Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கணவரைக் கொன்று துண்டு துண்டாக்கி ஃபிரிட்ஜில் வைத்த மனைவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கணவரைக் கொன்று துண்டு துண்டாக்கி ஃபிரிட்ஜில் வைத்த மனைவி

கோலாலம்பூர்: கணவரைக் கொலை செய்து அவரது உடலை 11 துண்டுகளாக வெட்டி, குளிர்சாதனப் பெட்டியில் பதுக்கி வைத்திருந்த பெண்ணை மலேசிய போலீஸார் கைது செய்துள்ளனர்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை ஒருவர் வாங்கினார். அந்த வீடு கடந்த 3 மாத மூடப்பட்டிருந்தது. இதனால் ஒருவரை அனுப்பி சுத்தம் செய்யப் பணித்திருந்தார்.

அதன்படி அந்த நபரும் வீட்டை சுத்தம் செய்வதற்காகச் சென்றார். அப்போது வீட்டில் கடுமையான துர்நாற்றம் வீசியது. இதையடுத்து வீட்டு உரிமையாளருக்குத் தகவல் கொடுத்தார். அவரும் விரைந்து வந்தார்.

இருவரும் வீட்டில் எங்கிருந்து துர்நாற்றம் வருகிறது என்று பார்த்தபோது வீட்டின் சமையலறையில் இருந்த குளிர்சாதனப் பெட்டியிலிருந்துதான் (ஃபிரிட்ஜ்) வாசனை வருவது தெரிய வந்தது.

இதையடுத்து சந்தேகமடைந்த அவர்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து ஃபிரிட்ஜைத் திறந்து பார்த்தேபாது அதில் ஒரு ஆண் பிணம் அழுகிய நிலையில் இருந்தது தெரிய வந்து அதிர்ந்தனர்.

அந்தப் பிணம் 11 துண்டுகளாக வெட்டப்பட்டு பாலிதீன் பைகளில் போட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்தது. இந்தக் கொலையைச் செய்தது அந்த ஆணின் மனைவி என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

கொல்லப்பட்ட நபர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர். கொலை செய்த அந்தப் பெண் சரவாக் என்ற இடத்தைச் சேர்ந்தவர். விமானப் பணிப்பெண்ணாக அவர் பணியாற்றி வருகிறார்.

இதையடுத்து தீவிர வேட்டை நடத்திய போலீஸார் அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்துக் கைது செய்துள்ளனர். அப்பெண்ணுடன், அவரது காதலரும் சேர்ந்து கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. காதலருக்கு வலை வீசப்பட்டுள்ளது.

கள்ளக் காதலில் இந்தக் கொலை நடந்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது. இந்த சம்பவம் கோலாலம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- தட்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள்ளக் காதலில் இந்தக் கொலை நடந்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது. இந்த சம்பவம் கோலாலம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- தட்ஸ் தமிழ்

பின்னை.. பரப்பரப்பை ஏற்படுத்தாமல் என்ன செய்யும்.. உலகம் போற போக்கு..

அட இப்படி எல்லாம் நடக்குமோ கல்யாணம் கட்டினா.............இப்பவெ பயமா இருக்கு...... :huh:

நம்ம மகளீர் அமைப்பினர் அறிக்கை விடவில்லையோ? :huh:

மகளீர் அமைப்பினர் ஏன் மாமா அறிக்கைவிடவேண்டும்....... :huh:

அடி பாவி 11 துண்டுகளாக வெட்டினாளா?

இப்படியும் பெண்ணா என மனசு கேட்குது. ஆமா மனைவியை பொலிஸ் பிடிச்சிட்டாங்களா? என்ன தண்டனை கொடுத்தாங்களாம்?

அது சரி 11 துண்டுகளாக வெட்டும் வரைக்கு கணவன் என்ன செய்து கொண்டுரிந்தவராம்............ :P

quote name='Jamuna' date='Jul 31 2007, 10:17 PM' post='329750']

அது சரி 11 துண்டுகளாக வெட்டும் வரைக்கு கணவன் என்ன செய்து கொண்டுரிந்தவராம்............ :P

  • கருத்துக்கள உறவுகள்

அட பதினொரு துண்டுகளா? அதற்கு மேலே ஏன் வெட்ட முடியாது போனது?

அது சரி 11 துண்டுகளாக வெட்டும் வரைக்கு கணவன் என்ன செய்து கொண்டுரிந்தவராம்............ :P

கணவரைக் கொலை செய்து அவரது உடலை 11 துண்டுகளாக வெட்டி

கொலை செய்த பின்னர் தான் வெட்டியிருக்கு

ஜம்மு அடிக்கடி கவனமின்றி கருத்து எழுதுறியள். இனிமேல் வெட்டிப்போடுவன் தம்பியை. ஆமா :P (என்ன மகள்ர் எல்லாம் வெட்டுறதிலேயே இருக்கிறியள் என்று நீங்க நினைக்கிறது எனக்கு கேட்குது தான். என்ன செய்ய ஜம்முதம்பி வரவர மோசம்)

மனைவியை சமாளிப்பது எப்படி என்ற புத்தகம் படிச்சுக்கொண்டிருந்திருப்ப

அம்மாடியோவ்

ஆண்கள் எல்லாம் ஜாக்கிரதையா இருக்கணும்

கொலை செய்த பின்னர் தான் வெட்டியிருக்கு

ஜம்மு அடிக்கடி கவனமின்றி கருத்து எழுதுறியள். இனிமேல் வெட்டிப்போடுவன் தம்பியை. ஆமா :P (என்ன மகள்ர் எல்லாம் வெட்டுறதிலேயே இருக்கிறியள் என்று நீங்க நினைக்கிறது எனக்கு கேட்குது தான். என்ன செய்ய ஜம்முதம்பி வரவர மோசம்)

ஓ கொலை செய்து போட்டு தான் வெட்டி இருக்கா பிறகு பிரிஜிலில வைத்திருக்கா அப்ப அடுத்த கிழமை சமைத்து சாப்பிட இருந்திருப்பா மிஸ் ஆகி போச்சு பாவம் அவா................ :P

என்னை என்னை போய் வெட்ட போறீங்களா...............பாவம் நான் எவ்வளவு நல்ல பிள்ளை.........வரவர மோசமோ யாரோ அக்காவிற்கு பொய் சொல்லிட்டீனம்............ :huh:

என்ன ஜம்மு நில்லா 007 வேலை ஆரம்பிச்சுட்டீங்களா?

பின்னே வான்வில் இதை இப்படியே விட்டிடலாமா.............. :P

சரி சரி நடத்துங்கோ :huh:

கொலையும் செய்வாள் பத்தினி என்று இதை தான் சொல்லுறதோ????????????

கந்தப்பு நீங்கள் போடுகிற செய்தி எல்லாம் இப்படியான செய்திகளாதான் இருக்குது. ஏன் நாங்கள் சும்மா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கேல்லையோ.

  • கருத்துக்கள உறவுகள்

கொலையும் செய்வாள் பத்தினி என்று இதை தான் சொல்லுறதோ????????????

கந்தப்பு நீங்கள் போடுகிற செய்தி எல்லாம் இப்படியான செய்திகளாதான் இருக்குது. ஏன் நாங்கள் சும்மா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கேல்லையோ.

செய்திப்பக்கமும் வந்து பாருங்க யாழ்கவி.

  • கருத்துக்கள உறவுகள்

அலைபாயும் மனசோட உலவும் மனிதர்கள் ஆபத்தானவர்கள் தான். கட்டினவன் இருக்க.. கள்ளக் காதல்.. காதலிச்சவன் இருக்க இன்னொருவன் கூட காதல்.. இப்படி.. மனித தனிமனித ஒழுக்கம் என்பதை மனிதன் சிந்தனையில் இழக்கும் போது.. செயல்களும் கோரமாகி விடுகின்றன.

அண்மையில் பிரித்தானியாவில் 13 வயதுப் பையன் ஒரு மாதுவை பாலியல்வல்லுறவு சார்ந்து கொலை செய்தமைக்காக கைதாகி உள்ளான்..!

இதெற்கெல்லாம்... ஆரம்பம்.. மனித சிந்தனைகள்.. மனிதத் தன்மை என்பதையே உணராமல்.. உணர்ச்சிக்கு அடிமையாகி.. ஆளப்படுவதால் ஆகும்..! அநாகரிகம் நாகரிகமாக காட்டப்படுவதன் உச்ச விளைவு.

அலைபாயும் மனமுள்ள ஆணோ பெண்ணோ தவறுகளை இலகுவாகச் செய்ய துணிகின்றனர்..! :huh:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அலைபாயும் மனமுள்ள ஆணோ பெண்ணோ தவறுகளை இலகுவாகச் செய்ய துணிகின்றனர்..!

யதார்த்ததை அழகாய் நச்சுன்னு சொல்லியிருக்கிறீங்க.

கறுப்பி அக்கா மன்னிக்கவும், எல்லா செய்திகளும் படிக்கிறதுதான். நீங்கள், நான் இதை படித்தால் அவசரத்திற்கு உதவும்.

கந்தப்பு வயது போன நேரத்தில இதை எல்லாம் போய் ஏன் படிக்கிறார்,எதாவது நடந்திட்டா என்ன செய்கிறது

அடி பாவி 11 துண்டுகளாக வெட்டினாளா?

இப்படியும் பெண்ணா என மனசு கேட்குது. ஆமா மனைவியை பொலிஸ் பிடிச்சிட்டாங்களா? என்ன தண்டனை கொடுத்தாங்களாம்?

\

உடுப்பி கோட்டலிலை பிரியாணி வாங்கி கொடுத்து வீட்டுக்கு அனுப்பீட்டாங்களாம்.... ம்ம்... அந்த பிரியாணி நல்லாவே இருக்காதாம்... அதோட இந்த கதையை களமாய் வச்சு உண்மைகதைகளுக்கு மெருகூட்டி எடுக்கும் இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் படத்தில் கதாநாயகியாய் நடிக்க ஒப்பந்தம் வேற ஆகி இருக்காங்களாம்...!

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு வயது போன நேரத்தில இதை எல்லாம் போய் ஏன் படிக்கிறார்,எதாவது நடந்திட்டா என்ன செய்கிறது

வயசு போன நேரத்தில இதுகளையும் படிகாட்டி என்னத்தை தான் படிகிறது,பேரபிள்ளைகளின் தொந்தரவு தாங்காம தான் இதை எல்லாம் படித்து கொண்டு இருகிறார். :P

அலைபாயும் மனமுள்ள ஆணோ பெண்ணோ தவறுகளை இலகுவாகச் செய்ய துணிகின்றனர்..! :huh:

அலைபாயாம இருக்க என்ன செய்ய வேண்டும் தாத்தா............. :P .

கொலையும் செய்வாள் பத்தினி என்று இதை தான் சொல்லுறதோ????????????

கந்தப்பு நீங்கள் போடுகிற செய்தி எல்லாம் இப்படியான செய்திகளாதான் இருக்குது. ஏன் நாங்கள் சும்மா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கேல்லையோ.

எச்சரிக்கையோ....பனங்க்காட்டு நரி இந்த சலசலப்புக்கு எல்லாம் நடுங்காது பாருங்கோ...

கந்தப்பு சொல்லாட்டி மாத்திரம், சுமந்து கொண்டு இருக்கிறியள் ஆக்கும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.