Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உக்ரைனுக்கு... கூடுதலாக "ஒரு பில்லியன்" பவுண்டுகள்... இராணுவ உதவி: பிரித்தானியா அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனுக்கு கூடுதலாக ஒரு பில்லியன் பவுண்டுகள் இராணுவ உதவி: பிரித்தானியா அறிவிப்பு!

உக்ரைனுக்கு... கூடுதலாக "ஒரு பில்லியன்" பவுண்டுகள்... இராணுவ உதவி: பிரித்தானியா அறிவிப்பு!

உக்ரைனுக்கு கூடுதலாக ஒரு பில்லியன் பவுண்டுகள் இராணுவ உதவியை வழங்குவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

இது ரஷ்ய படையெடுப்பிற்கு எதிரான போராட்டத்திற்கான அதன் ஆதரவை இரட்டிப்பாக்குகிறது. அத்துடன் புதிய புதிய நிதியுதவி உக்ரைனுக்கு வழங்கப்பட்ட இராணுவ உதவியை 2.3 பில்லியன் பவுண்டுகளாக உயர்த்துகின்றது.

மேலும், பிரித்தானியா மனிதாபிமான மற்றும் பொருளாதார ஆதரவிற்காக 1.5 பில்லியன் பவுண்டுகளை உக்ரைனுக்கு செலவிட்டுள்ளது.

புதிய பிரித்தானிய உதவியானது, அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள், ஆளில்லா விமானங்கள், எலக்ட்ரானிக் போர் உபகரணங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான முக்கிய கிட்களுக்கு பணம் செலுத்துவதை நோக்கி செல்லும் என்று பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் போர் முயற்சிகளுக்கு மேலும் உதவுமாறு நேட்டோ தலைவர்களை ஜனாதிபதி வோலோடிமர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியதை அடுத்து இந்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.

உக்ரைனுக்கான மாதாந்திர பாதுகாப்புச் செலவு சுமார் 5 பில்லியன் டொலர்கள் (4.12 பில்லியன் பவுண்டுகள்) என ஸெலென்ஸ்கி நேட்டோ தலைவர்களிடம் கூறினார்.

உக்ரைனுக்கான இராணுவ உதவியின் அடிப்படையில் பிரித்தானியா, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா சமீபத்தில் 40 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆதரவுப் பொதிக்கு ஒப்புதல் அளித்தது.

https://athavannews.com/2022/1289035

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

உக்ரைனுக்கு... கூடுதலாக "ஒரு பில்லியன்" பவுண்டுகள்... இராணுவ உதவி: பிரித்தானியா அறிவிப்பு!

உங்களுக்கென்ன 100,200 வருசமாய் ஆசியா ஆபிரிக்கா நாடுகளிலை களவெடுத்து வைச்சிருக்கிறியள்.சந்தோசமாய் குடுக்கிறியள். நாமள் அப்பிடியா? 😂

  • கருத்துக்கள உறவுகள்

போருக்கு ஒரு பில்லியன் பவுண். 

ஆனால் கொமண் வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் இருக்கும் இலங்கையின் நெருக்கடிக்கு ? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்

 

220427_FINAL_ukaine_aid_gfx.png

இவ்வளவையும் புலிகளிடம் கொடுத்து இருந்தால் சிறிலங்கா இராணுவத்தை கொழும்பில் கொண்டுவந்து விட்டிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nunavilan said:

 

220427_FINAL_ukaine_aid_gfx.png

இவ்வளவையும் புலிகளிடம் கொடுத்து இருந்தால் சிறிலங்கா இராணுவத்தை கொழும்பில் கொண்டுவந்து விட்டிருப்பார்கள்.

 

இதில் எதுக்கு கஞ்சத்தனம்??🤣

கடலால  இறக்கி

விஐயன் இருந்து வந்த  இடத்துக்கு  கொண்டு போய்  விட்டிருப்பார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, விசுகு said:

 

இதில் எதுக்கு கஞ்சத்தனம்??🤣

கடலால  இறக்கி

விஐயன் இருந்து வந்த  இடத்துக்கு  கொண்டு போய்  விட்டிருப்பார்கள்

அவர்கள் அந்தளவிற்கு ஈவு இரக்கம் இல்லாதவர்கள் இல்லை. ஆனால் சிங்களவனுக்கு அந்தப்பயம் இன்றும் உள்ளது.😂

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

 

இதில் எதுக்கு கஞ்சத்தனம்??🤣

கடலால  இறக்கி

விஐயன் இருந்து வந்த  இடத்துக்கு  கொண்டு போய்  விட்டிருப்பார்கள்

செய்வது அவர்களுக்கு பெரிய விடயம் அல்ல அண்ணா. அவர்களும் வாழ்ந்து விட்டு போகட்டுமே என்ற கருணையும் அவர்களிடம் உள்ளதே.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

அவர்கள் அந்தளவிற்கு ஈவு இரக்கம் இல்லாதவர்கள் இல்லை. ஆனால் சிங்களவனுக்கு அந்தப்பயம் இன்றும் உள்ளது.😂

 

வாழு  வாழவிடு என்பது  மட்டுமே  இலட்சியம்  அண்ணா

 

9 minutes ago, nunavilan said:

செய்வது அவர்களுக்கு பெரிய விடயம் அல்ல அண்ணா. அவர்களும் வாழ்ந்து விட்டு போகட்டுமே என்ற கருணையும் அவர்களிடம் உள்ளதே.

சிங்களவரின்  ஒரு அடி  நிலத்தைக்கூட அவர்கள்  கைப்பற்ற நினைத்ததில்லை 

நான் சும்மா  தமாசுக்கு  எழுதினேன்  தம்பி

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கென்ன 100,200 வருசமாய் ஆசியா ஆபிரிக்கா நாடுகளிலை களவெடுத்து வைச்சிருக்கிறியள்.சந்தோசமாய் குடுக்கிறியள். நாமள் அப்பிடியா? 😂

இரெண்டு உலக போரில் களவெடுத்து கொழுத்த ஜேர்மன் கம்பெனிலள்தானே வோல்க்ஸ்வேகனும், போர்சேயும் இன்னும் பலதும். 

கொடுக்கலாம்🤣

2 hours ago, nunavilan said:

 

220427_FINAL_ukaine_aid_gfx.png

இவ்வளவையும் புலிகளிடம் கொடுத்து இருந்தால் சிறிலங்கா இராணுவத்தை கொழும்பில் கொண்டுவந்து விட்டிருப்பார்கள்.

தாறமாரி நாங்களும் நடக்கேல்ல,

வாங்கிறமாரி அவங்களும் நடக்கேல்ல.

2 hours ago, விசுகு said:

 

இதில் எதுக்கு கஞ்சத்தனம்??🤣

கடலால  இறக்கி

விஐயன் இருந்து வந்த  இடத்துக்கு  கொண்டு போய்  விட்டிருப்பார்கள்

பகிடியாகவே என்றாலும் இந்த பயம் நியாயமற்றது. தம் நிலத்தை தவிர அவர்கள் மேலே எதையும் கோரவுமில்லை எடுக்கவும் இல்லை. ஆனால் இலங்கையை விட, எங்கே தம்மை விந்திய மலைக்கு மேலே அனுப்பி விடுவார்கள் என்ற பயம் இந்தியாவின் 3% க்கு இன்னும் இருக்கிறது🤣.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

இரெண்டு உலக போரில் களவெடுத்து கொழுத்த ஜேர்மன் கம்பெனிலள்தானே வோல்க்ஸ்வேகனும், போர்சேயும் இன்னும் பலதும். 

கொடுக்கலாம்🤣

தாறமாரி நாங்களும் நடக்கேல்ல,

வாங்கிறமாரி அவங்களும் நடக்கேல்ல.

பகிடியாகவே என்றாலும் இந்த பயம் நியாயமற்றது. தம் நிலத்தை தவிர அவர்கள் மேலே எதையும் கோரவுமில்லை எடுக்கவும் இல்லை. ஆனால் இலங்கையை விட, எங்கே தம்மை விந்திய மலைக்கு மேலே அனுப்பி விடுவார்கள் என்ற பயம் இந்தியாவின் 3% க்கு இன்னும் இருக்கிறது🤣.

இந்தப்பயங்கள்  தான்  எம்மை  அழிக்க தூண்டியவை

ஆனால் பயம்  மட்டுமே

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

தாறமாரி நாங்களும் நடக்கேல்ல,

வாங்கிறமாரி அவங்களும் நடக்கேல்ல.

 

நாங்கள் எந்த ஒரு வெளிநாட்டவரையும் கொல்லவில்லை. யூக்ரேன் மாதிரி எங்களையும் நடத்த  அவர்களுக்கு எங்களின் நிறம் தடையாக இருந்திருக்குமோ?? அல்லது எங்களுக்கு உதவி  இந்தியாவின் பகையை ஏன் வாங்க வேண்டாம் என யோசித்தார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இரெண்டு உலக போரில் களவெடுத்து கொழுத்த ஜேர்மன் கம்பெனிலள்தானே வோல்க்ஸ்வேகனும், போர்சேயும் இன்னும் பலதும். 

கொடுக்கலாம்🤣

தாறமாரி நாங்களும் நடக்கேல்ல,

வாங்கிறமாரி அவங்களும் நடக்கேல்ல.

பகிடியாகவே என்றாலும் இந்த பயம் நியாயமற்றது. தம் நிலத்தை தவிர அவர்கள் மேலே எதையும் கோரவுமில்லை எடுக்கவும் இல்லை. ஆனால் இலங்கையை விட, எங்கே தம்மை விந்திய மலைக்கு மேலே அனுப்பி விடுவார்கள் என்ற பயம் இந்தியாவின் 3% க்கு இன்னும் இருக்கிறது🤣.

பிரிட்டன் இந்தியாவிடம் களவெடுத்ததே ரிலியனில் வருமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

நாங்கள் எந்த ஒரு வெளிநாட்டவரையும் கொல்லவில்லை. யூக்ரேன் மாதிரி எங்களையும் நடத்த  அவர்களுக்கு எங்களின் நிறம் தடையாக இருந்திருக்குமோ?? அல்லது எங்களுக்கு உதவி  இந்தியாவின் பகையை ஏன் வாங்க வேண்டாம் என யோசித்தார்களா? 

ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் என நினைக்கிறேன்.

1. நிறம்

2. இந்தியா

3. தேவையின்மை

4. நாங்கள் சொல் படி நடக்க மாட்டோம் என்ற கணிப்பு

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, nunavilan said:

நாங்கள் எந்த ஒரு வெளிநாட்டவரையும் கொல்லவில்லை. யூக்ரேன் மாதிரி எங்களையும் நடத்த  அவர்களுக்கு எங்களின் நிறம் தடையாக இருந்திருக்குமோ?? அல்லது எங்களுக்கு உதவி  இந்தியாவின் பகையை ஏன் வாங்க வேண்டாம் என யோசித்தார்களா? 

தனிய பிராந்திய அரசியல் மட்டுமே தவிர வேறேதுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, kalyani said:

பிரிட்டன் இந்தியாவிடம் களவெடுத்ததே ரிலியனில் வருமாம்.

நிச்சயமாக.

இவர்களோடு சண்டையிடும் போது திப்பு சுல்தானின் நாடுதான் உலகின் செல்வ வளம் மிக்க நாடாக இருந்தது.

ஆனால் என்ன கல்வி, ரயில்வே, ஜனநாயகம், உடன்கட்டை போன்ற மூட பழக்க வழக்க ஒழிப்பு என 80 வீதம் கொள்ளை அடித்தாலும் 20 வீதம் நல்லதையும் செய்து சென்றது பிரிடிஸ் சாம்ராஜ்யம். இதை தமது நன்மைக்கே செய்தாலும், கல்வி மூலம் காந்தி, மண்டேலாக்களை உருவாக்கி - தந்ததும் இதுவே.

அதே போல் யாழ்பாணத்தில் தாழ்தப்பட்ட மக்களுக்கு அடிமை வாழ்வை, ஏலவே இருந்த தாழ்தபட்ட நிலையை போத்துகீச, டச்சு சட்டங்கள் அப்படியே பேண, ஆங்கில சட்டமே அதை உடைத்தது.

இப்போ மலைப்பாக இருக்கும். ஆனால் யாழ்பாணத்தில் ஆதிக்க சாதி, குடிமை சாதி, அடிமை சாதி என 3 பெரும் பிரிப்புகள் இருந்தன.

இதில் குறித்த ஓர் சாதியினர் அடிமைகளாகவே இருந்தனர். வெள்ளைகாரர் தாம் அடிமை முறையை ஒழித்த போது இதையும் ஒழித்தனர்.

முடி திருத்துபவர் எனக்கு வீட்டில் வந்து சவரம் செய்தே ஆக வேண்டும் - அப்படி அவர் செய்வது சட்டம். என வழகெல்லாம் போட்டுள்ளனர் உயர் குல திலகங்கள்🤣.

அப்படி ஒரு சாதி அடிப்படையிலான கடமையும் இல்லை - இது வெறும் contract மட்டுமே என சாதியத்துக்கு குட்டு வைத்தது வெள்ளைகாரனின் சட்டமே.

இவ்வளவு ஏன் பிரிடிஸ்காரர் வந்திராவிட்டால் தலித் அம்பேத்கர் பரிஸ்டர் ஆகி இருக்க முடியுமா?

அருகில் இருக்கவே, தெருவில் நடக்கவே அனுமதியாதவர்ஜள் அவரை நாட்டின் அரசியல் அமைப்பை வரைய அனுமதித்திருப்பாத்களா?

ஆகவே எதையும் குறுகிய ஒற்றை பார்வையில் பார்த்தல் ஆகாது.

ஆனால் ஜேர்மன் நாடு/இனம்  இதுவரை தம் ஆளுகைக்குள் கொண்டு வந்த எந்தவொருநாட்டையும் சுரண்டி நாசம் செய்ததை தவிர வேறு ஏதும் செய்யவில்லை.

சாம்ராஜ்யம்களின் அடிப்படையே சுரண்டல்தான்.

ஆனால் இதை சுட்டி காட்டும் அருகதை  மொங்கோலிய, கிரேக்க, ரோம,  சீன, ஜப்பான், ரஸ்ய, சோசியத், ஜேர்மனிய நாடுகளுக்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேன் ஒரு நாடு ரஷ்யா ஒரு நாடு   இலங்கை ஒரு நாடு இவை மூன்றும் இறைமையுள்ள நாடுகள் என்று சர்வதேசத்தால் எற்றுக்கொள்ளப்பட்டுள்ளது  நாங்கள் இலங்கை உள்ளே தான் இருக்கிறோம்   எங்களுக்கு ஒரு நாடு இன்னும் இந்த உலகில்…………… கிடைக்கவில்லை நிலைமை அப்படி இருக்கையில் எப்படி எங்களை உக்ரேன் உடன் ஓப்பிடுகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kandiah57 said:

உக்ரேன் ஒரு நாடு ரஷ்யா ஒரு நாடு   இலங்கை ஒரு நாடு இவை மூன்றும் இறைமையுள்ள நாடுகள் என்று சர்வதேசத்தால் எற்றுக்கொள்ளப்பட்டுள்ளது  நாங்கள் இலங்கை உள்ளே தான் இருக்கிறோம்   எங்களுக்கு ஒரு நாடு இன்னும் இந்த உலகில்…………… கிடைக்கவில்லை நிலைமை அப்படி இருக்கையில் எப்படி எங்களை உக்ரேன் உடன் ஓப்பிடுகிறீர்கள்?

இது அவர்கள் கொடுக்கும் தியரி விளக்கம்.

தமக்கு தேவை எண்டால் இறைமையாவது, எச் ராஜாவாவது என்பதே நடைமுறை🤣.

இலங்கையில் இறைமைகாக்கும் அமெரிக்கா சேர்பியாவை பிரித்தது.

சிரியாவில் இறைமை பேணிய எஅஸ்யா உக்ரேன், ஜோர்ஜியாவ்நி பிரித்தது.

இதில் ஒருவரும் ஒருவருக்கும் சளைத்தவர் அல்ல.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.