Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு விஜயம் செய்த ஜெய்சங்கர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு விஜயம் செய்த ஜெய்சங்கர்

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு விஜயம் செய்த ஜெய்சங்கர்

கொழும்பின் புறநகரிலுள்ள லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு விஜயம் செய்ததாக இலங்கை வந்துள்ள இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி. எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முகாமைத்துவப்பணிப்பாளர் மனோஜ் குப்தா எரிபொருள் விநியோக நிலைமை குறித்து தன்னிடம் தெரிவித்ததாவும் அவர் தெரிவித்துள்ளார்.

500 மில்லியன் USD இந்திய கடனுதவி இலங்கை மக்களின் அன்றாட வாழ்வுக்கு உதவுவதாகவும் அவர் குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
 
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு விஜயம் செய்த ஜெய்சங்கர்

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு விஜயம் செய்த ஜெய்சங்கர்

 
கொழும்பின் புறநகரிலுள்ள லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு விஜயம் செய்ததாக இலங்கை வந்துள்ள இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி. எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முகாமைத்துவப்பணிப்பாளர் மனோஜ் குப்தா எரிபொருள் விநியோக நிலைமை குறித்து தன்னிடம் தெரிவித்ததாவும் அவர் தெரிவித்துள்ளார்.

500 மில்லியன் USD இந்திய கடனுதவி இலங்கை மக்களின் அன்றாட வாழ்வுக்கு உதவுவதாகவும் அவர் குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
 

பசில், மகிந்த, கோத்தாவே…. பெற்றோல் நிலையத்திற்கு நேரடியாக சென்று,
நிலைமைகளை அவதானிக்கவில்லை.
இந்திய வெளிவிவகார அமைச்சர்… போய் பார்த்திருக்கிறார்.
அது சரி…. கடன் குடுத்தவனுக்குத்தானே… திரும்ப வருமா? என்ற கரிசனை இருக்கும். 😁

2 minutes ago, தமிழ் சிறி said:

பசில், மகிந்த, கோத்தாவே…. பெற்றோல் நிலையத்திற்கு நேரடியாக சென்று,
நிலைமைகளை அவதானிக்கவில்லை.
இந்திய வெளிவிவகார அமைச்சர்… போய் பார்த்திருக்கிறார்.
அது சரி…. கடன் குடுத்தவனுக்குத்தானே… திரும்ப வருமா? என்ற கரிசனை இருக்கும். 😁

இந்தப் பொருள் பட பல மீம்ஸ்களை சிங்களவர்களும் வெளியிட்டு தாம் (மட்டும்) வாக்கு செலுத்தி கொண்டு வந்த சிங்கள அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மந்திரிமார் போனால் அடியல்லோ விழுந்திருக்கும்...இது சும்மா வெள்ளோட்டம் பார்க்க விட்டவை போல கிடக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி அவர் தானே இப்ப சிறீலங்காவுக்கும் அமைச்சர். பார்வையிடுவது மட்டும் அல்ல ஒரு புகையிரதத்தில் ஆயிரம் பேர் எப்படி தொங்கிக்கொண்டு போவது போன்ற பயிற்சிகளையும் கொடுத்தால் பெற்றோல் டீசல் விலை உயர்வை தடுக்க வாய்ப்பாக இருக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

அது சரி அவர் தானே இப்ப சிறீலங்காவுக்கும் அமைச்சர். பார்வையிடுவது மட்டும் அல்ல ஒரு புகையிரதத்தில் ஆயிரம் பேர் எப்படி தொங்கிக்கொண்டு போவது போன்ற பயிற்சிகளையும் கொடுத்தால் பெற்றோல் டீசல் விலை உயர்வை தடுக்க வாய்ப்பாக இருக்கும்?

ஐயையோ….  புகையிரதத்தில், ஆயிரம் பேர்… தொங்கிக் கொண்டு போவதா…
சிங்களவனுக்கு… தாச்சியில் இருந்து, அடுப்பில் விழுந்த நிலைமையாகி போச்சே….
பேசாமல்…. ஈழப் போராட்டத்தை அங்கீகரித்து இருந்தால்…
இன்று ஶ்ரீலங்கா… ஒரு சிங்கப்பூராக இருந்திருக்கும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 ஜெய்சங்கர் பெற்றோல் செட்டுக்கு போய் என்னத்தை பார்த்திருப்பார்?

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

 ஜெய்சங்கர் பெற்றோல் செட்டுக்கு போய் என்னத்தை பார்த்திருப்பார்?

உண்மையா பெற்றோல் தான் விக்கிறார்களா என்று பாக்கத்தான்..

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

பசில், மகிந்த, கோத்தாவே…. பெற்றோல் நிலையத்திற்கு நேரடியாக சென்று,
நிலைமைகளை அவதானிக்கவில்லை.
இந்திய வெளிவிவகார அமைச்சர்… போய் பார்த்திருக்கிறார்.
அது சரி…. கடன் குடுத்தவனுக்குத்தானே… திரும்ப வருமா? என்ற கரிசனை இருக்கும். 😁

நீங்கள் சொல்வது உண்மையாக கூட இருக்கலாம். நேற்று ஒருவருடன் கதைக்கும்போது அவர் சொன்னார், இந்தியாவிடம் கடைசியாக வாங்கிய கடனில் இருந்து இலங்கை ஏதாவது வாங்க செலவு செய்வதென்றால், ஒவ்வொருமுறையும்  இந்திய high கமிஷன் இல் கையெழுத்து வாங்க வேண்டும். இது அந்த கடன் நிபந்தனைகளில் ஒன்று! இந்தியாவே அப்பிடி இப்பிடி, அவர்களே இவங்கள் என்ன செய்வாங்களோ என்று பயந்து இருக்கிறார்கள். தங்கள் பிடியில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று உணர்த்துவதாக கூட இருக்கலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.