதனால், எதாவது குறைபாடா என்பது தெரியவில்லை.
 
கோப்பாயில் இருந்த போத்துக்கேயரின்  சிறு ககோட்டையில் இருந்த சிப்பாய்கள், அவ்வப்போது வன்புணர்வில்  ஈடுபட்டது, மற்றும் குடி இருப்பவர்களும் (பெண்களுக்கு) தொடர்பு இருந்தது என்ற ஓர் வாய் வழி கதையும் இருக்கிறது.   

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நீர்வேலியான் said:

மிக விரிவான பதிலுக்கு நன்றி கடைஞ்சா, இதில் போத்துக்கேயரின் மதமாற்றம் மற்றும் கோவில் அழிப்பு, நாலூர் வரலாறு  பற்றி ஓரளவு தெரிந்திருந்தாலும், நீங்கள் சொன்ன வாய் வழி கதை சுவாரசியமாகவும் புதிதாகவும் இருந்தது. இவற்றை பற்றி மேலதிகமாக அறிவதற்கு ஏதாவது இணையவழி புத்தகங்களோ கட்டுரைகளோ இருக்கிறதா? 

நான் சொல்வது, வரலாற்று குறிப்பில், எழுத்து வடிவில்,  இருக்குமா என்பது சந்தேகம்.

நான் அறிந்தவற்றை இங்கு பதிகிறேன. அநேகமாக என்னுடைய தலைமுறையுடன், இந்த வரலாறு தெரியாமல் போய்விடும்.

எங்கு தொடங்குவது என்பது தடுமாற்றமாக இருக்கிறது.  

இயலுமானவரை, ஓர் ஒழுங்கு முறையில் சொல்ல முயற்சிக்கிறேன்.
 

 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நீர்வேலியான் said:

மிக விரிவான பதிலுக்கு நன்றி கடைஞ்சா, இதில் போத்துக்கேயரின் மதமாற்றம் மற்றும் கோவில் அழிப்பு, நாலூர் வரலாறு  பற்றி ஓரளவு தெரிந்திருந்தாலும், நீங்கள் சொன்ன வாய் வழி கதை சுவாரசியமாகவும் புதிதாகவும் இருந்தது. இவற்றை பற்றி மேலதிகமாக அறிவதற்கு ஏதாவது இணையவழி புத்தகங்களோ கட்டுரைகளோ இருக்கிறதா? 

 

https://en.calameo.com/read/001179320cd352221bc41

இந்த புத்தகத்தை வாசித்து பாருங்கள்.

ஆனாலும், இந்த நூலில் கண்ணனுக்கு தெரியும் புராதன கட்டிடங்கள், வீதிகள், வளவுகளை வைத்தும், சரித்திர குறிப்பில் உள்ள பெயர்களை வைத்தும், கட்டிட தோற்றங்கள், கலைகளை வைத்தும், அனுமான  அடிப்படையில் எழுதப்பட்டு உள்ளது.

உ.ம். ஆக இந்த நூலில் சரசுவதி மகால் பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று நினைக்கிறன். ஏன், நெல்லூர் (இது ஆரம்ப   போத்துகேய குறிப்புகளில் உள்ளதாக இப்பொது அறிகிறேன்) பற்றியே ஓர் குறிப்பும் இல்லை.

ஆனாலும், பழைய நல்லூர் (நெல்லூர்), மற்றும் ராஜதானி, நகர்ப்புறம் போன்றவற்றை எந்த அளவில் இருந்தது என்பதை (பிளைகள் இருந்தாலும்) குறிப்பாக எழுத்து வடிவில் உள்ளது.  

இன்னொரூ உ.ம் . ஆக, , இப்போதும் பராமரிப்பு இன்றி சிதைவடைந்து, முன்னைய தோற்றத்துடன் இருக்கும் மந்திரி மனை, சட்ட நாதர் கோயில் அருகில் இருக்கிறது என்பதை இந்த நூல் சொல்லவில்லை.

இதை இங்கே முன்பு சொல்லிய நினைவு இருக்கிறது, ஆனாலும்  குறிப்புக்காக சொல்கிறேன்.

சட்டநாதர் சிவன் (கோயில்) என்பது காரணப் பெயர் (பலர் சட்டை நாதர் என்று அழைக்கிறார்கள், அநேகமாக அந்த இடத்துக்கு புதிதாக வந்தவர்கள் மற்றும் வேறு இடத்தை சேர்ந்தவர்கள், அது தவறு.).

பெயறில் இருக்கும் அர்த்தமே அதன் காரணம் - சட்ட (சட்ட (ஆட்சியின்)) நாதர் (தலைவன்). யாழ் இராச்சியம் இருந்தவரை, மந்திரி நாளாந்தம் சட்டக் கோவையை சட்ட நாதர் கோயிளுக்கு எடுத்து  சென்று, (நீதி வழுவா) ஆட்சிக்கும், இராச்சியத்துக்கும் இறை அருள், aasiyum வேண்டி,  பூசை நடைபெற்று, அதன் பின்பே நாளாந்த நிர்வாகம் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது நாம் அறியும், rule of law இன், அப்போதைய வடிவம்.    

அதாவது, இத கட்டிடங்கள், வீதிகள், சிதைபாடுகள் சொல்லும் சரித்திர நிகவுகள், கதைகள் போன்றவை, அந்த இடத்தில சந்ததி, சந்ததியாக  இருக்காவிட்டால் தெரியாது. காரணம், பொதுவாக, சந்ததி, சந்ததியாக, வாய்வழி வரலாறாக சொல்லப்படுவது.

 

=======================================

 

https://en.calameo.com/read/001179320cd352221bc41

இந்த புத்தகத்தை வாசித்து பாருங்கள். அனால், இந்த நூலின் வெளியீட்டின் பின் வேறு சில நோக்கங்களும் (vested interests) இருக்கலாம். முக்கியமாக, இப்பொது நெதர்லாந்தில் இருக்கும்,, தாம் அன்றைய ஆட்சி பரம்பரையின் வாரிசுகள் என்று கோருபவர்களால்.
 
ஆனாலும், இந்த நூலில் கண்ணனுக்கு தெரியும் புராதன கட்டிடங்கள், வீதிகள், வளவுகளை வைத்தும், சரித்திர குறிப்பில் உள்ள பெயர்களை வைத்தும், கட்டிட தோற்றங்கள், கலைகளை வைத்தும், அனுமான  அடிப்படையில் எழுதப்பட்டு உள்ளது.

உ.ம். ஆக இந்த நூலில் சரசுவதி மகால் பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று நினைக்கிறன். ஏன், நெல்லூர் (இது ஆரம்ப   போத்துகேய குறிப்புகளில் உள்ளதாக இப்பொது அறிகிறேன்) பற்றியே ஓர் குறிப்பும் இல்லை.

ஆனாலும், பழைய நல்லூர் (நெல்லூர்), மற்றும் ராஜதானி, நகர்ப்புறம் போன்றவற்றை எந்த அளவில் இருந்தது என்பதை (பிழைகள் இருந்தாலும்) குறிப்பாக எழுத்து வடிவில் உள்ளது.  

இன்னொரூ உ.ம் . ஆக, , இப்போதும் பராமரிப்பு இன்றி சிதைவடைந்து, முன்னைய தோற்றத்துடன் இருக்கும் மந்திரி மனை, சட்ட நாதர் கோயில் அருகில் இருக்கிறது என்பதை இந்த நூல் சொல்லவில்லை.

இதை இங்கே முன்பு சொல்லிய நினைவு இருக்கிறது, ஆனாலும்  குறிப்புக்காக சொல்கிறேன்.

சட்டநாதர் சிவன் (கோயில்) என்பது காரணப் பெயர் (பலர் சட்டை நாதர் என்று அழைக்கிறார்கள், அநேகமாக அந்த இடத்துக்கு புதிதாக வந்தவர்கள் மற்றும் வேறு இடத்தை சேர்ந்தவர்கள், அது தவறு.).

பெயறில் இருக்கும் அர்த்தமே அதன் காரணம் - சட்ட (சட்ட (ஆட்சியின்)) நாதர் (தலைவன்). யாழ் இராச்சியம் இருந்தவரை, மந்திரி நாளாந்தம் சட்டக் கோவையை சட்ட நாதர் கோயிலுக்கு எடுத்து  சென்று, (நீதி வழுவா) ஆட்சிக்கும், இராச்சியத்துக்கும் இறை அருள் வேண்டி,  பூசை நடைபெற்று, அதன் பின்பே நாளாந்த நிர்வாகம் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது நாம் அறியும், rule of law இன், அப்போதைய வடிவம்.    
 

அதாவது, இத கட்டிடங்கள், வீதிகள், சிதைபாடுகள் சொல்லும் சரித்திர நிகவுகள், கதைகள் போன்றவை, அந்த இடத்தில சந்ததி, சந்ததியாக  இருக்காவிட்டால் தெரியாது. காரணம், பொதுவாக, சந்ததி, சந்ததியாக, வாய்வழி வரலாறாக சொல்லப்படுவது.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kadancha said:

 

https://en.calameo.com/read/001179320cd352221bc41

இந்த புத்தகத்தை வாசித்து பாருங்கள்.

ஆனாலும், இந்த நூலில் கண்ணனுக்கு தெரியும் புராதன கட்டிடங்கள், வீதிகள், வளவுகளை வைத்தும், சரித்திர குறிப்பில் உள்ள பெயர்களை வைத்தும், கட்டிட தோற்றங்கள், கலைகளை வைத்தும், அனுமான  அடிப்படையில் எழுதப்பட்டு உள்ளது.

உ.ம். ஆக இந்த நூலில் சரசுவதி மகால் பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று நினைக்கிறன். ஏன், நெல்லூர் (இது ஆரம்ப   போத்துகேய குறிப்புகளில் உள்ளதாக இப்பொது அறிகிறேன்) பற்றியே ஓர் குறிப்பும் இல்லை.

ஆனாலும், பழைய நல்லூர் (நெல்லூர்), மற்றும் ராஜதானி, நகர்ப்புறம் போன்றவற்றை எந்த அளவில் இருந்தது என்பதை (பிளைகள் இருந்தாலும்) குறிப்பாக எழுத்து வடிவில் உள்ளது.  

இன்னொரூ உ.ம் . ஆக, , இப்போதும் பராமரிப்பு இன்றி சிதைவடைந்து, முன்னைய தோற்றத்துடன் இருக்கும் மந்திரி மனை, சட்ட நாதர் கோயில் அருகில் இருக்கிறது என்பதை இந்த நூல் சொல்லவில்லை.

இதை இங்கே முன்பு சொல்லிய நினைவு இருக்கிறது, ஆனாலும்  குறிப்புக்காக சொல்கிறேன்.

சட்டநாதர் சிவன் (கோயில்) என்பது காரணப் பெயர் (பலர் சட்டை நாதர் என்று அழைக்கிறார்கள், அநேகமாக அந்த இடத்துக்கு புதிதாக வந்தவர்கள் மற்றும் வேறு இடத்தை சேர்ந்தவர்கள், அது தவறு.).

பெயறில் இருக்கும் அர்த்தமே அதன் காரணம் - சட்ட (சட்ட (ஆட்சியின்)) நாதர் (தலைவன்). யாழ் இராச்சியம் இருந்தவரை, மந்திரி நாளாந்தம் சட்டக் கோவையை சட்ட நாதர் கோயிளுக்கு எடுத்து  சென்று, (நீதி வழுவா) ஆட்சிக்கும், இராச்சியத்துக்கும் இறை அருள், aasiyum வேண்டி,  பூசை நடைபெற்று, அதன் பின்பே நாளாந்த நிர்வாகம் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது நாம் அறியும், rule of law இன், அப்போதைய வடிவம்.    

அதாவது, இத கட்டிடங்கள், வீதிகள், சிதைபாடுகள் சொல்லும் சரித்திர நிகவுகள், கதைகள் போன்றவை, அந்த இடத்தில சந்ததி, சந்ததியாக  இருக்காவிட்டால் தெரியாது. காரணம், பொதுவாக, சந்ததி, சந்ததியாக, வாய்வழி வரலாறாக சொல்லப்படுவது.

 

=======================================

 

https://en.calameo.com/read/001179320cd352221bc41

இந்த புத்தகத்தை வாசித்து பாருங்கள். அனால், இந்த நூலின் வெளியீட்டின் பின் வேறு சில நோக்கங்களும் (vested interests) இருக்கலாம். முக்கியமாக, இப்பொது நெதர்லாந்தில் இருக்கும்,, தாம் அன்றைய ஆட்சி பரம்பரையின் வாரிசுகள் என்று கோருபவர்களால்.
 
ஆனாலும், இந்த நூலில் கண்ணனுக்கு தெரியும் புராதன கட்டிடங்கள், வீதிகள், வளவுகளை வைத்தும், சரித்திர குறிப்பில் உள்ள பெயர்களை வைத்தும், கட்டிட தோற்றங்கள், கலைகளை வைத்தும், அனுமான  அடிப்படையில் எழுதப்பட்டு உள்ளது.

உ.ம். ஆக இந்த நூலில் சரசுவதி மகால் பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று நினைக்கிறன். ஏன், நெல்லூர் (இது ஆரம்ப   போத்துகேய குறிப்புகளில் உள்ளதாக இப்பொது அறிகிறேன்) பற்றியே ஓர் குறிப்பும் இல்லை.

ஆனாலும், பழைய நல்லூர் (நெல்லூர்), மற்றும் ராஜதானி, நகர்ப்புறம் போன்றவற்றை எந்த அளவில் இருந்தது என்பதை (பிழைகள் இருந்தாலும்) குறிப்பாக எழுத்து வடிவில் உள்ளது.  

இன்னொரூ உ.ம் . ஆக, , இப்போதும் பராமரிப்பு இன்றி சிதைவடைந்து, முன்னைய தோற்றத்துடன் இருக்கும் மந்திரி மனை, சட்ட நாதர் கோயில் அருகில் இருக்கிறது என்பதை இந்த நூல் சொல்லவில்லை.

இதை இங்கே முன்பு சொல்லிய நினைவு இருக்கிறது, ஆனாலும்  குறிப்புக்காக சொல்கிறேன்.

சட்டநாதர் சிவன் (கோயில்) என்பது காரணப் பெயர் (பலர் சட்டை நாதர் என்று அழைக்கிறார்கள், அநேகமாக அந்த இடத்துக்கு புதிதாக வந்தவர்கள் மற்றும் வேறு இடத்தை சேர்ந்தவர்கள், அது தவறு.).

பெயறில் இருக்கும் அர்த்தமே அதன் காரணம் - சட்ட (சட்ட (ஆட்சியின்)) நாதர் (தலைவன்). யாழ் இராச்சியம் இருந்தவரை, மந்திரி நாளாந்தம் சட்டக் கோவையை சட்ட நாதர் கோயிலுக்கு எடுத்து  சென்று, (நீதி வழுவா) ஆட்சிக்கும், இராச்சியத்துக்கும் இறை அருள் வேண்டி,  பூசை நடைபெற்று, அதன் பின்பே நாளாந்த நிர்வாகம் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது நாம் அறியும், rule of law இன், அப்போதைய வடிவம்.    
 

அதாவது, இத கட்டிடங்கள், வீதிகள், சிதைபாடுகள் சொல்லும் சரித்திர நிகவுகள், கதைகள் போன்றவை, அந்த இடத்தில சந்ததி, சந்ததியாக  இருக்காவிட்டால் தெரியாது. காரணம், பொதுவாக, சந்ததி, சந்ததியாக, வாய்வழி வரலாறாக சொல்லப்படுவது.

நன்றி, நீங்கள் எழுதியவற்றையும், இணைத்ததையும் பொறுமையாக வாசிக்கவேண்டும். இதில் நீங்கள் நிறைய ஆராட்சி செய்திருப்பீர்கள் போலுள்ளது. எங்களுக்கு தெரியாமல் முன்பு நிறைய விடயங்கள் நடந்துள்ளன😁

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நீர்வேலியான் said:

இதில் நீங்கள் நிறைய ஆராட்சி செய்திருப்பீர்கள் போலுள்ளது.

இதில் என்னை பொறுத்தவரையில், ஒரு ஆராய்வும்  (தேவை) இல்லை.

சொன்னது போல, இந்த கதைகளை வாய்  வழியாக மிக சிறு வதில் இருந்தே பலரிடம் இருந்து கேட்டு அறிந்ததும், அந்த இடத்தில் வளர்ந்த படியால், அநேகமாக் அனைத்து இடங்களையும் பார்த்தே வளர்ந்தேன்.

உ.ம். இப்பொது உள்ள மந்திரி மனைக்குள் நான் பல தடவைவை சென்று வந்து இருக்கிறேன். 

அதையும் சேர்த்து பின்பு விளக்கமாக எழுதுகிறேன். 

ஆனால், நூலை வாசித்து இருக்கிறேன், இது பொதுவான அனுமனை அடிப்படையில் எழுதப்பட்டு உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

யமுனாரியின் படத்தில் வெளிப்புறத்தில் தெரியும் செங்கற்கள், சிதைவை சரி செய்ய பின்பு  கட்டப்பட்டவை. அனால், அதன் உள்ளே இருக்கும் ஒவ்வொரு கல்லும், தனித்தனியே செவ்வக  கருங்கல் குற்றிகள். படத்தில் அவற்றின் பிரமாண்ட அளவு தெரியவில்லை. நேரடியாக பார்க்கும்  போதே  அதன் பிரமாண்டம் தெரியும், குறிப்பாக கோடையில் ஓரளவு வற்றும் போது அதன் ஆழம், கற்களின் பிரமாண்டம் தெரியும்.

இந்த யமுனாரி  என்பது, அரசியும், அரச குமாரிகளும் நீராடுவதற்காக (யமுனை ஆற்றில் இருந்து கொண்டு வந்த தண்ணீர் விட்டு) கட்டடப்பட்ட ஏறி எனும் ஒரு வாய்வழி  கதை இருக்கிறது. இது இப்பொது ஆங்காங்கே இன்டர்நெட் (சுற்றுலா) வரலாற்று குறிப்புக்களிலும் இருக்கிறது. (யமுனை ஆற்று நீர் விட்டு கட்டிய கதை, வாய்வழியாகவே தெரியும்.)

உ.ம். ஆக கோடையில், இப்போதுள்ள நல்லூர் கேணியின் அடிமட்டம் தெரியும். ஆனல் யமுனாரி அப்படி ஒருபோதுமே (நான் அறிந்த, பார்த்த வரையில்) இல்லை . ஏனெனில் யாமுனறி பகுதியில் சிறுவயதில் புதினம் பார்ப்பது. அப்போது (70, 80, 90 களில், அதற்கு முன்னரும் இருந்து இருக்கும்)   ஒரு நடை] பாதை இருந்தது. அது, யமுனா வீதியயில் இருந்து தொடங்கி , கிட்டு பூங்காவுக்கு, , St  James  Church  க்கும் இடையில். செம்மணி வீதியில் மிதக்கும். மிதக்கும் என்பது ஏனெனில், ஓரளவு பதிந்து பின் மேல் ஏறும் தரையமைப்பை  கொண்டது யமுனாரி இருக்கும் நிலப்பகுதி.      

ஓர் நிலக்கீழ் பாதை யமுனாரிக்கும், அரச மாளிகைக்கும் (இப்படி அரச மாளிகை என்று சொல்பவர்கள் குறிப்பது, இப்பொது இருக்கும் மந்திரி மனை)  இருந்ததாகவும், அதை பாவித்தே அரசியும், அரச குமாரிகளும் யமுனாருக்கு சென்று நீராடி வந்ததாக ஓர் கதை இருக்கிறது.

அனால், அரசியும், குமரிகளும் நிலக்கீழ் பாதையிது யாமுனறி சென்று நீராடி வந்த கதை, யதார்த்தமாக இல்லை.


ஒன்று யமுனாரி, பழைய நல்லூர்  கோயிலின் கேணி. மற்றது, யமுனாரி  இருக்கும் நிலப்பரப்பு இப்போதும் செட்டியா தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது. இந்த செட்டியா தோட்டம் என்பது வண்ணை வைத்தீஸ்வரர் கோயிலுலுக்கு தொடர்பு  உடையது என்பது இப்போதும் பலருக்கு தெரியும். செட்டியா தோட்டம் பற்றியும் வலரேறு இருக்கிறது. பின்பு அதை பற்றி பார்க்கலாம்.

அநேகமாக போத்துக்கேயரால் அல்லது அன்று சங்கிலிக்கு  (சங்கலியன் 2) எதிராக இருந்தவர்களால் இந்த கதை   பரப்பப்பட்டு   இருந்திருக்க வேண்டும். போத்துக்கேயரால், நீராடும் தடாகமாக பாவிக்கப்பட்டு இருக்கலாம்.   

 படத்தை இணைத்து விளங்கப்படுத்தினால் தான், அரசியும், அரச குமாரிகளும் நித்தடி பாதை பாவித்து நீராடி இருக்க முடியாது என்பது புரியும்.

ஆனால், முழு  இராட்சியமுமே, அதாவது இராச்சிய நிலம் முழுவதும் கோயிலில்களுடன் சம்பந்தப்பட்டதாக இருந்திருக்க வேண்டும். 


தொடரும்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மற்ற திரியில் சொன்னதை இடையிட்ட பதிவாக இந்த தியரியில்  பதியப்படுகிறது. 

நல்லூரை எந்த தமிழரின் வரலாற்றில் இருந்தும் பிரித்துவிடமுடியாது.

ஏன், முஸ்லிம்களின் வரலாற்றில் இருந்தும் பிரிக்க முடியாது.

நல்லோரின் ஆதி மூலத்தில் இருக்கும் இடத்தில , ஓர் இஸ்லாமிய சமயக் குறியீடு இருந்தது என்பது அந்த இடத்தில சந்திதியாக வேர் விட்டு இருந்தவர்களுக்கு தெரியும்..

இப்போதைய நல்லூர் கோயிலில் இருக்கும் இடத்துக்கு  குருக்கள் வளவு என்பததே அதன் வரலாற்று பெயர்.

அதில் கோயில் கட்ட முதல் அதில் முஸ்லிம்கள் இருந்தனர், முஸ்லீம் குருவானவரின் சமாதியும் அல்லது இஸ்லாமிய குறியீடு  இருந்தது என்பது, நான் முதல் சொன்னது போல,  அந்த இடத்தில சந்திதியாக வேர் விட்டு இருந்தவர்களுக்கு தெரியும். (இப்போதைய, உள்ளோர் நிர்வாகம் அதை மறைக்க முற்படுகிறது, நல்லோர் நிர்வாகமும் இதை ஏற்றகிறதா என்பது தெரியவில்லை.)

கிந்தியா எம்மை அழித்தாலும், இதை அங்கேயுள்ள துணை தூதரகம் இணையத்தில் பதிந்து வைத்துப் உள்ளது வரவேற்கப்படவே வேண்டும்,


இஸ்லாமிய குறியீடு அகற்றப்பட்டதாக சொல்கிறது தூதரகம், நான் அறிந்த வரையில் அப்படி நடக்கவில்லை.

ஆதி மூலத்துக்கு பின் சுவரில், எந்த ஒரு விக்கிரகமும்   இல்லாத போதும் அதை வணக்கும் வழக்கம் இருக்கிறது அங்கு உள்ளவர்கக்லால், இப்போதைய தலைமுறைக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

இததற்கான இப்போதைய சான்று (முஸ்லிம்கள் இருந்தது என்பதற்கு), நல்லூர் கோயில் திருவிழாவின் போது, தற்காலிக வியாபர கடைகள், யிரவர் வாசலுக்கு முன்னால், தேர் முட்டிக்கு எதிர்ப்புறமாக,     நல்லூர் கோயிலின் முன்னால் போடுவதத்திற்கு, குறிப்பிட்ட முஸ்லிம்ம் குடும்பக்களிற்கு மட்டுமே கொடுக்கப்படும்.

இப்பொது கடை போடுபவது, வழக்கொழிந்து போய் விட்டது, நல்லூர் நிர்வாகமும், உளூர் நிர்வாகமும் சேர்ந்து தடுத்து விட்டனர்.    

முஸ்லிம்களுக்கு கூட, அப்போதைய இராச்சியத்தின் அரசர்களே, முஸ்லிம்கள் அகதியாக வந்த போது அடைக்கலம் கொடுத்தனர். சிங்கள மன்னர்கள் மறுத்து விட்டனர். இதுவே காரணம், முஸ்லிம்கள் மூன்று இடங்களில் செறிந்து இருப்பதற்கு.

தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வாய்வழி கதை இருக்கிறது, அந்த நேரத்தில் இருந்த முஸ்லிம்கள், இப்போதுள்ள நல்லூர்  கோயிலை கட்டுவதற்கு  பலவந்தமாக வெளியேற்றப்பட்டதாக. 

அவர்களை வெளியேற்றுவதற்கு, அவர்கள் பாவித்த கிணற்றில் பன்றித் தலைகள் இரவோடு இரவாக போடப்பட்டதாக.

அனால், அந்த நிலம் கோயில் காணி, அன்னைய அரசு முஸ்லிம்களுக்கு பாவிக்க கொடுத்து இருந்தது. முஸ்லிம்கள், அத தமது நிரந்தர சொத்தாக ஆக்குவதற்கு முயன்று இருக்கிறார்கள் போலுள்ளது. 

நல்லூர் கோயிலின் முன்புறமாக ஆறுமுக நாவலர் சிலை இருந்த போது (ஏறத்தாழ கேணிக்கு, சமாந்திரமாக, நல்லூர் கோயிலின் முன்புறம், இப்பொது மறைத்து சுவர் எழுப்பப்பட்டு விட்டது, நாவலர் சிலை அகற்றபிசட்டுவிட்டது ). இப்பொது அதில் யோகா நிலையசம் இருக்கிறது  என்று google காட்டுகிறது.


அந்த இடத்தை ஒற்றி   பருத்தித்துறை வீதி வளைந்து செல்லும் (இப்போதைய ஆறுமுக சாமி வாசல் கோபுரம்). பருத்தித்துறை வீதிக்கு மற்ற பக்கம் ஓர் காடு (அப்போது) படித்த நிலப் பகுதி இருந்தது. அதில் ஓர் தூர்ந்த ,கிணறும் இருந்ததாகவும் (மூடப்பட்ட சிதை பாடுகளை பார்த்து இருக்கிறேன்), அதிலேயே இந்த பன்றித்தலைகள் போட்டதாகவும், என்னுடைய உறவில் பல வயது முதிந்தவர்கள் (அவர்களும் கேள்விப்பட்டது, எல்லோரும் இப்போது இல்லை ) சொல்லி அறிந்து இருக்கிறேன்.

தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில், முத்திரைச் சந்தியின் வரலாற்று பெயர் முத்திரைச் சந்தை.

அது காரணப் பெயர், அன்றைய இராச்சியத்தின்  வரியுடன் தொடர்பு பட்டது.

அந்த சந்தையில் (இப்போது சந்தி) வைத்து இராச்சியத்துக்குள் வாங்க, விற்க அனுமதிக்கப்பட்ட பொருட்களுக்கு  அரச முத்திரை (royal seal) பொறிக்கப்பட்டுள்ளது, வரியும் அறவிடப்பட்டது. 

முத்திரைச்  சந்தி (முத்திரைச் சந்தை), ராஜதானியின் ( அப்போதைய அரச  நிர்வாகம்   
) முத்திரை சந்தையை பார்வையில்  வைவைப்பதற்கான தூரத்தில் இருந்ததாக (அது இப்போதும் பார்த்து ஊகிக்க கூடியதாக உள்ளது), என்னுடைய பல வயது முதிர்ந்தவர்கள் (அவர்களுக்கு அவர்களின் சந்ததி வழியாக சொல்லி )  சொல்லி கிறார்கள்.  

தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

முன் னைய பகுதியின் தலைப்பாக சொல்லி இருக்க வேண்டியது. 

இப்போதைய நல்லூரை (அப்போதைய நெல்லூரை) பற்றி சொல்லும் போது, முத்திரைச் சந்தி பற்றியும் சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு நல்லூரில் முஸ்லீம் சிறுவர்கள் கற்பூரம், ஊதுவத்தி எல்லாம் விற்றுக் கொண்டிருந்தவர்கள்.....!

கோயிலின் பின்பக்கமாக (பிள்ளையார் கோவிலுக்கு முன்) மதிலில் ஒரு சிறிய கதவு இருந்ததாக ஞாபகம்.......!

கோவில் வீதியும் கூட பழனியாண்டவர் கோயிலும் கேணியும் ஒருபக்கம் நடுவில் வீதி அடுத்து கோவில் என்று இருந்தது.....!

பாடசாலைகளில் ஒவ்வொரு வகுப்பிலும் ஏழெட்டு முஸ்லீம் பிள்ளைகள் சேர்ந்து படிப்பார்கள்....அப்போது யாருக்கும் மதம் பிடித்திருக்கவில்லை......நாசமாப்போன அரசியல் வந்து மக்களையும் கெடுத்து நாட்டையும் கெடுத்துப் போட்டுது......!  

நல்ல தகவல்கள்....தொடருங்கள் கடைஞ்சா......!  🌹

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

முன்பு நல்லூரில் முஸ்லீம் சிறுவர்கள் கற்பூரம், ஊதுவத்தி எல்லாம் விற்றுக் கொண்டிருந்தவர்கள்.....!

கோயிலின் பின்பக்கமாக (பிள்ளையார் கோவிலுக்கு முன்) மதிலில் ஒரு சிறிய கதவு இருந்ததாக ஞாபகம்.......!

கோவில் வீதியும் கூட பழனியாண்டவர் கோயிலும் கேணியும் ஒருபக்கம் நடுவில் வீதி அடுத்து கோவில் என்று இருந்தது.....!

பாடசாலைகளில் ஒவ்வொரு வகுப்பிலும் ஏழெட்டு முஸ்லீம் பிள்ளைகள் சேர்ந்து படிப்பார்கள்....அப்போது யாருக்கும் மதம் பிடித்திருக்கவில்லை......நாசமாப்போன அரசியல் வந்து மக்களையும் கெடுத்து நாட்டையும் கெடுத்துப் போட்டுது......!  

நல்ல தகவல்கள்....தொடருங்கள் கடைஞ்சா......!  🌹

ஆம், திருவிழா தவிர்ந்த காலத்தில் அவர்கள் கற்பூரம், ஊதுபத்தி விற்ப்பார்கள். தீர்வல்ல காலத்தில், ஓரளவு பெரிதாக, அந்த காலத்து  விளையாட்டுப் பொருட்கள் ( காற்றாடி, அம்மம்மா குழல்), மற்றும் கற்பூர சட்டி , பட்டு சீலை போன்றவையும் விற்றபரர்கள்,

இது அவர்களின் உரிமையாக நல்லூர் (கோயில் கட்டப்பதில் இருந்து)  எழுதப்படாத உரிமையாக வழங்கி இருந்தது என்பது,  வயது முதிர்ந்தவர்கள் சொல்லி  நான் அறிந்தது,  

ஆம், கேணிக்கும் (பழனி ஆண்டவர் இருப்பது), ஆறுமுக சாமி வாசல் (பிரதான கோயில் கட்டிடத்திற்கும்) இடையில் வீதி  இருந்தது.

வருடாந்த காவடி எனது குடும்பத்தின் தலையாய நல்லூர் கடமைகளில் ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kadancha said:

நல்லூர் கோயிலின் முன்புறமாக ஆறுமுக நாவலர் சிலை இருந்த போது (ஏறத்தாழ கேணிக்கு, சமாந்திரமாக, நல்லூர் கோயிலின் முன்புறம், இப்பொது மறைத்து சுவர் எழுப்பப்பட்டு விட்டது, நாவலர் சிலை அகற்றபிசட்டுவிட்டது ). இப்பொது அதில் யோகா நிலையசம் இருக்கிறது  என்று google காட்டுகிறது.

நாவலர் மணிமண்டபம் என்றுதான் அதற்கு பெயர் என நினைக்கிறேன். அதே போல கிணறும் உள்ளது. நீங்கள் கூறும் கிணறு உள்ள இடம் இதுவென நினைக்கிறேன்.

5-E3-E03-A6-7394-4341-855-E-FFFF644895-B

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

நாவலர் மணிமண்டபம் என்றுதான் அதற்கு பெயர் என நினைக்கிறேன். அதே போல கிணறும் உள்ளது. நீங்கள் கூறும் கிணறு உள்ள இடம் இதுவென நினைக்கிறேன்.

5-E3-E03-A6-7394-4341-855-E-FFFF644895-B

 

இதில் உள்ள கிணறு, நாவலர் சிலை அருகில் இருந்த கிணறு போல தெரிகிறது.

நான் சொல்வது, பருத்தித்துறை வீதியின் மறுபக்கம். அதில் அந்த நேரம் வீடுகள் இல்லை.

google map இல் பார்க்கும் பொது பெரிய மரங்கள் இருப்பதாக தெரிகிறது.முன்பு கண்ணை மறைக்கும் பற்றைக்காடு,இப்பொது பெரிய்ய மரங்களுடன். 

  • கருத்துக்கள உறவுகள்
On 22/3/2022 at 08:30, Kadancha said:

இதற்கு, வாய் வழி வரலாறு தெரிய வேண்டும். சந்ததி, சந்ததியாக ஓர் இடத்தில்  இருந்திருக்காவிட்டட்டால், இது எவருக்குமே தெரிய வாய்ப்பில்லை.

போத்துக்கேயர் வருகையுடன் - நல்லூர் (உண்மையில் நெல்லூர், செம்மணி வயலில் விளையும் செம்மணி போன்ற அரிசியை விளைவிக்கும் நெற்கதிர்களால் உருவாக்கிய காரணப் பெயர்) மற்றும் யாழ் நகரை அண்டிய பகுதிகளை தவிர, மற்ற ஊர்களில் பரவலாக குடிமக்கள், போத்துக்கேயரின் ஒரு பக்கம் வரி கொடுமை, மற்றையது விவசாய விளைச்சல்கள் பறிப்பது,  முக்கியமாக கத்தோலிக்கம் மதத்துக்கு மாற்றம், சைவ முறை புழக்கத்தில் இருந்தால் தண்டனை என்பன, பாரிய குடிபெயரவுக்கு வழிவகுத்தது. இப்படி குடிபெயர்வு பொதுவாக வன்னிக்கே நடந்தது.

முக்கியமாக நல்லூர் ராஜதானி மற்றும் இப்போதைய யாழ் நகரை அண்டிய பகுதிகளிகல், இந்த பகுதிகளில், முக்கியமாக ராஜதானி பகுதிகளில் இருந்த அப்போதைய ஆட்சியாளர் குடும்பங்கள்  கத்தோலிக்கத்துக்கும் மாறியமையால், முதலில் மிகவும் அழிவு இருந்தாலும்  இடப்பெயர்வு பெருமளவில் நடக்கவில்லை. ஆனல், போத்துக்கேயரை எதிர்த்தவர்கள் குடும்பமாக நாடு கடத்தப்பட்டது நடந்தது.

போத்துக்கேயர் அனறைய கோயிகளை உடைத்து, அழித்து அதில் இருந்த கருங்கல் பாளங்களை கொண்டே யாழ் கோட்டையை நிர்மாணித்தார். இப்படியாக உடைத்த கருங்கற்களை பொத்துகேயர் வண்டிலில் கொண்டு சென்றபோது, எனது மூதாதையர் ஆத்திரத்தால் கல் எறிந்து, அவர்களின் குடும்பம் நாடுகடத்தப்பட்டதை சந்ததி, சந்தியாக அறிந்து இருக்கிறோம்.  

மற்றது,  நல்லூர் ராஜதானி மற்றும் இப்போதைய யாழ் நகரை அண்டிய பகுதிகளிகல், போத்துகேயக்கருக்கு தொழிலாளர் வேண்டி இருந்தமையால், இந்த பாரிய குடி பெயர்வு நடக்கவில்லை.

நான் நினைக்கிறன், அநேகமாக இப்போது கோட்டைகள் அல்லது அப்படியான சிதைபாடுகளுக்கு சுற்றி உள்ள இடங்களில் இருந்து, பெரும்பாலும் குடிபெயர்வு நடக்கவில்லை. ஏனெனில், வணிகம், வர்த்தகம், போத்துக்கேயருக்கு வேலை செய்வதத்திற்கு தொழிலாளர் தேவை பொன்னர காரணங்கள். அத்துடன் அப்படியான இடங்களில் தான், அப்போதைய ஆட்சியாளர், நிர்வாகம் செய் தோர் இருந்தனர். அவர்களில் பெரும்பாலோனோர் கத்தோலிக்க மதத்துக்கு மாறியதால், போத்துக்கேயர் அவர்களை கொடூரமாக நடத்தவில்லை.

குடி பெயர்வு பாரிய அளவில் நடக்காத இடங்களில், இப்படியான குடும்பகளின் பெயர் சந்தித்த சந்ததியாக வழங்கி வந்தது, இப்பொது வழக்கொழிந்து வருகிறது.

ஆனாலும், என்னுடைய ஆச்சி (அப்பாவின் அம்மா), இப்படியான குடும்பங்கள் பல இடங்களலும் இருந்ததாதாக, எனது ஆச்சியின் சந்ததி வழியாக, ஆச்சியின் தாய் தந்தையர் சொன்னதாக மற்றும் ஆச்சியின் பாட்டன், ப்படி சொன்னதாக , இப்படியான கதைகள் வரும் பொது சொல்லி உள்ளார்.

இதை வாய் வழி வரலாறு - எந்தவொரு சரித்திர குறிப்பிலும்  இருக்காது.

இதனால் தான், சந்ததி, சந்ததி  வழியாக ஒரே இடத்தில் (உங்களது அல்லது எபரினதும்) குடும்பங்கள்    வேர் விட்டு இருந்தால் ஒழிய, இது தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

உ.ம். இங்கு ஒரு சில முறை சொல்லி இருக்கிறேன், சரசுவதி மகால் எனும் நூலகமும், அருங்காட்சியகமும், அன்றைய நல்லூர் (நெல்லூர் அப்போது) ராஜதானி நகர் புறத்தில் இருந்ததாக. இது, இங்கு எவருக்குமே தெரியாது; சிலர் மறுத்தும் இருந்தனர். அதை போத்திகேயர் கொளுதியதால் தான், எம்மிடம் மகாவம்சம் போன்ற வரலாற்று குறிப்பு எழுத்து வடிவில் இல்லை.   

மற்றது இப்பதியான குடும்பங்கள், மதம் மாறி இப்பொது கதோலிக்கர்  ஆக இருபதற்கும் மிக கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

அனால், இப்படியான குடும்பங்கள், அதாவது இராச்சியத்துக்குள் (நிர்வாகம் மற்றும் ராஜதானி) செல்லக் கூடிய, அனுமதி உள்ள  எல்லா சாதிகளிலும் இருந்திருக்க வேண்டும். (குறிப்பிட சாதி மட்டும் அல்ல).  

நான் குறிப்பாக சொல்வது,  நல்லூர் இராசதானியை அண்டிய பகுதி (முக்கியமாக, அன்றைய இராஜ தானியின் நகர் புறம்).

காம சிற்பங்கள் இருந்த எல்லா கோயிகளும் (அநேகமாக அவை  பெரிய கோயிகள்)  போத்துக்கேயரால் அழிக்கப்பட்டு விட்டன. இப்பொது இருப்பவை எல்லாம், ஒல்லாந்தர் காலத்தில் பெரும்பாலும் அதே இடத்தில்  கட்டப்பட்ட கோயில்கள்.

நல்லூர் அதன் உண்மையான இடத்தில் போத்துக்கேயர் St James church ஐ (முத்திரை சந்தியில் இருந்து பார்க்கும் போது, செம்மணி வீதியில் இருக்கும் St JamesChurch தெரியும்)  கட்டிவிட, நல்லூர் கோயில்  இப்போதைய இடத்தில கட்டப்பட்டு விட்டது.

இந்த படம், பழைய நல்லூர் (நெல்லூர்) கோயிலின் கேணி. இப்போதும், யமுனாரி என்றே அழைக்கப்படுகிறது.

2017-09-22.jpg?fit=1280,695&ssl=1

 

 

இதை கொஞ்சம் சரி பாருங்கள் ..
எமது பழைய கோவில்கள் எல்லாம் ஊரி கல்லினால் கட்டபட்டவை 
இவை மிகவும் பலமான கற்கள் எளிதில் உடைக்க முடியாதது 

கோட்டை கற்களை நான் பார்த்து இருக்கிறேன் 
அவை கருங்கல்லும் இல்லை ஊரி  கல்லும் இல்லை 

அவற்றை போன்ற கற்களை ஊர்வக்கற்துறை பகுதிகளில் பார்த்து இருக்கிறேன் 

வேறு பகுதிகளில் நான் கண்டதில்லை ... 
இதை ஏதும் ஆராய்ச்சி செய்து நான் எழுதவில்லை 
மேலோட்டொமாக பார்த்ததை மட்டுமே எழுதுகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kadancha said:

இதில் உள்ள கிணறு, நாவலர் சிலை அருகில் இருந்த கிணறு போல தெரிகிறது.

நான் சொல்வது, பருத்தித்துறை வீதியின் மறுபக்கம். அதில் அந்த நேரம் வீடுகள் இல்லை.

google map இல் பார்க்கும் பொது பெரிய மரங்கள் இருப்பதாக தெரிகிறது.முன்பு கண்ணை மறைக்கும் பற்றைக்காடு,இப்பொது பெரிய்ய மரங்களுடன். 

ஆறுமுக சுவாமி வாசல் கோபுரத்திற்கு எதிர்புறமாக உள்ள காணியை வேலி போட்டு அடைத்து அந்த காணிக்கு ஒரு சிறிய கோபுரம் மாதிரி ஒன்றை கட்டியிருக்கிறார் போல நினைவு. இம்முறை போன பொழுதுதான் பார்த்தேன். 

அத்துடன் இந்த காணிக்கு ஒரு பக்கம் கோவில் வீதி.. மற்றைய பக்கத்தில் கட்டடங்கள் வந்துவிட்டது

E5-DB35-FB-8213-4498-B0-F7-A0-F803453429

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.