Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீன தயாரிப்பு பாகிஸ்தான் யுத்தக் கப்பல் இலங்கையில் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 AUG, 2022 | 11:20 AM
image

சீனாவினால் தயாரிக்கப்பட்ட பாகிஸ்தானின் யுத்தக் கப்பலான பி.என்.எஸ். தைமூர் ( PNS Taimur )இலங்கையை வந்தடைந்துள்ளது.

குறித்த யுத்தக்கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று காலை வந்தடைந்துள்ளது.

பாகிஸ்தானின் தைமூர் என்ற போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு இலங்கை அரசாங்கம்  அனுமதி வழங்கிய நிலையிலேயே குறித்த கப்பல் இன்று காலை வந்தடைந்தள்ளது.

FZ70LTPacAEGWmE.jpg

சீனாவில் கட்டமைக்கப்பட்ட PNS தைமூர் என்ற இந்த போர்க்கப்பல், ஷாங்காய் நகரிலிருந்து கராச்சிக்கு செல்லும் வழியில் கொழும்புக்கு, நல்லெண்ண அடிப்படையில் பயணிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போர்க்கப்பல் கம்போடிய மற்றும் மலேசிய கடற்படைகளுடன் பயிற்சிகளை நடத்திய நிலையிலேயே பாகிஸ்தானின் கராச்சி நோக்கி திரும்புகிறது.

ஷாங்காயில் உருவாக்கப்பட்ட இந்த கப்பல், கராச்சிக்கு தனது  முதல் பயணத்தை மேற்கொள்கிறது.

கராச்சியில் பாகிஸ்தான் கடற்படையில் இணைவதற்குச் செல்லும் வழியில் கொழும்பு  துறைமுக அழைப்பை ஏற்று, பாகிஸ்தானின் இந்த ஏவுகணைப் போர்க்கப்பல், இலங்கை வந்துள்ளது.

இன்று வருகை தந்த இந்த கப்பல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

FZ70KOSaQAIR89p.jpg

இதேவேளை, சீனாவின் யுவான் வோங் - 5 என்ற உளவுக் கப்பல் ஒன்று ஹம்பாந்தோட்டைக்கு வருவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், குறித்த கப்பலின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் ராஜதந்திர ரீதியில் சிறு இடைவெளியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள, சீன இராணுவத்தின் மூலோபாய  ஆதரவுப் படைக்கு சொந்தமான  அறிவியல் ஆய்வுக் கப்பலான ' யுவான் வாங் 5' எனும் கப்பல், நேற்று ( 11)  அம்பாந்தோட்டையை அடைய திட்டமிட்டிருந்த போதும், அக்கப்பல் நேற்று நள்ளிரவு வரை   இலங்கையின் கடல் எல்லைக்குள்  நுழையவில்லை என அறிய முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த ' யுவான் வாங் 5'  கப்பல் உள்ளிட்ட எந்தவொரு கப்பலும் நேற்று அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர அனுமதி கோரப்பட்டிருக்கவில்லை எனவும், தனது  அனுமதி இல்லாமல் எந்த கப்பலும் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் நுழைய முடியாது என  துறை முக மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

FZ4L0y3aUAEk2Jo.jpg

அதன்படி, இலங்கையை நோக்கி பயணத்தை ஆரம்பித்த சீனாவின் ' யுவான் வாங் 5'  கப்பல்,  இலங்கையிலிருந்து சுமார் 550 இறுகும் 600 இற்கும் இடைப்பட்ட கடல் மைல் தூரத்தில், அம்பாந்தோட்டையை நோக்கி பயணிக்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனினும் அக்கப்பலின்  பயணப் பாதை தொடர்பிலான ஏனைய விபரங்களை வெளிப்படுத்திக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நிலைமை இவ்வாறுள்ளபோது சீன தயாரிப்பு பாகிஸ்தானின் தைமூர் என்ற போர்க்கப்பலின் இலங்கை வருகை தற்போது அமைந்துள்ளமை விசேட அம்சமாகும்.

சீன தயாரிப்பு பாகிஸ்தான் யுத்தக் கப்பல் இலங்கையில் ! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

அட… பாகிஸ்தான் இராணுவ கப்பலை,
ஶ்ரீலங்காதான் வலிய கூப்பிட்டு, இந்தியாவுக்கு கடுப்பு ஏத்தியிருக்கு. 

அப்படி இருந்தும்,  கணபதி ஐயர்… இலங்கைக்கு,
உளவு விமானம் கொடுத்து… குஷிப் படுத்தி உள்ளார்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, தமிழ் சிறி said:

அட… பாகிஸ்தான் இராணுவ கப்பலை,
ஶ்ரீலங்காதான் வலிய கூப்பிட்டு, இந்தியாவுக்கு கடுப்பு ஏத்தியிருக்கு. 

அப்படி இருந்தும்,  கணபதி ஐயர்… இலங்கைக்கு,
உளவு விமானம் கொடுத்து… குஷிப் படுத்தி உள்ளார்.

கணவதி ஐயர் பட்டும் திருந்திற பிளான் இல்லைப் போல கிடக்கு.....

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

கணவதி ஐயர் பட்டும் திருந்திற பிளான் இல்லைப் போல கிடக்கு.....

பெரிய நாடுகளை எல்லாம்…. லாகவகமாக சுழித்து கையாளும்,
சிங்களவன் கெட்டிக்காரன் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, தமிழ் சிறி said:

பெரிய நாடுகளை எல்லாம்…. லாகவகமாக சுழித்து கையாளும்,
சிங்களவன் கெட்டிக்காரன் தான்.

உக்ரேனை மாதிரி அவங்களும் கெட்டிக்காரர் தான்.....😎

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

உக்ரேனை மாதிரி அவங்களும் கெட்டிக்காரர் தான்.....😎

தமிழ் அரசியல் வாதிகள்… சிங்களவனிடம், ஒரு செம்பு  “இளநீர்” வாங்கி,
மடக்கு, மடக்கு… என்று, நாக்கில் படாமல் குடிக்க வேணும்.🤣

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் வெளியுறக்கொள்கை படுதோல்வியடைந்துள்ளது. இந்தியாவின் வெளியுறத்துறையை முற்றாகப் புதுகப்பிக்கபட்வேண்டும். இப்போதிருக்கும் மலையாளிகளைப் பெரும்பானமையமாக் கொண்ட வெளியுறவுத்துறையை வீட்டுக்கு அனுப்பி விட்டு லையும்தோல்விக்கான காரணங்களுக்காக அவர்கள் விசாரிக்கப்பட வேண்டும். முற்றிலும் தமிழர்களைக் கொண்ட வெளியுறவுத்துறை அமைக்கப்பட வேண்டம். தமிழர்களின் பாதுகாப்பே இந்தியாவின் பாதுகாப்பு.இந்தியா இதனை உணராத வரைக்கும் சீனக்கப்பலையும் பாகிஸ்தான் கப்hலையும் தமிழர்கள் வரவேற்பார்கள். புலிகள் இருந்தவரை எந்தநாட்டுக்கப்பலும் இந்து சமுத்திரப்பிராந்தியத்தை எட்டியும்பார்க்கவில்லை.என்பதை இந்தியா உணரவேண்டும். இது இந்தியாவின் துரோகத்தின் பரிசு.

4 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் அரசியல் வாதிகள்… சிங்களவனிடம், ஒரு செம்பு  “இளநீர்” வாங்கி,
மடக்கு, மடக்கு… என்று, நாக்கில் படாமல் குடிக்க வேணும்.🤣

இளநீர் இள என்பதற்கு சிறு என்று பொருள்கோடலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

அட… பாகிஸ்தான் இராணுவ கப்பலை,
ஶ்ரீலங்காதான் வலிய கூப்பிட்டு, இந்தியாவுக்கு கடுப்பு ஏத்தியிருக்கு. 

அப்படி இருந்தும்,  கணபதி ஐயர்… இலங்கைக்கு,
உளவு விமானம் கொடுத்து… குஷிப் படுத்தி உள்ளார்.


சோனியாவினுடைய முந்தானையில் தொங்கிய கொள்கைதான் இலங்கை நோக்கிய பார்வையில் கணபதி ஐயனின் நகர்வும் உள்ளது.பெயர்தான் வேறு. (காங்கிரஸ் - பா.ஜ.க) பிறகு எப்படியாம் வெளியுறவுக் கொள்கைமாறும். ஈழத்தீவினுள் இந்தியப்படை புகுந்ததில் இருந்து இன்றுவரை தமிழீழ மக்கள் தொடர்பாக கிந்தியா எதையாவது சாதகமாச் சிந்தித்திருக்கிறதா? சிறிலங்காவைக்காத்து அவமானப்படும் ஒரே நாடு கிந்தியா மட்டுமே. 

6 hours ago, குமாரசாமி said:

கணவதி ஐயர் பட்டும் திருந்திற பிளான் இல்லைப் போல கிடக்கு.....

ஈழத் தமிழினம் இல்லாது போனால் சாத்தியம்.

5 hours ago, தமிழ் சிறி said:

பெரிய நாடுகளை எல்லாம்…. லாகவகமாக சுழித்து கையாளும்,
சிங்களவன் கெட்டிக்காரன் தான்.

2500ஆண்டுகளாக ஒரு திட்டுமிட்ட அடிப்படையில் ஒரே சிந்தனையோடு, ஆனால் சிங்களவனுக்கு வக்காளத்துவாக்கித் தடுத்தாடிக் காப்பற்றவே பல தமிழ்க்கூட்டுகள் உள்ளன. 

  • கருத்துக்கள உறவுகள்

சீனன் சுழியன் ஐயருக்கு அம்பாந்தோட்டையில வெள்ளி காட்டிப்போட்டு, கொழும்புக்குள்ள பாகிஸ்தான் பெயரில தன்ர இன்னொரு கப்பலை இறக்கீட்டான்🤣.

ஜெய் சங்கர்வாழ் தோழமை நாடான அமரிக்கனுக்கு கெத்துகாட்டத்தான் லாயக்கு😆. சீனன் வெட்டி ஆடிப்போடுவான்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிழம்பு said:

கராச்சியில் பாகிஸ்தான் கடற்படையில் இணைவதற்குச் செல்லும் வழியில் கொழும்பு  துறைமுக அழைப்பை ஏற்று, பாகிஸ்தானின் இந்த ஏவுகணைப் போர்க்கப்பல், இலங்கை வந்துள்ளது.

நான் நினைக்கிறன், இலங்கை வேண்டுமென்றே இந்தியாவை சீண்டி வேடிக்கை பாக்குதென்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, satan said:

நான் நினைக்கிறன், இலங்கை வேண்டுமென்றே இந்தியாவை சீண்டி வேடிக்கை பாக்குதென்று.

இந்தியா தானும் பருத்தித்துறை பக்கம் ஒரு கப்பலை ஏன் விடக்கூடாது?

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

இந்தியா தானும் பருத்தித்துறை பக்கம் ஒரு கப்பலை ஏன் விடக்கூடாது?

"சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது." என்று சின்ன வயதில் படித்திருப்பீர்கள். ஏற்கெனவே புலிகளிடம் வாங்கிக்கட்டிய அனுபவம், அதிலும் வந்திருக்கிறது ஏவுகணை தாங்கிய போர்க்கப்பல்கள், இலங்கை வேண்டுமென்றே வரவழைத்திருப்பதுபோல் தெரிகிறது. சும்மா எச்சரித்துக்கொண்டு காலத்தை கழிப்பவரை  சுத்தி வளைச்சு அடிச்சால் தப்பி ஓடவும் வழியிருக்க வேணுமே. இலங்கையோ இந்தியாவுக்கும் பெப்பே, சீனாவுக்கும் பெப்பே காட்டி விளையாடுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, satan said:

"சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது." என்று சின்ன வயதில் படித்திருப்பீர்கள். ஏற்கெனவே புலிகளிடம் வாங்கிக்கட்டிய அனுபவம், அதிலும் வந்திருக்கிறது ஏவுகணை தாங்கிய போர்க்கப்பல்கள், இலங்கை வேண்டுமென்றே வரவழைத்திருப்பதுபோல் தெரிகிறது. சும்மா எச்சரித்துக்கொண்டு காலத்தை கழிப்பவரை  சுத்தி வளைச்சு அடிச்சால் தப்பி ஓடவும் வழியிருக்க வேணுமே. இலங்கையோ இந்தியாவுக்கும் பெப்பே, சீனாவுக்கும் பெப்பே காட்டி விளையாடுது.

சீனாவும் இந்தியாவும் எங்களுக்கு இரண்டு கண்கள் எண்டு சிங்களம் கதை விட்டால் என்ன செய்யிறது? 😁

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

சீனாவும் இந்தியாவும் எங்களுக்கு இரண்டு கண்கள் எண்டு சிங்களம் கதை விட்டால் என்ன செய்யிறது? 😁

இந்தியா, கண் தப்பினால் போதும் என்று கண்ணைப் பொத்திக்கொண்டு திரும்பிப்பாக்காமல் ஓடுவதே சிறந்தது, அல்லது சீனாவோடு ஒத்துப்போவதை தவிர வேறு வழியில்லை அதற்கு. இருந்த ஒரு சிறந்த வழியையம் அதே அடைத்து தனக்கு வினையை தானே தேடிக்கொண்டது. சிங்களத்தை விட தமிழரை அழிப்பதில் தீவிரம் காட்டியது இந்தியாவே, இலங்கை வெறும் கருவியே. பொன்சேகா கூறியது "எங்களது புலிகளுக்கெதிரான  தாக்குதலை கிளிநொச்சியோடு நிறுத்திக்கொள்ள தீர்மானித்தோம், ஆனால் இந்தியாவே எங்களை மேற்கொண்டு போரை தொடர வற்புறுத்தியது." மஹிந்தா சொன்னது  "புலிகளுக்கெதிரான இந்தியாவின் போரையே நாங்கள் செய்தோம், நாங்கள் கேட்க்காமலேயே எல்லா உதவிகளையும் எங்களுக்கு அளித்து, போரை முடித்துவைக்க இந்தியா உதவியது." பேராசிரியர் பத்திரன சொன்னது "அதிகார பரவலாக்கல் வரைபை வகுக்கும்படி மஹிந்தா தன்னை பணித்து, தான் அதில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, இந்தியா தன்னை அழைத்து, அதெல்லாம் செய்ய வேண்டாம், உங்கள் முயற்சியை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று தடுத்தது." எரிக் சொல்ஹெய்ம் என்ன சொன்னார், ஏன் ஒவ்வொருதடவையும் இலங்கைக்கு விஜயம் செய்து விட்டு நாடு திரும்பும் போதெல்லாம் இந்தியாவுக்கு சென்றார் என்பதை அவரே விளக்கியிருந்தார். இத்தனை உயிரை பலி எடுத்து தனக்குத்தானே ஆபத்தை தேடி அழைத்துக்கொண்டது. இந்தியாவுக்கு தான் சவால் விடுமளவுக்கு தன்னில் நம்பிக்கையில்லை. எதை கண்டாலும் பயம், அதனாலேயே வலிய போய் முட்டி மண்டையை உடைத்துக்கொள்கிறது. வெகுவிரைவில் அதன் பலனை அனுபவிக்கும்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.