Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐந்து பில்லியன் டொலர் தேடியுள்ளோம்! நாட்டை பொறுப்பேற்க தயார் - சஜித் அணி அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து பில்லியன் டொலர்களை திரட்டுவதற்கு பல்வேறு தரப்பினருடன் ஏற்கனவே இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார்.

நெருக்கடியான சூழ்நிலையில் விதிவிலக்கான தலைமைத்துவம் தேவை எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார். இந்நிலையில், சிறந்த தலைவர் ஒருவர் நாட்டை முன்னெடுத்து செல்ல முன்வரவில்லையென்றால் எமது கட்சி மீதுள்ள மக்களின் நம்பிக்கை தகர்க்கப்படும் என்றும் அவர் கூறுகிறார்.

22-6276d7ebbd483.webp

 

“சிறப்பு தலைமை தேவை ஒரு சாதாரண சூழ்நிலையில் அல்ல, ஒரு நெருக்கடியிலேயே வேண்டும். நெருக்கடி ஏற்படும் போது, அதற்கான தீர்வை வழங்க முன்வர வேண்டும். தற்போதைய சூழ்நிலையை சமாளித்து நாட்டிற்கு சிறந்ததை வழங்குவதே எங்கள் நோக்கமாகும்.

மறுபுறம், இந்த நேரத்தில் நாங்கள் முன்வரவில்லை என்றால், மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கை தகர்ந்துவிடும். இதன்படி 13 முன்மொழிவுகளுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்வை நடைமுறைப்படுத்த இணக்கப்பாட்டுக்கு வந்தோம்.

முதலில் 20வது திருத்தம் நீக்கப்பட்டு 19வது திருத்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். அடுத்ததாக நாட்டின் நீண்ட கால கோரிக்கையான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

22-6276d5b466819.webp

இதேவேளை, 15 பேர் கொண்ட அமைச்சரவையுடன் அனைத்துக் கட்சிகளையும் கொண்ட தேசிய ஐக்கிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது. இந்த முழு திட்டத்தையும் அதிகபட்சமாக 18 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று சட்டத்தரணிகள் சங்கம் முன்மொழிந்துள்ளது.

உண்மையில் சட்டத்தரணிகள் சங்கமே தற்போது நாட்டில் சுதந்திரக் கட்சியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த கட்சியாகும். அவர்களின் முன்மொழிவை ஏற்க முடிவு செய்தோம். மேலும், அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மட்டுமல்லாமல், கடுமையான பொருளாதார நெருக்கடியும் உள்ளது.

22-6276d4d6bb52b.webp

 

இதற்கு தீர்வு காண கடந்த காலங்களில் கடுமையாக உழைத்தோம். எனவே, பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கான அடிப்படை நடவடிக்கையை கையில் எடுத்துக்கொண்டு இந்த தேசிய ஐக்கிய அரசாங்கத்தை உருவாக்க நாங்கள் ஒன்றுபடுகிறோம்.

இதன்படி, ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்வதற்கு நாம் ஏற்கனவே சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி சில உடன்பாடுகளை எட்டியுள்ளோம். சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனங்களுடன் பேசி அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கும் திட்டத்தையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

இதன் மூலம் எமது மக்களுக்கு உணவு, மருந்து, கைத்தொழில் போன்றவற்றுக்கு அத்தியாவசியமான மூலப்பொருட்களை வழங்கவும், இந்த நாட்டை வீழ்ச்சியடையாமல் கைப்பற்றவும், எஞ்சியுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து முன்னோக்கிச் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் முடியும்.

அதன்படி, நல்ல தன்னம்பிக்கையோடும், நல்ல தயாரிப்போடும் இந்தப் பணியை மேற்கொள்கிறோம். இந்த நெருக்கடியை நாம் எதிர்கொண்டு ஒரு நாடாக மீண்டு வர முடியும்” என கூறியுள்ளார்.

https://tamilwin.com/article/economic-crisis-in-sri-lanka-1651954752

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உத்தேச கடன் 50 லிருந்து 60 பில்லியன் என்கிறார்கள் இவர் 5 பில்லியனுடன் இலங்கை கடன் பிரச்னையை முடிக்கலாம் என்கிறார்கள் இதெல்லாம் நேற்று பதவி பிரமாணம் எடுத்தவர்கள் இன்று ராஜினமா கடிதம் கொடுக்கும் கதை போல் .

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

உத்தேச கடன் 50 லிருந்து 60 பில்லியன் என்கிறார்கள் இவர் 5 பில்லியனுடன் இலங்கை கடன் பிரச்னையை முடிக்கலாம் என்கிறார்கள் இதெல்லாம் நேற்று பதவி பிரமாணம் எடுத்தவர்கள் இன்று ராஜினமா கடிதம் கொடுக்கும் கதை போல் .

சும்மா அள்ளி விடுறார், பல் டாக்குத்தர்....

இவர் வழக்கமா அள்ளி விடுவதில் பெயர் போனவர்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா ?

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பெருமாள் said:

உத்தேச கடன் 50 லிருந்து 60 பில்லியன் என்கிறார்கள் இவர் 5 பில்லியனுடன் இலங்கை கடன் பிரச்னையை முடிக்கலாம் என்கிறார்கள் இதெல்லாம் நேற்று பதவி பிரமாணம் எடுத்தவர்கள் இன்று ராஜினமா கடிதம் கொடுக்கும் கதை போல் .

வெளி வந்த தகவல்களின் படி….  தற்போதைய கடன் 51 பில்லியன் டொலர்.
அதற்கு வருகின்ற ஜூன் மாதத்துக்கு இடையில் கட்ட வேண்டிய வட்டி 7 பில்லியன் டொலர்.
அந்த வட்டியை கட்டும் நிலையில் ஶ்ரீலங்கா இல்லை என்பதால்…
அதனை முதலுடன் சேர்க்கச் சொல்லி விட்டதால்,
மொத்தம் 58 பில்லியன் டொலர் கடன் உள்ளது.

30 minutes ago, Nathamuni said:

சும்மா அள்ளி விடுறார், பல் டாக்குத்தர்....

இவர் வழக்கமா அள்ளி விடுவதில் பெயர் போனவர்.  

அட… கெகலிய ரம்புக்வெல மாதிரியான ஆள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, பெருமாள் said:

அப்படியா ?

கோத்தா  நபர் ஒருவரை கடத்தி முதலைக்கு இரையாக்கினார் என்று அள்ளிவிட்டு மாடுபட்டவர் கண்டியளோ!

  • கருத்துக்கள உறவுகள்

சஜித்தின் அம்மா நடேசன்வீட்டில் யாரையோ சந்திச்சவ என்று...நம்ம ஜெல் தலையன் பார்லிமென்டில் கூறியதாகக் கேள்வி....இதிலை கைமாறிய காசுதான் இந்த 5 பில்லியனோ? இப்பதைக்கு வைச்சுச் சமாளியுங்கோ தேர்தல்வர திருப்பி நாங்கள்  வருவம் என்று சொல்லிக்கொடுத்திருப்பினம்....அவை ஒண்டுக்குள்ளை ஒண்டுதானே.... பார்ப்பம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஐந்து பில்லியனும் எங்கிருந்து வந்ததென்று விசாரணையை ஆரம்பிச்சா? விடை தானாக கிடைச்சுடும். யார் பூனைக்கு மணி கட்டுவது? சுண்டெலிகளா கொஞ்சம் யோசியுங்கோ!                               

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் உள்ள அரச காணிகளை புலம் பெயர்ந்தவர்களுக்கு குறைச்சு விற்றால் நாட்டுக்கு நல்லாவே டொலர் வரும். செய்வார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகிடி said:

புலம் பெயர்ந்தவர்களுக்கு குறைச்சு விற்றால் நாட்டுக்கு நல்லாவே டொலர் வரும். செய்வார்களா? 

யாரை சுட்டுகிறீர்கள்? புலம்பெயர்ந்த இலங்கையரையா? தமிழரையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலோனிலை உண்மையாய் என்ன நடக்குது எண்டு  சொல்லுறவைக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்.😎 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

சிலோனிலை உண்மையாய் என்ன நடக்குது எண்டு  சொல்லுறவைக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்.😎 

 

தெரிஞ்சவை எல்லோரும் ஓடி ஒழிந்து கன நாளாச்சு 

முதலிலேயே தெரிந்திருக்குமோ சிறிலங்கா  பற்றி கதைக்க இங்கு  எழுத முடியாத நிலை  வரப்போகுது  என்று???

  • கருத்துக்கள உறவுகள்

சஜித்தும் தாக்கப்பட்டுள்ளாராமே உண்மையா? ஐயோ பாவமே! இனி எல்லோரையும் தூக்கி உள்ளுக்கை  போட்டிட்டு இராணுவ ஆட்சியோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 9/5/2022 at 11:06, விசுகு said:

 

தெரிஞ்சவை எல்லோரும் ஓடி ஒழிந்து கன நாளாச்சு 

முதலிலேயே தெரிந்திருக்குமோ சிறிலங்கா  பற்றி கதைக்க இங்கு  எழுத முடியாத நிலை  வரப்போகுது  என்று???

 எம்மவர்கள் மௌனித்த பின் மாற்று கருத்தாளர்களுக்கு மூலமே வற்றிப்போய்விட்டது.
2009 க்கு பின் தங்கள் கொள்கையில் ஏதாவது முன்னேற்றம் கண்டார்களா என்றால் அதுவுமில்லை.... கேட்டால் புலிகள் எல்லாவற்றையும் பாழடித்து விட்டார்கள் என்கிறார்கள்.
எதை பாழடித்து விட்டார்கள் என்று கேட்டால் அதற்கும் பதிலில்லை.

ஆக.....


ஆடத்தெரியாதவன் மேடை கோணல் என்றானாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.