Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெளிநாட்டு கடன் மீள்செலுத்துகையை குறுகிய காலத்துக்கு இடை நிறுத்த தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு கடன் மீள்செலுத்துகையை குறுகிய காலத்துக்கு இடை நிறுத்த தீர்மானம்

spacer.png

நிலுவையில் உள்ள வெளிநாட்டு சாதாரண கடன் மீள்செலுத்துகையை குறுகிய காலத்துக்கு இடை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிதியமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தால் ஆதரிக்கப்படும் பொருளாதார சீரமைப்பு திட்டத்திற்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

https://athavannews.com/2022/1276400

 

கடன்களை திரும்ப செலுத்த கால அவகாசம் கோரும் இலங்கை

சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளிநாடுகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் கோரியுள்ளது இலங்கை.

பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால், தற்போது கடனை திரும்பி தர இயலாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/topics/cz74k7p3qw7t

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, கிருபன் said:

வெளிநாட்டு கடன் மீள்செலுத்துகையை குறுகிய காலத்துக்கு இடை நிறுத்த தீர்மானம்

spacer.png

நிலுவையில் உள்ள வெளிநாட்டு சாதாரண கடன் மீள்செலுத்துகையை குறுகிய காலத்துக்கு இடை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிதியமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தால் ஆதரிக்கப்படும் பொருளாதார சீரமைப்பு திட்டத்திற்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

https://athavannews.com/2022/1276400

 

கடன்களை திரும்ப செலுத்த கால அவகாசம் கோரும் இலங்கை

சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளிநாடுகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் கோரியுள்ளது இலங்கை.

பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால், தற்போது கடனை திரும்பி தர இயலாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/topics/cz74k7p3qw7t

இதற்கு, இந்தியா சம்மதித்தாலும்… 
சீனா சம்மதிக்குமா?
பெரிய சிக்கலில், மாட்டியுள்ளது…. ஶ்ரீலங்கா. 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:

இதற்கு, இந்தியா சம்மதித்தாலும்… 
சீனா சம்மதிக்குமா?
பெரிய சிக்கலில், மாட்டியுள்ளது…. ஶ்ரீலங்கா. 

சீனாக்கென்ன கவலை. செட்டியார் மாதிரி, அடகெல்லோ வாங்கி வைச்சிருக்கு. அடகு வாங்காத இந்தியாவுக்குதான் கவலை...

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

சீனாக்கென்ன கவலை. செட்டியார் மாதிரி, அடகெல்லோ வாங்கி வைச்சிருக்கு. அடகு வாங்காத இந்தியாவுக்குதான் கவலை...

இந்தியா….எங்களுக்கு செய்த வேலைக்கு,
ஶ்ரீலங்கா கடன் வாங்கின… அந்த 4 பில்லியன் டொலரை திருப்பிக் கொடுக்காமல்…
பெரிய… நாமம் போட்டு அனுப்ப வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குள்ளை.... சுமந்திரன், 
புலம் பெயர் தமிழர்களிடம்... 1 பில்லியன் பவுன்சை திரட்டி, 
ஸ்ரீலங்காவில்  முதலீடு செய்யப் போறாராம்.... எண்டு ஒரு கதை அடிபடுகுது. 
தொழில் சிறந்தால்... ஸ்ரீலங்கா முன்னேறும் தானே... 😛

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு எண்ணை குதம் உள்ளது. அதனை அடக்காக வைத்தார்களோ தெரியாது.
 

 

  • கருத்துக்கள உறவுகள்

கைவிரித்த இலங்கை அரசு.. 51 பில்லியன் டாலர் கடன் செலுத்த முடியாது.. நிதியமைச்சகம் அறிவிப்பு..!

85b980b0-33dc-4e95-a3cb-9e5159_1200x768.

உணவு பொருட்கள் விலை உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, எல்பிஜி சிலிண்டர் பற்றாக்குறை, பல மணிநேரம் மின்சாரத் தடை, மக்கள் போராட்டம், அமைச்சர்கள் ராஜினாமா, பசியால் மக்கள் தவிப்பு, தமிழ்நாட்டுக்கு இடம் பெயரும் மக்கள் என இலங்கை பொருளாதாரம் கடந்த சில வாரத்தில் தரையைத் தட்டியது.

இந்நிலையில் இலங்கை அரசு இன்று முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இந்தியாவுக்கும், உலக நாடுகளுக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இலங்கை அரசு 

இலங்கை அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இறக்குமதிக்காக வைத்திருந்த அன்னிய செலாவணி இருப்பு வேகமாகக் குறைந்துள்ள நிலையில், அரசு வாங்கிய 51 பில்லியன் டாலர் அளவிலான கடனை திருப்பிச் செலுத்த முடியாது என அறிவித்துள்ளது. இதுதான் எங்களுடைய கடைசி நிலை என்றும் அறிவித்துள்ளது.

51 பில்லியன் டாலர் கடன்

இதுகுறித்து இலங்கை அரசின் நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்னிய செலாவணி இருப்பு வேகமாகக் குறைந்து வரும் நிலையில் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளோம்.

இலங்கை நிதியமைச்சகம் 

மேலும் இலங்கைக்குக் கடன் கொடுத்த அமைப்புகள், வெளிநாட்டு அரசுகள் கொடுக்க வேண்டிய நிலுவை தொகையை மூலதனமாக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இல்லையெனில் இலங்கை ரூபாயில் பேமெண்ட் செய்யும் முறையை ஏற்றுக்கொள்ளும் படி தெரிவித்துள்ளது இலங்கை நிதியமைச்சகம்.

அவசரக்கால நடவடிக்கை 

இலங்கையின் நிதி நிலை மேலும் மோசமாவதைத் தடுக்கும் பொருட்டு அரசு அவசரக்கால நடவடிக்கையாகக் கடைசி முயற்சியாக மட்டுமே இத்தகைய முடிவை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் 

இலங்கை அரசு தனது நிதிநிலையைச் சீர்படுத்தச் சர்வதேச நாணய நிதியத்திடம் புதிய கடன் திட்டத்திற்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், ஏற்கனவே இருக்கும் கடனுக்கும், கடன் வாங்கியவர்களுக்கும் எவ்விதமான தளர்வும் இல்லாமல் நிலையான நிலைப்பாட்டைக் கொண்டு இருப்பதைக் காட்டும் விதமாகத் தற்போது 51 பில்லியன் டாலர் கடனை திருப்பிச் செலுத்த முடியாது என அறிவித்துள்ளது.

இலங்கை சுதந்திரம்

இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பும், இப்போதும் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. இதனால் ஆண், பெண் வித்தியாசமின்றி இலங்கை மக்கள் தற்போது அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மக்களைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கையும் தோல்வியைச் சந்தித்து வருகிறது.

சர்வதேச ரேட்டிங் அமைப்புகள் 

ஏற்கனவே இலங்கையின் பொருளாதாரத் தரத்தைச் சர்வதேச ரேட்டிங் அமைப்புகள் மோசமான மதிப்பீட்டைக் கொடுத்துள்ளது. இதனால் கடன் பெறுவதற்கான வாய்ப்பு இழந்துள்ள இலங்கை கடைசி வாய்ப்பாக IMF அமைப்பின் கடன் திட்டத்தை நம்பியிருக்கிறது.

இந்தியா மற்றும் சீனா 

sl-chaina_india_flag_1000px.jpg

இலங்கை தற்போது எரிபொருள், உணவு பொருட்கள் தேவையை இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து பெற்று வருகிறது. முதலில் இரு நாடுகளிடமும் பணத்தைத் தான் கடனாகக் கேட்டது, இந்தியா, சீனா மறுத்துவிட்ட நிலையில் பொருட்களின் வாயிலாக உதவி வருகிறது.

மகிந்த ராஜபக்ச

இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச மக்களிடம் பேசுகையில் பொருளாதார நிலைமையை அரசு விரைவில் தீர்க்கும் அதுவரையில் பொறுமை காக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார். 'நீங்கள் சாலையில் போராட்டம் நடத்தும் ஒவ்வொரு நொடியும் பல டாலர்கள் நஷ்டத்தை நாம் எதிர்கொள்கிறோம் எனவும் தெரிவித்தார்.

வீழ்ச்சிக்கு என்ன காரணம்..? 

இலங்கையில் இந்த மோசமான நிலைக்கு அந்நாட்டின் அரசின் முறையற்ற நிர்வாகம், தொடர்ந்து அதிகரித்து வரும் கடன் அளவு, வரிக் குறைப்பு ஆகியவற்றுக்கு மத்தியில் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://tamil.goodreturns.in/news/sri-lanka-govt-defaults-on-51-billion-external-debt-running-out-of-foreign-exchange-027667.html

இந்த அறிவிப்பு இன்னும் மிக மோசமான நிலைக்கு இலங்கையை கொண்டு செல்லப் போகின்றது. 

கடன்களை திருப்பி செலுத்த (இப்போதைக்கு) முடியாது என அரசே அறிவித்து இருப்பதால், இறக்குமதி செய்வதற்கு இலங்கை பிரதான வங்கிகள் கொடுக்கும் Line of credit இனை இனி எந்த ஒரு சர்வதேச வங்கியும் ஏற்றுக் கொள்ள பின்னடிக்கும். இதன் மூலம், துறைமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களுடன் தரித்து நிற்கும் கப்பல்களில் இருந்து பொருட்களுக்கு பணம் செலுத்தி பெறுவதில் இருந்து எல்லா விதமான இறக்குமதியும் மேலும் பாதிக்கும். 

IMF உடன் இனித்தான் பேச்சுவார்த்தையே தொடங்க போகினம். அவர்களுடன் காத்திரமாக பேச்சு நடாத்தக் கூட நிபுணர்கள் எவரும் இல்லாத அரசு இது. எனவே இந்த பேச்சுவார்த்தை எல்லாம் இழுபட்டு, ஈற்றில் IMF கடன் கொடுக்கும் நிலை (?) வர ஆகக் குறைந்தது ஒரு வருடமாவது எடுக்கும். ஆகவே இப்போதைக்கு கடன் மீள வாங்குவதும், அதனை அடைக்க பணம் செலுத்துவதும் நடக்கப் போறதில்லை.

அடுத்த கட்டம் வங்குரோத்து நிலையை நாடு அடைந்து விட்டது என அறிப்பது தான். ஜூலையின் பின் அதுவும் நடக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.