Jump to content

தமிழ் பைபிள்: காணாமல் போன 300 ஆண்டுகள் பழைய தமிழின் முதல் பைபிள்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பைபிள்: காணாமல் போன 300 ஆண்டுகள் பழைய தமிழின் முதல் பைபிள்.!

IMG-20220702-080812.jpg

சென்னை: 2005ல் காணாமல் போன 300 ஆண்டுகள் பழமையான தமிழின் முதல் பைபிளை தமிழ்நாடு சிபிசிஐடி பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது எங்கு கண்டுபிடிக்கப்பட்டது என்பதுதான் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவிற்கு கிறிஸ்துவம் வந்த 1700ம் ஆண்டுகளில் பைபிள் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தது. பைபிள் படிக்க வேண்டும் என்றால் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்ற நிலையும் இருந்தது.

இதனால் இந்தியாவில் கிறிஸ்துவத்தை பரப்பும் நோக்கத்தோடு வந்த கிறித்துவ துறவிகளுக்கு அது பெரிய சிக்கலான விஷயமாக மாறியது. அப்போதுதான் 1714ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி இந்தியாவில் முதல் பைபிள் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டது.

தமிழ் மொழி பெயர்ப்பு

tranquebar_3-1200x675.jpg

           தரங்கம்பாடி கோட்டை 

இந்தியாவில் வேறு எந்த மொழியிலும் மொழி பெயர்க்காமல் உலகின் பழமையான மொழியான தமிழில் அந்த பைபிள் மொழி பெயர்க்கப்பட்டது. அதன்பின்பே மற்ற மொழிகளுக்கு பைபிள் சென்றது. ஜெர்மனியில் இருந்து பார்தோலோமாஸ் செய்ங்கெங்பால்க்தான் இந்தியாவிற்கு கிறித்துவத்தை பரப்ப வந்த முதல் கிறிஸ்துவ துறவி ஆவார். 1706ம் ஆண்டு வாட்ச் இவர் தரங்கேபார் என்று தமிழ்நாட்டு பகுதிக்கு வந்தார். அதுதான் தமிழ்நாட்டின் தரங்கம்பாடி ஆகும். இங்கு வந்தவருக்கு பெரிதாக வரவேற்பு அளிக்கப்படவில்லை.

இந்துக்கள் அச்சம்

இந்துக்கள் இடையே இவரின் வருகை கடும் எதிர்ப்புகளை சந்தித்தது. அதுவும் இவரின் ஆங்கில மொழி, இவர் பைபிளை ஆங்கிலத்திலும், ஜெர்மனியிலும் படித்து பரப்ப நினைத்தது பெரும் விமர்சனங்களை சந்தித்து. இதன் காரணமாக உடனே இவர் தமிழ் படிக்கும் முடிவை எடுத்தார். சில ஆண்டுகள் தமிழ் படித்தவர், அதில் புலமையும் பெற்று, ஜான் எர்னஸ்ட் என்பவர் உதவியுடன் புதிய ஏற்பாடு பைபிளை அவர் மொழி பெயர்த்தார்.

எப்படி செய்தார்?

Palm-leaf_manuscript.jpg

பனை ஓலையில், ஆணிகள் மூலம் இந்த பைபிள் எழுதப்பட்டது. அதன்பின் பிரிண்ட் முறை மூலம் இது பிரிண்ட் புத்தமாக வெளியிடப்பட்டது. இதற்காக ஜெர்மனியில் இருந்து இவர் பிரிண்டர்களை தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்ததும் குறிப்பிடத்தக்கது. பல ஆண்டு போராட்டத்திற்கு பின் 1711ல் பைபிள் முழுமையாக தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. இதன் மூலம் இந்திய மொழியில் பெயர்க்கப்பட்ட முதல் பைபிளாக தமிழ் புதிய ஏற்பாடு பைபிள் மாறியது.

lithography-printing-press.jpg

எங்கு இருந்தது?

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பல ஆண்டுகளாக இந்த பைபிள் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் கடந்த 2005ம் ஆண்டு சரஸ்வதி நூலகத்தில் இருந்து பைபிள் காணாமல் போனது. அந்த பைபிள் எங்கே போனது என்ற கேள்வி மக்கள் இடையே எழுந்தது. போலீசாரும் இதை பற்றி விசாரித்து வந்தனர். ஆனால் எந்த க்ளுவும் கிடைக்கவில்லை. அதன்பின் அப்படியே இந்த பைபிள் குறித்த செய்தி எதுவும் கிடைக்காமல்.. தேடலும் நின்று போனது. இந்த நிலையில்தான் இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது இந்த பைபிள் புத்தகம் கிடைத்துள்ளது.

Thanjavur.png

லண்டன் போனது

தமிழ்நாடு சிஐடி போலீசின் சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு வந்த தகவலின் அடிப்படையில் இந்த பைபிள் லண்டனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. லண்டலில் இருக்கும் மன்னர் குடும்ப சொத்துக்களில் இந்த பைபிள் உள்ளது. இதை விரைவில் மீட்க சிஐடி பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆனால் இந்த பைபிள் லண்டன் சென்றது எப்படி? இதை திருடி சென்றது யார்? என்று சிஐடி பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

https://tamil.oneindia.com/news/chennai/how-did-300-years-old-tamil-first-bible-go-missing-how-did-cbcid-find-it-out-464580.html

டிஸ்கி

தமிழ்நாட்டில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு போகாமல் இருந்தால்தான் அதிசயம்..😢

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

லண்டன் போனது

தமிழ்நாடு சிஐடி போலீசின் சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு வந்த தகவலின் அடிப்படையில் இந்த பைபிள் லண்டனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. லண்டலில் இருக்கும் மன்னர் குடும்ப சொத்துக்களில் இந்த பைபிள் உள்ளது. 

பெ.பி.க்கு.... காணுற எல்லாத்தையும், ஆட்டையை போட வேணும் என்று.. ஆசை. 😂
கோட்டு, சூட்டு...  போட்டாலும்,  களவெடுக்கிற குணம் மட்டும் போகவில்லை. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

பெ.பி.க்கு.... காணுற எல்லாத்தையும், ஆட்டையை போட வேணும் என்று.. ஆசை. 😂
கோட்டு, சூட்டு...  போட்டாலும்,  களவெடுக்கிற குணம் மட்டும் போகவில்லை. 🤣

DNA யில் உள்ளதை மாத்த ஏலுமே..😉

  • Like 1
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2022 at 05:50, தமிழ் சிறி said:

பெ.பி.க்கு.... காணுற எல்லாத்தையும், ஆட்டையை போட வேணும் என்று.. ஆசை. 😂
கோட்டு, சூட்டு...  போட்டாலும்,  களவெடுக்கிற குணம் மட்டும் போகவில்லை. 🤣

எதுக்கும் எப்படி இலண்டன் போனது எண்ட விசாரணை முடியும் வரைக்கும் பொறுப்பது நல்லம்.

தமிழ்நாட்டில் இருந்து களவு போனதில் நிச்சயம் தமிழரின் பங்கு இல்லாமல் இருக்க முடியாது.

பிறகு இப்ப எழுதியதை எடிட் பண்ணவும் முடியாது🤣.

On 2/7/2022 at 05:57, Kapithan said:

DNA யில் உள்ளதை மாத்த ஏலுமே..😉

 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

எதுக்கும் எப்படி இலண்டன் போனது எண்ட விசாரணை முடியும் வரைக்கும் பொறுப்பது நல்லம்.

தமிழ்நாட்டில் இருந்து களவு போனதில் நிச்சயம் தமிழரின் பங்கு இல்லாமல் இருக்க முடியாது.

பிறகு இப்ப எழுதியதை எடிட் பண்ணவும் முடியாது🤣.

 

ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, தென் கிழக்கு ஆசிய நாடுகளில்….
ஆட்டையை போட்டுக் கொண்டு போன பொருட்களுக்கும்
தமிழன் காரணம் என்று.. நீங்கள் சொல்லாத வரைக்கும் சந்தோசம். 😂

உங்களுக்கு… நிறைய வெள்ளை பெயின்ற் வாளி, தேவைப்படும் போல இருக்கே…. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசை காட்டினால், தோலிருக்க, சுளை புடுங்கிகள் இருக்கும் போது, சீனாக்காரன், கம்பந்தோட்டைக்கு வந்துட்டான் என்று இந்தியர்கள் அரற்றுவதில் என்ன பயன்? 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Nathamuni said:

காசை காட்டினால், தோலிருக்க, சுளை புடுங்கிகள் இருக்கும் போது, சீனாக்காரன், கம்பந்தோட்டைக்கு வந்துட்டான் என்று இந்தியர்கள் அரற்றுவதில் என்ன பயன்? 🤪

கிந்தியன் தன்ர வீரத்த யாழ்பாணத்தில தான் காட்டேலும்......ஏலுமெண்டால் காந்தி சிலைய ஹபறணவில வைக்கட்டும் பாப்பம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

கிந்தியன் தன்ர வீரத்த யாழ்பாணத்தில தான் காட்டேலும்......ஏலுமெண்டால் காந்தி சிலைய ஹபறணவில வைக்கட்டும் பாப்பம்?

காந்தி மைண்ட் வாய்ஸ்: சும்மா… சிவனே எண்டு இருக்கிற என்னை, ஏன்(டா) வம்பிலை மாட்டி விடுறீங்க. 😂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

காந்தி மைண்ட் வாய்ஸ்: சும்மா… சிவனே எண்டு இருக்கிற என்னை, ஏன்(டா) வம்பிலை மாட்டி விடுறீங்க. 😂

ஹிந்தியன்களுக்கு மண்டையிலை துவக்கு சோங்கால போட்டும் ரோஷம் வரேல்லை. காந்தி  சிலைக்கு ஏதாவது செய்தாலாவது ரோசம் மானம் வருதோ எண்டு பாக்கிறன் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

ஹிந்தியன்களுக்கு மண்டையிலை துவக்கு சோங்கால போட்டும் ரோஷம் வரேல்லை. காந்தி  சிலைக்கு ஏதாவது செய்தாலாவது ரோசம் மானம் வருதோ எண்டு பாக்கிறன் 😁

இவரும் காந்தி, அவரும் காந்தி…. 😁
அப்ப ஏன், இவருக்கு  துவக்காலை அடிக்கும் போது… ரோசம் வரவில்லை. 😂
சம் திங்… றோங். 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

இவரும் காந்தி, அவரும் காந்தி…. 😁
அப்ப ஏன், இவருக்கு  துவக்காலை அடிக்கும் போது… ரோசம் வரவில்லை. 😂
சம் திங்… றோங். 🤣

டூப்ளிக்கற் காந்திக்கு ரோஷ நரம்பை இறைவன் படைக்கவில்லை 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, தென் கிழக்கு ஆசிய நாடுகளில்….
ஆட்டையை போட்டுக் கொண்டு போன பொருட்களுக்கும்
தமிழன் காரணம் என்று.. நீங்கள் சொல்லாத வரைக்கும் சந்தோசம். 😂

உங்களுக்கு… நிறைய வெள்ளை பெயின்ற் வாளி, தேவைப்படும் போல இருக்கே…. 🤣

களவெண்டால் அதில் சம்பந்த பட்ட எல்லாரும் கள்ளர்தான்.

கடைசியில் பொருளை அடைபவன், களவெடுக்க சொன்னவன் கள்ளந்தான். ஆனால் அவன் மட்டும் அல்ல,  தனது நாட்டில் இருந்து பொருளை லவட்டுபவனும் கள்ளனே.

கோவிலில் வெள்ளைகாரன் கோட்டு சூட்டுடனா வந்து சிலை திருடுகிறான். இல்லை நாம் திருடி அவனுக்கு கொடுக்கிறோம்.

ஆகவே டி என் ஏ பழுது எம்மிடமும் உண்டு.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்தரப்பின் ஜனாதிபதி பொதுவேட்பாளர் இந்த கோரிக்கையுடன் களமிறங்கி வடக்கு கிழக்கின் பெரும்பான்மை வாக்காளர்களின் ஆதரவை பெறுவாராயின் அதுவே தமிழர் உலகுக்கு சொல்லும் மறைமுகமான செய்தி. இதைவிட  சமஸ்ட்டி தேவையா இல்லையா என்ற தனியான வாக்கெடுப்பு ஒன்றை, குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள அரசுகள் ஒருபோதும் நடத்த விடாது.  தமிழர் பிரதேசங்களில் பல சிங்கள மக்களின் வலிந்த  குடியேற்றமும் பேச்சுவார்த்தை என்று வரும்போது அதை குழப்பும் நோக்கத்துடன் முஸ்லிம் மக்களின் தலைமைகளை தமிழ் தரப்பிற்கு எதிராக திருப்பிவிடுவதும் இனவாத சிங்கள அரசுகள் தொடர்ந்து எமக்கு எதிராக செய்துவரும் சதி  நடவடிக்கைகள். இது தொடரும் பட்சத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் எமது முயற்சியில்  அனைத்து  ஜனநாயக பாதைகளும் என்றோ ஒரு நாள் நிரந்தரமாக மூடப்படுவது சாத்தியம்.
    • எங்கள் அன்புக்குரிய குழந்தைகளை இப்போர் சிதைத்துள்ளது கேள்விகள் ஏதுமின்றி பிசாசுகள் அப்பாவிக் குழந்தைகளை இப் போரில் சுட்டுக் கொன்றனர்   நேசிப்புக்குரிய குழந்தை தன் தாயின் கண்ணெதிரே புதைக்கப்பட்டது இதயங்கள் உடைந்து நொறுங்கி ஊமைக் காயங்கள் நிலைபெற்றன   மாணவர்கள் எங்கும் இல்லை பறவைகள் அற்ற வனாந்தரமாய் தாயில்லாப் பிள்ளைகள் போல் தனிமையில் கிடந்தன பாடசாலைகள்   காகிதப் பறவைகள் காற்றில் சிறகு விரித்துப் பறந்தன தூசி படிந்த பள்ளி மணி அடிப்பாரற்று அநாதையாயிருந்தது   பள்ளிகளைப் போர் சூழ்ந்த பின்னொரு நாளில் வகுப்பறை நாற்காலிகளை கண்ணீர் பூக்கள் நிறைத்தன கரும்பலகைகள் மழையில் நனைந்தன மற்றும் மணிகள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தன   தியா - காண்டீபன் #நீ_கொன்ற_எதிரி_நான்தான்_தோழா
    • சிங்க கொடி பிடித்த அரசியலை எப்படி அழைக்கலாம்? சம்பந்தர் இந்த சமிக்ஞை எதை நோக்கி காட்டினார் என மேற்படி கட்டுரையாளர் சொல்ல வேண்டும்.
    • வேலுப்பிள்ளைமார் ------------------------------- காலையிலேயே வந்து விடுங்கள் என்று அவன் சொல்லியிருந்தான். இரண்டு தடவைகள் தொலைபேசியில் கூப்பிட்டு ஞாபகப்படுத்தினான். காலை 10 மணிக்கு முன்னரே அங்கே நிற்க வேண்டும், அப்புறம் அங்கிருந்து திரும்பி வர பின்னேரம் ஆகி விடும், அன்றைய பொழுது முழுவதும் இப்படியே போய்விடப் போகின்றது என்று தெரிந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை இப்படியாகிப் போவதில் இஷ்டமில்லை தான், ஆனாலும் அவனை மறுக்க முடியவில்லை. நீங்கள் இருவரும் வந்து பாப்பாவை ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான்.   இவர்கள் நேர ஒழுங்கில் மிக மோசமானவர்கள். உலகில் இந்தளவிற்கு நேரத்தை துஷ்பிரயோகம் செய்யும் வேறு எவரையும் என் அனுபவத்தில் நான் கண்டதில்லை. இலங்கையர்களும் மோசம் தான், ஆனாலும் இந்தியர்கள் மிக மிக மோசம். நானும் மனைவியும் ஒன்பதரைக்கு அங்கே போய் விட்டோம். அவனின் சொந்தபந்தங்கள் பலர் சில நாட்கள் முன்னரேயே வேறு நாடுகள், வேறு ஊர்களிலிருந்து வந்து நிற்பதாகச் சொல்லியிருந்தான். எல்லோரும் வந்து போகக் கூடிய நல்ல ஒரு கோடைக்கால நாட்கள் இவை. அவர்களே வீட்டையும், வளவையும் நிறைத்துக் கொண்டிருந்தனர். இந்தியாவில் இருந்து வர வேண்டிய சிலருக்கு கடைசி நேரத்தில் விசா கிடைக்கவில்லை என்று சொன்னான்.   அவர்கள் எல்லோரும் ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். ஆனாலும் அவனும், அவனின் மனைவியும் எங்களிருவரையும் விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டனர். ' இல்லை........ வேண்டாம் அப்பா, நீ போய் ஆக வேண்டியதைப் பார்.........' என்று சொன்னாலும், அவன் கேட்பதாயில்லை. மஞ்சள் நீராட்டு விழா என்று தான் அவர்கள் சொன்னார்கள். இதையே நாங்கள் பூப்புனித நீராட்டு விழா என்றோ அல்லது சாமத்தியச் சடங்கு என்றோ சொல்லிக் கொள்வோம். இதற்கு பாக்கு நீரிணைக்கு இரண்டு பக்கங்களிலும் என்ன பெயர்கள் சொன்னாலும், இதற்கெல்லாமா நீங்கள் விழா எடுப்பீர்கள் என்று வேறு பல நாட்டு நண்பர்கள் சிரித்திருக்கின்றார்கள்.    விழாக்கள் என்பது ஒரு குடும்ப ஒன்றுகூடலிற்கான தருணம், ஒரு கட்டாயத்திலாவது பலரும் வந்து ஒன்றாகச் சேர்வார்கள் என்ற வகையில் கொண்டாடப்படலாம், முக்கியமாக குடும்பங்களே தனித்தனியாக உலகெங்கும் சிதறிக் கிடக்கும் இந்தக் காலத்தில். ஆனால், அதற்காக உலங்கு வானூர்தியில் இருந்து குதிப்பதோ அல்லது பல்லக்கில் ஏறுவதோ போன்ற சேட்டைகள் இந்த விழாக்களின் நோக்கத்தையே காலப் போக்கில் அழித்துவிடக்கூடும்.   அவனின் நண்பன் என்று ஒருவரைக் கூட்டி வந்து அறிமுகப்படுத்தினான். இருவரும் ஒன்றாக அங்கே ஒரே கல்லூரியில் படித்ததாகச் சொன்னான். சொல்லி விட்டு பெரிதாகச் சிரித்தான். அவனின் கல்லூரி பற்றியும், கல்லூரி நாட்கள் பற்றியும் பல கதைகளை முன்னர் சொல்லியிருக்கின்றான். எல்லாமே வேடிக்கையான கதைகள். அவன் பிளஸ் டூ சோதனையில் அவ்வளவு நல்ல புள்ளிகள் எடுக்காததால், இந்தக் கல்லூரியில் போய்ச் சேர வேண்டியதாகப் போய் விட்டது என்பான். நாங்கள் இருவரும் பதினொரு வருடங்கள் ஒன்றாக வேலை செய்திருக்கின்றோம். அவன் மிகவும் கெட்டிக்காரன். ஆனால் பிளஸ் டூ படிக்கும் காலத்தில், கவனம் முற்றாகச் சிதறும் அளவிற்கு, என்ன செய்து கொண்டிருந்தானோ தெரியவில்லை.   அவனின் நண்பன் என்னுடனேயே இருந்தார். எங்கே என் பிள்ளைகள் என்று கேட்டார் அவர். அவர்கள் வரவில்லை, இங்கு அவர்களின் வயதுகளில் எவரும் இல்லை, அதனால் வரவில்லை என்றேன். அப்படி விடக் கூடாது, இழுத்து கூட்டிக் கொண்டு வர வேண்டும் என்றார் அவர். எங்களின் கலாச்சாரமும், பண்பாடும் எங்களை விட்டுப் போகவே கூடாது என்றார். உங்களின் பிள்ளைகள்......... என்று நான் கேட்டேன். அங்கே ஓடித் திரிந்து கொண்டிருந்த இரு சிறுவர்களைக் காட்டினார். அவர்களின் வயது ஒன்பது, ஆறு என்றார். இன்னும் பதினெட்டு வருடங்களின் பின் நான் இவரைச் சந்திக்க வேண்டும், அப்ப நிலைமை என்னவென்று கேட்க வேண்டும்.   தமிழ்நாட்டில் அவருடைய மாவட்டத்தின் பெயர் சொல்லி, அந்த மாவட்டம் எனக்குத் தெரியுமா என்று கேட்டார். தெரியும் என்றேன். தன் ஊர் பெயரைச் சொல்லி, அந்த ஊரைத் தெரியுமா என்று கேட்டார். அவர் சொன்ன ஊரும் எனக்குத் தெரிந்திருந்தது. அங்கே பத்து குடும்பங்கள் இலங்கையிலிருந்து அகதிகளாக 90ம் ஆண்டுகளில் வந்து குடியேறி இருப்பதாகச் சொன்னார். தன்னுடைய குடும்பம் அவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்ததாகச் சொன்னார். இன்னமும் அவர்கள் அங்கேயே இருக்கின்றார்களாம்.   பின்னர், மிக அருகில் வந்து, காதருகே, 'நாங்களும் பிள்ளைமார்கள் தான்.......' என்றார். பிள்ளைமார்கள்...........?? நாங்கள் எப்போதிலிருந்து பிள்ளைமார்கள் ஆனோம் என்று யோசிக்க, வேலுப்பிள்ளை என்ற பெயர் எங்கிருந்தோ நினைவுக்கு வந்தது. பத்து குடும்பங்கள் நன்றாக இருக்கின்றார்கள் தானே என்று, அதனால் மேலும் பிள்ளைமார்கள் பற்றிக் கதைக்காமல், 'இந்தியன் - 2' பற்றி அவருடன் கதைக்க ஆரம்பித்தேன்.  
    • ஆம்  பிறந்த மண்ணில் இருந்து கலைக்கப்பட்டாச்சு இருக்கும் இடத்தையாவது பகைவர்களிடமிருந்து காக்கணும். இது சுயநலம் என்றால் அதில் பொதுநலனும் சேர்ந்தே இருக்கிறது. 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.