Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொருளாதார நெருக்கடியை... யாரால், தீர்க்க முடியும்? : வெளியான கருத்துக்கணிப்பில்...   அனுரகுமார முன்னிலை.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார நெருக்கடியை யாரால் தீர்க்க முடியும்? : வெளியான கருத்துக்கணிப்பு !

பொருளாதார நெருக்கடியை... யாரால், தீர்க்க முடியும்? : வெளியான கருத்துக்கணிப்பில்...   அனுரகுமார முன்னிலை.!

நாடு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடிக்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவால் தீர்வு காண முடியும் என அதிகளவிலான மக்கள் நம்புகின்றனர்.

மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் இந்தவிடயம் தெரியவந்துள்ளது.

தற்போதைய நெருக்கடிக்கு அனுரவினால் தீர்வு காண முடியும் என கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 48.5 விகிதமானோர் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது 36.6 விகிதமானோர் நம்பிக்கை கொண்டுள்ள அதேவேளை 29.1% பேர் சஜித் பிரேமதாச மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்.

23.7% டலஸ் அழகப்பெருமவால் நெருக்கடியை தீர்க்க முடியும் என்றும் மேலும் 18.3% பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் முடியும் என்றும் வாக்களித்துள்ளனர்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தற்போதைய நெருக்கடியை தீர்க்க முடியும் என 11.9% நம்புகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1294092

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனுரவிற்கு… பெருமளவானோர், வாக்களித்து இருப்பது. ஆச்சரியமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஓராள் இருவருக்கு வாக்களித்தார்களா?🥱

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் இல்லாத வாக்கெடுப்பு செல்லாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவனாலும் முடியாது.

3 hours ago, புலவர் said:

சம்பந்தர் இல்லாத வாக்கெடுப்பு செல்லாது.

சம்பந்தர் போட்டியிட்டிருந்தால் முழு மக்களின் நம்பிக்கையையும் வென்றிருப்பார்!

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

பொருளாதார நெருக்கடியை யாரால் தீர்க்க முடியும்? : வெளியான கருத்துக்கணிப்பு !

பொருளாதார நெருக்கடியை... யாரால், தீர்க்க முடியும்? : வெளியான கருத்துக்கணிப்பில்...   அனுரகுமார முன்னிலை.!

நாடு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடிக்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவால் தீர்வு காண முடியும் என அதிகளவிலான மக்கள் நம்புகின்றனர்.

மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் இந்தவிடயம் தெரியவந்துள்ளது.

தற்போதைய நெருக்கடிக்கு அனுரவினால் தீர்வு காண முடியும் என கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 48.5 விகிதமானோர் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது 36.6 விகிதமானோர் நம்பிக்கை கொண்டுள்ள அதேவேளை 29.1% பேர் சஜித் பிரேமதாச மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்.

23.7% டலஸ் அழகப்பெருமவால் நெருக்கடியை தீர்க்க முடியும் என்றும் மேலும் 18.3% பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் முடியும் என்றும் வாக்களித்துள்ளனர்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தற்போதைய நெருக்கடியை தீர்க்க முடியும் என 11.9% நம்புகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1294092

இவர்கள் எவருமே முழு இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை தீர்க்க முடியாது  எனனென்றால். இலங்கையில் உள்ள ஓவ்வொரு குடிமகனையும் சமமாக கணிக்கும் பண்பு இவர்களிடம் இல்லை  நாடு தமிழ்ஈழம்.  சிங்களலங்கா என்று பிரிக்கப்படுமாயின். இவர்கள் சிங்கள பகுதிகளில் பொருளாதாரத்தை வளர்த்து எடுப்பார்கள்   தமிழ்ஈழமும் நல்ல தலைவர்கள் கிடைத்தால்  நன்றாகவே வளர்ச்சி அடையும்     ஆகவே பொருளாதார வளர்ச்சி வேண்டுமாயின் நாட்டை இரண்டாக பிரியுங்கள்   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kandiah57 said:

இவர்கள் எவருமே முழு இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை தீர்க்க முடியாது  எனனென்றால். இலங்கையில் உள்ள ஓவ்வொரு குடிமகனையும் சமமாக கணிக்கும் பண்பு இவர்களிடம் இல்லை  நாடு தமிழ்ஈழம்.  சிங்களலங்கா என்று பிரிக்கப்படுமாயின். இவர்கள் சிங்கள பகுதிகளில் பொருளாதாரத்தை வளர்த்து எடுப்பார்கள்   தமிழ்ஈழமும் நல்ல தலைவர்கள் கிடைத்தால்  நன்றாகவே வளர்ச்சி அடையும்     ஆகவே பொருளாதார வளர்ச்சி வேண்டுமாயின் நாட்டை இரண்டாக பிரியுங்கள்   

ஒன்று பட்ட இலங்கைக்குள்… தீர்வு என்று, சம்/சும் கொம்பனி சொல்லுது. 
நீங்கள், பிரிக்கச் சொல்லுறீங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

சாம், சும்மை விரும்பாதவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

ஒன்று பட்ட இலங்கைக்குள்… தீர்வு என்று, சம்/சும் கொம்பனி சொல்லுது. 
நீங்கள், பிரிக்கச் சொல்லுறீங்கள். 

நானும் இலங்கையில் இருந்திருந்தால் இவர்கள் சொல்வது எல்லாமே சரி என்பேன் பிழையாகவிருந்தாலும்...அது சரியாக எனக்கு தெரியும்...இந்த சம....சும்....எனக்கு சரியானது தெரியவிடாது. கண்ணும்  கருத்துமாகப்பார்த்துக்கொள்வார்கள்.  இங்கே வந்து சொஞ்சம் அரசியல் கற்றுக்கொண்டேன் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, புலவர் said:

சம்பந்தர் இல்லாத வாக்கெடுப்பு செல்லாது.

 ஏன் எங்கடை தங்கம் சம்பந்தன்  வாக்களிக்க போகேல்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

 ஏன் எங்கடை தங்கம் சம்பந்தன்  வாக்களிக்க போகேல்லையோ?

அவர் தான் ஏற்கெனவே தவறான கப்பலில் ஏறி பாதையை தவறவிட்ட எரிச்சலில் பொருமிக்கொண்டிருக்கிறார், நீங்கள் வேற வயித்தெரிச்சலை கிளப்புறீங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, satan said:

அவர் தான் ஏற்கெனவே தவறான கப்பலில் ஏறி பாதையை தவறவிட்ட எரிச்சலில் பொருமிக்கொண்டிருக்கிறார், நீங்கள் வேற வயித்தெரிச்சலை கிளப்புறீங்கள்.

அவர் எப்ப சரியான கப்பல்ல ஏறி இருக்கிறார்? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

அவர் எப்ப சரியான கப்பல்ல ஏறி இருக்கிறார்? :cool:

சரியான கப்பல் பாத்துதான் ஏறுவார் ஆனால் அவர் ஏறினால் அது பிழையான பாதையிற்தான் பயணிக்கும். வேண்டுமென்றே அவர் ஏறும் கப்பலை மூழ்கடிக்கிறார்கள். இனி ஒருவரும் உவரை கப்பலில் ஏற்ற மாட்டார்கள் கண்டியளோ!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, satan said:

சரியான கப்பல் பாத்துதான் ஏறுவார் ஆனால் அவர் ஏறினால் அது பிழையான பாதையிற்தான் பயணிக்கும். வேண்டுமென்றே அவர் ஏறும் கப்பலை மூழ்கடிக்கிறார்கள். இனி ஒருவரும் உவரை கப்பலில் ஏற்ற மாட்டார்கள் கண்டியளோ!

பாவியள்(சம்பந்தம்) போற இடமெல்லாம் பள்ளமும் திட்டியுமாம்.....
மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் அவர்களை கப்பல்ல ஏத்தி பாருங்கோ.....கப்பல் நேரா போக வேண்டிய இடத்துக்கு போக வேண்டிய நேரத்துக்கு போய்ச்சேரும்..

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, satan said:

அவர் தான் ஏற்கெனவே தவறான கப்பலில் ஏறி பாதையை தவறவிட்ட எரிச்சலில் பொருமிக்கொண்டிருக்கிறார், நீங்கள் வேற வயித்தெரிச்சலை கிளப்புறீங்கள்.

சம்பந்தரையும் ஓரு போட்டியாளராய் பேடவில்லை என்பதற்காக அப்படி எழுதினேன் சம்பந்தரும் போட்டியாளார இருந்திருந்தால் அவர்தான் அதிக வாக்குகளைப் பெற்றிருப்பார். ஆகவே இது ஜனநாயகமற்ற ஒருதலைப்பட்சமான கருத்துக் கணிப்பு! வெல்லக் கூடியவரை வேண்டுமென்றே தவிர்ப்பது. எனது வன்மையான கண்டனங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

பாவியள்(சம்பந்தம்) போற இடமெல்லாம் பள்ளமும் திட்டியுமாம்.....
மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் அவர்களை கப்பல்ல ஏத்தி பாருங்கோ.....கப்பல் நேரா போக வேண்டிய இடத்துக்கு போக வேண்டிய நேரத்துக்கு போய்ச்சேரும்..

இண்டைக்கு உங்களுக்கு நாள் சரியில்லை என்று நினைக்கிறன், அனாவசிய பேச்சுக்களை குறைக்கவும் என்று நாள் சொல்லுது.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, satan said:

இண்டைக்கு உங்களுக்கு நாள் சரியில்லை என்று நினைக்கிறன், அனாவசிய பேச்சுக்களை குறைக்கவும் என்று நாள் சொல்லுது.

கருத்துகள் வைக்க முடியாது விடில். ....

 

இப்படி வெருட்டக்கூடாது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் அவர்களை கப்பல்ல ஏத்தி பாருங்கோ.....கப்பல் நேரா போக வேண்டிய இடத்துக்கு போக வேண்டிய நேரத்துக்கு போய்ச்சேரும்..

கப்பலோட்டியே அவர்தானே! யாரை ஏற்றவேண்டும், யாரை தவிர்க்க வேண்டும், யாரை நடுக்கடலில் தள்ளிவிழுத்த வேண்டும், எங்கே போகவேண்டும்  அவரே கணிப்பார். அது திசை தப்பாது.

19 minutes ago, Kandiah57 said:

கருத்துகள் வைக்க முடியாது விடில். ....

 

கன்னத்தில இரண்டு போட்டுக்கொள்கிறேன்! கிள்ளி விட்டு கூத்துப்பாக்க ஆசையாயிருக்கு சிலருக்கு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, satan said:

இண்டைக்கு உங்களுக்கு நாள் சரியில்லை என்று நினைக்கிறன், அனாவசிய பேச்சுக்களை குறைக்கவும் என்று நாள் சொல்லுது.

இது பனங்காட்டு நரி உந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது😎

1 hour ago, satan said:

கப்பலோட்டியே அவர்தானே! யாரை ஏற்றவேண்டும், யாரை தவிர்க்க வேண்டும், யாரை நடுக்கடலில் தள்ளிவிழுத்த வேண்டும், எங்கே போகவேண்டும்  அவரே கணிப்பார். அது திசை தப்பாது.

ஊரிலை பழக்கின வண்டில் மாடு  நன்றியோட குடுத்த வேலைய செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

இது பனங்காட்டு நரி உந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது😎

ஊரிலை பழக்கின வண்டில் மாடு  நன்றியோட குடுத்த வேலைய செய்யும்.

ஒருதடவை வண்டிலோட்டி வீதியோரம் ஒதுங்க, வண்டிலும் மாடும் ஆளில்லாமல் வீடு வந்துசேர, ஒருகணம் வீடு அல்லோலகல்லோலம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, satan said:

ஒருதடவை வண்டிலோட்டி வீதியோரம் ஒதுங்க, வண்டிலும் மாடும் ஆளில்லாமல் வீடு வந்துசேர, ஒருகணம் வீடு அல்லோலகல்லோலம்!

சொன்னால் நம்பமாட்டியள் வடமராட்சிப்பக்கம் உந்த சம்பவங்கள் எக்கச்சக்கம்.அதுவும் கிடுகு வண்டில்காரர் கதை பெரிய சோகக்கதையள்....

ஏன் செல்வச்சந்நதியிலை அன்னதான மடங்கள் கூடினது எண்டு  இப்ப விளங்குதோ???????

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2022 at 05:24, தமிழ் சிறி said:

பொருளாதார நெருக்கடியை... யாரால், தீர்க்க முடியும்? : வெளியான கருத்துக்கணிப்பில்...   அனுரகுமார முன்னிலை.!

முதலில் இந்த நாட்டின் குடிமகன் என்று சொல்லபடும்  சிங்களவர்களால் நாட்டின்  முக்கிய ஏற்றுமதியாகும் தேயிலை கொழுந்து பறிக்க முடியுமா என்று கேட்டு பாருங்கள் ?

இப்படி சோம்பேறித்தனமான இனமும் தமிழர் எதிர்ப்பு இனவாதமும் கொண்டவர்களால் நாடு அழிவையே சந்திக்கும் வங்குரோத்து ஆன நாடுகள் மீண்டு எழுந்து சிங்கபூர் ஆன கதை உலகில் இதுவரை இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பெருமாள் said:

இந்த நாட்டின் குடிமகன் என்று சொல்லபடும்  சிங்களவர்களால் நாட்டின்  முக்கிய ஏற்றுமதியாகும் தேயிலை கொழுந்து பறிக்க முடியுமா

 நாட்டை தங்கள் தலையிலும், தோளிலும் தாங்கிப்பிடிப்பவர்களின் உயிரை, உரிமையை, உடைமையை  பறித்து அவர்கள் சிந்தும் வியர்வையிலும், குருதியிலும் தாம் சுகம் அனுபவிக்கத்தான் முடியும் அவர்களால்.

27 minutes ago, பெருமாள் said:

மீண்டு எழுந்து சிங்கபூர் ஆன கதை உலகில் இதுவரை இல்லை .

 எல்லாம் கவர்ச்சியாய் சொல்லிக்கொண்டு, தமிழன் தலையை மொட்டையடித்து, அதில மிளகாய் அரைக்கிற வேலை.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, satan said:

கன்னத்தில இரண்டு போட்டுக்கொள்கிறேன்! கிள்ளி விட்டு கூத்துப்பாக்க ஆசையாயிருக்கு சிலருக்கு!

நான் பகிடியாக எழுதினேன்…  தயவுசெய்து மன்னியுங்கள்....முகம் தெரியாத உங்களை எப்படி கிள்ளி விட்டு குத்துப்பார்க்கலாம் ?.  .

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

முதலில் இந்த நாட்டின் குடிமகன் என்று சொல்லபடும்  சிங்களவர்களால் நாட்டின்  முக்கிய ஏற்றுமதியாகும் தேயிலை கொழுந்து பறிக்க முடியுமா என்று கேட்டு பாருங்கள் ?

இப்படி சோம்பேறித்தனமான இனமும் தமிழர் எதிர்ப்பு இனவாதமும் கொண்டவர்களால் நாடு அழிவையே சந்திக்கும் வங்குரோத்து ஆன நாடுகள் மீண்டு எழுந்து சிங்கபூர் ஆன கதை உலகில் இதுவரை இல்லை .

மிகுந்த கஸ்டத்தில் வாழும் மலையக மக்கள் கேட் கும் 1000 ரூபா சம்பள உயர்வை கொடுக்க முடியாதவர்கள் அவர்களினால் நாட்டின் பொருளாதாரம் தாங்கப்படுகிறது என்று தெரிந்தும் கூட. நன்றி கெட்டவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.