Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆசியாவின் சொர்க்கமாக இலங்கை மாறும்: சர்வகட்சி மாநாட்டில் ஆலோசனை வழங்கினார் சித்தார்த்தன் !!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆசியாவின் சொர்க்கமாக இலங்கை மாறும்: சர்வகட்சி மாநாட்டில் ஆலோசனை வழங்கினார் சித்தார்த்தன் !!

ஆசியாவின் சொர்க்கமாக இலங்கை மாறும்: சர்வகட்சி மாநாட்டில் ஆலோசனை வழங்கினார் சித்தார்த்தன் !!

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை வழங்கினால் நிச்சயமாக எமது நாட்டை ஆசியாவின் சொர்க்கமாக மாற்றலாம் என சர்வகட்சி மாநாட்டில் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

பல தசாப்தங்களாக நாட்டில் நிலவும் இன நெருக்கடியை, அடுத்தடுத்துவந்த அரசாங்கங்களின் கொள்கை, அணுகுமுறை மற்றும் தவறான நிர்வாகமே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு உண்மையான காரணம் என்றும் சுட்டிக்காட்டினார்.

சுயாட்சி அதிகாரத்திற்கான தமிழ் மக்களின் அபிலாசைக் கோரிக்கைக்கு முன்னதாகவே எமது நாட்டின் அனைத்து சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சிறந்த அரசியல் தீர்வை அடைந்திருக்க முடியும். என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளை தோற்கடித்த பின்னரும்கூட, தமிழ் மக்களின் மனதை வெல்வதற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் அரசாங்கங்கள் மேற்கொள்ளவில்லை என்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

அத்தோடு கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தால் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடமிருந்து இன்னும் அதிகமான முதலீட்டாளர்களை அவர்கள் ஈர்த்திருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், எமது நாட்டில் முதலீடு செய்ய ஆர்வத்துடன் வந்த புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் கடுமையான விதிமுறைகளைக் கடந்து அரசாங்கத்தின் சிங்கள அதிகாரிகளிடம் அனுமதி பெறுவது மிகவும் கடினமாக இருந்தது என்றும் சித்தார்த்தன் தெரிவித்தார்.

நீண்ட கால அபிலாசையை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு நிரந்தர தீர்வை எட்டும்வரை அல்லது குரைந்தபட்சம் 13 வது திருத்தத்தை முழுவதுமாக செயற்படுத்தினால் மட்டுமே தற்போதைய பொருளாதார அவலநிலையில் இருந்து நமது நாட்டை மீட்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2022/1273132

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் நியாயபூர்வமாக சிந்தித்து இருந்தால் நாடு நாடாக பிச்சைப்பாத்திரம் ஏந்த வேண்டிய நிலை வந்திருக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை வழங்கினால் நிச்சயமாக எமது நாட்டை ஆசியாவின் சொர்க்கமாக மாற்றலாம்

 

சரியான  சூழ்நிலையில்

சரியான  இடத்தில் 

சரியான தேவையான  பேச்சு

  • கருத்துக்கள உறவுகள்

நன்று...பக்கத்திலை இருக்கிற நரி பாக்கிற பார்வை சரியில்லை....நிச்சயமாக அவரின் பேச்சிற்கு எதிர் மறையான கருத்தையே அங்கு பேசியிருக்கும்....முசுலிமின்....கெட்ட நரி இதுதான்..

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் இந்த வங்குரோத்துக்கு காரணமே காட்டை அழித்து வளமான தேயிலை ரப்பரை வளர்த்து நாட்டை  பசுமையாக்கிய மக்களை தமிழர் என்ற காரணத்துக்காக 6 லட்சம் மனிதவளத்தை கப்பல் ஏத்தி அனுப்பியது அந்த மக்களின் கண்ணீர் இன்று கடனாகி பெருத்து கிடக்கிறது .

இனியாவது உழைக்கும் அந்த மக்களுக்கு தகுந்த சம்பளத்தை கொடுத்து உழைப்பவனுக்கு மண்டையில் சரக்கிருப்பவர்களுக்கும் மரியாதை செய்து கொள்ளட்டும் வெள்ளம் தலைக்கு மேல் 16 அடி உயரத்துக்கு மேல் ஓட துவங்கி 12 வருடமாகி விட்டது .

கடனின்  வட்டி கட்ட கடன் வாங்கும் நாட்டை ராஜதந்திரம் செய்கிறார்கள் என்று ராஜதந்திரத்தின் அர்த்த பெயரை   கெடுத்து கொள்ளாதீர்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்போது இனத்துவேச சிங்களம்  ஈழத்தமிழினத்தை அழிக்க அடக்க நினைத்ததோ அன்றே ஆரம்பித்தது  சிறிலங்காவின் அழிவு காலம்.இனவாத சிங்களம் மனிதத்தன்மையே இல்லாமல் முன் பின்  சிந்திக்காமல் வரட்டுக்கௌரவத்துடன் நடந்து கொண்டமைக்கான பரிசுகளும் விளைவுகளுமே தற்போதைய நிலைகளுக்கு முக்கிய காரணம்.
உதாரணத்திற்கு கொஞ்சம் சிந்தித்து பார்ப்போம் வாருங்கள்.
ஒருகாலத்தில் தெற்காசியாவின் நெற்களஞ்சியம் என அழைகப்பட்ட நாடு இலங்கை அதன் நிலை இன்று????????
என்று தமிழர் வள நிலைகளை முடக்க நினைத்தார்களோ  அழிவும் ஆரம்பமாகியது.
காங்கேசந்துறை சீமேந்து தொழிற்சாலை முடக்கம்
கந்தளாய் சீனி தொழிற்சாலை எங்கே எப்படி?
வாழைச்சேனை காகித தொழிற்சாலை முடக்கம்
பரந்தன் இரசாயன தொழிற்சாலை அறவே இல்லை
இலங்கை தேயிலைக்கு கூட இப்போது பெரு மதிப்பில்லை
சுற்றிவர ஆழ்கடலும் ஆழமில்லா கடலும் இருந்தும் பலனில்லை. மீன்பிடி துறையில் முன்னேற்றமில்லை.

இப்படியே இன்னும் சொல்லிக்கொண்டேபோகலாம்..

 இவ்வளவு பஞ்சத்திலும் புத்தர் சிலை அபிவிருத்திக்கு பஞ்சமில்லை.
 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

சிங்களம் நியாயபூர்வமாக சிந்தித்து இருந்தால் நாடு நாடாக பிச்சைப்பாத்திரம் ஏந்த வேண்டிய நிலை வந்திருக்காது. 

எங்களை சுரண்டி சுகமாக அரசாண்டு கொண்டு இருந்திருக்கும்.

கைகொடுப்பார்கள் என்று நினைத்து அழைத்தால்; பாடம் நடத்துகிறார்கள். இதற்காகவே நாட்டை விற்றுவிடப்போகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.