Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆடியில் ஆடிப்போன ராஜபக்ச

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆடியில் ஆடிப்போன ராஜபக்ச

போர் ஆரம்பித்த காலத்திலிருந்து ஆட்சிக்கு வந்தோர் இனப்பிரச்சனை ஒன்றை வைத்தே காலத்தை ஓட்டுவதில் செலவழித்திருக்கிறார்கள்.

இனப்பிரச்சனை தீர்ப்பதற்கான சமாதான நிலைமைகள் மாறி, உலக நாடுகளின் பொருளாதார உதவிகள் பெற்று, போரை மேலும், மேலும் வலுப்பெறச் செய்யும் பெரும் நோக்கமாகவே அமைந்திருக்கின்றது.

இப்படியே பல சகாப்தங்களாக ஆட்சிப்பீடம் ஏறும் ஒவ்வொரு அரசாங்களும் போரை காரணங்காட்டியும், தமிழர்களை பயங்கரவாதிகள் என்றும் எடுத்துக் காட்டுவதில் மும்முரமாய் செயற்படுகின்றனர். அனைத்து தரப்பினரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம் என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

அந்தவகையில் ஆட்சிக்கு வந்த பெளத்த சிங்கள பேரினவாதி மகிந்த ராஜபக்சாவின் முன்னேடுக்கும் செயற்பாடுகளும் அமைந்திருந்ததோடு அவை சற்று அதிகமாகவே காணப்படுகின்றது.

மேற்குலக நாடுகளுக்கும் இவை எல்லாம் தெரிந்திருந்தும் கண்ணை மூடிக்கொண்டு மெளனமாக இருக்கின்றார்கள். இதை பயன் படுத்திக் கொண்டுதான் ராஜபக்சாவும் தனது காய் நகர்த்தலை சாதுரியமாக நகர்த்திக் கொண்டிருக்கின்றார்.

தமிழர்களின் விடுதலைக்காகவும், தமிழின எதிர்கால சந்ததிகளுக்காகவும் போராடும் விடுதலைப்புலிகளை முற்றாக அழித்தொழித்து விட்டு, அதன் மூலம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருதல் என்பதே மகிந்தாவின் சிந்தனையாகவும் குறிக்கோளாகவும் இருக்கின்றது

பொருளாதார நெருக்கடியில் ஆயுதக் கொள்வனவு, பாதுகாப்புச் செலவீனங்களுக்கான அதிகளவான நிதி ஒதுக்கீடு, இராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு என்று இப்படியே நீண்டு கொண்டே போகின்றது.

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியை தழுவிக்கொண்டிருக்கின்ற நிலைமை நாட்டின் பெரும் விலையேற்றத்தை சந்திக்க வேண்டிய நிலைமை ஒருபுறம்.

நாட்டின் பெருந்தொகைப்பணம் போருக்காக செலவிடுப்படுவதால் நாளுக்கு நாள் எகிறிக் கொண்டு போகும் விலையேற்றங்களுக்கு காரணகர்த்தாவாக மகிந்தா செயற்படுகின்றார். விலையேற்றத்தை எதிர்த்து மக்கள் போராட்டங்களிலும் இறங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

கிழக்கின் உதயம் என்ற பெயரில் வெற்றியை கொண்டாடி விட்டு கிழக்கில் தேர்தலை முன்னேடுத்துச் செல்ல வேண்டும் என்ற நிலையில் வாக்குரிமையற்ற சமூகத்தினருக்கு வாக்குரிமை வழங்கி அங்கு குடியமர்த்தும் பணியில் இறங்கியிருக்கும் அரசாங்கத்தின் நயவஞ்சகத்தன்மை.

குடும்பி மலை என்ற சூனிய பிரதேசத்தைக் கைபற்றி, புலிகளை கொன்று விட்டதாகவும், ஆயுதங்களை கைபற்றி விட்டதாக புளுடா விடும் இவர்கள், இந்த பிரதேசத்தைக தக்க வைத்துக் கொள்வதற்கான மேலதிக இராணுவப் படைகளுக்கான விண்ணப்பங்களை கோறுகிறார்கள் .

மேலும் இந்த நிலையில் வடக்கு நோக்கிய படைநகர்வினை மேற்கொள்ளவும் மேலதிகமான படைப்பலமும் அத்தியாவசிய தேவையாக இருக்கின்றது. படைப்பலம் என்பது நினைத்தமாத்திரத்தில் கிடைக்கக்கூடியதும் அல்ல.

இந்தத் தேவைகளுக்கு மத்தியிலும் இவரது ஆட்டம் ஆடிமாதக் காற்றாய் அலைமோதுகின்றது.

அத்தோடு அளவுக்கு அதிகமான அமைச்சர்கள், அபிவிருத்தித் திட்டங்கள் இவற்றையெல்லாம் செயற்படுத்த தேவையான பணம் இன்றியும் ஆடிப்போய் தள்ளாடுகின்றது இந்த அரசாங்கம்.

ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர ஆகியோர்களினால் நடத்தப்படும் பேரணிகளில் கலந்து கொள்ளும் மக்கள் தொகையினைக்கண்டு தடுமாறும் மகிந்த தற்போது அவர்களுடன் சந்திரிகா அம்மையாரும் இணைந்து கொள்வது, மேலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டது. ஏற்கனவே ஆடியில் ஆடிப்போயிருக்கும் ராஜபக்ச, அம்மையாரின் உடன் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானிக்கும் நிலையிலும் உள்ளார். உள்ளத்தால் ஆட்டம் கண்டதன் விளைவு பட்டுத் தெளிக்கின்றது.

இதனுடன் ஜே.வி.பி. தரும் தீராத தலையிடிகள்.

இ.தொ.கா.வின் பதவி விலகல். பதவியில் விலகினாலும் அரசாங்கத்தின் பிடியில் மதில் மேல் பூனை போல் இருக்கின்றார்கள். இங்கேயோ அங்கேயோ என்றுதான் இருக்கின்றார்கள்.முஸ்லிம் காங்கிரஸ் ன் நிலைமையும் அதே போல் தான் இருக்கின்றது.

சிறப்புத்தூதுவராக மூத்த ராஜதந்திரியான ஜி.பார்த்தசாரதி, ஐ.நா. அதிகாரி சேர். ஜோன் ஹோல்ம்ஸ்

இருவரும் வந்து போனபின்னும் பல நெருக்கடிகளை அழுத்தங்களை அரசாங்கத்துக்கு உண்டு பண்ணி இருக்கின்றார்கள். இருந்தபோதும் விழுந்தும் மீசையில் மண் படாதது போல் ராஜபக்சாவும் சகாக்களும் இருக்கின்றார்கள்.

இத்தனைக்கும் மத்தியில் விடுதலைப்புலிகளின் நீண்ட மெளனம். எந்த நேரத்தில் எங்கே தாக்குதலை நடத்துவார்கள் என்ற பயம் வேறு ராஜபக்சாவை ஆட வைத்திருக்கிறது.

ஆடிக்காற்றில் ஆடியவர் ஆவணியில் என்ன செய்யப் போகின்றார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆடி முடிந்து ஆவணி வந்து கார்த்திகையை நெருங்க தலையைப் பிய்த்துக் கொள்ளப் போகிறார்.

பாராட்டுக்கள் கறுப்பி.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு ஆய்வு கறுப்பி வாழ்த்துகள்.. :lol:

சிறந்ததோரு ஆய்வு வாழ்த்துகள் கறுப்பி அவர்களே. தொடர்ந்து வரட்டும் உங்கள் ஆக்கங்கள். தமிழரின் சுதந்திர தாகத்திற்கு வேட்டு வைப்பதற்கு எத்தனையோ பேர் வந்து ஆடிப் பார்த்து விட்டார்கள். இவரும் பத்தோடு பதினோன்றாக இருக்கட்டும். இனி வரும் காலம் நம் காலமாக கனியும் என எதிர்பார்க்கலாம்.

ஜானா

ஆய்வு நன்றாக இருக்கின்றது. உங்கள் ஆய்வுகள் தொடரட்டும்.

நல்ல ஆய்வு அக்கா நன்றிகளும் பாராட்டுகளும்

  • கருத்துக்கள உறவுகள்

"இத்தனைக்கும் மத்தியில் விடுதலைப்புலிகளின் நீண்ட மெளனம். எந்த நேரத்தில் எங்கே தாக்குதலை நடத்துவார்கள் என்ற பயம் வேறு ராஜபக்சாவை ஆட வைத்திருக்கிறது."

இவர்கள் பயந்தே சாக வேண்டும்.எதிர்பாக்காத போது தாக்குதல் அதிர்ச்சியும் கொடுக்க வேண்டும்.மொத்தத்தில் மகிந்து மண்டையை பிய்த்துக்கொண்டு ஓடவேண்டும்.கறுப்பி,உங்கள் ஆய்வு மிக நன்று.மேலும் ஆய்வுகளை தொடருங்கள்.

கறுப்பி அக்கா நல்லா ஆயு செய்து இருகிறீங்க வாழ்த்துகள்.............. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாசித்து விட்டு கருத்துக்களும், வாழ்த்துகளும் கூறிய இணையவன் , புத்தன் , ஈழப்பிரியன் , ஜானா , சுகன் , ஈழவன் , நுனாவிலான் மற்றும் யமுனாவிற்கும் நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

பல்வேறு இடங்களில் இருந்து வரும் நெருக்கடிக்களுக்கு மத்தியில் தள்ளாடும் இராஜபக்சவுக்கு உடனடியான தேவை வடபகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளில் சில பகுதிகளைக் கைப்பற்றி , தென்னிலங்கையில் ஏற்படும் சில அழுத்தங்களைக் குறைப்பதே. ஆனால் வடக்கில் முன்னேறப் போய் புலிகளின் அடியினால் இழப்புக்கள் பல ஏற்பட்டால் இன்னும் தென்னிலங்கையில் நெருக்கடிகள் கூடும். என்ன செய்யப் போகிறார்?.

ஆய்வுக்கு பாராட்டுக்கள் கறுப்பி. நன்றாக இருக்கிறது.

தலையங்கம் என்னை நன்றாகக் கவர்ந்திருக்கிறது. ஆடியில் ஆடிப் போன -

நல்லதொரு செய்தி ஆய்வு கறுப்பி. பொருளாதாரப் பிரச்சனைகளையும் தொட்டுச் சென்றிருக்கிறீர்கள்.

இனி வரும் காலங்களில் ஒரு விடயத்தை சுட்டிக் காட்டும்போது (உதாரணமாக பொருளாதாரம்) - அது தொடர்பான செய்திகள் இணையத்தில் வந்திருந்தால் - அவற்றுக்கான தொடுப்புகளையும் (Link) இணைத்துவிடுங்கள். வாசிக்கும்போது புரிந்துகொள்ள சுலபமாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு , வலைஞன் கருத்துப்பகிர்வுக்கு நன்றி .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.