Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

``தமிழ் அலுவல் மொழி; கச்சத்தீவு மீட்பு; திராவிட மாடல்..!" - ஸ்டாலின்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

கச்சத்தீவை ஏன் இந்தியாவுக்கு கொடுக்க வேண்டும் ? பதில் தாருங்கள் (அரசியல் ரீதியான  காரணங்கள் அல்ல)

தானமாக கொடுத்ததின் விளைவு தன்னையே குத்துமென்றல், திரும்ப எடுத்துக்கொள்வதில் என்ன தவறு?

 

4 hours ago, Sasi_varnam said:

...
பேசாம சீனாவுக்கு ஒரு விலையை பேசி வித்துரலாம். நடக்கிற சண்டையை வேடிக்கை பார்க்கலாம். 😉

சிரித்துக்கொள்வதை தவிர வேறொன்றும் எழுத தோன்றவில்லை ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

தானமாக கொடுத்ததின் விளைவு தன்னையே குத்துமென்றல், திரும்ப எடுத்துக்கொள்வதில் என்ன தவறு?

கொடுக்கக்கூடாது என்று நான் கூறுவதற்குக் காரணம் ;

இந்திய மீனவர்கள் ஏற்கனவே தங்கள் கடலை பாலைவனமாக்கிவிட்டு, 30 வருடங்களாக கொடிய போரில் சிக்கி சின்னாபின்னமாகிய இனத்தின் கடல் வளத்தை சட்டத்திற்குப் புறம்பாக உள் நுழைந்து, தடை செய்யப்பட்ட மீன்பிடி குறைகளைப் பாவித்து  சூறையாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் தொழில் உபகரணங்களை நாசமாக்குகின்றனர். படகுகளால் மோதி மீனவர்களைக் கொல்கின்றனர்.

இந்த நிலையில் கச்சத்தீவையும் அவர்களிடம் கையளித்தால், இலங்கையின் வடபகுதி மீனவர்களின் நிலை என்னாகும்? இலங்கையின் வடபகுதி கடல்வளத்தின் நிலை என்னாகும் ? 

ஆதனால்தான்  கூறுகிறேன, இந்திய மீனவர்களை இலங்கை கடல் எல்லைக்குள் நுழையவிடக் கூடாது. கச்சதீவை இந்தியாவுக்கு கொடுக்கக் கூடாது. 

🙏🏼

 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, Sasi_varnam said:

பறக்காத கிளிக்கு எதுக்கு பட்டு குஞ்சம்..
பல்லில்லாதவனுக்கு எதுக்கு பக்கோடா ..
இருக்கிற பெரும் தீவையே கட்டி காக்க தெரியேல்ல .. அதுக்குள்ளே இத வச்சு என்ன செய்ய.
பேசாம சீனாவுக்கு ஒரு விலையை பேசி வித்துரலாம். நடக்கிற சண்டையை வேடிக்கை பார்க்கலாம். 😉

சண்டை என வந்தால் மனித பேரழிவுகள் வருமல்லவா? நகரங்கள் அழியுமல்லவா? பொருளாதாரம் பாதிக்கப்படும் அல்லவா? மக்கள் இருப்பிடம் இல்லாமல் அலைவார்கள் அல்லவா?

நாம் போரால் பாதிக்கப்படவர்கள். இலங்கையை மீண்டும் போர்க்கள பூமி ஆக்குவதை நான் ஏற்க மாட்டேன்.

 

11 hours ago, கிருபன் said:

கச்சபதீவு எவருடைய ஆள்கைக்குள் இருக்கவேண்டும் என்பதில் இனியும் சந்தேகம் ஏன்? ஸ்டாலின் கேட்பதன்படி நடந்தால்தான் சரியானவரின் ஆட்சிக்குள் எதிர்காலத்தில் இருக்கும். ஆனால் ஆமை எல்லாம் இல்லாமல் போய்விடும்😂🤣

ஆமைகளின் நீரோட்ட பாதையை வைத்தே பழம்பெரும் தமிழன் வணிக ரீதியாக கப்பலோட்டினான் என்பது வரலாறு.

கப்பலோட்டிய தமிழன் உலக சரித்திரம். :cool:

 

9 hours ago, ராசவன்னியன் said:

 

நானொரு தமிழன். எனக்கு புரியாத புதிராக இருப்பது என்னவெனில்?
திராவிடம் அல்லது திராவிட மாடல் என்றால் என்ன?
நான் யாராக யாருக்காக இருக்க வேண்டும்?
திராவிடத்தின் மொழி என்ன?
திராவிடத்தில் சாதிகள் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

நாம் போரால் பாதிக்கப்படவர்கள். இலங்கையை மீண்டும் போர்க்கள பூமி ஆக்குவதை நான் ஏற்க மாட்டேன்.

கு.சா. ஐயா .. உங்களுக்கு தெரியாதா ஒரு நிலத்தை வித்து விட்டால் அதுக்கு நாம் சொந்தக்காரர்கள் இல்லையென்று!! அதுக்குள்ள போர் வந்தால், சண்டை வந்தால் நிச்சயம் நீங்கள் கலங்க மாட்டீர்கள். 😜

  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவு விவகாரம் – தமிழரசுக் கட்சியும் அதீத கவனம் செலுத்துவதாக மாவை தெரிவிப்பு!

கடற்தொழிலாளர்களின் கருத்துக்களை அறிந்துகொண்ட பின்னரே கச்சதீவு விடயம் பற்றி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் எனக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
mavai-000-300x162.jpg
தமிழகத்துக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கச்சதீவை மீட்பதற்குரிய பொருத்தமான நேரம் இதுவெனக் கோரிக்கை விடுத்திருந்தார். எனவே, இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு என்ன என ஊடகங்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இது இரண்டு நாடுகளின் உடன்படிக்கை. இந்தநிலையில், கச்சதீவு எங்களுடைய கடற்தொழிலாளர்களின் நலன்களுக்குச் சாதகமாக இருக்குமானால் எங்களுடைய கடற்தொழிலாளர்களின் நலன்களுக்காக இந்திய அரசுடன் பேச வேண்டும்.
அதற்கு முன்னதாக கச்சதீவை இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என்ற தமிழக முதலமைச்சரின் கருத்து தொடர்பில் முதலில் எமது கடற்தொழிலாளர்களின் கருத்துக்களை அறியவேண்டும்.
அவர்களின் கருத்துக்களை வைத்தே எங்கள் முடிவுகள் அமையும். அதற்கு முன்னதாக எழுந்தமானமாகக் கருத்துக்களைக் கூறமுடியாது.
அத்தோடு இலங்கை – இந்திய கடற்தொழிலாளர்களின் இழுவைப் படகு பிரச்சினை தீர்க்கப்படாதுள்ளது.
எனவே, அது தொடர்பில் இந்திய அரசுடன் பேசும்போது கச்சதீவு விடயம் பற்றியும் பேசவேண்டும். இதுவொரு இராஜதந்திர ரீதியான நடவடிக்கை” – என்றார்.

 

https://thinakkural.lk/article/179915

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.