Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இறுக்கமான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்: சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறுக்கமான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்: சம்பந்தன்

மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களிலிருந்து இலங்கை அரசும், அதன் படைகளும் தப்பிக்க முடியாதவாறு மிகவும் இறுக்கமான தீர்மானமொன்று ஜெனிவாவில் நிறைவேற்றப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வழங்கியே தீர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பதில் ஆணையாளர் ஆற்றிய உரையை வரவேற்கின்றோம். அதேவேளை, இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரால் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த அறிக்கையையும் நாம் வரவேற்கின்றோம்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் பரிந்துரைகளை இலங்கை அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை இலங்கை அரசு தொடர்ந்து உதாசீனம் செய்து வருகின்றது எனக் குறிப்பிட்ட அவர், 

அரசியல் தீர்வு சம்பந்தமான பரிந்துரையையும் கூட இலங்கை நடைமுறைப்படுத்தவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்னமும் அமுலில்தான் இருக்கின்றது. அதன் கீழ் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன. ஐ.நா.வுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் இலங்கை அரசு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும் அவற்றில் எதுவும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. 

அந்த வாக்குறுதிகளைக் கிடப்பில் போட்டுவிட்டு சர்வதேச சமூகத்தை இதுவரை காலமும் இலங்கை அரசு ஏமாற்றி வந்தது. மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களிலிருந்து இலங்கை அரசும், அதன் படைகளும் தப்பிக்க முடியாதவாறு மிகவும் இறுக்கமான தீர்மானம் இம்முறை ஜெனிவாவில் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வழங்கியே தீர வேண்டும் என்றார்.

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/இறுக்கமான-தீர்மானம்-நிறைவேற்றப்பட-வேண்டும்-சம்பந்தன்/175-304251

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவோ சொல்லவேண்டியது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

இறுக்கமான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்: சம்பந்தன்

ஓமோம் இறுக்கமாய் இருக்க வேணும். இல்லாட்டி பிறகு களண்டு விழுந்து போகும் எல்லோ...😎

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இப்போது ரொம்ப பணக்கஷ்டத்தில தவிக்குது என்பது ஐயாவுக்கு புரிஞ்சு போச்சு, அதனால கடுப்பாகிவிட்டார். வரவேண்டிய பாக்கி வரலையாம் மிரட்டுகிறார்!

4 hours ago, ஏராளன் said:

எப்பவோ சொல்லவேண்டியது!

சொல்லியிருப்பார் வரவு அன்றே நின்றிருக்கும்! ஜெனீவாவுக்கு போறோம் என்று கதை விட்டு, பிறகு வரவு கூடுதலானவுடன்   பின்வாங்கியவர்கள் சொல்லியிருப்பார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

கிடைத்த சந்தர்ப்பங்களை.. தவற விட்ட சம்பந்தனும், கூட்டமைப்பும்,
வாயை பொத்திக் கொண்டு இருந்தாலே... காணும். 😡 😡
மற்றவர்களை இனியும், முட்டாளாக்க  வேண்டாம்.   😡

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

கிடைத்த சந்தர்ப்பங்களை.. தவற விட்ட சம்பந்தனும், கூட்டமைப்பும்,
வாயை பொத்திக் கொண்டு இருந்தாலே... காணும். 😡 😡
மற்றவர்களை இனியும், முட்டாளாக்க  வேண்டாம்.   😡

இல்லை, ஐ. நா. மனித உரிமை பேரவையில் இலங்கையின்   நிலைமை கவலைக்கிடம்போல் என்று யாரோ தலைவரின் காதில் போட்டுவிட்டுள்ளார்கள். யாரோ குற்றிய அரிசியில் இவர் பொங்கலிட விழைகிறார், யாரோ விதைத்ததை தனது களஞ்சியத்தில் சேர்க்க முனைகிறார். அதை குழப்பாமல் ஐயாவுக்கு கையும் ஓடாது, காலும் நகராது. 

  • கருத்துக்கள உறவுகள்

இறுக்கமான தீர்மானம் எடுக்க வேண்டும் என்பவர் கட்சியின் சார்பில் தமிழ் மக்களுக்காக  ஜெனிவாவுக்கு யாராவது அனுப்பப்பட்டார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

இறுக்கமான தீர்மானம் எடுக்க வேண்டும் என்பவர் கட்சியின் சார்பில் தமிழ் மக்களுக்காக  ஜெனிவாவுக்கு யாராவது அனுப்பப்பட்டார்களா?

அனுப்ப மாட்டினம்...இங்கு ரணில் வெறும் பெட்டி  ஐந்த்தாறு வைத்து விளையாட்டுக் காட்டுவார்...இவை அதைப் பார்த்து  பார்த்து வீணி வடித்துக்கொண்டிருப்பினம்

  • கருத்துக்கள உறவுகள்

யா....ரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது...🤣

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா சொல்லிட்டாரிலே....ஐ .நா..நடுக்கத்துடன் தீர்மானம் நிறைவேற்றும்...😆

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, alvayan said:

அனுப்ப மாட்டினம்...இங்கு ரணில் வெறும் பெட்டி  ஐந்த்தாறு வைத்து விளையாட்டுக் காட்டுவார்...இவை அதைப் பார்த்து  பார்த்து வீணி வடித்துக்கொண்டிருப்பினம்

இதுதான் உண்மை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.