Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளுடன் இணைந்து கூட்டமைப்பை நாமே உருவாக்கினோம்; கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தகுதி சுமந்திரனுக்கு உள்ளதா? ரெலோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுடன் இணைந்து கூட்டமைப்பை நாமே உருவாக்கினோம்; கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தகுதி சுமந்திரனுக்கு உள்ளதா? ரெலோ

 

 

 
விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதத்துடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்கியவ்கள் நாமே. விடுதலைப் புலிகளை வன்முறையாளர்கள் போல காட்டிக் கொள்ளும் சுமந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் அங்கம் வகிக்கும் தகுதியுள்ளதா என கேள்வியெழுப்பியுள்ளார் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை சீர்குலைக்கிறார் என எம்.ஏ.சுமந்திரன் மீது நீண்டகாலமாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபயவை சந்திப்பதில்லையென ரெலோ எடுத்த முடிவை சுமந்திரன் பகிரங்கமாக விமர்சித்து வருகிறார்.
நேற்று வவுனியாவில் நடந்த நிகழ்வொன்றின் பின்னர் கருத்து தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறினால் சந்தோசமடைவேன் என கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாவை காப்பாற்ற எமது கட்சி வராததால் சுமந்திரன் ஏன் பதற்றமடைகிறார், கடந்த நல்லாட்சி காலத்திலும் ரணிலை காப்பாற்ற இதுபோலவே ‘விழுந்து விழுந்து’ பணியாற்றினார் என ரெலோ ஆதாரவாளர்கள் சமூக ஊடகங்களில் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், எம்.ஏ.சுமந்திரனின் கருத்திற்கு ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று பதிலளித்துள்ளார்.
அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது,
”தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழீழ விடுதலை இயக்கம் விலகிச் சென்றால் தமிழ் அரசு கட்சி சந்தோசப்படும் என சுமந்திரன் தெரிவித்திருந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகி, 10 வருடங்களின் பின்னரே சுமந்திரன் கட்சிக்குள் வந்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தில் ரெலோ முக்கிய பங்காற்றியிருந்தது. கிழக்கில் உள்ள தமிழ் அரசு கட்சியின் பிரமுகர்கள் பலருக்கும் அது தேரியும்.
selvam-adaikalam.jpg
ஆயுதப் போராட்டத்தை வன்முறையென சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். வன்முறையை ஏற்கவில்லையென்றும் குறிப்பிட்டார்.
சுமந்திரன் வன்முறையென குறிப்பிடும் வே.பிரபாகரனின் ஆசீர்வாதத்துடனேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த கூட்டமைப்பில் சுமந்திரன் எப்படி அங்கம் வகிக்க முடியும்.
இதேவேளை, சுமந்திரனின் கருத்து தமிழ் அரசு கட்சியின் கருத்தா என்பதை அந்த கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும், சுமந்திரனின் கருத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தை என்பதை இரா.சம்பந்தன் தெளிவுபடுத்த வேண்டும்.
போராட்டத்திலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திலும் ஒரு துளியளவு பங்களிப்பையும் செலுத்தாதவர் சுமந்திரன். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் அனைவருக்கும் முன்பாகவே எமது முடிவை அறிவித்தோம். எமது முடிவு ஜனநாயகரீதியிலானது என இரா.சம்பந்தனும் தெரிவித்திருந்தார்.
சுமந்திரன் பல தடவைகள் சீண்டிய போதும், நாம் உருவாக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமை பாதிக்கப்பட கூடாது என்பதற்காக மௌனம் சாதித்தோம். இப்பொழுது சுமந்திரன் சொன்ன கருத்து பாரதூரமானது. அதற்கு பதிலடி கொடுப்போம்.
எம்மை துரோகிகள் போல சுமந்திரன் பொய்யான கருத்தை தெரிவித்திருந்தார். நாம் துரோகிகளாக புலிகளால் பார்க்கப்பட்டிருந்தால், கூட்டமைப்பை உருவாக்கும் பணியை புலிகள் எம்மிடம் தந்திருக்க மாட்டார்கள்.
விடுதலைப் புலிகளும், ரெலோவும் எப்படி அன்னியோன்யமாக செயற்பட்டார்கள் என்பது வரலாறு தெரிந்தவர்களிற்கும், விடுதலைப் புலிகளின் மூத்த போராளிகளிற்கும் நன்கு தெரியும். வவுனியாவில் புலிகளுடன் சேர்ந்து செயற்படுவதாக கூறி, எமது உறுப்பினர்களும், அலுவலகங்களும் தாக்கப்பட்டிருந்தன.
எம்மையும் புலிகளையும் பற்றி பேசும் தகுதி சுமந்திரனுக்கு கிடையாது” என்றார்.

Thinakkural.lk

  • கருத்துக்கள உறவுகள்

விடிந்தால்... பொழுது பட்டால், இந்த ஆளாலை  ஓரே... புடுங்குப்பாடு.
சுமந்திரனை.. கூட்டமைப்பை விட்டு வெளியேற்றினால்,
ஒரு பிரச்சினையும், இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

யாரையா பூனைக்கு மணி கட்டுறது?  கோத்தாவான கோத்தாவுக்கே இந்தநிலை என்றால், இவர் எங்கனம்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

விடிந்தால்... பொழுது பட்டால், இந்த ஆளாலை  ஓரே... புடுங்குப்பாடு.
சுமந்திரனை.. கூட்டமைப்பை விட்டு வெளியேற்றினால்,
ஒரு பிரச்சினையும், இல்லை.

சம்பந்தான் செய்ய வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

சம்பந்தான் செய்ய வேண்டும். 

சம்பந்தன் தானே அவரை, வலிய கூட்டிக் கொண்டு வந்தவர்.
அவரே அனுப்பி வைப்பதுதான் முறை.
ஆனால்… சம்பந்தன், கட்சியில் என்ன நடக்குது என்று தெரியாமல்…
“கோமா” நிலையில் அல்லவா இருக்கின்றார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

சம்பந்தன் தானே அவரை, வலிய கூட்டிக் கொண்டு வந்தவர்.
அவரே அனுப்பி வைப்பதுதான் முறை.
ஆனால்… சம்பந்தன், கட்சியில் என்ன நடக்குது என்று தெரியாமல்…
“கோமா” நிலையில் அல்லவா இருக்கின்றார்.

 

எப்படிச் சொல்லுறியள்....கோட்டாவுக்கு முன்னாலை மேசைக்கு விட்ட அடி மறந்துபோச்சோ..?

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு உருவாக உழைத்த தராகி சிவராமைக் கொன்றதே கோத்தாவின் கூலிகள் தானே.

சுமந்திரன் தமிழர்களின் தமிழ் தேசிய அரசியலை சிதைக்க சிங்களத்தால் இறக்கப்பட்ட கூலி என்பதை எப்பவோ சொல்லிட்டம். இப்ப எல்லாருக்கும் வெளிப்படையா தெரிய வந்திருக்குது.. அவ்வளவும் தான். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதன் மூலம்.. தமிழ் தேசிய அரசியலை.. தமிழர்களின் தாயக.. சுயநிர்ணய உரிமைக் கனவை அரசியல் ரீதியாகவும்..  சிதைக்கலாம் என்பது தான் கோத்தா மகிந்த கும்பலின் நோக்கமே. அதை சுமந்திரனைக் கொண்டு செய்விக்கிறார்கள்..அவ்வளவும் தான். இதன் பின்னணியில்.. பல்வேறு சர்வதேச சக்திகளின் மறைமுகப் பங்களிப்பும் உண்டு. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதன் மூலம்.. தமிழ் தேசிய அரசியலை.. தமிழர்களின் தாயக.. சுயநிர்ணய உரிமைக் கனவை அரசியல் ரீதியாகவும்..  சிதைக்கலாம் என்பது தான் கோத்தா மகிந்த கும்பலின் நோக்கமே. அதை சுமந்திரனைக் கொண்டு செய்விக்கிறார்கள்.

அதை சுமந்திரனே தன்னை அறியாமல் உளறிவிட்டார். தமிழ்த்தேசியம், தமிழரசு என்றால் சிங்களம் பயப்படுகிறதாம். அப்போ என்ன பெயர் வைச்சிருக்கிறார்? அதையும் சொல்லி தொலைத்துவிடுவார் ஆனால் ஆள் மிஞ்சாது அதனால சுத்துறார். சம்பந்தன் ஆட அசைய முடியாமல் போக, தானே தானைத்தலைவன் என்று வெளிக்கிடுவார் பாருங்கோ, அப்போ தெரியும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.