Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போதைப் பொருளை வைத்திருந்தால்... மரண தண்டனை : சட்டங்களை கடுமையாக்க, தீர்மானம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!

போதைப் பொருளை வைத்திருந்தால்... மரண தண்டனை : சட்டங்களை கடுமையாக்க, தீர்மானம் !

05 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தால் பிணை வழங்கப்படாது என்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருளை எதிர்த்துப் போராடுவதற்கான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை வலுப்படுத்த பொது பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி போதைப் பொருள் கட்டளைச் சட்டத்தில் இது தொடர்பில் தேவையான திருத்தங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும் என பொதுபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1298079

  • கருத்துக்கள உறவுகள்

போதைப் பொருட்களை நாட்டுக்குள் வராமல் தடுப்பதே போதைப்பொருட்களை அழிக்கும் . 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

போதைப் பொருளை வைத்திருந்தால்... மரண தண்டனை : சட்டங்களை கடுமையாக்க, தீர்மானம் !

05 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தால் பிணை வழங்கப்படாது என்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் நாட்டுக்குள் வருவதை தடுக்க வக்கில்லை. ஆனால் போதைப்பொருள் வைத்திருப்பவருக்கு மரண தண்டனை.
அது சரி போதைப்பொருள் கடத்துறதே அரசியல்வாதிகள் தானே🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

போதைப் பொருளை வைத்திருந்தால்... மரண தண்டனை : சட்டங்களை கடுமையாக்க, தீர்மானம் !

 புலிகள் இருந்த போது எப்படி கட்டுப்பாடாக வைத்திருந்தார்கள்.

இப்போது ஏன் முடியாமல் இருக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா இராணுவத்திற்கு இந்த சட்டம் செல்லுபடியாகாமல் பார்த்துக்கொள்ளவும். தவறினால் ஏறத்தாள அரைவாசி இராணுவம் மரணதண்டனையில் கொல்லப்படுவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெருக்கடியான காலத்தில் அமைச்சர்களின் வெளிநாட்டு பயணம் குறித்து சுசில் பிரேமஜயந்த அதிருப்தி

போதைப் பொருள் பாவனை: மாணவர்களின் புத்தகப்பை பரிசோதிக்கப்படும் – அமைச்சர்.

போதைப் பொருள் பாவனையில் இருந்து இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்றும் நடவடிக்கையாக மாணவர்களின் புத்தகப்பை பரிசோதிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

நாட்டுக்குள் ஹெரோயின் கொண்டுவந்து அதனை மிக நுணுக்கமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகம் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இன்று புதன்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமரிவின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1298027

##########################

@nunavilan, @குமாரசாமி , @ஈழப்பிரியன் , @vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நாட்டுக்குள் ஹெரோயின் கொண்டுவந்து அதனை மிக நுணுக்கமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

95 இல் யாழ் குடாநாடை கைப்பற்றிய பின் பாடசாலை எல்லைகளில் சோதனை நிலையங்களை அமைத்து சிறுவர்கள் சிறுமிகள் புத்தகங்களை பரிசோதிக்கிறோம் எனும் போர்வையில் அவர்கள் புத்தகங்களுக்கிடையில் பல வேண்டத்தகாத படங்களை கொடுத்தனுப்பினார்கள்.

மினிசினிமா கொட்டகைகளில் ஆபாசபடங்கள் காட்டப்பட்டன.அப்போதிருந்தே போதைப்பொருளும் பெருமளவில் புழங்கப்பட்டன.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சட்டத்திற்கு எதிராக செல்வம் அடைக்கலநாதன் தீர்மானம் எடுப்பார் என நம்பலாம். 

அட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தூக்குக் கயிற்றை முத்தமிடும் முதல் தமிழன் செல்வத்தின் தம்பியாக இருப்பார். சிசாத்தின் தம்பி முஸ்லிம்களில் முதலாளாக இருப்பார். 

😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.