Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை: புகலிடம் வழங்க முன்வராத உலக நாடுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை: புகலிடம் வழங்க முன்வராத உலக நாடுகள்

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், அவருக்கு உலகில் எந்த நாடும் அரசியல் புகலிடம் வழங்க இதுவரை முன்வரவில்லை என தெரியவருகிறது.

குடியுரிமை பெற்றிருந்த அமெரிக்கா கூட புகலிடம் வழங்கவில்லை

கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை: புகலிடம் வழங்க முன்வராத உலக நாடுகள் | Countries Did Not Offer Asylum For Gota

 

கோட்டாபய ராஜபக்ச குடியுரிமை பெற்றிருந்த அமெரிக்கா கூட அவருக்கு புகலிடம் வழங்கவில்லை. அத்துடன் இந்தியா தனது நாட்டுக்கு வரவும் அவருக்கு அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில், தற்போது சிங்கப்பூரில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய அங்கு மேலும் 14 நாட்கள் தங்கியிருக்க விசா அனுமதி கோரியிருந்தார்.

 

இந்த கோரிக்கையின் அடிப்படையில் சிங்கப்பூர் அரசாங்கம், அவரது விசா அனுமதி காலத்தை நீடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் கடந்த ஜூலை 9 ஆம் திகதி நடந்த போராட்டத்தின் பின்னர் கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து தப்பிச் சென்றார்.

கோட்டாபயவை இலங்கை வரவழைக்க முயற்சித்து வரும் ரணில்

கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை: புகலிடம் வழங்க முன்வராத உலக நாடுகள் | Countries Did Not Offer Asylum For Gota

 

முதலில் மாலைதீவு சென்ற அவர், அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் இருந்து அவர் தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்தார்.

இதனையடுத்து நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை: புகலிடம் வழங்க முன்வராத உலக நாடுகள் - தமிழ்வின் (tamilwin.com)

  • கருத்துக்கள உறவுகள்

  இருக்கவே இருக்கிறது சீனா கொத்தாவுக்கு உதவ. அங்கு புகலிடம் கேட்கலாம்தானே !!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vanangaamudi said:

  இருக்கவே இருக்கிறது சீனா கொத்தாவுக்கு உதவ. அங்கு புகலிடம் கேட்கலாம்தானே !!

ஏன் முயற்சிக்கவில்லை? அவர்களாக கூப்பிடட்டும் என்று நினைக்கிறாரோ? சீன, அவர்களுக்கு தேவையென்றால் விண்ணப்பிக்கட்டும் என்று காத்திருக்கும். விருந்தினர், அழைப்பிதழ் பிரச்சனை. சீனா அடுத்த நாடுகளை சுரண்டும் நாடு, இவரை சும்மா வைத்து பராமரிக்க விரும்புமா?

3 hours ago, nochchi said:

இதனையடுத்து நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. 

ரணில் அவரை இலங்கைக்கு கொண்டுவந்தால்; அவரை காட்டி கலகக்காரரை அடக்கலாம், கலகக்காரரை காட்டி கோத்தாவை அடக்கி சுலபமாய் தன் அரசியலை நகர்த்தலாம் என நினைக்கிறதோ நரி! ஏதோ ஒரு தந்திரமில்லாமல் இதன் வால் சும்மா ஆடாது.  

4 hours ago, nochchi said:

இந்த கோரிக்கையின் அடிப்படையில் சிங்கப்பூர் அரசாங்கம், அவரது விசா அனுமதி காலத்தை நீடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுதான் சிங்கப்பூர்! சொல்வது ஒன்று, செய்வது இன்னொன்று. பணம் .......

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி கொத்தாவுக்கு புனையபட்ட செய்தி போல் உள்ளது . சிங்கபூர் வந்ததும் வராததுமாக எங்கட நாடுபாய் ந்த கூட்டம் கொரட்டையில் இருந்து எழும்பி கொத்தவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு கொடுத்தவையாம் இதெல்லாம் மீண்டும் கோத்தா இலங்கையில் ராஜ மரியாதையுடன் இறங்குவதற்கான அடித்தளம் எந்த சிங்களவரால் அடித்து துரத்த பட்டரோ அதே சிங்களவரால் தமிழரை வென்றவர் அவருக்கு உலகில் இருக்க நாடு இல்லை எனும் அனுதாப பார்வையில் மீண்டும் தரை இறங்குவார் இலங்கையில் .

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம ஆக்கள் கொடுக்கிற  முட்டிற்த்தான் சிங்களம் சோர்ந்து போகாமல் இன்னும் தனித்து நிமிர்ந்து நிக்குது. இருந்தாலும், வீழ்ந்தாலும், வீழ்த்தினாலும் சளைக்காமல், தந்திரமில்லாமல், முட்டு கொடுக்கும் வள்ளல்கள் நம்மவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2022 at 00:05, satan said:

சீனா அடுத்த நாடுகளை சுரண்டும் நாடு, இவரை சும்மா வைத்து பராமரிக்க விரும்புமா?

சுரண்டல் சர்வாதிகார சீனா மற்றய நாடுகளை சுரண்டி எடுத்த பணத்தில் தனக்கு தேவை என்றால் அவரை வைத்து பராமரிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விளங்க நினைப்பவன் said:

சுரண்டல் சர்வாதிகார சீனா மற்றய நாடுகளை சுரண்டி எடுத்த பணத்தில் தனக்கு தேவை என்றால் அவரை வைத்து பராமரிக்கும்.

கோத்தாவை நாட்டுக்குள் எடுத்து வீண் வம்பில மாட்டிக்கொள்ள எந்த நாடும் விரும்பாது. இனிமேல் இவரை பராமரிப்பதில் யாருக்கும் எந்த பயனுமில்லை. ஏற்கெனவே அறிவித்து விடடார்கள் சீனாவுக்கு அதாவது ஒரு அரசாங்கத்தோடு போடப்படும் உடன்படிக்கை அந்த அரசு பதவி  முடிந்தவுடன் அந்த உடன்படிக்கையும் காலவாதியாகிவிடும் என்று. ஒருவேளை கோத்தாவை வைத்து நாட்டை கைப்பற்ற திட்டம் வகுக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

சுரண்டல் சர்வாதிகார சீனா மற்றய நாடுகளை சுரண்டி எடுத்த பணத்தில் தனக்கு தேவை என்றால் அவரை வைத்து பராமரிக்கும்.

சுரண்டலை சீனா மட்டும்தான் செய்ததா அல்லது செய்கிறதா? 

பிரித்தானியா இந்தியாவைச் சுரண்டி 3 trillion பவுண்ஸ்சுக்கும் மேல்  ஆட்டையைப் போட்டதாக 

அண்மையில் இந்திய அரசியல்வாதி சசிதரூர் சொல்லியதாக நினைவு

வரலாறு முக்கியம்  அமைச்சரே  😉

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.