Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’உணவு பஞ்சம் ஏற்படாது’ - அமைச்சர் மஹிந்த அமரவீர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

’உணவு பஞ்சம் ஏற்படாது’

பா.நிரோஸ்

அதிகளவான ஹெக்டேயர்களில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படாது என தெரிவிக்கும் அமைச்சர் மஹிந்த அமரவீர, உணவுப்பஞ்சம் தொடர்பில் மக்கள் அச்சம்  கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபையில் நேற்று(16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபை வசமுள்ள நெல்லை விரைவாக அரிசியாக மாற்றி விநியோகிக்க வேண்டுமென ஆலோசனை  வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

வழமையாக மாதமொன்றுக்கு 500 தொடக்கம் 1000 மெட்ரிக் தொன் அரிசியே விநியோகிக்கப்படும். எனினும், அதனை 10 ஆயிரம் மெட்ரிக் தொன்னாக  அதிகரிக்க நாம் ஆலோசனை வழங்கி உள்ளோம். எனவே தேவைக்கு ஏற்ப அரசியை சதோச, சுப்பர் மார்க்கெட்டுக்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

அரிசி மாபியாவை இல்லாதொழிக்க நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபை நேரடியாக தலையீடுகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார். தேவையைவிட பத்து மடங்காக அரிசியை சந்தைகளுக்கு விநியோகிக்கும் போது அரிசிக்கான தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியும் எனவும் கூறினார்.

நான் அமைச்சுப் பதவியை ஏற்பதற்கு முன்பு 248,000 ஹெக்டேயர் நிலப்பரப்பே விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டது. தற்போது 470,000 ஹெக்டேயராக அதிகரித்துள்ளது. எனவே நாட்டின் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது. ஆகவே மக்களுக்கு  முன்பிருந்த அச்சம் இப்போது தேவையில்லை எனவும் அமைச்சர்  தெரிவித்தார்.

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/உணவு-பஞ்சம்-ஏற்படாது/175-298665

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் பஞ்சம் ஏற்படாது – அச்சப்பட வேண்டாம்: அரசாங்கம்!

நாட்டில்... பஞ்சம் ஏற்படாது – அச்சப்பட வேண்டாம்: அரசாங்கம்!

நாட்டில் தற்போது பரந்தளவிலான விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் பஞ்சம் ஏற்படாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒருமாதத்திற்கு 500 தொடக்கம் 1000 மெட்ரிக் தொன் அரிசியே விநியோகிக்கப் படுவதாகவும் அதனை 10 ஆயிரம் மெட்ரிக் தொன்னாக அதிகரிக்க ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தேவைக்கு ஏற்ப சதோச மற்றும் ஏனைய பல்பொருள் அங்காடிகளில் அரிசியை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

தான் அமைச்சுப் பதவியை ஏற்பதற்கு முன்னர், 248,000 ஹெக்டேயர் நிலப்பரப்பே விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது 470,000 ஹெக்டேயர் நிலப்பரப்பு விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் மக்கள் வீணாக அச்சப்படத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1287381

  • கருத்துக்கள உறவுகள்

25 கிலோ அரிசி மூடை 6000 ரூபா எங்க போய் சொல்ல

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உணவுப் பஞ்சம் ஏற்படாது என தெரிவிக்கும் அமைச்சர் மஹிந்த அமரவீர.......

  • கருத்துக்கள உறவுகள்

உரத்தட்டுப்பாடு பாரிய பிரச்சனை. எப்படி பயிர் செய்ய போகிறார்  மகிந்த அமரவீர?

  • கருத்துக்கள உறவுகள்

வயலை உழுவதற்கு எரிபொருள் இல்லை. அப்படி உழுது விதைத்தாலும் பயிருக்குப் விசிறுவதற்கு உரம் இல்லை. நிலைமை இப்படி இருக்கையில் எப்படி பஞ்சம் ஏற்படாமல் போகும் 🧐

ஒருவேளை அமைச்சர் அரிசியை இறக்குமதி செய்யலாம் என்கிறாரோ....ம்ம்ம்ம்ம்ம்

அதற்கும் டொலர் வேண்டுமே...😏

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கூடப் படித்திருப்பார் போல.....🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 17/6/2022 at 15:24, கிருபன் said:

நான் அமைச்சுப் பதவியை ஏற்பதற்கு முன்பு 248,000 ஹெக்டேயர் நிலப்பரப்பே விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டது. தற்போது 470,000 ஹெக்டேயராக அதிகரித்துள்ளது. எனவே நாட்டின் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது.

இவ்வளவுதான் இவரது அறிவு. வெறும் நிலப்பரப்பு அரிசி போடுமா? இருக்கிற நிலத்தில் பயிர் செய்ய தேவையான மூலப்பொருட்கள் இல்லாமல் விவசாயிகள் தவிக்கிறார்கள். இதில நிலப்பரப்பு கூடி அரிசி விளையுமாம். எல்லாம் மாதனமுத்தா கதைதான். இல்லாத நிதியை வழங்கச் சொல்லி ஜனாதிபதி அறிவுறுத்தல், இவர் அடுத்த ஜோசியம் சொல்லுறார். மக்களை முட்டாள்கள் என்று நினைத்து முட்டாள்தனமாய் கதைப்பதும், அறிக்கை விடுவதும் வழக்கமாய் போய்விட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.